Tuesday, October 29, 2019

சிதம்பர வெளி



Image result for sithampara ragasiyam"

யெளவனம் அழித்து இமயம் வந்தவள்
அம்மையாக நின்று அருள்பாலிக்கட்டும்.
சிவ சிவ..
அந்தக் கதைகளைச் சொல்லி
விலக்கி வைக்காதே.
வெட்கமறியாத காமத்தீயில்
கங்கையைத் தெளித்து
புனிதங்களைப் போர்த்தாதே.
உமையை கங்கையை
மறந்துவிடச் சொல்லி
கட்டாயப்படுத்த மாட்டேன்.
கழுத்தை இறுக்கும் பாம்புகளை
கழட்டி விடு.
துணையைத் தேடி புதருக்குள் மறையட்டும்.
பாம்பு புற்றுக்கு பாலூற்ற
காத்திருக்கும் கூட்ட த்தை
நாகதோஷத்துடன் அலையவிடாதே.
சிவ சிவ..
காட்சி திரைகள் காலத்தைப் புரட்டுகின்றன.
வசனங்களை எழுதிவிட்டார்கள்.
பாடல் வரிகள் இசையுடன் காத்திருக்கின்றன.
ஒப்பனைகள் செய்தாகிவிட்ட து.
முன்பதிவு செய்தப் பார்வையாளர்கள்
ஆயிரம்கால் மண்டபத்தில் அமர்ந்துவிட்டார்கள்.
நீல நிற திரைச்சீலை விலகும் காட்சி
கனகசபை வில்வ மாலையுடன்
ஆனந்த தாண்டவம் ஆடுகிறான்.
கைதட்டல்கள் விசில் சத்தங்கள்
இருளைக் கிழிக்கும் மின்னலென
அருவியை முத்தமிடுகிறாய்
நாடகத்தில் தான்.

உன் முத்த த்தின் ஈரத்தில்
காயாமலிருந்த விஷம்
கருவறையின் பனிக்குடம் நிறைத்து
பள்ளத்தாக்குகளில் படிகிறது.
பாறைகளைப் பிளந்து
சமவெளியாய் விரிகிறது.
பனியாய் உறைந்து கிடந்த
காமத்தின் இதழ்கள்
பற்றி எரிகின்றன.
குங்குமப் பூக்களைச் சாம்பலாக்கிய
பனித் தீ ..
சிற்சபை தாண்டி எரிகிறது.
தீயை அணைக்க வருகிறார்கள் காவலர்கள்.
ஆபத்து ஆபத்து அலறுகிறார்கள் ..அவர்கள்.
உடமைகளை உறவுகளைக் காக்க ஓடுகிறார்கள்.
தீயாக உன்னைத் தீண்டும் இன்பம்..
சிவ சிவா.. யாரறிவார்?
சிதம்பர வெளியில்
சூரியக் கங்குகள்
தொட்டிலில் ஆடுகின்றன.
(நன்றி -ஓம் சக்தி தீபாவளி மலர்2019)

Sunday, October 27, 2019

நீர் இன்றி அமையாது ..

Image result for pigeon sitting in window paintingsஎனக்கும் அவர்களுக்குமான உறவு 
எதோ ஒரு கோடை வெயிலில் தண்ணீருக்காக நான் தவித்த தருணத்தில் உருவானது. சன்னல் கம்பிகளுக்கு நடுவில் சின்னதாக வாயகன்ற டப்பாவில் தண்ணீரை
நிரப்பினேன்.. நாளடைவில் அது ஓர் அனிச்சை செயல் போல ஆகிப்போனது.
கொட்டும் மழையிலும் அவர்கள் 
என் சன்னல் கம்பிகளுக்கு நடுவில் உட்கார்ந்து
 தண்ணீர் பருகுவதையே தெரிவு செய்ததை
நானும் கவனிக்க வில்லை. வழக்கம் போல 
அவர்களும் அதைப் பிரகடப்படுத்தவில்லை.
அவர்களாகவே தங்கள் எல்லைகளை வரைந்து கொண்டார்கள். 
அடுக்களை சன்னலில் காகங்களும் சிட்டுக்குருவிகளும். 
ஹால் சன்னலில் புறாக்களும் சிட்டுக்குருவிகளும். சிட்டுக்குருவிகளுக்கு
மட்டும் எல்லா இட த்திலும் போய்வர உரிம ம் யார் கொடுத் தார்களோ 
அதுவே எடுத்துக் கொண்ட தோ..

எப்போதாவது வெளியூர் போய்விட்டால்
 இப்போதெல்லாம் இவர்கள் நினைப்பு தான் வந்துவிடுகிறது. 
என் மொழியை அவர்களும்
அவர்கள் மொழியை நானும் 
ஒலிகளின் சப்தங்களின்றி 
எப்போது உரையாட ஆரம்பித்தோமோ நினைவில்லை.
மதுரை சென்று திரும்பிவந்து எதொ நினைவுகளில்
 சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். 
வினோதமான ஒலி எழுப்பி என்னை அழைத்த து அந்தப் புறா. 
என் நினைவுகளை புத்தக அடுக்குகளில் புதைத்துவிட்டு
திரும்பிப்பார்த்தேன்.
அப்படி ஒரு கோபம் அதன் கண்களில்.
சிறகுகள் படபட த்தன.
இரும்புக் கம்பிகளை உடைத்துவிட முடியாமல்
அது தவிக்கும் தவிப்பும் ஆத்திரமும்..
மெல்ல மெல்ல அருகில் வந்தேன்.
தண்ணீர் டப்பாவில் தண்ணீரே இல்லை.
சன்னலைத் திறக்க வேண்டும்.
“சாரிடா.. பார்க்கலை.. “ என்று நான்..
மீண்டும் அதே கோபம்.
இப்போது அந்த மொழியில் இன்னொரு ரகசியமும்.
வைகைக் கரையில் சொல்லாத ரகசியமோ..
ப்ளீஸ் டா.. கொஞ்சம் பொறுத்துக் கொள்..
கெஞ்சினேன்.
ம்கூம் கோபம் தணியவில்லை.
கண்ணீர் நிரம்பி வழியும் விழிகளை
உயர்த்தியது என் மொழி.
எங்கள் இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று
சந்தித்துக் கொண்டன.
அவன் பார்வையை நானோ
என் பார்வையோ அவனோ
எதிர்கொள்ள முடியாமல்
திரும்பிக்கொண்டோம்.
தண்ணீரை நிரப்பும் வரை
என் சன்னலைவிட்டு சற்று தள்ளி
உட்கார்ந்து கொண்டு தன் முகத்தை
வேறு பக்கமாக திருப்பிக் கொண்டு..
தண்ணீர் நிரம்பி நிரம்பி
எங்களுக்கிடையில் கொஞ்சம் கொஞ்சமாக
ஈரம்..
கோபமாம்.. திரும்பமாட்டானாம்.
சரி..
நீரின்றி அமையாது உலகு!
நீ யின்றி அமையுமோ உலகு?

புத்தகம் தன் பக்கங்களைப் புரட்டி
வாசிக்கும் போது
சிறகுகளின் படபடப்பு.
நான் திரும்பவில்லை.
தாகம் தீர்க்கட்டும்.
இது யுகம் யுகமாக தீராத தாகம்.
ஒற்றைத்துளியில் தீருமொ தாகம்.
தாகம் தீர்க்கட்டும்.
நான் திரும்பிப்பார்க்க வேண்டும்
என்று காத்திருக்கிறது இப்போதும்.
திரும்பவா..
பார்க்கவா..
வைகையில் மீண்டும் வெள்ளம் வருமோ
நதிகளற்ற கொடுமணலில்
தாகம் தீர்க்கும் தண்ணீரை
ஆவியாக்காமல் விட்டுவைக்குமா
சூரிய பந்தம்.

நீரின்றி அமையாது உலகு..
நீ இன்றி அமையுமோ உலகு

Wednesday, October 23, 2019

சிவசேனாவின் அரசியல் முகம் மாறுகிறதா

Image result for shiv sena saamna
மா நில அரசியலில் சிவசேனா
சிவசேனாவின் முகம் மாறுகிறது..
இப்பதிவை தேர்தல் நேரத்தில் எழுத விரும்பவில்லை.
இன்று தேர்தல் முடிவுகள் வரும். அதன் பின் எழுதுவதும் 
சரியல்ல. இதோ இதுதான் தருணம்.
சிவசேனாவின் முகம் மாறுகிறது.
தன்னை வலுவான மா நில கட்சியாக மட்டுமல்ல
மா நில உரிமைகளை எதற்காகவும் விட்டுக்கொடுக்க
மாட்டோம் என்ற அரசியலை தன் செயல்பாடுகளில்
வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
மா நில சுயாட்சி என்று பேசியவர்கள் நாம்.
நம்மவர்கள் இன்று சிவசேனா காய் நகர்த்தும்
வித்தையைக் கவனிக்க வேண்டியவர்களாக
இருப்பதும் மொழியுணர்வை அவர்கள் கையாளும்
அரசியலும் கவனிக்கத்தக்கவை.

அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தில் பிஜேபி
சொன்னது.. “மராட்டிய மா நிலத்தில் எங்களுடன்
போட்டியிட யாருமில்லை ! “ 
பிஜேபியுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனாவுக்கு 
இது எரிச்சலை ஏற்படுத்தியது. 
பிஜேபி இப்படி சொல்வதன் பின்னால் இருக்கும் 
அரசியலை மிகவும் சரியாக அடையாளம்
 கண்டு கொண்ட து சிவசேனா. அதனால் தான் மறு நாளே
 தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் போதே....
சிவசேனாவின் சாம்னா பத்திரிகை எழுதுகிறது.
“ மராட்டிய மா நிலத்தில் பிஜேபிக்கு எதிர்க்கட்சியே
 இல்லை என்றால் எதற்காக பிரதமர் மோதியும்
 அமித்ஷாவும் வந்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள்?”
அத்துடன் தங்கள் மா நிலத்தில் அரசியல் நட த்திய
 சரத்பவார் நடுவண் அரசியலுக்குப் போனது தவறு, 
என்பதையும் இப்போதும் சொல்கிறது சாம்னா.
இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளே இல்லாமல்
பிஜேபி ஆட்சியை அமைக்கும் திட்ட த்தில்
பிஜேபி கூட்டணியில் இருந்து கொண்டே
அடிக்கடி தன் பிடரியை சிலிர்த்துக் கொண்டு
உறுமிப் பார்க்கிறது சிவசேனா.
நேற்றுவரை சிவசேனாவின் பால்தாக்கரே குடும்பம்
தேர்தலில் நிற்கவில்லை. ரிமோட்கண்ரோல் ஆட்சி
என்று சொன்னார் பால்தாக்கரே. ஆனால் இன்று
அவருடைய பேரன் ஆதித் திய தாக்கரே அரசியல்
தேர்தல் களத்தில் நேரடியாக வந்துவிட்டார்.
கட்டாயமாக வெற்றியும் பெறுவார்.
அதன் பின் நடக்கும் அதிகாரப்பகிர்வு போட்டியில்
சிவசேனாவின் உறுமல் தொடருமா
அல்லது சர்க்கஸ் கூடாரத்திற்குள் அடைப்பட்டுவிட்ட
நிலை ஏற்படுமா? 
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கூட்டணிக்குள் இப்படியும் இருக்க முடியும் என்பதற்கு
சிவசேனாவும் சிவசேனாவின் சாம்னாவும்
 ஒரு வித்தியாசமான தேவையான அரசியலை
 மிகவும் நுணுக்கமாக கையாளுகின்றன.

எனக்கு சிவசேனாவுடன் பல கருத்து வேற்பாடுகள்
உண்டுதான். ஆனால்
 இந்த ஆட்டம்.. தொடர வேண்டும் 
என்று நானும் விரும்புகிறேன்.

Saturday, October 19, 2019

உப்பு காதல்

உப்புக் காதல்
அவன் குறிஞ்சி நிலத்தவன்
அவள் நெய்தல் நிலக்காரி.
உப்பு விற்க வருகிறாள்.
“நெல்லும் உப்பும் நேரே “
அவள் குரல் வீதிகளில் ஒலிக்கிறது.
அவன் முன்பின் அறிமுகமில்லாத அவளிடம்
அவளருகில் வந்து உப்பு விலை கேட்கிறான்.
சரி.. இதுவரைக்கும் சரிய்ய்யா..
எந்த உப்பு விலை?!!
“உன் மெய்வாழ் உப்பின் விலை என்னவோ?”
என்று.அவன் கேட்டானாம். (அடப்பாவி..!)
அவள் என்ன செய்திருப்பாள்.
பளார்னு கன்னத்தில் ரெண்டு கொடுத்திட்டு
இடுப்பில சொருகி வச்சிக்கிற கூர்கத்தியை
எடுத்துக் காட்டிட்டு “ட்டேய்.. “ னு
விழியாலேயே மிரட்டிட்டு தான் போயிருப்பா..
ஆனா பாருங்க..
காதல் காட்சியில அப்படி காட்டல.
ஏன் ? என்றெல்லாம் என்னிடம் கேட்கப்பிடாது.
அவ அவனைப் பார்த்து சிரிச்சிட்டு
“யார் நீ, என் வழியை மறிக்கிறாய்? “ னு
கேட்டுட்டு போயிட்டாளாம்.
அவ பின்னால அவன் மனசு போக
அவன் புலம்பறது தான் சீன்.
அம்மூவனார் தான் பாடலாசிரியர்.

காட்சியை ஒரு கடற்கரையில் ஆரம்பித்து
அப்படியே கடைவீதிக்கு கொண்டு வந்து
இடை இடையே பெரிய கப்பலில் அவர்களைக்
காட்டி ஒரு குரூப் டான்ஸ்
குத்துப்பாட்டு
சும்மாவா..
காதல் காட்சிகள் அன்றும் இன்றும் மாறவே இல்லை.

“நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீரோ?” எனச் சேரிதோறும் நுவலும்
அவ்வாங்கு உந்தி அமை தோளாய்! நின்
மெய்வாழ் உப்பின் விலை எய்யாய்.
_ அக நானூறு 390
அம்மூவனார் பாடியது..

Monday, October 7, 2019

தேவியும் கங்குபாயும்

Related image
என்னடீ தேவி , இன்னும் என்ன மெளனம்?
தண்டியா கோலாட்டம் கால்களின் குதியாட்டம்
ஒலி வெள்ளத்தில் மிதக்கிறது பெரு நகரம்.
தேவி… .. ஏனடி சிரிக்கிறாய்..?
பத்து நாட்கள் பதினொரு அடிமைகள்
ஆஹா .. போதுமா உன் பசி தீர்க்க?
கங்குபாய் காலடிப்பட்ட மண்
உனக்கு மட்டும் புண்ணிய பூமியா!
புரியவில்லை தாயே..
கோலாட்டம் .. பூமியைச் சுற்றி சுற்றி கோலாட்டம்.
ஆடுகிறாள் ஆடுகிறான்
கழுத்தில் நெளியும் பாம்புகளும் ஆடுகின்றன.
அமுதம்.. விஷம்.. காதல் கனவு நிஜம் பொய்
சுற்றி சுற்றி வலம் வருகின்றன.
ஆடி ஆடி களைத்துப்போகிறது இரவு.
மேகங்கள் கூந்தலை வருடிக்கொடுக்கின்றன.
தேவி..
விடியும் போது மயக்கம் தெளியலாம்.
சிவப்பு விளக்கின் பச்சை ஒளியில்
கங்குபாய் சிரிக்கிறாள்.
கனவுகள் வராமலிருக்க கதவுகளை
இழுத்துப் பூட்டுகிறேன்.


பிகு:
தேவியின் சிலைகள் சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து
 அப்பெண்கள் காலடிப் பட்ட மண்ணால் மட்டுமே 
பூரணத்துவம் பெறுகின்றன!
கங்குபாய் இம்மாதிரியான சிவப்பு விளக்குப்
பகுதியில் – மும்பையின் காமட்டிப்புரத்தில்
வாழ்ந்தப் பெண்.

Sunday, October 6, 2019

பாலுறவு வறட்சி


பாலுறவு வறட்சி தான் குற்றங்களுக்கெல்லாம் காரணம்
என்ற  நிலைக்கு சமூகம் போய்க்கொண்டிருக்கிறதா?

நேற்று ஒரு விடீயோ காட்சி.. 15 வயது இருக்கலாம் அந்தப்
பெண்ணுக்கு. அவளை கூட்டுப்பாலியல் வன்முறை செய்து
அதைக் கைபேசியில் விடியோ எடுத்து … இதைச் செய்யும்
ஆண்பிள்ளைகள் அனைவரும் விடலைப் பருவத்தினர்.
அன்த விடீயோவைப் பார்த்தால் ஓரளவு விலை உயர்ந்த
கைபேசியில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவர் மாற்றி
ஒருவர்… அந்தப் பெண் “பையா  என்னை விட்டுவிடுவீர்களா ..”
என்று கெஞ்சுகிறாள்.. இது இந்தியாவில் தான் நடக்கிறது.
ஆள் நடமாட்டமில்லாத பாறைகளிருக்கும் ஒதுக்குப்புறத்தில்
நடந்திருப்பதாக தெரிகிறது. அப்பெண் என்னவானாள்?
பத்துபேருக்கும் மேலாக ஒருபெண்ணை வல்லாங்கு செய்தால்
அவள் பிழைத்திருப்பாளா..? 
அந்த விடீயோவை என்னால் முழுவதும்
பார்க்க முடியவில்லை! 1 நிமிடம் கூட என்னால் பார்க்க முடியாமல்
உடம்பெல்லாம் வேர்த்து கைகால் நடுங்க ஆரம்பித்துவிட்ட து!
அதன் பின்  ஏற்பட்ட தலைவலி.. இரவு 11 மணிக்குப் பின் தனியாக
கீழே போய் நடந்து பார்த்தேன்.
 கொஞ்ச நேரம் வாட்டர் டேங்க் மீது
உட்கார்ந்து கொண்டு ஓவென அழுதுவிடலாமா 
என்று கூட யோசனை வந்த து! 
வாட்ச் மேன் என்ன நினைக்க கூடும் என்று 
நினைத்துக் கொண்டே உட்கார்ந்திருந்தேன்.. 
குளிர்ந்தக் காற்று .. மெல்ல.. முகத்தில் படர்ந்து
என்னைத் தழுவிக்கொண்ட து கொஞ்சம் ஆறுதலாக இருந்த து.

கதறி அடங்கிப்போன அந்தப் பெண்ணுக்காக அழுதேனா..
அல்லது..
அவளைச் சுற்றி நின்று அவள் உடலை மேய்ந்த
 அந்த விடலைகளின்
அம்மாக்களுக்காக அழுதேனா.. ?
யாருக்காக நான் அழுதேன்,,?
அவன் களின் முகம்.. 
என்னைச் சுற்றி வல்லூறு போல
வட்டமிடுகிறது…
தாய்க்கோழியாய் சிறகுகள் விரித்து
அணைப்பாளோ பராசக்தி..




Friday, October 4, 2019

சிவதாண்டவம்


Image result for shiva modern artஊர்த்துவத் தாண்டவத்தில்
உன்னிடம் தோற்றுப்போன
சந்திரகாந்த தேவி அல்லவே நான்.
இதோ..
நானும் காலைத் தூக்கிவிட்டேன்.

உன் பிரணவ ஒலியில் கரைந்துவிட
உ ன் உமையல்ல நான்.
அண்ட சாரசரங்களை
எனக்குள் அடக்கும்
யோனி பீட த்தில்
உன் நெற்றிக்கண் தீப்பிழம்பாய்
எரிந்து சாம்பாலாகிப் போனது.
அந்தச் சாம்பலிலிருந்து
உன் ஆட்ட த்திற்குள் அடங்கும்
காத்யாயனி தேவியைக்
கண்டுபிடித்திருக்கிறாய்.
அவளோடு நீயாடும்
சிருங்காரதாண்டவம்
உனக்காக என்னை
ஏங்கித் தவிக்கவிடும்
கனவுகளில் நீ
கங்காதேவியையும்
துணைக்கு அழைக்கிறாய்.!
பித்தனே.. மறந்துவிடாதே.
பாற்கடலில் நீயுண்ட நஞ்சை
ஸ்கந்தமாதாவின் கைப்பிடிக்குள்
பத்திரமாக வைத்திருக்கிறேன் என்பதை.

மகாப்பிரளயம் சாட்சியாக
நீ ஆடப்போகும்
ஊழிக்கூத்துக்கு ஒத்திகைப் பார்க்க
என்னை அழைக்காதே.

என் கருமுட்டையிலிருந்து
நீ கற்றுக்கொண்ட பாடம்
ஆக்கலும் அழித்தலும்.
என்னில் சரிபாதியாக
நீ கொண்ட
அர்த்த நாரீஸ்வர கோலம்
உனக்கு நான் போட்ட
காதல் பிச்சை.

போதும்..
சிவதாண்டவ வேடங்களைக் களைந்து
வெளியில் வா..
காத்திருக்கிறேன் காதலியாக.
உன் நெற்றிக்கண்ணுக்கு
மட்டுமே தெரியும்
மூன்றாவது முலையோடு.

(மெளனத்தின் பிளிறல்- கவிதை தொகுப்பிலிருந்து)

Wednesday, October 2, 2019

THE UNSUNG HERO of Indian Politics




Image result for SHASTRI THE UNSUNG HERO
மறக்கப்பட்ட மாமனிதர் .. லால் பகதூர் சாஸ்திரி..
இப்படியும் ஒரு மனிதர் ஆட்சி அதிகாரத்தில் இந்தியாவில் இருந்திருக்கிறார். காங்கிரசுக்கார ர்கள் இவரை மறக்கலாம்.
ஆனால் நாம்..? !
• நேருவின் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்த நேரம். ரயில் விபத்து ஏற்பட்ட து. அதற்கு தார்மீகப் பொறுப்பு ஏற்று பதவி விலக
முன்வந்தவர். (இப்போ இதைச் சொன்ன பொழைக்கத் தெரியாதவர்னு சொல்லிடுவாங்க.)
அவர் பிரதமராக இருந்தப் போது கடுமையான பஞ்சம். அவர் அவர் தன் வீட்டு பின்புறத்தில் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் வேண்டிய காய்கறிகளைப் பயிரிட்டார். ஒரு வேளை உணவை சேமிக்கும் வகையில் தானும் தன் குடும்பத்தாரும் ஒரு வேளை உணவைஉண்பதில்லை என்ற தங்கள் முடிவை வானொலியில் அற்வித்து அதைக் கடைப்பிடித்தார்.
அவர் பிரதமராக இருக்கும் போது அவருடைய மகன் அவரின் அலுவலக வண்டியை (கார்) தன் சொந்தப் பயன்பாட்டுக்கு அவரை அறியாமல் பயன்படுத்திவிட்ட தை அறிந்த சாஸ்திரி தன் மகன் எத்தனை கிலோ மீட்டருக்கு அந்த வண்டியைப் பயன்படுத்தி இருக்கிறார் என்று கணக்குப் பார்த்து அத்தொகையை அரசு கணக்கில் செலுத்தினார்.
17 மாதங்கள் பிரதமராக இருந்திருக்கிறார். அதற்கு முன் நேருவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்திருக்கிறார். ஆட்சி அதிகாரத்தில் இருந்த சாஸ்திரி இறக்கும் போது அவருக்குச் சொந்த வீடு இல்லை.சொந்தமாக ரியல் எஸ்டேட் இல்லை. நிலமில்லை. பினாமி பெயரில் சொத்துகள் இல்லை. வங்கிக் கணக்கில் பணமில்லை. அவர் விட்டு சென்றது ஒரு பழைய FIAT கார் தான்! அதுவும் வங்கியில் கடன் வாங்கி வாங்கிய கார். அந்தக் கடனை அவர் மனைவி அவர் இறந்தப் பின்
அவருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியத்திலிருந்து தவணைகள் செலுத்தினார்!
இன்று அவர் பிறந்த நாள் (02 அக்டோபர்)
இப்படியும் ஒரு பிரதமர் இந்தியாவில் இருந்திருக்கிறார்.
Shastri, the unsung hero of Indian history.

Saturday, September 28, 2019

வனத்தின் வாசம்

Single white bird feather float in the air. Premium Photo

 வனத்திலிருந்து  வேரோடு
பிடுங்கிச் சென்ற போது
காற்றும் மழையும் கதறித் தீர்த்தன.
வனவிலங்குகள் புணர்ச்சியை விலக்கி
எட்டிப்பார்த்தன.
குகைகளுக்குள்  உன்னைத் தேடிப் பார்த்த இருள்
விடியலில் சரணடைந்து விட்ட தாக
மரம் தாவிய குரங்குகள் பேசிக் கொண்டன.
அழகான தொட்டியில் அடைக்கப்பட்ட து
உன் மண்ணின் வாசனையுடன்  வேர்கள்.
தொட்டிச்செடியில் பூப்பதும் காய்ப்பதும்
சூரியனுக்காக உயிர்ப்பதுமாய்
அடங்கிப்போனதோ காலம்?
வனத்திலிருந்து பறந்து வரும்
பறவைகளின் மொழியை அறியுமோ
தொட்டிச்செடியின்   சன்னல்கள்?
காற்றில் பறந்து விழும் சிறகு ஒன்று
எதையோ சொல்ல வருகிறது.
கைகளை நீட்டுகிறேன்..
மின்னல் வெளிச்சத்தில்
வேர்களை முத்தமிட்டு
கடந்து செல்கிறது வனமும் வானமும்.

28 sept 5.03 pm

Monday, September 23, 2019

குப்பை குமாரும் சுவட்ச் பாரத்தும்

குப்பை குமாரும் சுவட்ச் பாரத் தும்
ஒரு குப்பைக் கதை
இது சென்ற ஆண்டு வெளிவந்த சினிமா.
அதனாலென்ன.. இப்போதும் பேசலாம் அதைப் பற்றி.
இந்த ஓராண்டில் அப்படி ஒன்றும் தலைகீழ் மாற்றங்கள்
 வந்துவிடவில்லை.
வீடுகளில் உணவுகள் உற்பத்தியாவதில்லை.
ஆனால் எல்லா வீடுகளிலும் குப்பைகள்..
உற்பத்தியாகின்றன.
எந்த வீடாவது இதற்கு விதிவிலக்கா?!
அம்பானி மிட்டல் வீடுகளிலும் குப்பைகளை
அகற்றியே ஆகவேண்டும்.
சாலையோரத்தில் குடியிருக்கும் அவர்களும் தினமும்
குப்பைகளை வாரி எடுத்துக் கொட்டிக் கொண்டுதான்
 இருக்கிறார்கள்.
வளர்ந்த நாடுகளும் வல்லரசு நாடுகளும்
மூன்றாம் நாடுகளைக் குப்பைத் தொட்டிகளாக
பாவிப்பது என்பது அயலுறவு கொள்கையின்
இருண்ட பக்கத்தில் இருக்கிறது.
அதெல்லாம் பெரிய இட த்து விசயங்கள்.
நமக்கு குப்பை குமாரின் கதையும் நம் சமூகம் பற்றிய 
தூய்மைவாதங்களும் தான்!
ஒரு குப்பைக் கதை என்ற தலைப்பில் சினிமாவாக
திரைக்கு வந்த தும் தற்கானசிலாகிப்புகள் 
என்ன மாதிரி எல்லாம் இருந்தது என்பது மட்டும் தான்.
“குப்பைக் கதையை பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்”
என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் வைகோ.
இன்னொரு விமர்சனக்கர்த்தா.. குப்பைக் கதை
 “அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட
 பெண்கள் கதி என்னவாகும்?”
என்ற நீதி நெறிப் புகட்டும் கதை என்று சொல்லி
கதையின் மையப் புள்ளியை பெண்ணின்
 கள்ளக்காதல் கதையுடன் – அதாவது திருமணத்திற்கு 
அப்பாற்பட்ட உறவாகவும் ஒரு பெண் படிதாண்டி விட்டால் 
அவளை மற்ற ஆண்கள் எப்படி எல்லாம் பார்க்க கூடும்
 என்பதற்காக எடுக்கப்பட்ட து போலவும்.. பயமுறுத்துகிறார்கள்.
இதெல்லாம் கதையில் இல்லையா? என்று கேட்டால்
இருக்கிறது. ஆனால் இதுவல்ல கதையின் மையப்புள்ளி.
படிதாண்டிய உறவுகளைப் பற்றி கதை எடுப்பதற்கு
குப்பை குமார் வேண்டியதில்லை.

குப்பை குமார்களை நம் சமூகம் எந்த நிலையில்
வைத்து பார்க்கிறது என்பதை மட்டுமே மையமாக்கி
அதற்கான உபகதைகளாக சில முடிச்சுகளைப் போடுகிறது.
ஏன்… குப்பைகளை தவிர்க்கவே முடியாத நம் சமூகம்
குப்பை குமார்களை மட்டும் தவிர்க்க நினைக்கிறது!
தூயமை வாதம் என்று சொல்லி கழண்டு கொள்வது எளிது.
சரி .. குப்பை குமார்களுக்கு கழிவின் நாற்றத்திலிருந்து
 விடுபட முடியாது என்பதாக நாம் நினைக்கிறோம்.
குப்பைனா நாற்றமெடுக்கத்தான் செய்யும்.. 
என்று சமாதானம் செய்து கொள்கிறோம்…
ஆனால்… நம்ம நாட்டு குப்பை வண்டி/ குப்பை லாரியிலிருந்து
 வரும் நாற்றம் மேலை நாட்டு குப்பைவண்டி/ குப்பை லாரியிலிருந்து
வருவதில்லை. 
 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 6 மாதங்கள் தங்கி இருந்தப் போது
அங்கு வரும் குப்பை லாரிகளை கவனிப்பதுண்டு.
குப்பைகளை ஒவ்வொரு அப்பார்ட்மெண்ட் பகுதியிலிருந்தும் எடுத்து கொட்டிக்கொண்டு செல்லும் அந்தக் குப்பைலாரிகள்
மற்ற லாரிகளைப் போல .. சாலையில் ..
அது எப்படி..?!!!!
எல்லா எழவுக்கும் அமெரிக்கா மாதிரி அமெரிக்கா மாதிரினு சொல்லிக் கொண்டிருக்கும் நம் அரசும் நம் மக்களும் இந்தக் குப்பை லாரி
 மெட்டரை ஏன் யோசிப்பதில்லை!
இதை நான் அங்கு என்னைச் சந்தித்த நண்பர்களிடம்
ச” யு.எஸ் வந்துட்டு குப்பை லாரி பற்றி
யோசித்த ஓரே ஆளு நீங்க தான்!!!” 
(இதை அவர் பாராட்டா சொன்னாரா ..
 கிண்டலடிச்சாரானு இன்னிக்கு வரை தெரியல!)
இன்னொருவர் சொன்னார்…
“குப்பை லாரியைப் பற்றி யோசிக்கும் தலைமுறை
அமெரிக்கா வரலைங்க.. வந்தவர்களும் .
. நவீன பிராமணிய வேடங்களைத் தரிப்பதில் 
காட்டும் முனைப்பை..இதில் காட்டுவதில்லை!”
ஒரு நாள் வீட்டில் டப் அடைத்துக் கொண்ட து. 
அதைச் சரி செய்ய வந்தவர் தன் வாகனத்திலிருந்து 
ஒரு நீண்ட டுயூப் மாதிரி ஒரு குழாயை எடுத்து
வந்து கழிவு நீர்ப் போகும் பகுதியில் போட்டு
காற்றை உறிஞ்சி கழிவுகளை அகற்றிவிட்டு ..
 தங்கள் வாகனத்தில் ஏறி சென்றார்கள். 
சீருடை, சரியான காலணிகள், கையுறைகள், 
வாகன வசதி, வீட்டுக்குள் நுழையும் போது 
அவர்கள் ஒரு ப்ளாஸ்டிக்
பையை (பை மாதிரி) காலில் மாட்டிக் கொண்டு 
ஹால் வழியாக நுழைந்தது...
. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..
இதில் 50% இந்தியாவில் கொண்டுவர முடியவில்லை.
ஆனால் நம்ம பிரதமர்கள் அமெரிக்கா போவதையும்
 வருவதையும் நாமும் பெருமையுடன் 
பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

குப்பைகளுக்கு சாதிகள் இல்லை.
எல்லா சாதி வீடுகளிலும் குப்பைகள் உண்டு.
ஆனால் எல்லா சாதி வீடுகளிலும் குப்பைகளை
 எடுத்துச் செல்கின்ற குமாருக்கு சாதி உண்டு.
அது .. குப்பையை விட அதிக நாற்றமெடுக்கிறது.

க்ளார்க் வேலை .. ப்யூன் வேல.. ஒகே.
ஆனா குப்பைலாரியில் குப்பையை அள்ளிக்கொண்டு
 போகும் வேலைன்னா மட்டும் நமக்கு குமட்டிக் கொண்டு
வருகிறது!
இதில் நாம் ஒவ்வொருவரும் எதோ ஒரு புள்ளியில்
அந்த தூய்மை வாத த்திற்குள் தள்ளப்படுகிறோம்.

என்னையே சுயவிமர்சனம் செய்து கொள்கிற மாதிரி

ஒரு கதை “காலியான பாட்டில்கள்” எழுதி இருந்தேன்.
மறைந்த பிரபஞ்சன் அவர்களுக்கு ரொம்பவும் 
பிடித்தக் கதை அது.

சுவட்ச் பாரத் - தூய்மை இந்தியா

நமக்கானது.. பொதுமக்களுக்கானது
என்பதை வெளிச்சப்படுத்தும் அரசும்
அறிவுஜீவிகளும் சுவட்ச் பாரத் திட்டம்
குப்பை குமாருக்கானதும் தான் என்பதை
உணர்ந்திருக்கிறார்களா?
குப்பைக் கதையைக் கிளறினால்..
நமக்குள்ளும் குப்பையின் நாற்றம்..

Saturday, September 21, 2019

கீழடி ஆதன் , குவிரன் ஆத ..

தமிழ் பிராமி எழுத்துகளில் ஆதன், குவிரன் ஆதன் என எழுதப்பட்ட பானை ஓடுகள்.

ஆதன் ,குவிரன் ஆத ..
அடேங்கப்பா.
நம்ம ஆதிக்கிழவனுக்கெல்லாம் ஒரு ஜெ போடுவோம்.

இந்த எழுத்துருவங்கள் பிராமி, தமிழி, தமிழ் பிராமி 
என்று அழைக்கப்படுகின்றன.
அதாவது தமிழ் மொழியிலிருந்து தெலுங்கு கன்னடம்
மலையாளம் துளு கிளைத்து பிரிவதற்கு முன்பு
வழக்கில் இருந்த தமிழி..
இந்த தமிழியின் பெருமையை சரியாக
தென்னிந்தியாவின் பெருமையாக அரசியல் படுத்த
வேண்டிய காலமிது. 

(அரசியல் படுத்த வேண்டும் என்ற சொல்வது
 தேர்தல் வாக்குவங்கி அரசியலை அல்ல)
2600 ஆண்டுகள் பழமையானது தமிழரின் நாகரீகம்
என்று சொல்கிற போது அந்த தமிழர் என்பதில்
யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதையும்
சேர்த்து பேசியாக வேண்டும்.
தமிழில் மட்டுமின்றி கன்னடம் மலையாளத்திலும்
தொலைக்காட்சி சேனல்கள் வைத்திருப்பவர்கள் 
நினைத்தால் இக்கருத்தை மிக எளிதில் பரப்பலாம்!
கீழடியின் பெருமையில் பங்காளிகளுக்கும்
 பங்கு இருக்கிறது என்பது மட்டும் தான் நாம் செய்ய வேண்டியது.

நிராகரிப்பு



Image result for rainy day lonely woman
நிராகரிப்பின் முத்தங்கள் சுடுகின்றன.
நினைவுகளை மீட்டெடுப்பதில்
இறந்தகாலம் திரும்புவதில்லை.
நரைமுடிகளை இனி மறைப்பதற்கில்லை.
தண்டவாளங்கள் பிரிந்திருப்பதே உத்தம ம்.
ரயில் வண்டியின் ஓட்ட த்தில்
தூக்கி எறியப்படுகின்றன
நினைவுகளைச் சுமந்திருக்கும்
மண்டையோடுகள்.
இந்த முடிவை நாம் விரும்பவில்லை
இந்த முடிவு நம்மை விரும்புகிறது.
மழைவெள்ளத்தில்
தண்டவாளத்தைக் காணமுடியாமல்
தடம் புரளும் ரயில்.
பயணிகள் பலியானர்களா
உயிர்ப்பிழைத்தார்களா
நீ என்னவானாய்?
பாவி மனசு பதறுகிறது.
தேடி அலைகிறது
கையில் பிடித்திருந்தக் குடை
காற்றில் பறக்கிறது.
முகத்தில் அறையும் மழைத்துளியில்
உன் வாசம்
ஓ வென கதறி அழுகிறது
சன்னலில் தெரியும் என் வானம்.

Wednesday, September 18, 2019

ஆண்டாள் தேசம்

Image result for ஆண்டாள் ஓவியம்
ஆண்டாளுக்கு வளைகாப்பு
வெண்சங்குகள் சிரித்தன..
ஆண்டாள் தன் புருஷனின் காதில்
கிசு கிசுத்தாள்.
பிறக்கப்போகும் குழந்தைக்கு
நீயே தகப்பன் என்று
ஊரார் அறிய .. வளைகாப்பு..
பாற்கடல் விழித்துக்கொண்ட து.
அதானாலென்ன?
எல்லா பெண்களின் கருவறை விந்துகளிலும்
நானே இருக்கிறேன்.. அதிலென்ன சந்தேகம்?
மயிலிறகால் அவள் சூல் வயிற்தைத்
தடவிக்கொடுத்தான்.
"பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர்
வைக்கலாம்..?
சொல்லுங்கள் நாதா…"
"ஹரியின் பிள்ளை தானே அவன்.
ஹரிஜன் என்று பெயர் வை.."
அவள் வயிற்றிலிருந்த குழந்தை
காலால் உதைத்த து.
அந்த வலியில்…
அவள் கருவறை வெடித்து
அவன் பிறந்தான் ..
ஆண்டாள் தேசத்தில்
தொட்டில் குழந்தைகள்
திட்டம் அறிமுகமானது.

(பாலைத்திணை தொகுப்பிலிருந்து)

Monday, September 16, 2019

பெரியாரின் சமூக அரசியல்

Image result for பெரியாரின் பொன்மொழிகள்

காங்கிரசார் முன்வைத்த சுயராஜ்யம் என்பதற்கு மாற்றாக
 சமூக அரசியல் தளத்தில் தந்தை பெரியார் 
“சுயமரியாதை” என்ற கருத்துருவாக்கதை முன்வைக்கிறார்.

சுயராஜ்யம் என்பது டொமினிக் அந்தஸ்து/ அரசாட்சி உரிமை,
 அதிகாரத்தை தன் வசப்படுத்தல் என்ற
 அரசியல் சூழலில் பெரியார் தனி மனிதனின்
உரிமையை முன்வைக்கும் சுயமரியாதை 
என்ற கருத்துருவாக்கத்தை அரசியலாக்குகிறார்
 என்பதைக் கவனிக்க வேண்டும்.
சாதியின் பெயரால் பிறவி இழிவைச் சுமந்து
வாழும் சமூகத்திற்கு சுயராஜ்யத்தின் அதிகாரம்
 எதையும் வழங்க முடியாது என்பது பெரியாரின் பட்டறிவு.
 தன் அனுபவங்களிலிருந்து
தான் பெரியார் தன் கருத்துருவாக்கங்களை வைக்கிறார்.


பெரியாரின் பகுத்தறிவு கூட மேற்கத்தியர்கள் பேசிய 

analytical school என்பதிலிருந்து வந்த தாக
 எடுத்துக் கொள்வதை விட பெரியார் தான் முன்வைத்த
 பகுத்தறிவு என்பதற்கு மனிதத்தன்மையுடன் அணுகுதல்,
இயற்கைக்கு முரணானதை விலக்குதல்,
 தன் பட்டறிவுக்குட்பட்ட தை மட்டுமே முன்வைத்தல்
 என்பதான கருத்து நிலையுடன் செயல்பட்டிருக்கிறார். 
அவர் மேற்கத்திய சிந்தனைகளை வாசித்திருக்கவில்லை
 என்பதல்ல இதன் பொருள். 

அவர் தன் பரப்புரைகளில்
எப்போதுமே எவரையுமே குறிப்பிட்டு அந்த மேதை 

அப்படி சொன்னார், இவர் இப்படி சொல்லி இருக்கிறார்
 என்றெல்லாம் சொல்வதில்லை.
மக்களின் மொழியில் பேசினார்.
தனக்கு சரி என்று பட்ட தை எவ்வித
சமரசமும் இல்லாமல் எந்த இட த்திலும்
முன்வைத்த ஒரே தலைவர்
தந்தை பெரியார் தான்.


#periyar_politics


Saturday, September 14, 2019

அறிஞர் அண்ணாவின் பணத்தோட்டம்

Image result for அறிஞர் அண்ணா
இந்தியப் பொருளாதர கட்டமைப்பில் 
சாதி, வர்க்கம், வடக்கு-தெற்கு
எல்லாம் சேர்ந்து வினையாற்றுகின்றன. 
இக்கருத்தை நான் முதன் முதலில்
வாசித்த து அறிஞர் அண்ணாவின் பணத்தோட்டம் 
கட்டுரைகளில் தான்.
இந்தியப் பிரதமர் மோதி அவர்கள்
உலக வரைபட த்தில் ஒவ்வொரு
நாடாக தேடி அலைந்து இந்தியாவின் 
பொருளாதரத்தைத் தூக்கி
நிறுத்த ஓடும் ஓட் ட த்தில்
 யார் இந்த இந்திய முதலாளிகள் என்பதையும்
அவர்களின் அசல் முகமும் ஒரே மாதிரி 
இருட்டிலும் தெரிகிறது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கூடவா 
ஒரு தமிழ் தொழிலதிபர்
இல்லாமல் போய்விட்டார்? 
 இந்திய தொழில்துறை, இந்திய முதலாளித்துவம் .. 
இதைக் கொண்டு கட்டமைக்கப்படும்
இந்தியப் பொருளாதாரம்.. யாருடைய முகமாக இருக்கிறது?
இதை ஓரளவு அன்றே தன் பொருளாதர அரசியலாக முன்
வைத்திருக்கிறார் அறிஞர் அண்ணா . ஆனால் என்ன செய்வது..?
இதைப் பற்றி எல்லாம் அண்ணாவின் அரசியல் வாரிசுகள்
தம்பிமார்கள், 
உடன்பிறப்புகள்,
 ரத்த த்தின் ரத்தங்கள் 
அறிவார்களா..!
ஒருவேளை அண்ணாவே அறியாத இன்னொரு
 ஊழல் பொருளாதரத்தைக்
கண்டுப்பிடித்த பெருமையில்.. 
வலம் வருகிறார்களா.
(பணத்தோட்டம் மீள்வாசிப்பு செய்தாக வேண்டும்…
வழக்கம் போல புத்தகம் தொலைந்துவிட்ட து!)