ஹே சிவா...
Saturday, October 14, 2023
ஹே சிவா.. உன் கருப்பி நான்
Tuesday, September 12, 2023
முமபையில் ஒரு பனைமரம்
மும்பையில்
உங்களோடுதான் இருக்கிறேன்.
Thursday, February 16, 2023
பித்துப்பிடித்த பெருநகரம்
பெரு நகரம் தூக்கமின்றி தவிக்கிறது..
Sunday, July 17, 2022
பச்சையம் துளிர்க்கும் கார்காலம்
தூறல்
சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி நின்றுவிட்டது.
மெல்லிய வெளிச்சத்தையும் பிடுங்கித் தின்ற இரவு
தன் பசி அடங்காமல் படுத்திருந்தது.
மழைநேரத்தில் மின்சாரத்தடைக்குப் பழகிய கால்கள்
மெல்ல அறையை விட்டு வெளியில் வருகின்றன.
வேர்களின் தாகத்தைத் தணிக்கும்
இலைகளின் ஈரம்
சொட்டுசொட்டாக வடியும் இரவு
சலனமின்றி தூங்கும் மலை.
கனவுகள் விழித்திருப்பதோ தூங்குவதோ
பாறைகளைத் தொந்தரவு செய்வதில்லை.
காற்றின் அசைவுகள் கல்மீது படிவதில்லை.
சாரல் அடித்து அடித்து அருவி விழிக்கிறது.
கனவுகள் குடைப்பிடித்து
வெளியில் வருகின்றன.
குடைப்பிடிப்பது யாராக இருந்தாலும்
நனைவது மட்டும் நானாகவே இருக்கிறேன்.
இலைகளின் மழைமொழி இசையாகி..
என்னை மீட்டிக்கொண்டே இருக்கின்றது
மழைமொழி என்னை எழுதுகிறது.
மழைக்காலம் என்னை வாசிக்கிறது.
புயல்
த்த்த்தட தட த்த்த்தட தட
ஸ்ஸ்ஸ்ஸ்ஸோஸ்ஸ்….
டக்க் டக் டக்க் டக்க்
ஸ்ஸ்ஸூ ஸ்ஸ்ஸூஊஊஊஊஊ
ட்டமீற்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஜன்னலை இழுத்து மூடு.
இடி இடிக்குது.
திரைச்சீலையை இழுத்துவிடு.
கர்ப்ப கிரஹத்தில் மின்னல் வெளிச்சம்..
காற்றில் அசையும் தீபத்தின் நாதம்..
தேவி… கருவறை திறக்கிறது.
பரவசமாகி அவரவர் வேண்டுதல்களுடன்
அவள் மடியை நிறைக்கிறார்கள்.
குமரி அவள்.
கடல் அலைகள் தாலாட்டும் குமரி அவள்.
தொட்டில் கட்டித் தாலாட்ட முடியாமல்
தவிப்பது ஏன்?
பனிக்குடம் உடைந்த ஈரப்பிசுபிசுப்பு தரை எங்கும்.
கர்ப்பஹிரகத்தில் இருளின் வெளிச்சம்.
புயலுக்குப்பின் சலனமின்றி கடல்
அவள் பிரசவ வேதனையை
தனக்குள் வாங்கிக்கொள்கிறது.
அவள் எட்டுக்கைகளாலும் தன் பிள்ளைகளை
தூக்கி எடுத்து தழுவி முத்தமிடுகிறாள்.
கண்ணனைக் கூடையில் சுமந்து கொண்டு
ஆற்றுவெள்ளத்தை யாரோ கடந்து செல்கிறார்கள்.
கடல் அலைகளை
நார்நாராக கிழித்து எடுத்து கூடை செய்து
மின்னலை விரித்து மெத்தையாக போர்த்தி
தன் பிள்ளைகளை மிதக்கவிடுகிறாள்..
சுறா மீன்களும் கடல்குதிரைகளும்
நட்சத்திரகைகளும் வலம்சங்கு முகங்களும்
கூட்டணி சேர்ந்து கூடையைக் கவுத்துவிடுகின்றன.
உப்பு நீருக்குப் பழகிப்போனவனும்
கடல் அலைகளில் நீந்த தெரிந்தவளும்
தீவுகளைத் தேடி பயணிக்கிறார்கள்.
குமரியின் மூக்கூத்தி வெளிச்சத்தில்
தடுமாறும் மின்னல்
கடலைப் பார்த்தால் அவள் கன்னிமைக்கெடுமென
கட்டுப்பாடுகள்..
அவளுக்கும் கடலுக்குள் நடுவில்
ஆயிரம் கண்டங்கள்
மழைத்துளிகள் மீட்டுவரும்
நினைவுகளின் வாசனை
கடற்கரையில் மோதி அலைந்து திரிந்து
முகவரியைத் தேடும் அனாதைகளாக
கரை ஒதுங்கி இருக்கின்றன கிளிஞ்சல்கள்
வெள்ளம்
மழை பொழிந்த அந்த நள்ளிரவில் கடலின் சீற்றம்.
அலைகள் பாறைகளின் எல்லைகளைத் தாண்டி அத்துமீறி
ஆவேசம் கொண்டு தழுவுகின்றன.
காலடியிலிருந்த மண்..
குழிப்பறித்து இழுத்துச் செல்லும் வேகம்
என்னால் நிற்கமுடியவில்லை.
மழை வெள்ளத்தில் சிக்குண்டு
அடித்துச் செல்லப்பட்ட
தண்டவாளங்கள் என்னைப் பயமுறுத்துகின்றன.
நீர்வழிப்படூஉம் யானும்..
கடல் அலையும் மழை வெள்ளமும்
கட்டுக்கடந்காக் காமத்துடன்
கட்டிப்பிடித்து முத்தமிடுகின்றன.
கோடைக்காலத்தின் புழுக்கம்
சூடு தணிக்கும் ஆவேசம்
கடற்கரையைக் காணவில்லை.
யாரும் கடலுக்குள் போகவேண்டாம்.
படகுகளுடன் வலைகளும் பதுங்கிக்கொள்கின்றன.
கடலடியிலிருந்து மீனராசா எட்டிப்பார்க்கிறான்.
ஜீவராசிகளின் கூடல்மொழி ஓசையின்றி எழுத்துகளின்றி
மழை நீரில் மிதந்து வருகிறது.
அதிலிருந்து வடியும் ஒவ்வொரு துளியாக கையிலெடுத்து
பசலைத் தணிக்கிறேன்.
பாறைகளுக்கு இடையில் கனன்று கொண்டிருந்த
அடுப்பின் சூடு ஒருவழியாக தணிகிறது.
அடுப்பிலிருந்து பொங்கி வழிந்தப் பால்
பாத்திரம் தாண்டி விளிம்புகள் கடந்து
வழிந்து கரைந்து மழைவெள்ளத்தில் மிதந்து
கடல் நீரில் நுரையாகிப் போனதறியாமல்
பாத்திரத்தை மூடிப் பத்திரப்படுத்துகிறேன்.
கடல் அலையில் பால் நுரைகள்
தீவுகளில் மோதும் பால்திட்டுகள்..
மீனராசா பாலருந்தி பால் அருந்தி
மயக்கம் தெளிகிறான்.
மீண்டும் மீண்டும்
பால்சொரியும் முலைகள் தேடி அலைகிறான்.
கடலடியில் அவன் அந்தப்புரத்து மச்சக்கன்னிகள்
அவன் பசியாற்றமுடியாமல் தவிக்கிறார்கள்.
பசியின் வேட்கை..
அவனைத் தின்று துப்பிய சக்கையாக
படுக்கையில் கிடக்கிறான்.
மச்சக்கன்னிகள் தீவுகளிலிருந்து கொண்டுவந்த பச்சிலைச்சாறுகள்
அவன் உதட்டோரத்தில் வழிந்து
கடல்மேல் விழுந்த கரும்பாறைகளாக மிதக்கின்றன.
பாய்மரத்தின் உச்சியில் கட்டியிருந்த திசைக்காட்டி
தலைகீழாக சுழல்கிறது.
திசையறியமுடியாமல் படகுகள்
கடலுக்கு நடுவிலேயே சுற்றிக்கொண்டு இருப்பதை
கடல்குதிரைகள் வேடிக்கைப் பார்க்கின்றன.
துருவ நட்சத்திரம் கதவடைத்துக் கொள்கிறது.
கார்மேக கூட்டத்தின் படையெடுப்புக்கு அஞ்சி
பிற நட்சத்திரங்களும் இடம் மாற்றிக்கொண்டு
வேறொரு பூமிக்குப் போய்விடுகின்றன.
மச்சக்கன்னிகள் மீனராசாவை கைகளில் ஏந்தி
கடற்கரைக்கு வருகிறார்கள்.
நட்சத்திரங்களில்லாத ஆகாயம்
நிலவில்லாத மேகம்
இருளைத் தின்று துப்பிய கடல்வெளி
மழை நீரில் மிதந்துவரும் காலம்
கடல் அலையும் மழை வெள்ளமும்
ஒன்றை ஒன்று கூடி புணர்ந்து
ஒன்றை ஒன்று எதிர்த்துப் போராடி
ஒன்றில் ஒன்றாக முடியாமல்
வெள்ளக்காடு..
மழை வெள்ளத்தில் மீனராசா
கடல் அலையில் அவள்..
இடம் மாறிப்போன படகுகள்
மீண்டும்
தீவுகளை வந்தடையுமோ?
இடி மின்னலுடன் மழை..
சலனமின்றி படுத்திருக்கும் அவன்..
அலைகளில் நர்த்தனமிடும் ஆதிசேஷன்..
புல்லாங்குழலோசையில் மிதக்கும் பிருந்தாவனம்.
அவள் போர்த்தியிருக்கும் போர்வையை
மெல்ல விலக்கி இருளின் வெளிச்சத்தில்
மின்னும் மீன்செதில் மேனியை
அதிசயமாகப் பார்க்கிறாள்.
தூரத்தில் கடல் அலைகளில் மீதேறி
கை அசைத்து செல்கிறான் மீனராசா.
கடல் நீர் வற்றுவதில்லை.
அடுத்த மழைக்கும் அவன் வருவான்.
ஆனால், அந்த மச்சக்கன்னிகள் வரவிடுவார்களா?
கடலைக் கடைந்தவன் விஷமேறிச் செத்துப்போவதற்குள்
அமுதருந்த வந்துதானே ஆகவேண்டும்!
கடலில் ஒரு சின்னப்புள்ளியாக
அவன் மறையும்வரை காத்திருக்கிறேன்..
போர்வையை விலக்கி சன்னலை அடைக்க
பிரயத்தனப்படுகிறேன்.
படுக்கையிலிருந்து எழும்போதுதான்
கவனிக்கிறேன்.
என் கால்கள் இருந்த இடத்தில்
மீனராசாவின் வால் நீண்டு நெளிகிறது.
மழை வெள்ளத்தில் நீந்தி நடனமாடுவேனா..
முலைகள் தேடி அவன் வருவானே..
எதைக்கொண்டு அவன் விஷம் தணிப்பேன்!
மீனராசா… தேடித் தேடி அலைகிறான்,
துடிக்கிறான்.. தவிக்கிறான்..
கடலில் நீந்திக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்து
மச்சக்கன்னிகள் சிரிக்கிறார்கள்.
இடி மின்னல்
அர்ஜூனா அர்ஜூனா..
மின்னல் பாய்கிறதே..
கருவறை கருகிய வாசனை.
உடைந்தப் படகுகளின் துடுப்புகள்
கடலில் மிதக்கின்றன.
குமரி அவள்.
சுமப்பதை பிரசவிக்க முடியாமல்
கடலுக்குள் விழுந்து தற்கொலை.
மடி நிறைத்த அலைகள்
தொட்டில் கட்டித் தாலாட்ட
முடியாமல் கதறி அழும்
மழைக்காலம்.
அவள் மொழியை ரகசியமாக
மேகக்கூட்டத்தில்
பத்திரப்படுத்துகிறது.
( நன்றி : கதவு இதழ் 38 ஜூலை 22)
Friday, December 3, 2021
அவ்வையின் நெல்லிக்கனி
எங்கே நீ?
துயரங்கள் சுமையாகும்போது
உன் தோள்களைத் தேடுகின்றேன்.
சுமைகளைத் தூக்க அல்ல.
சுமைதாங்கி இளைப்பாற.
பூமி உருண்டையில் – நாம்
மீண்டும் சந்திப்போம் என்றாய்.
பூமி உருண்டை என்பது
உண்மைதான்.
ஆனால்
நம் சந்திப்பு மட்டும்
எப்படி பொய்யானது?
வேண்டியவர்கள் வேண்டாதவர்கள்
பெரியவர்கள் சிறியவர்கள்
எல்லோருடனும்
பேசி சிரித்து உண்டு உறங்கி
பயணம் செய்து
களைத்துப்போய்
கண்மூடிக்கிடக்கின்றேன்.
கனவில் நீ என்னுடன்
பயணம் செய்வாய்
என்ற நப்பாசையில்.
ராக்கி கட்டி
நம் நட்பை
சகோதரப்பாசமாக
பரிணாமம் செய்ய நினைத்தேன்.
நம் நட்பு
ராக்கி கயிற்றையும்
மஞ்சள் கயிற்றையும் விட
மேலானது என்று
புன்னகையுடன் சொன்னாய்.
நான் அவ்வை
நீ என் அதியமான்
என்றேன்.
எங்கே என்
நெல்லிக்கனி? என்றாய்.
தொலைந்துபோன
நெல்லிக்கனியைத்
தேடி அலைகின்றேன்.
என் நட்பே
காதல் தோல்வியடையலாம்!
இங்கே
தோல்வியில் முடிந்த
காதலெல்லாம்
அமரகாவியம் ஆகிவிடும்.
ஆனால்,
நண்பனே…
நட்பு தோல்வியடைந்த தாக
கதைகளில் கூட
கற்பனை செய்யாதே.
அந்த தோல்விகுப் பின்னால்
மனித நேயம்
மாண்டுபோய்விடும்.
மண்ணில் உயிர்கள்
மறைந்துபோய்விடும்.
பூமி உருண்டை
சுருங்கிப்போய்விடும்.
சூரியன் கூட
இருண்டு போய்விடும்.
(2003ல் வெளிவந்த ஹேராம்
கவிதை தொகுப்பிலிருந்து)
Saturday, November 20, 2021
ஜெய்பீம் கொண்டாடு.. பெயரில் என்ன இருக்கிறது?
பெயரில் என்ன இருக்கிறது?
Wednesday, June 23, 2021
கவிஞனுக்கு மரணமில்லை.
கவிஞனுக்கு மரணமில்லை.
Saturday, June 19, 2021
கவிதைகளை எரிக்கும் மழைக்காரி
பஃறுளி நதிக்கரையில் என் ஆதித்தாய் முணுமுணுத்த
சொற்களற்ற ஒலிக்குறிப்பிலிருந்து
ஒவ்வொரு துளியாக எடுத்து
உங்கள் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்தப் பிரபஞ்சம் தோன்றிய அந்த நாளில்
எழுத்து பிறப்பதற்கு முன்னரே
எழுதப்பட்டிருந்த காற்றுவெளியின் குறிப்புகளை
வாசிக்கத் தெரிந்தவர்கள்..
புதிது புதிதாக
எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள்.
புதிதாக எதுவும் பிறக்கவில்லை.
ஏற்கனவே பிறந்துவிட்ட எதுவும்
இன்னும் தன்னைத்
துறக்கவும் இல்லை.
இந்த தொடர்மழையில் குளிரில் நடுங்கும்
எம் மனிதர்களுக்கு
இன்னும் நீங்கள் வாசிக்காத கவிதைப்பக்கங்களை
எரித்து எரித்து
சூடாக்கி சூடேற்றி
குளிர்காய்கிறேன்.
கவிதைகள் எரியும் வாசனையில்
இப்பெருநகரப்பிசாசு
தண்டவாளத்தில் விழுந்து
தற்கொலை செய்து கொள்கிறது.
மழைவெள்ளம் வடியும்போது
பாதி எரிந்தும் எரியாத
கவிதைப் பக்கங்களை
குப்பையிலிருந்து பொறுக்கி எடுத்து
அடுத்தமழைக்காலத்திற்காக
பத்திரப்படுத்துகிறாள்..
கவிதைகளை எரிக்கும்
மழைக்காரி.
Friday, October 23, 2020
இலையுதிர்காலம்
இலையுதிர்காலத்தில்
என்னிடம் வந்திருக்கும்
இந்தப் பறவைக்கு
எதைக் கொடுப்பேன்?
பூக்களின் வாசத்தை
வேர்களிலிருந்து
தோண்டி எடுத்து
இந்தப் பறவையின்
சிறகுகளில்
தெளிக்கட்டுமா..?
காற்றின் வேகத்தில்
இலை உதிர்கிறது.
காத்திருந்தப்
பறவை
காற்றைக்கிழித்துக்
கொண்டு
தரையில் விழுந்துவிடாமல்
இலையைப் பிடித்துக்
கொள்கிறது.
இலையின் நரம்புகள்
படபடக்கின்றன.
இருளும் வெளிச்சமும்
கடந்துப் போகீறது.
பால்வீதியில் பறவையின்
கூட்டில்
சிறகுகளின் கதகதப்பில்
இலையின் இன்னொரு
வாசம்..
வானத்திலிருந்து
தொங்குகின்றன
இப்போது இந்த வேர்கள்..
Wednesday, October 21, 2020
Saturday, August 1, 2020
சிறகசைக்கும் பறவை
Sunday, February 16, 2020
குந்தியின் குருஷேத்திரம்

பாணனின் பாடலைப் பாடினான்..
உடல் நனைந்தது..பற்றி எரிந்தது..
விறலியைப் போல ஆடினேன்.
இரவின் கூத்துக்கலைஞர்கள்
ஒப்பனையை களைந்துவிட்டார்கள்.
நட்சத்திரங்கள் உறங்கப் போய்விட்டன.
அவன் முத்தமிட்ட நெற்றியில்
இன்னும் சூடு ஆறவில்லை.
படுக்கை எங்கும் முத்தங்களின் பன்னீர்த்துளிகள்.
விடிவதற்குள் எல்லாம் மாறிவிடுமோ..
ஹே .. சூரிய வம்சமே..
இன்றுமட்டும் தூங்கிவிடு..
என்னையும் தூங்கவிடு.
கருவறைத் திறந்திருந்தப் போது
உன் மந்திரங்களைச் சொல்லாமல்
சென்றுவிட்டாய்..
உன் கர்ணபுத்திரனைக்
கொடுக்கத்தவறிவிட்டாய்.
குருஷேத்திரம்…
என்னை அல்லவா பலி கேட்கிறது.!
எதிரணியில் உன்னை நிறுத்துகிறது.
அம்புகளின் படுக்கையை
அவர்கள் தருவார்களோ?
உன் அம்பறாத்துணியிலிருந்து
பறந்துவரும் அம்புகளின் அமுத விஷம்
என்னை எடுக்குமோ.. வாழ்வை முடிக்குமோ
எதுவானாலும் சம்மதமே..வா..
ஓம் நமசிவாயா
காத்திருக்கிறேன்..
நீ தரப்போகும் கடைசி முத்தத்திற்காக.
Saturday, February 15, 2020
அவளும் நானும்
எப்போதும் கல்யாணக்கனவுகளில்
மிதக்கிறாள்.
அவன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும்
எப்படி அவளைக் கொஞ்ச வேண்டும்
அவளை எங்கெல்லாம் கூட்டிச்செல்ல வேண்டுமென
அவள் சதா கற்பனையில் ..
கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆடுகிறாள்.
முற்றுப்பெறாத விடிகாலை கனவைப் போல
அவள் என்னைத் துரத்திக் கொண்டே
இருக்கிறாள்.
அவள் எப்போதும் சொல்கிறாள்
நான் உனக்குத்தான் மகளாக பிறக்க வேண்டும்
அடுத்தப் பிறவியிலாவது
உன்னைப் ப்டிச்சிருக்கு.மம்மி...
மழலை மாறாத மொழியில்
அவள் சொற்களின் வீரியம்
எனக்குள் மின்னலாய் இறங்கி
அடிவயிற்றைப் பிசைகிறது.
அவளை இறுக அணைத்துக் கொள்கிறேன்.
இப்போதும் நீ என் மகள் தானே செல்லம்..
சுருட்டை முடி தவழும் முன் நெற்றியில்
முத்தமிடுகிறேன்
அவளைப் போலவே நானும் ..
வளர்ச்சி அடையாமல் அதே நினைவுகளில்.
தேங்கிக் கிடக்கிறேன்.
அலை அலையாய் நீரில் அவன் நினைவுகள்
மிதக்கின்றன.
தண்ணீருக்குள் நானும் அவனுமாய்
அவள் கைப்பிடித்து நடக்கிறோம்.
அவள் கைகொட்டி சிரிக்கிறாள்.
மகேந்திர மலையடிவாரத்தில்
மழை கொட்டுகிறது.
கனவுகளிலிருந்து விழித்துக் கொள்கிறாள்.
அவளுக்கு வளர்ச்சி இல்லையாம்
அப்படித்தான் அவர்கள் சொல்கிறார்கள்.
அவள்.. ஒரு பிரமாண்ட வெளியாய்
என் கைப்பிடிக்குள் அடங்க மறுக்கும்
பேருலகமாய் ஆட்சி செய்வதை
எப்படிச் சொல்லட்டும்?

in wedding dreams
at the peak of youth
always.
Imaging all the time how
should he be,
which way
should he pamper her
and where all
should he take her to,
she hugs the neck
and waltzes.
Like an unfinished early morning reverie
she keeps chasing after me.
always:
In the next birth at least
I should be
born as your daughter.
I like you Mummy.
The power of her words
in a baby's prattle like voice
strikes like lightning
and rolls around low
in my tummy.
I hug her tightly.
"Even now you are my daughter only
darling".
I kiss on the forehead where her curly bangs hang.
I also stagnate
in those same memories
with stunted growth
like her.
and flings into the tank.
His memories
float on the water
in wave after wave.
Holding her hands,
he and I
walk in water.
She claps her hands and laughs.
It rains at the foot
of Mahendra Hills.
sleeping in the womb
wakes up from dreams.
She has no growth.
That is what they say.
How do I say
that she rules
like a huge world
in a universal space
refusing to be
restrained by handhold?
Thursday, January 9, 2020
ஆனந்த தாண்டவமோ

இனம் புரியாத யுகாந்திர
Wednesday, January 8, 2020
பாலையின் கனவுகள்

( நன்றி..காக்கைச்சிறகினிலே. ஜனவரி 2020)



