Saturday, October 19, 2019

உப்பு காதல்

உப்புக் காதல்
அவன் குறிஞ்சி நிலத்தவன்
அவள் நெய்தல் நிலக்காரி.
உப்பு விற்க வருகிறாள்.
“நெல்லும் உப்பும் நேரே “
அவள் குரல் வீதிகளில் ஒலிக்கிறது.
அவன் முன்பின் அறிமுகமில்லாத அவளிடம்
அவளருகில் வந்து உப்பு விலை கேட்கிறான்.
சரி.. இதுவரைக்கும் சரிய்ய்யா..
எந்த உப்பு விலை?!!
“உன் மெய்வாழ் உப்பின் விலை என்னவோ?”
என்று.அவன் கேட்டானாம். (அடப்பாவி..!)
அவள் என்ன செய்திருப்பாள்.
பளார்னு கன்னத்தில் ரெண்டு கொடுத்திட்டு
இடுப்பில சொருகி வச்சிக்கிற கூர்கத்தியை
எடுத்துக் காட்டிட்டு “ட்டேய்.. “ னு
விழியாலேயே மிரட்டிட்டு தான் போயிருப்பா..
ஆனா பாருங்க..
காதல் காட்சியில அப்படி காட்டல.
ஏன் ? என்றெல்லாம் என்னிடம் கேட்கப்பிடாது.
அவ அவனைப் பார்த்து சிரிச்சிட்டு
“யார் நீ, என் வழியை மறிக்கிறாய்? “ னு
கேட்டுட்டு போயிட்டாளாம்.
அவ பின்னால அவன் மனசு போக
அவன் புலம்பறது தான் சீன்.
அம்மூவனார் தான் பாடலாசிரியர்.

காட்சியை ஒரு கடற்கரையில் ஆரம்பித்து
அப்படியே கடைவீதிக்கு கொண்டு வந்து
இடை இடையே பெரிய கப்பலில் அவர்களைக்
காட்டி ஒரு குரூப் டான்ஸ்
குத்துப்பாட்டு
சும்மாவா..
காதல் காட்சிகள் அன்றும் இன்றும் மாறவே இல்லை.

“நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீரோ?” எனச் சேரிதோறும் நுவலும்
அவ்வாங்கு உந்தி அமை தோளாய்! நின்
மெய்வாழ் உப்பின் விலை எய்யாய்.
_ அக நானூறு 390
அம்மூவனார் பாடியது..

No comments:

Post a Comment