வைரமுத்துவுக்கு வக்காலத்து வாங்கும் பதிவல்ல.
Saturday, May 29, 2021
வைரமுத்து ONV விருது சர்ச்சைகள்
Wednesday, May 26, 2021
மகாத்மா காந்தி.. India's first corporate Agent
இந்தியாவின் முதல் கார்ப்பரேட் ஏஜெண்ட்
என்று மகாத்மா காந்தியைப் பற்றி அருந்ததிராய்
கிண்டலடிக்கிறார்.
Monday, May 24, 2021
பரவசமும் பரிதவிப்பும்
புரட்சிக்கவியில் புரட்சிக்கவி சொன்ன சொக்கவெள்ளிப் பால்குடம் எப்படி இருக்கும்? காலை விடியலில் கடலில் மூழ்கி சிவப்பு மங்கி மஞ்சளாகி வெளிச்சமாகும் அக்கணம்.. காதலுக்குப் பூரண பொற்குடம் வைத்து இரவுக்கு நன்றி சொல்லும் பொழுதாக இருக்குமோ…?
பொற்குடமாம்.. அதிலும் பூரண பொற்குடமாம்.. அள்ள அள்ள குறையாத ஓளி மங்காதப் பொற்குடம். பொற்குடம் நிரம்பி பூமி எங்கும் மரங்களாக பூக்களாக பறவைகளாக அவனுக்குள் அவள் பொற்குடமாகும்போது காதல் மட்டுமல்ல வாழ்க்கையும் பூரணத்துவம் பெறுகின்றது. அதனால் தான் மனித இனம் தேச இன மொழி எல்லைகளைக் கடந்து எப்போதும் காதலைக் கொண்டாடுகிறது, .
வாழ்தல் என்பது உண்டு உறங்கி காமப்பசி தீர்க்க தின்று முடிவதல்ல. காதலிருக்கும் வாழ்க்கை மட்டுமே பூரணத்துவம் பெறும். . அவள் பூரண பொற்குடமாய், அவன் வாழ்வில் இருப்பதால் குறை ஒன்றும் இல்லை..
அவள் யார் என்பதைச் சொல்லவரும்போது அவன் சொற்களின் வனத்தில் மாட்டிக்கொண்ட திசையறியாத பயணியைப் போல அலைகிறான்.
சொற்களிலிருந்து தப்பிக்கவும் ஒருசொல் தான் தேவை உன் பெயரைப் போல (பக் 57) என்று அறிந்து கொள்ளும் போது அவள் பறவையாகிவிடுகிறாள்.
என்ன இது… அவன் உள்ளங்கை நீல வானமாகிவிடுகிறதே..
ஒரு பறவையைப் போல உனை விடுவித்தேன். என் அகங்கை முழுவதும் ஆகாய நீலம். (பக் 40) அவன் உள்ளங்கையே ஆகாயமாக்கியவள் எங்கு சென்றாள்..!
“சிறகுகளால் திசைகளை உதறிவிட்டு நீலவெளியில் ஏன் கரையவேண்டும்?” (பக் 18) அசைவின்மையை முகர்ந்தபடி இருக்கிறது தும்பி. அவள் விரல்பிடித்து சாலையைக் கடக்கிறது நத்தை. அவனோ கவிஞன்…
“வானும் இல்லை
பூமியும் இல்லை
அந்தரத்தில் ஒன்றாகப் பயணிக்கின்றன
பரவசமும் பரிதவிப்பும்.” (பக் 76)
அவன் என்ன செய்வான்? மரத்தில் காற்றில் பனித்துளியில் சிறகுகளின் படபடப்பில் அவன் அவளுடனேயே பயணிக்கிறான். தூரிகை, எழுதுகோல், மயிலிறகு, மலர்ப்படுக்கை எதைக்கொண்டு அவளை அலங்கரிப்பது? “பொய்களால் மெய்யை அலங்கரிக்க முடியாது..”
இரைை தேட சென்ற அவன் திரும்பவில்லை என்றால் அவள் இறந்துவிடுவாள்… அவனின்றி அவள் இல்லை. இருவாச்சி பறவைகளின் வாழ்க்கையை அறிந்தவள் அவள்… அதனால் தான் அவள்
“ பறந்து கொண்டிருக்கும் போதே இறந்துவிட வேண்டும்” என்று துடிக்கிறாள். .
“இரத்தம் வழிய கைகளில் ஏந்துவதைத் தவிர கண்ணாடிக்கோப்பைகள் உடையும் போது அவனால் என்ன செய்ய முடியும்?
அவன்் கவிஞன். சொற்களற்ற பாடலை அவனில் எழுதிக் கொண்டிருப்பவள் அவள் தான் .. அவன் கவிதை இன்னும் முடியவில்லை. “
வந்து சேராத ஒருசொல் காத்திருக்க வைத்திருக்கிறது எல்லாச் சொற்களையும். (பக் 64) …
இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அவன் உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை மையமாக அவளே இருக்கிறாள்
“இரு கண்களாலும்
காணண இயலாத
நெற்றியின் மத்தியில்
நின்றெரிகிறாள் “
எரியட்டும். ….
கவிஞர்பழநிபாரதிக்கு வாழ்த்துகள்
கவிதைை நூல்: பூரண பொற்குடம்
கவிஞர் பழநிபாரதி..
கொன்றை வெளியீடு:
விற்பனை உரிமை: தமிழ்வெளி
கைபேசி: 9094005600
Wednesday, May 19, 2021
CPI (M) மாநிலக்கட்சியாகிறதா?
காலம் இப்படித்தான் நைனா... (கி..ரா.. )
எந்த அறிஞர் அண்ணாவைப் பற்றி
நாலு வார்த்தை உங்களுக்குப் பேச வரலியோ...
Sunday, May 16, 2021
காதலும் கம்யுனிசமும் ( தோழர் கவுரியம்மாவை முன்வைத்து)
காதலும் கம்யுனிசமும் இரண்டும் மிகவும் நெருக்கமானவை.
ஒவ்வொரு இட துசாரிக்குள்ளும் ஒரு தீவிரக்காதல்
உள்ளம் காதலித்துக்கொண்டே இருக்கிறது.
Tuesday, May 11, 2021
MADAM CM VS 1 (NUMBER ONE) VS POWER
1 (one) vs
madam CM in power house
இரண்டு திரைப்படங்கள்.
1 நம்பர் ஒன் தான் ம ம்முட்டி யின் நடிப்பில்
நிமிர்ந்து நிற்கும்
மலையாள திரைப்ப டம். முடிவெட்டும் அப்பாவுக்கு
மகனாகப் பிறந்த
கடக்கல் சந்திரன் கேரளாவின் முதல்வராகி தன்
அரசியல் கனவுகளில்
என்னவெல்லாம் செய்கிறார், எதைச் செய்ய
முடியாமல் போகிறது
என்பதை முன்வைக்கும் கதையோட்டம்.
அச்சு அசலில் நம்
அரசியல் வாதிகள் சிலரின் உடல்மொழியைக்
கொண்டுவந்திருக்கிறார்
ம ம்முட்டி. அது ரசனைக்குரியதாகிறது.
எந்த ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட
வேட்பாளரும் அவருடைய ஜன நாயக க்
கடமையை அதாவது
தொகுதி மக்களின் மேம்பாட்டுக்கு எதுவும் செய்யவில்லை என்றால் அவர்களை பதவியிலிருந்து
இறக்கும்
துருப்புச்சீட்டும்
அதாவது உரிமையும் அவரைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய
தொகுதி மக்களுக்கு
உண்டு. தொகுதியில் 50% விழுக்காடு மக்கள் அவர் மீது
அதிருப்தி காட்டினால்
அவர் பதவி விலக வேண்டும். இது right to recall உரிமை. அரசியலில் பகை, தனி மனித தாக்குதல்கள்,
பணத்திற்கு விலை
போகும் தொகுதி
மக்கள், எல்லாவற்றுக்கும் மேலாக ஓட்டுகளை முடிவு
செய்யும் சுயசாதி
அபிமானம்… இதெல்லாம் இருக்கும் இந்திய அரசியலில்
கடக்கல் சந் திரம்
ஒரு கனவு.
இனிமையான கனவு.
கனவுகள் நிஜமானால் இனிமையாக இருக்கும்
என்ற இன்னொரு கனவுக்குள்
நம்மைத் தள்ளும் 1, the only one
கதையில் நிறைய
ஓட்டைகள். இருந்தாலும் இந்தக் கனவு நமக்கு இன்று
தேவைப்படுகிறது.
அரசியலில் யதார்த்தம் என்னவாக இருக்கிறது?
MADAM, CHIEF MINISTER
இந்தி திரைப்படம்.
இதுவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அரசியல் தலைமை.
ஆனால் பெரிய வேறுபாடு
இவர் பெண், அதுவும் இந்தியாவில் உத்திரபிரதேசத்தின் தலித் பெண். இவருடைய அரசியல் பயணம்,
தாராவாக நடிக்கும்
ரிச்சா சட்டாவின் பாப் கட், கதை, கதையில் வரும்
மாஸ்டர் இவை எல்லாம்
உத்திரபிரதேசத்தின் மாயாவதி, கன்சிராம் இருவரையும் நினைவூட்டும் வகையில் காட்சிப்படுத்தப்படுகிறது.
அதிகாரத்திற்கு
வரும் வரை பேசக்கூடிய சமூக அறங்களை ஆட்சி
அதிகாரத்திலிருக்கும்
போது கடைப்பிடிக்க முடிவதில்லை!
அதிகாரத்தின் மாற்றமுடியாத
குணாதிசியம் இதுதான்.
இக்கதையில் ஆட்சி
அதிகாரத்தில் அமர்பவள் பெண், அதிலும் தலித்
பெண். அவளும் என்னவாகிறாள்?
அதிகாரத்தை தொடர்ந்து வசப்படுத்த
அதிகாரத்தின் இரத்தப்பசிக்கு
தீனி போட வேண்டி இருக்கிறது.
அவள் அதைச் செய்கிறாள்..
முதல் பட த்தின்
இனிமையாக கனவுகள் இதிலில்லை.
நிஜங்கள் கனவுகளைப்
போல இனிமையானதாக இருப்பதில்லை.
இரண்டு படங்களையும்
அடுத்தடுத்துப் பார்த்தேன்.
இரண்டு
படங்களும் அரசியல் டிராமா கதைகள்.
ஒன்று
இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறது.
இப்படித்தான்
இருக்கிறது என்று இன்னொன்று சொல்கிறது.
MADAM
cm இந்திய அரசியலைக் காட்டி என் முகத்தில் அறைகிறது.
மெல்ல
மெல்ல அதை மறக்க நினைக்கிறேன்.
மம்முட்டியின்
கனவுகள்.. விரிகின்றன.
கனவுகள்
தான் இனிமையானவை.
Tuesday, May 4, 2021
கழுதைப்பாதையில் ...
பொதி சுமக்கும்
கழுதைகளும் மனிதர்களும்
கழுதைகளும்
மனுஷனைப் போலத்தான் என்பது நிஜமான வார்த்தை.
“ முதல்லே அது சொல்ற பேச்சை நாம கேட்டாத்தான் நாம்மோட பேச்சை அது கேட்கும்…. கழுதை உடம்பில எங்க தொட்டா என்ன நடக்கும்னு தெருஞ்சு வச்சிருக்கனும். கழுதையும் மனுஷன் மாதிரிதாண்டா”
மூவண்ணா
சொல்லியதை சுப்பண்ணா நினைத்துக்கொள்ளும் இட த்திலிருந்து கழுதைப்பாதை ஆரம்பமாகிறது.
சுப்பண்ணா சொல்வது போல கழுதைகள் மனிதர்
குளிப்பாட்டி
சுகம்
கண்டபின் மனிதன் சொல்லைக் கேட்டு பாரத்தை சுமந்து’கொண்டு மலையேறுவதும் மலைச்சரிவில் பாரத்துடன்
இறங்குவதுமாக
வாழ்க்கையை
சுமந்தலைகின்றன. கழுதையை ஒட்டிக்கொண்டு
ராவும்
பகலும் கழுதையோடு கழுதையாக பயணிக்கும்
மக்களும்
அவர்களின் வாழ்க்கையும் மலையிலும் தரையிலும்
மாறி மாறி
கழுதைகளைச் சுற்றி சுற்றி வருகின்றன.
கண்ணாலத்திற்கு முந்தியே வேட்டைக்குப்
போய்விட்டு வருவது தான்
முதுவாக்குடி
ஆண்களுக்குப் பெருமை.. இந்த வேட்டை காட்டு விலங்களை
வேட்டையாடும் வேட்டை அல்ல, தனக்குப் பரிசம் போட்டிருக்கும் பெண்ணை திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் பெண்ணின் தோழியர் அவளை மறைத்து வைத்திருக்கும் இட த்தை தேடி அவளைத் தூக்கி வந்து – அவளும் விரும்பியே வருகிறாள் – அவனும் அவளும் ஆசைத்தீர உடலுறவு கொள்ளும் இரவாக மாறுகிறது. இந்த வேட்டையை அனுமதிக்கும் அதே முதுவாக்குடி ஜனங்கள் தான் தரைக்காட்டு காரியை முதுவாக்குடியில் சேர்த்துக்கொள்ள தயாராக இல்லை! முதுவாக்குடியின் கட்டுப்பாடுகளையும் மீறி திருமணம் செய்து கொண்டு குடிசைப்போட்டு வாழ்ந்த ராக்கப்பன் கங்கம்மா கழுத்து அறுபட்டு இறக்கிறார்கள். அவர்களின் குடிசை தீக்கிரையாகிறது. கங்கம்மா சிலையாகி தெய்வமாகி .. கனவில் வந்து ஆட்சி செய்கிறாள். செவ்வந்தி கதையாக அதைச் சொல்லி திரிகிறான்.
ராக்கப்பன் கங்கம்மாவின் காதல்
திருமணத்தில் முடிந்தாலும்
அவர்கள்
கணவன் மனைவியாக வாழவில்லை..
கணவன் மனைவியாக
வாழ்பவர்களின்
ஆண் பெண் உறவு சொல்ல முடியாத வலிகளையும்
ஏக்கங்களையும்
சுமந்து அலைகிறது.
“மூவண்ணா தன் எதிரே கால்நீட்டி அமர்ந்திருந்த அங்கம்மாளின் கையை ஆசையாக எட்டிப் பிடித்து இழுத்தார். அங்கம்மாள் கோபத்துடன் ‘ஆமா பகல்ல ஏத்துனாலும் ரவையில ஏத்துனாலும் வெளக்கு எரியவா போகுது?’ என்றதும் மூவண்ணாவுக்கு முகம் வாடியது. உள்ளமும் உடம்பும் அந்தப் பேச்சால் பொசுங்கிக் கருகின. சுடுமணலில் சுமையுடன் நடைக்குத் தவிக்கும் கழுதையின் வேதனையைப் போலானது “ (பக் 134)
இந்த அங்கம்மாவும்
அவள் தங்கை தங்கம்மாவும் அவர்களின் கணவன்மார்
மூவண்ணா , சுப்பண்ணாவுக்கு செய்யும்
செய்யும் துரோகத்தின் சுவடாக
கதையின்
இறுதிப்பகுதிவரை சுமையை இழுத்துச் செல்கிறது கழுதை.
அங்கம்மாவின்
குழந்தை ஆசை, அதற்கு உடன்படும் தங்கம்மா தன்
புருஷனை
அவனறியாமல் அங்கம்மாவை உடலுறவு கொண்ட இரவும்
அதை உணர்ந்த
தருணமும்… அந்த
உணர்வுகளும் அங்கம்மாவின் அலறலும்
சுப்பண்ணாவின்
சாபமும்.. நாவலின்
இறுதியில் கழுதைகளுடன் சேர்ந்து
அந்த கழுதைப்பாதையில்
எரிந்து சாம்பாலாகிவிடுகிறது.
கதை நெடுகவும்
ஆண் பெண் உறவுகளும் அதில் பெண்களின் ஏக்கம்,
தாய்மைக்காக
ஏங்கித் தவிக்கும் இரவுகள்,
அதனால் ஆண் பெண் இருபாலாருக்கும் ஏற்படும் மன உளைச்சல்கள், தான் விரும்பிய
ஆண் கிடைக்கவில்லை
என்றவுடன் அவன் திருமண நாளில் தற்கொலை
செய்து
கொள்ளும் பெண், காதலனை பொருளாதர வசதிக்காக மறந்துவிட்டு
அதன் பின்
அதே குழந்தை ஏக்கத்தில் அவனை நினைத்து தேடி அலையும்
நாகு – எர்ராவூ காதல்..
“செல்வம் என்னை விட்டுட்டுப் போனது மாதிரி நீயும் போயிடாதே.
ஏம் பக்கத்திலேயே
இரு. அதுபோதும்
எனக்கு. கல்யாணமெல்லாம் வேணாம். நீயும்
நானும் கடைசிவரைக்கும் இப்படியே இருப்போம் : என்று தன் படுக்கையில்
படுத்திருக்கும் தாயின் முன்னால் கதறி அழும் கோமதி..
இப்படியாக
இந்த நாவலில் பாதை நெடுக மனிதர்களும் அவர்களின்
ஒவ்வொரு
கதையும் ஒரு மாலையில் கோர்த்திருக்கும் பூக்களைப் போல
ஒவ்வொன்றாக
கண்ணியில் இணைகின்றன.
மலைக்காடும் காட்டுப்பாதையில் பாரத்தை தரைக்கும் மலைக்கும்
சுமந்து
செல்லும் கழுதைகளும் கழுதை ஓட்டிகளும்..
அவர்கள் வாழ்க்கையில் எட்டிப்பார்க்கும் காலத்தின் மாற்றங்களுடன் கதை
பயணிக்கிறது. மலைக்காட்டு மனிதர்கள் டிரெயினில்
ஏறி பயணிக்கும்
காலம்
வந்துவிடுகிறது. அவர்களுக்கும் தங்கள் பிள்ளைகளை நாலு
எழுத்து
படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
வெள்ளைக்கார
ர்களின் மிசினரி பள்ளிக்கூடங்கள் வந்துவிடுகின்றன.
மருதுவும்
சன்னாசியும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்தில்
சேர்க்க
வ ந்திருப்பதாக முதலாளியிடம் சொல்கிறார்கள்.
“போடிப்பட்டி பள்ளிக்கூட த்தல சேர்த்துக்கோ. வீடு பிடிச்சி
உன் பொம்பளைங்க இங்க தங்க கூடாது “ என்று ஆணையிடுகிறார்.
குடும்பத்தோடு
காப்பிக் காட்டில் வேலை செய்ய ஒத்துக்கொண்டவர்கள் அவர்கள். அதை மீறும் அதிகாரம் அவர்களுக்கில்லை
என்பதை நினைவூட்டுகிறார்.
பள்ளிக்கூட
த்தின் இடம் கட்டிடம் சூழல் அதை அப்படியே எழுத்தில்
கொண்டு
வந்திருக்கும் செந்தில்குமார்…
இது ஒரு காலத்தின் கதையாக
மாறுகிறது. இந்திய வரலாற்றில் கிறித்தவ
மிஷினரி பள்ளிக்கூடங்களின்
வளர்ச்சியும்
பங்களிப்பும் கதையோடு கதையாக கதையுடன் சேர்ந்து
எழுதப்பட்டிருக்கிறது.
‘நம்மள மாதிரி மலங்காட்டில கஞ்சிக்குத் தவதாயப்படாம பிள்ளைகளாவது
வேலைக்கு
வயித்துக்குத் தின்னுக்கிட்டு இங்கே இருக்கட்டும்” என்று சன்னாசி சொன்னான். அதைக் கேட்ட மருது “ நம்ம பிள்ளைகள நாலு காசு சம்பாதிச்சி கொண்டுட்டு வர்ற துட்டில திங்கற சோறுதான்
நம்ம உடம்பில
தங்கும். அதுவரைக்கு உசிரக் கையில
பிடிச்சிட்டு மலங்காட்டில வேல செய்யனும்: (பக் 287)
காட்டுத் தீயில் முவண்ணாவின்
300 கழுதைகளும்
எரிந்துப்
போகும் காட்சி கழுதைகள் தாயா பிள்ளையா சேர்ந்து நின்று
ஒன்றாகவே
தீக்கிரையாகி இருக்கின்றன
.. மூவண்ணா தன் கழுதைகளின்
மரணத்தை
தன் மனைவி அங்கம்மா செய்த துரோகம் தான் தன் கழுதைகள்
தீயில்
மாட்டிக்கொண்டு இறந்துவிட காரணமாக இருந்தன என்று
சொல்லி
சொல்லி அடிக்கிறார். அந்தப் பெண்கள் அடியை வாங்கிக்
கொள்கிறார்கள். அவர்களும் அதையே நம்புகிறார்கள்.
காடு தரை
மலை கழுதை ஆடு மாடு.. எல்லா வாழ்க்கையிலும்
பாதை நெடுக
பெண்களின் பாதங்களில் முட்செடிகள்..
அவள்
கழுதைபாதைக்கு
தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
பொதி சுமக்க
வேண்டும். மலை
ஏற வேண்டும். சரிவில் இறங்க
வேண்டும். அவன் பிள்ளைகளைப் பெறாத
அவள் வாழ்க்கை
அர்த்தமிழந்த
வாழ்க்கையாகிவிடுகிறது. பெண் என்றால்
அவள் அவன் வாரிசுகளின் விளை நிலமாக இருக்க வேண்டும்.
நிலம் தரிசாக இருந்தாலும்
மழைமேகத்தை
யாரும் குற்றம் சொல்வதில்லை.
தரிசு
நிலத்தைத்தானே கட்டாந்தரை என்று சொல்கிறார்கள்.
கழுதைப்பாதையில்
பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள்
இல்லை
என்றாலும் அவர்களின் ஏக்கமும் தேவையும் குழந்தையைப்’
பெற்றெடுப்பதாகவே
இருக்கிறது. இனக்குழு ரெஃப்ட்க் எவ்ஃப்வ்வாழ்க்கையில்
பெண்ணின்
இடம்… வாரிசு
காய்க்கும் மரம்.. கழுதைபாதையும் விதிவிலக்கல்ல,
நாவல் : கழுதைப்பாதை
எழுத்தாளர் : எஸ்.
செந்தில்குமார்.
வெளியீடு; எழுத்து
– பிரசுரம்
பக் 319 விலை ரூ
375/