Saturday, September 14, 2019

அறிஞர் அண்ணாவின் பணத்தோட்டம்

Image result for அறிஞர் அண்ணா
இந்தியப் பொருளாதர கட்டமைப்பில் 
சாதி, வர்க்கம், வடக்கு-தெற்கு
எல்லாம் சேர்ந்து வினையாற்றுகின்றன. 
இக்கருத்தை நான் முதன் முதலில்
வாசித்த து அறிஞர் அண்ணாவின் பணத்தோட்டம் 
கட்டுரைகளில் தான்.
இந்தியப் பிரதமர் மோதி அவர்கள்
உலக வரைபட த்தில் ஒவ்வொரு
நாடாக தேடி அலைந்து இந்தியாவின் 
பொருளாதரத்தைத் தூக்கி
நிறுத்த ஓடும் ஓட் ட த்தில்
 யார் இந்த இந்திய முதலாளிகள் என்பதையும்
அவர்களின் அசல் முகமும் ஒரே மாதிரி 
இருட்டிலும் தெரிகிறது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கூடவா 
ஒரு தமிழ் தொழிலதிபர்
இல்லாமல் போய்விட்டார்? 
 இந்திய தொழில்துறை, இந்திய முதலாளித்துவம் .. 
இதைக் கொண்டு கட்டமைக்கப்படும்
இந்தியப் பொருளாதாரம்.. யாருடைய முகமாக இருக்கிறது?
இதை ஓரளவு அன்றே தன் பொருளாதர அரசியலாக முன்
வைத்திருக்கிறார் அறிஞர் அண்ணா . ஆனால் என்ன செய்வது..?
இதைப் பற்றி எல்லாம் அண்ணாவின் அரசியல் வாரிசுகள்
தம்பிமார்கள், 
உடன்பிறப்புகள்,
 ரத்த த்தின் ரத்தங்கள் 
அறிவார்களா..!
ஒருவேளை அண்ணாவே அறியாத இன்னொரு
 ஊழல் பொருளாதரத்தைக்
கண்டுப்பிடித்த பெருமையில்.. 
வலம் வருகிறார்களா.
(பணத்தோட்டம் மீள்வாசிப்பு செய்தாக வேண்டும்…
வழக்கம் போல புத்தகம் தொலைந்துவிட்ட து!)


3 comments:

  1. படிக்க மறக்காதீர்கள்
    நீங்களும் திருக்குறள் எழுதலாம்!
    http://www.ypvnpubs.com/2019/09/blog-post_13.html

    ReplyDelete
  2. வருந்தவேண்டாம். freetamilebooks தளத்தில் பணத்தோட்டம் புத்தகம் இலவசமாக creative comments copywrite சட்டப்பாதுகாப்பின் கீழ் இன்று பதிவேற்றப்பட்டுள்ளது. நீங்கள் அங்கு சென்று பதிவிரக்கிக்கஒள்ளுங்கள். முடிந்தால், புத்தக உருவாக்கத்திலும் அவர்களுடன் பணியாற்றலாம். ஆஸ்திரேலியாவிலிருந்து கூட பெண்கள் அப்பணியில் ஆர்வமுடன் பங்கேற்கிரார்கள்.

    ReplyDelete