Wednesday, October 2, 2019

THE UNSUNG HERO of Indian Politics




Image result for SHASTRI THE UNSUNG HERO
மறக்கப்பட்ட மாமனிதர் .. லால் பகதூர் சாஸ்திரி..
இப்படியும் ஒரு மனிதர் ஆட்சி அதிகாரத்தில் இந்தியாவில் இருந்திருக்கிறார். காங்கிரசுக்கார ர்கள் இவரை மறக்கலாம்.
ஆனால் நாம்..? !
• நேருவின் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்த நேரம். ரயில் விபத்து ஏற்பட்ட து. அதற்கு தார்மீகப் பொறுப்பு ஏற்று பதவி விலக
முன்வந்தவர். (இப்போ இதைச் சொன்ன பொழைக்கத் தெரியாதவர்னு சொல்லிடுவாங்க.)
அவர் பிரதமராக இருந்தப் போது கடுமையான பஞ்சம். அவர் அவர் தன் வீட்டு பின்புறத்தில் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் வேண்டிய காய்கறிகளைப் பயிரிட்டார். ஒரு வேளை உணவை சேமிக்கும் வகையில் தானும் தன் குடும்பத்தாரும் ஒரு வேளை உணவைஉண்பதில்லை என்ற தங்கள் முடிவை வானொலியில் அற்வித்து அதைக் கடைப்பிடித்தார்.
அவர் பிரதமராக இருக்கும் போது அவருடைய மகன் அவரின் அலுவலக வண்டியை (கார்) தன் சொந்தப் பயன்பாட்டுக்கு அவரை அறியாமல் பயன்படுத்திவிட்ட தை அறிந்த சாஸ்திரி தன் மகன் எத்தனை கிலோ மீட்டருக்கு அந்த வண்டியைப் பயன்படுத்தி இருக்கிறார் என்று கணக்குப் பார்த்து அத்தொகையை அரசு கணக்கில் செலுத்தினார்.
17 மாதங்கள் பிரதமராக இருந்திருக்கிறார். அதற்கு முன் நேருவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்திருக்கிறார். ஆட்சி அதிகாரத்தில் இருந்த சாஸ்திரி இறக்கும் போது அவருக்குச் சொந்த வீடு இல்லை.சொந்தமாக ரியல் எஸ்டேட் இல்லை. நிலமில்லை. பினாமி பெயரில் சொத்துகள் இல்லை. வங்கிக் கணக்கில் பணமில்லை. அவர் விட்டு சென்றது ஒரு பழைய FIAT கார் தான்! அதுவும் வங்கியில் கடன் வாங்கி வாங்கிய கார். அந்தக் கடனை அவர் மனைவி அவர் இறந்தப் பின்
அவருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியத்திலிருந்து தவணைகள் செலுத்தினார்!
இன்று அவர் பிறந்த நாள் (02 அக்டோபர்)
இப்படியும் ஒரு பிரதமர் இந்தியாவில் இருந்திருக்கிறார்.
Shastri, the unsung hero of Indian history.

No comments:

Post a Comment