Friday, January 21, 2022

தந்தை பெரியாரும் சு.ரா இலக்கியவட்டமும்




 உங்கள் காற்றில் கலந்த பேரோசையில் ஜீவாவைப் பற்றி எழுதியுள்ளீர்கள். பெரியார் உங்களைப் பாதிக்கவில்லையா? இத்தேர்வுக்கு அரசியலும் ஒரு காரணமாக இருக்குமோ?

ஜீவா எங்கள் ஊரைச் சேர்ந்தவர். பத்து வயது வாக்கில் நான் அவரைப் பார்த்தாயிற்று. பின்பு அவரது மறைவு வரையிலும் அந்தத் தொடர்பு நீடித்தது. எங்கள் ஊருக்குப் பெரியார் வந்துபோகக் கூடியவர் என்றாலும் என் குடும்பப் பின்னணியில் அவர் பெயர் அடிபடவே இல்லை. சிறுவயதில் நான் மலையாள எழுத்தாளர்களைத்தான் அதிகம் படித்தேன். எம். கோவிந்தன், சி. ஜே. தாமஸ், தகழி, பஷீர் போன்றவர்களை. எங்கள் பகுதி தமிழகத்துடன் இணைந்த பின்புதான் எனக்குப் பெரியார்மீது கவனம் வந்தது. அவருடைய உண்மை உணர்ச்சியை நான் ஏற்றுக்கொண்டேன். அந்த உண்மைகளை அவர் முன்வைக்கும் முறைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதில் ஈரமோ, அழகியலோ, அரவணைப்போ இல்லை.

பெரியாரை நீங்கள் நிராகரிப்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட மொழி சம்பந்தமாக மட்டும்தானா?

பெரியாரை நான் நிராகரிக்கவில்லை. அவருடைய கருத்துகளில் பெரும்பான்மையானவை நான் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான். சொல்முறை பற்றிச் சொன்னேன். மொழிக்கும் கருத்துக்குமான உறவு எனக்கு மிக முக்கியம். அவரது இயக்கத்தில் அவர் ஒருவர்தான் சொல்லோடு செயலை இணைத்திருந்தவர். பின்னால் வந்தவர்கள் எவரையுமே அப்படி சொல்ல முடியாது. அரசியல் தளத்தில் ஆகப் பெரிய அநாகரீகங்களை உருவாக்கியவர்கள் அவர்கள். அந்த இயக்கத்தின் இன்றையச் சரிவு கொடுமையானது.

 

அழியாச்சுடர்களில் இடம்பெற்ரிருக்கும் எழுத்தாளர் சு,ராவின் நேர்காணல்.

 

இதில் சு. ரா முன்வைக்கும் மொழியின் ஈரம் அழகியல் என்பது என்ன?

இதைக் கட்டுடைத்தால் அது ஓர் அணுகுண்டைப் போல வெடித்து சிதற்கிறது.

சு.ராவின் முதல் நாவல் “புளியமரத்தின் கதை”யை எடுத்துக்கொண்டால்

அதில் திருவிதாங்கூர் மன்னர் வந்துப்போகும் காட்சிகள் வரும். 

திருவிதாங்கூர் மன்னர் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரும் 

சமூக நிகழ்வுகள் எதுவும் அதிலிருக்காது. அவர் வீட்டுக்கு 

அருகில் தான் சவேரியர் சர்ச் இருக்கிறது.

பல இலட்சம் மக்கள் மதமாற்றம் நடந்திருக்கிறது. 

அதுவும் அவர் எழுத்தில் வரவில்லை. அவர் காலத்தில்

 நிகழ்ந்த மண்டைக்காடு கலவரம் அவருக்கு

மிக அருகில் நடைபெற்ற சம்பவம். அவர் அப்போது 

தன் இரண்டாவது நாவலை எழுதி வெளியிட்டுக்கொண்டிருந்தார்.

 அவர்களைப் பொறுத்தவரை “தனிமனித

அனுபவம் மட்டுமே இலக்கியம்,

 அதாவது அவர்களைப் பாதிக்காத எதையும்

அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுதான்  நடந்திருக்கிறது!

 

இலக்கியத்திற்கு சமூகப்பொருளாதர நிலைமைகளால் மானிடரில் பல வர்க்கங்கள்

பாதிப்புக்கு உள்ளாகும் அவலங்களைவிட , பாரபட்சமான ‘தரும ம்’ நிலவுகின்ற

நம் சமுதாயத்தில் இந்த மானுடம் படுகின்ற அவலங்களைப் பற்றிப் பேசுவதைவிட

இதை எல்லாம் பேசாமல் ஒட்டுமொத்த “மனித நேயம்” பற்றிய போர்வையை

எடுத்துப் போர்த்திக்கொள்கிறார்கள்.

 

அதனால் தான் சு.ரா. தோட்டிச்சியின் பிரசவ வலியைப் 

பற்றி பேசுவது மட்டும்  இலக்கியமல்ல, 

அது பிரிட்டிஷ் இளவரசியின் பிரசவ வலியைப் பற்றியும் 

பேச வேண்டும் என்று “வலிகளை ‘ ஒன்றாகப் பார்க்கிறார்!

இருவரின் வலிகளும் ஒன்றா?


சரி , பிரசவவலி என்பது சு.ரா சொல்வதுபோல

அவரின் சுய அனுபவமாகும் வாய்ப்பே இல்லை என்பதால்

விட்டுவிடலாம். 

பெரியாரின் மொழி வலிகளை மட்டும் பேசுவதில்லை. 

அவர் என்ன வசதியான அறையில் உட்கார்ந்து கொண்டு 

தன்னைச் சுற்றி தன் தொண்டரடி எழுத்தாளர்

பட்டாளங்களுடன் இலக்கிய அவஸ்தையை ஈரத்துடன் பேசத்தெரியாதவர்.

தோட்டிச்சி வலி வந்து துடிக்கும்போது அவளுக்கு மருத்துவ வசதி ஏன் இல்லை?

தோட்டிச்சிகள் ஏன் பிரசவத்தில் செத்துப்போகிறார்கள்? தோட்டிச்சிகளின்

தொட்டில்களில் ஏன் நகரக்குப்பைகளின் மணம் கலந்திருக்கிறது?

மானுட வாழ்வின் இயற்கை நிர்ணயித்திருக்கும் 

பிறப்பும் இறப்பும் தோட்டிச்சிக்கு

ஏன் கெளரவமானதாக இல்லை? 

இப்படியாக கொஞ்சமும் ரசனை இல்லாமல்

ஈரம் இல்லாமல் பெரியார் பேசி இருக்கிறார். சரிதானே!

போகிற இட்த்திலெல்லாம் கோதுமை தோசையும் 

ரவா  தோசையும் பற்றி

பெரியாருக்கு சிலாகிக்க தெரியவில்லை! 

என்ன மனிதர் அவர்!

 

இப்போதுதான் நான் ஓர் அக்மார்க் இலக்கியவாதியா

யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

 


Monday, January 17, 2022

நாக்பூர் பெளத்தமும் மீனாட்சிபுர இசுலாமும்

 பேசு பொருளும் பேசாக்கிளவியும்

நாக்பூர் பெளத்தமும் மீனாட்சிபுர இசுலாமும்
கோவேறு கழுதையும் கல்மண்டபமும்
நாக்பூரில் ஒரு கருத்தரங்கு நிகழ்வில் (CERI CONFERENCE) கலந்து கொண்டபோது நல்ல வாங்கிக்கட்டிக் கொண்டேன்.
ஆனால் அத்தருணம் எனக்கு வருத்தம் தரவில்லை.
இனம் புரியாத சந்தோஷத்தைக் கொடுத்தது.
நாக்பூரில் பெளத்தம் மாறியதால்
என்ன மாற்றம் நடந்திருக்கிறது?
இப்போதும் பெளத்தம் தழுவியவ தலித்துகளை
“நவீன பெளத்தர்கள்” என்றுதானே அழைக்கிறார்கள் ?
என்று என் பேச்சின் ஊடாக சொல்லிவிட்டேன். எ
னக்குப் பின் பேசிய சட்டக்கல்லூரி பேராசிரியர்
என்னைப் பிடிபிடி என்று பிடித்துவிட்டார்.
Do You Know? Do you know?
என்று அவர் ஒவ்வொன்றாக சொல்லும்போது
எனக்குள் வருத்தமோ வெட்கமோ வரவில்லை.
சந்தோஷம் அப்படியே மொட்டவிழும் தருணமாக
அது மாறி இருந்தது.
(அவர் பேசி முடித்தப்பின் அவர் கையைப் பிடித்துக்கொண்டு
5 நிமிடம் கைலுக்கியதாக தோழர்கள் சொல்லி சிரித்தார்கள்.)
பாபாசாகிப் அம்பேத்கருடன் மதம் மாறிய
குடும்பத்திலிருந்து வந்தவர் அவர்.
பெளத்தம் தழுவுவதற்கு முன் ஒடுக்கப்பட்ட வீட்டில்
திருமணம் நடந்தால் அந்த ஊரின் பண்ணையார்
“சாந்திமூகூர்த்தம்” நடத்தியபிறகுதான்
கணவனுடன் அப்பெண்ணின் வாழ்க்கை ஆரம்பிக்கும்
அவலம் இருந்திருக்கிறது. மதம் மாறியபின் அவர் அம்மா
தன் திருமணத்தில் அதை எதிர்த்திருக்கிறார்.
நான் இந்துவல்ல, உன் படுக்கைக்கு வருவதற்கு,
போடா” என்று சொல்லும் துணிச்சலை
பெளத்தம் என் அம்மாவுக்கு கொடுத்தது,
டூ யு நோ ?என்று கேட்டார்..
1981ல் திரு நெல்வேலி மாவட்டத்தில் மீனாட்சிபுரத்தைச்
சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் இசுலாம் மத ்திற்கு மாறினார்கள்.
அப்போது தமிழக முதல்வராக இருந்த எம் ஜி ஆர்
“இது அரபு நாட்டு பணம் செய்த வேலை”
என்று சொன்னார். ஆனால், சட்டப்பேரவையில்
விவாதம் நடந்தப்போது நாவலர் நெடுஞ்செழியன்
“ அவர்கள் சமூக க் கொடுமைகளால்தான் மதம் மாறினார்கள்”
என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.!
அன்றைய பிஜேபி தலைவர் வாஜ்பாயி சம்பவ இடத்திற்கு
கிலோ மீட்டர் நடந்தே சென்றார்.
விஷ்வ இந்து பரிஷத் யாகம் நடத்தினார்கள்,
கழிவறை கட்டித்தருகிறோம், பள்ளிக்கூடம் கட்டித்தருகிறொம்
என்று ஆசைக்காட்டினார்கள். அன்றைய ஒன்றிய
அரசின் பிரதமர் இந்திராகாந்தி தன் அமைச்சர்
யோகேந்திர மக்வானாவை அனுப்பினார்.
தமிழக காங்கிரசு தலைவர் இளைய பெருமாள்
மீனாட்சிபுரத்திற்கு விரைந்து சென்றார்.
எதுவும் நடக்கவில்லை. அவர்கள் மதம் மாறியது மாறியதுதான்.
யாரும் “இந்துவாக “ திரும்பவில்லை!
தமிழ்ச்சமூகத்தில் சமகாலத்தில் நிகழ்ந்த
ஒரு கலகம் இது. ஆனால் இது இலக்கியமாகவில்லை!
இந்த மதமாற்றம் குறித்துதான் விசிக தலைவர்
தோழர் தொல். திருமாவளவன் முனைவர் பட்ட ஆய்வு செய்தார்.
“Mass religious conversion of Meenakshipuram – A Victimological Perspective”
என்ற தலைப்பில் அவர் முனைவர் ஆய்வு வெளிவந்திருக்கிறது.
இதுவும் பேசப்பட்டிருக்க வேண்டும்.
கருத்தரங்குகளின் ஆய்வுப்பொருளாக மாறி இருக்க வேண்டும்.
ஆனால் எல்லா முனைவர் பட்ட ஆய்வுகளையும்
போல இதுவும் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது
கோப்புகளில்!
சிலவற்றை பேசக்கூடாது என்பதில் நம் அறிவுச்சமூகம்
ரொம்பவும் கவனமாக செயல்படுகிறது.
உட்சாதி பிரச்சனைகள் சாதிக்கொடுமையின்
இன்னொரு கூர்மையான ஆயுதம், இதைப் பேசிய எழுத்தாளர்
சகோதரர் இமையம் அவர்களின்
‘கோவேறு கழுதைகள் “ மிக முக்கியமான நாவல்.
சந்தேகமில்லை.
ஆனால் பிராமண சமூகத்திலிருக்கும் உட்சாதி கொடுமையைப்
பேசிய சுமதியின் “கல்மண்டபம்”
குளத்தில் போட்ட கல்லாக கிடக்கிறது.
பிராமணர்களின் சாவு வீடுகளில் ஈமச்சடங்கு செய்யும்
சவுண்டி பிராமணர்களின் கதை “கல்மண்டபம்”
சாதியப்படி நிலையில் உச்சத்தில்
இருக்கும் ஒரு சமூகம், கல்வி வசதி வாய்ப்பு படைத்த
ஒரு சமூகத்திற்குள் நிலவும் “தீண்டாமை”யை அவர்கள்
பேசி இருக்க வேண்டும். பேசவில்லை.
பேசாமல் கடந்து செல்வதில்
கவனமாக இருந்திருக்கிறார்கள்.
இங்கு பேசப்பட்டவைகளுக்கு இருக்கும் அரசியலைவிட
பேசாமலிருப்பதற்குள் இருக்கும் அரசியல் ,
நுண் அரசியல் கேவலமானது.
அது தொடர்ந்து சாதியையும் மதத்தையும்
காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
Like
Comment
Share

Saturday, January 15, 2022

பலகீனங்கள் விற்பனைக்கல்ல

 புலம்புவதும் கண்ணீர் விடுவதும்...

போதும். நிறுத்துங்கள்.
எதோ ஒரு வகையில்
உங்களின் அதீத ஆசை, திடீர்னு கிடைக்கும் புகழ்,
நாய்களுக்குப் போடுகின்ற எலும்புத்துண்டுகள் மாதிரி
உங்களுக்கு வீசி எறியப்படும் சில பொன்னாடைகள்
ஊடக வெளிச்சங்கள், காமிரா பளீச் பளீச் மின்னல்கள்..
இந்த வலையில் விழுந்துவிட நீங்கள்
என்ன விட்டில் பூச்சிகளா?
புகழும் அதனால் கிடைக்கும் அடையாளமும்
உங்களைத் தேடி வரவேண்டும்.
நீங்கள் அவைகளைத் தேடி செல்லும்போது
அறிந்தே தான் அதன் முகவர்களின் வலைக்குள்
சிக்கிக் கொள்கின்றீர்கள்.
உழைப்பும் தகுதியும் இன்றி கிடைக்கும் எதுவும்
இங்கே காலத்தின் முன்னால்
தகுதி இழந்துவிடும் ..
இது என்னவோ பொன்மொழி அல்ல.
சில பெரிய விருதுகள் பட்டியலில் போய்
(பெயர் சொல்ல விரும்பவில்லை) அவர்களின்
படைப்புகளை எடுத்து வாசித்துப் பாருங்கள்.
இன்று அவர்களின் படைப்புகளை இனாமாகக்
கொடுத்தாலும் வாசிக்க ஆளில்லை.
ஏன்?
காலத்தின் முன்னால் அவை நிற்கவில்லை.
அவர்களுக்கு அப்போது கிடைத்த அந்த அங்கீகாரமும் கூட
அவர்களின் எதனால் கிடைத்திருக்கிறது என்பதையும் சேர்த்து யோசிக்கும்போது உங்களுக்கு
நான் சொல்ல வருவது புரியும்!
அதிகாரத்தில் இருக்கும் ஆண்களின் பலகீனத்தை
பயன்படுத்திக்கொண்டு அதைக் காட்டி பணம்
பறிக்கும் வில்லன் களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் அதையே தன்
குறுக்குவழியாக வைத்திருக்கும் கும்பல்,
உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதை
முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
அந்தக் கும்பலிடம் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
தகுதியும் உழைப்புமில்லாமல் கிடைக்கும்
எதுவுமே கோமாளிக்கு மாட்டிவைத்த கிரீடம்
போலத்தான் இருக்கும், இருக்கிறது.
இதில் விதம் விதமான நூதனமான ஏமாற்றுகள்
அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
உங்கள் கணவர் அரசு அதிகாரத்தில் பெரிய பதவியில்
இருப்பவராய் இருந்தால் அவரையும் இதே வலையில்
சிக்க வைத்து உங்களுக்கு மன உளைச்சலைத்
தருவதற்கும் பணம் பிடுங்கவும் ஒரு கூட்டம் அலைகிறது.
அடுத்தவ புருஷனின் செலவில் ஷாப்பிங்க் செய்கிற
இன்னொரு கூட்டம் அலைகிறது.

உங்களைச் சுற்றி இருக்கும் அவர்களின்
வலையில் நீங்கள் விழுவதற்கு
அவர்கள் மட்டும் காரணமில்லை.
உங்கள் பலகீனம்.. ஆம்..
உங்கள் பலகீனம்தான் காரணம்.
அதைவிட்டு வெளியில் வாருங்கள்.
ஒவ்வொரு உழைப்புக்கும் பின்னால் கிடைக்கும்
சின்ன சின்ன பாராட்டுதல்கள், நமக்கு கிடைக்கும்
அங்கீகாரத்தின் வரைபடம் மெல்ல மெல்ல தனக்கான
இடத்தைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை...வேண்டும்.
சரி... அப்படித்தான் எதுவும் நடக்கவில்லை
என்றாலும்...
ஒன்றும் குடிமுழுகிவிடாது.
உங்கள் சுயம் .. கடைசிவரை
உங்களுடன் நிற்கும்.
அது ரொம்பவும் முக்கியம்..
எனதருமை தோழியரே..
இப்போதுதான் எழுத வந்திருக்கும்
என் இளஞ்சிட்டுகளே...
சுயம் ரொம்ப ரொம்ப முக்கியம்டா..
அதை வித்துட்டு
எதையும் அடைந்துவிட முடியாதுடா செல்லங்களே..
ப்ளீஸ்..
புலம்புவதை நிறுத்துங்கள்.
கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள்.
பெண் பலகீனமானவள் அல்ல.
ஆணின் பலகீனத்தைப் பயன்படுத்திக்
கொண்டு அடைவது எதாக இருந்தாலும்
அது... "த்தூ"
வெளியில் வாருங்கள்.
உன் மீது நம்பிக்கை வை.
நீ பலகீனமானவள் இல்லை.
உழைப்பில்லாமல் கிடைக்கும் எதுவும்
உன்னோடு ஒட்டாதுடா..
இதை எழுதும் நான்
நீ நிமிர்ந்துப் பார்க்கும் பிரபலமாகவோ
ஸ்டாராகவோ உன் பார்வையில்
நான் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் ..
என் சுயம்..
என்னோடு இருக்கிறது.
அது என்னை சமரசமின்றி
இயக்கிக் கொண்டிருக்கிறது.
அது எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்பதை
அனுபவித்துப் பார்..
புரிந்து கொள்வாய்.
இதோ.. இத்தருணத்தில்
என் தோள்களில் சாய்ந்துக் கொள்.
கொஞ்சம் கொஞ்சமாக
இப்போது உன் சுயம்
உன்னிடம் திரும்பி வருகிறதா..
வரும்.. எனக்கு எப்போதும்
உன் மீது நம்பிக்கை உண்டு.
nd 10 others

Wednesday, January 12, 2022

தமிழர்களின் பொய்முகம்

 


ஆண் பெண் உறவில் ரொம்பவும் பொய்யான வாழ்க்கை ...

தமிழர்களின் வாழ்க்கை.

பொய்கள் அழகானவை.
பொய்கள் உன்னதமானவை.
பொய்களில் உண்மையின் கோரமுகம் இருப்பதில்லை.
எல்லோருக்கும் அதனால் பொய் எப்போதும்
நெருக்கமானதாக இருக்கிறது.
ஆனால்...
பொய் உண்மையின் இன்னொரு முகம்.
பொய்யின் ஒவ்வொரு அதிர்வலையிலும் உண்மைதான்
பேசிக்கொண்டே இருக்கிறது.
ஆண் பெண் உறவில் பொய்கள் உன்னதமானவையாக
கட்டிக்காப்பாற்றப்படுகின்றன.
அதீதமான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து
வந்திருப்பதன் மூலம் சமூகத்தின் உண்மையான
நிலவரத்திற்கும் இவர்களின் இலக்கிய
வெளிப்பாடுகளுக்குமிடையில் ஒரு இட்டு நிரப்ப முடியாத
இடைவெளி இருக்கிறது.
களவு மணம் கொண்ட வாழ்வியலில் திருமணம்
என்ற சடங்கு நிறுவனமயமான காரணத்தைச்
சொல்லவரும் தொல்காப்பியம் களவுமணம்
செய்தவன் ஏமாற்ற ஆரம்பிக்கும்போது திருமணம்

தோன்றியது என்று சொல்கிறார்.
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப
(கற்பியல்,4
எவ்வளவு பெரிய சமூக மாற்றம். திருமணச் டங்குகளை
ஒரு சமூகம் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தக் காரணத்தை
எத்தனை சங்கப்பாடல்கள் பேசுப்பொருளாக்கி இருக்கின்றன?
எத்தனை ஏமாற்றுகள் இருந்திருந்தால்
சமூகம் தொடர்ந்து கடைப்பிடித்த ஒரு மரபிலிருந்து
இன்னொரு முறைக்கு மாறி இருக்கும்?
என்னதான் மார்க்சியம் சொத்துடமை,
வாரிசுகள் குடும்ப நிறுவனத்திற்கான காரணிகளாக
முன்வைத்தாலும் பெண் சமூகம் அதுவரை
களவு மணத்தின் உரிமையை வாழ்க்கையை
வாழ்ந்தவர்கள் திருமண உறவு வாழ்க்கைக்குள்
எவ்விதமான உறுத்தலோ மனவருத்தமோ இல்லாமல்
நுழைந்துவிட்டார்களா என்ன?

திருமணம் பெண்ணிற்கு பாதுகாப்பானது,
திருமணச் சடங்கில் நுழையும் ஆண், அவன் மனைவியை
அவ்வளவு எளிதாக பொய் சொல்லி ஏமாற்றிவிட முடியாது
என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. எந்தளவுக்கு
களவு மணத்தில் பொய்யும் வழுவும் தோன்றியிருந்தால்
அதற்கு மாறாக இன்னொரு பாதுகாப்பான வளையத்திற்குள்
பெண் நுழைந்திருப்பாள்!
ஆனால் இந்த மாற்றத்தைப் பதிவு செய்யவில்லை
நம் சங்க இலக்கியம்!
சமூகத்தில் நிகழ்ந்த மாபெரும் மாற்றத்தை
தமிழர் வாழ்க்கையில் புகுந்துவிட்ட தலைகீழ்
மாற்றத்தை இலக்கியம் பேசவில்லை!
சங்க இலக்கியத்தில் ஒரே ஒரு பாடலில் தான் இதுவும்
வேறு எதையோ சொல்ல வரும்போது ஒரு காட்சியாக
சொல்லப்பட்டிருக்கிறது!
தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்
கரும்பு அமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த்
திருநுதல் குறுமகள் அணிநலம் வவ்விய
அறனிலாளன் அறியேன் என்ற
திறன் இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய்
முறியார் பெருங்கிளை செறியப் பற்றி
நீறு தலைப்பெய்த ஞான்றை
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே
- கடுவன் மள்ளனார். அகம் 256
இப்பாடலும் கள்ளூர் காதல்கதையை நேரடியாக
பேசவில்லை.
அன்று கள்ளூரில் அவைக்களம் சிரித்து
ஆரவாரித்தது போல பரத்தையுடன் அவன்
கொண்ட உறவை ஊர் மக்கள் பேசி சிரிப்பதாக
சொல்லிச்செல்கிறது.
இந்த சமூக மாற்றத்தை ஏன் பாடவில்லை?
ஏன் எழுதவில்லை?
அல்லது எழுதியதை மறைப்பதிலும் அழிப்பதிலும்
கலாச்சார காவலர்கள் கவனமாக இருந்தார்களா!!

கோவில் சிற்பங்கள் சில இதை எல்லாம் மீறி இருக்கின்றன.
தொட முடியாத உசரத்தில் இருக்கின்றன. மேலும்
அவை கோவிலில் இருப்பதால் பாதுகாப்பாக
“ புனிதமாக” இருக்கின்றன. அவ்வளவுதான்.