Sunday, August 16, 2026

Governor The Saviour

 


பொருளாதாரம் என்பது என்ன?

ஒரு நாட்டில் நடக்கும் போர் நம்மை எப்படி பாதிக்கும்?

ஒரு நாடு பிரிந்தால் / உடைந்தால் அது நம்மை எப்படி பாதிக்கும்?

இதெல்லாம் பற்றி தெரிந்து கொள்ள பெரிய்ய பொருளாதார மேதையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை! 


விடுதலைக்குப் பிறகு இந்தியா எதிர்கொண்ட சவால்களில் மிகவும் முக்கியமானது 1991ல் எதிர்கொண்ட திடீர் பொருளாதார சரிவு. 


காரணம்:

 1)அரபு நாடுகளில் யுத்தம் 🔥


2);சோவியத் யூனியன் உடைந்தது. அதனால் சோவியத்து டன் இந்தியா வைத்திருந்த இந்திய ரூபாயிலான பண பரிமாற்றம் முடிவுக்கு வருகிறது.


இந்திய அரசு? 

அப்போது தடுமாறிக் கொண்டிருந்தது. 

இந்த அசாதாரணமான நெருக்கடியை ரிசர்வ் வங்கி கவர்னர் வெங்கிடரமணன் எதிர்கொண்ட விதம்..

 

நம் இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய இந்திய வரலாற்றின் மிக முக்கியமான நாட்கள்..

இதை எல்லாம் பாருங்கள்.


அசல் ஹீரோக்கள் யார்?னு புரியவரும்.


🔥

90 களில் நான் வங்கியில் export dept ல் இருந்தேன். இந்தச் சூழல் என்ன என்பதை அறிவேன். இந்த திரைப்படம் என் அந்த நாட்களை நினைவூட்டியது. மாலை 5 மணிக்கு ரிசர்வ் வங்கிக்கு எங்கள் வங்கியின் அன்றைய இருப்பை உறுதி செய்யும் வேலை. எவ்வளவு டென்ஷன். நம்பர்கள் எல்லாம் டாலர் பில்லியனில்! 

இப்போ நினைத்தாலும் கை நடுங்குகிறது..

அந்த இக்கட்டான இருண்ட நாட்களில் நம்மைக் காப்பாற்றிய silent saviour  அவர்தான்.

🔥

இதில் இன்னொரு முக்கியமான அரசியல் செய்தி.. வாஜ்பாய் அவர்கள் அரசியல் / எதிர்கட்சி என்பதை எல்லாம் தாண்டி நம் தேசம் தான் முக்கியம் என்று கை கொடுத்த தார்மீகம்.

🔥



.

Saturday, August 8, 2026

இந்திய கார்ப்பரேட் ஜனநாயகம்.



வாயைத் திறந்து வலிய வந்து மாட்டிக்கிறதுனா அது இதுதானா!🙂

இப்போ 900 கோடியானு

வாயைப் பிளந்து கேட்டுட்டு

அடேங்கப்பா... நீங்க எம்புட்டு பெரிய ஆளுனு நினைக்கிறதோடு நின்னுட்டா நல்லது சரவணா..

ஆனா.. தோண்ட தோண்ட பூதங்கள் கிளம்பி வருகின்றன.


பூதம் 1:

தேர்தல் பத்திரம். Electoral Bonds.

2018- 2024 வரை கார்ப்பரேட்டு கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க செய்த ஏற்பாடு.🙂

இந்த தேர்தல் பத்திரங்களை வாங்கிய கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு விநியோகிப்பார்கள். அது கையில் கிடைத்த 15 நாட்களுக்குள் அந்தப் பத்திரத்தை SBI வங்கியில் பணமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி மாற்றிக் கொள்ளப்படாத பத்திரங்கள் பிரதமர் நிதியில் சேர்க்கப்படும். 

இந்தப் பத்திரங்களை வாங்கிய கார்ப்பரேட்டுகளின் பெயர்கள் ரகசியமாக இருக்கும். இது இந்திய சட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணைய சட்டத்திற்கு எதிரானது என்பதால் உச்ச நீதிமன்றம் இதை தடை செய்தது. அதன் பிறகு தான் SBI தேர்தல் பத்திரங்களை வாங்கிய கார்ப்பரேட்டுகளின் பெயர்களை வெளியிட்டது. 


பூதம் 2:


தேர்தல் பத்திரம் முடிந்தால் என்ன!?🙂 இப்போது வந்திருக்கிறது தேர்தல் அறக்கட்டளை. (Electoral Trust) கார்ப்பரேட்டுகள் இந்த அறக்கட்டளையில் அரசியல் கட்சிகளுக்கு கொடுக்க வேண்டிய நிதியை செலுத்தி விடுவார்கள். தேர்தல் அறக்கட்டளையிலிருந்து 

அந்த நிதி அரசியல் கட்சிகளுக்கு போய்விடும் 🔥🙂

தேர்தல் அறக்கட்டளை பெற்ற நிதியில் 95% அரசியல் கட்சிகளுக்கு போய்தான் ஆக வேண்டும். 

🔥🔥🔥🔥

இந்த பூதங்களிடமிருந்து நிதி பெற்ற அரசியல் கட்சிகள் எவை? எவ்வளவு நிதி பெற்றன? எந்தக் கட்சி அதிகம் நிதி பெற்றிருக்கிறது?

எல்லா விவரங்களும் கட்சிவாரியாக கார்ப்பரேட்டுகளின் பெயர்களுடன் வெளிவந்திருக்கிறது.

🔥🔥

தேர்தல் பத்திரங்களை மிக அதிகமாக வாங்கிய ஒற்றை நிறுவனம் பியூச்சர் கேமிங் & ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம். 1368 கோடி.

இதில்

TMC 540 கோடி

DMK 509

BJP 100

மீதி இதர கட்சிகள்.

🔥🔥

2024-25 நிதியாண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் (Electoral trust)

மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை மொத்தம் ரூ.3,826 கோடி.

இதில் 3157.65 கோடி பாஜக பெற்றுள்ளது.( தகவல் ADR)

🔥🔥🔥🔥

இதில யாரும் எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கல்ல.

நிறுவனங்கள் ஏன் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுக்கின்றன?

🙂சும்மா..🙂

இந்திய ஜனநாயக முதலாளித்துவம் என்பது இதுதான்.