இப்போ 900 கோடியானு
வாயைப் பிளந்து கேட்டுட்டு
அடேங்கப்பா... நீங்க எம்புட்டு பெரிய ஆளுனு நினைக்கிறதோடு நின்னுட்டா நல்லது சரவணா..
ஆனா.. தோண்ட தோண்ட பூதங்கள் கிளம்பி வருகின்றன.
பூதம் 1:
தேர்தல் பத்திரம். Electoral Bonds.
2018- 2024 வரை கார்ப்பரேட்டு கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க செய்த ஏற்பாடு.🙂
இந்த தேர்தல் பத்திரங்களை வாங்கிய கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு விநியோகிப்பார்கள். அது கையில் கிடைத்த 15 நாட்களுக்குள் அந்தப் பத்திரத்தை SBI வங்கியில் பணமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி மாற்றிக் கொள்ளப்படாத பத்திரங்கள் பிரதமர் நிதியில் சேர்க்கப்படும்.
இந்தப் பத்திரங்களை வாங்கிய கார்ப்பரேட்டுகளின் பெயர்கள் ரகசியமாக இருக்கும். இது இந்திய சட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணைய சட்டத்திற்கு எதிரானது என்பதால் உச்ச நீதிமன்றம் இதை தடை செய்தது. அதன் பிறகு தான் SBI தேர்தல் பத்திரங்களை வாங்கிய கார்ப்பரேட்டுகளின் பெயர்களை வெளியிட்டது.
பூதம் 2:
தேர்தல் பத்திரம் முடிந்தால் என்ன!?🙂 இப்போது வந்திருக்கிறது தேர்தல் அறக்கட்டளை. (Electoral Trust) கார்ப்பரேட்டுகள் இந்த அறக்கட்டளையில் அரசியல் கட்சிகளுக்கு கொடுக்க வேண்டிய நிதியை செலுத்தி விடுவார்கள். தேர்தல் அறக்கட்டளையிலிருந்து
அந்த நிதி அரசியல் கட்சிகளுக்கு போய்விடும் 🔥🙂
தேர்தல் அறக்கட்டளை பெற்ற நிதியில் 95% அரசியல் கட்சிகளுக்கு போய்தான் ஆக வேண்டும்.
🔥🔥🔥🔥
இந்த பூதங்களிடமிருந்து நிதி பெற்ற அரசியல் கட்சிகள் எவை? எவ்வளவு நிதி பெற்றன? எந்தக் கட்சி அதிகம் நிதி பெற்றிருக்கிறது?
எல்லா விவரங்களும் கட்சிவாரியாக கார்ப்பரேட்டுகளின் பெயர்களுடன் வெளிவந்திருக்கிறது.
🔥🔥
தேர்தல் பத்திரங்களை மிக அதிகமாக வாங்கிய ஒற்றை நிறுவனம் பியூச்சர் கேமிங் & ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம். 1368 கோடி.
இதில்
TMC 540 கோடி
DMK 509
BJP 100
மீதி இதர கட்சிகள்.
🔥🔥
2024-25 நிதியாண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் (Electoral trust)
மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை மொத்தம் ரூ.3,826 கோடி.
இதில் 3157.65 கோடி பாஜக பெற்றுள்ளது.( தகவல் ADR)
🔥🔥🔥🔥
இதில யாரும் எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கல்ல.
நிறுவனங்கள் ஏன் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுக்கின்றன?
🙂சும்மா..🙂
இந்திய ஜனநாயக முதலாளித்துவம் என்பது இதுதான்.
