"GOD save the KING"
Sunday, May 7, 2023
GOD save the KING
Wednesday, April 13, 2022
அறிவாயுதமே போராயுதமாய்.. அண்ணல் அம்பேத்கர்
“கலையின் பெயரால் எம் பெண்களை இழிவுப்படுத்துவதை இனியும்
பொறுப்பதற்கில்லை, அப்படி இழிவுப்படுத்தி கிடைக்கும் பணம் எமக்குத்
தேவையுமில்லை” – பாபாசாகிப் அம்பேத்கர்.
10 செப், 1927 .. ல் அவர் கண்முன்னாலேயே அதை அவர்கள் செய்தார்கள்.
அதுவும் அவரை அழைத்து அவருக்கு நிதி திரட்டி தருவதாக கூறி
(மகட் சத்தியாகிரகத்திற்கு நிதி திரட்டியபோது) அழைத்திருந்தார்கள்.
அழைத்தவர் ஜல்ஷா நாட்டிய நாடக கலைஞர் பட்டே பாபுராவ்.
அவர் ஆடிக்கொண்டே வருகிறார். அவரின் இரண்டு பக்கமும் மகர்
இன தமாஷா (கூத்து நடனம்) பெண்கள் ஆடிக்கொண்டு வருகிறார்கள்.
அத்தருணம் அம்பேத்கருக்கு எப்படி இருதிருக்கும்?
காரணம்… தமாஷா ஆடியவர்கள் அன்றைய ஒடுக்கப்பட்ட மக்கள்.
நிலவுடமை சமூகத்தை , ஆதிக்க சாதியை மகிழ்விக்க மாலையில்
தமாஷா.. இரவில் அப்பெண்கள் நிலவுடமையின் காமப்பசிக்கு
இரையாகிப்போகும் அவலம்..
அக்கர்மஷி நாவலில் சரண்குமார் லிம்பாளே தன் தாய் மகமாயி கதையை
தன் பிறப்பை விவரித்திருப்பார். இவை எதுவும் புனைவல்ல.
இந்தப் பின்புலத்தில் தான் அம்பேத்கருக்கு நிகழ்ந்த இந்த
அவமானத்தை அவருக்கு ஏற்பட்ட காயத்தை அந்த வலியை
புரிந்து கொள்கிறேன்.
நிதி தருவதாக சொல்லி தன்னை அழைத்து அவன் நடத்திக் காட்டும்
கூத்து ,
கலை என்ற பெயரில் ரசனைக்குரியதல்ல.. !
அவர் கொதித்தெழுகிறார்.
நீயாவது .. உன் நிதியாவது…
எம் பெண்களை இழிவுப்படுத்தி எனக்கு நீ கொடுக்கும் இந்தப் பணம்
தேவையில்லை என்று அந்த இடத்திலேயே அதை தூக்கி எறிந்துவிட்டு
வெளியேறுகிறார்.
இச்சம்பவத்தை எதுவுமே நடக்காதது போல மவுனமாக கடந்து செல்லவே வரலாறு விரும்புகிறது. அந்தப் பின்னணியில் எத்தனையோ கட்டுக்கதைகளை எழுதி, பரப்பி , சினிமாவாக்கி .. இருக்கிறது.
இப்படித்தான் வரலாறு எப்போதுமே விளிம்பு நிலைக்கு எதிராக
தன்னைப் புனைந்து கொள்கிறது.

மூக் நாயக் பத்திரிகை துவங்கியபோது இப்படி ஒரு மராத்தி இதழ்
வெளிவர இருக்கிறது என்பதை (செய்தியாக அல்ல,) "விளம்பரம்"
வெளியிட கூட "கேசரி" பத்திரிகை தயாராக இல்லை.
கேசரி பத்திரிகை திலகர் நடத்திய பத்திரிகை.
திலகரும் கேசரி பத்திரிகையும் இந்திய சுதந்திரப்போராட்டத்தில்
முக்கியமான பக்கங்கள். அப்படித்தானே வரலாறை படித்திருக்கிறோம்!
இங்கிருந்து விடுதலைப்போராட்டத்தின் இன்னொரு வரலாற்று
பக்கத்தையும் வாசித்தாக வேண்டி இருக்கிறது.
அவமானப்படும்போது
காயப்படும்போது
நிராகரிக்கப்படும்போது
வேண்டுமென்றே கள்ளமவுனத்தில்
இச்சமூகம் கடந்து செல்லும்போது..
அம்பேத்கரின் அறிவாயுதமே
போராயுதமாய்..
ஜெய்பீம்.
(14 ஏப்ரல் 2022)
Wednesday, November 3, 2021
தமிழக அரசுக்கு ஏன் இத்தனை குழுக்கள்???
அரசுக்கு ஏன் இத்தனை குழுக்கள்??!!
Tuesday, September 28, 2021
ஜெயலலிதாவின் ஹீரோ எம் ஜி ஆர் . வில்லன் ?
Wednesday, July 22, 2020
தமிழ் அறமும் மரபு செல்வங்களும்

நெசவு,விவசாயம்., வர்மக்கலை...
நினைவிருக்கிறதா தோழி..?
கவலையுடன் யோசிக்கிறேன்....
பேச மறுக்கிறாய்!
என்று சொல்லும் நீ
நடந்து கொள்கிறாய்!
Tuesday, July 14, 2020
காமராசரின் தேசிய அரசியலும் மாநில அரசியலும்
Thursday, June 4, 2020
கலைஞர்.. விமர்சனங்களுடன்..
கலைஞர் மஞ்சள் துண்டு போட்டுக்கொண்டார் என்பதையே ஒரு குற்றமாக காட்டி வன்மம் கொண்டு நக்கல் செய்பவர்கள் உண்டு. இது கருணாநிதியின் மூட நம்பிக்கை என்று
கிண்டலுடன் பேசுவார்கள். ஏன் நாத்திகவாதி முட்டாளாக மூடநம்பிக்கை உள்ளவனாக இருக்கவே முடியாதா? வாழ்க்கை அனுபவத்தில் ஏதோ ஒன்று ஏதோ சில காரணத்தினால் வந்து ஒட்டிக்கொள்கிறது.. எனவே மஞ்சள் துண்டு எனக்குப் பிரச்சனை இல்லை!
கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது 72 மணி நேர வேலையை 24 மணி நேரத்தில் செய்வதாக ஒரு பிரமிப்பு ஏற்படும். எப்போது கோப்புகளைப் பார்க்கிறார் எப்போது பத்திரிக்கை வாசிக்கிறார் எப்போது தன்மீது பேசப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு அறிக்கை எழுதுகிறார். உடன்பிறப்பே என்று முரசொலியில் கடிதம் எப்போது எழுதுகிறார்... எப்போது தூங்குகிறார் இதெல்லாம்.. யார் கணக்கிலும் அடங்காதப் புதிர். இப்படி ஒரு அசுர வேகம் கடின உழைப்பு இதெல்லாம் தான் கலைஞர்.
ஆனா இதெல்லாம் யாருக்காக எதற்காக பயன்பட்டது?
தமிழகத்தை பனகல் அரசர் ஆண்டிருக்கிறார். பக்தவச்சலம் ஆண்டிருக்கிறார். நாலு முழ வேட்டி
முக்கால் கை சட்டை மேலே ஒரு துண்டு போட்ட காமராஜர் ஆண்டிருக்கிறார். ஆட்சி அதிகாரம் அவர்களை கௌரவித்து இருக்கலாமே தவிர அதன்மூலம் அவர்கள் பொருளாதார உச்சங்களை எட்டிய தாக எவரும் சொல்ல முடியாது. திமுக தலைவர் அறிஞர் அண்ணா சொற்ப காலங்கள் ஆண்டிருக்கிறார். அவரும் அவர் குடும்பமும்அந்த அதிகாரத்தில் பெற்றது எதுவும் இல்லை. அதற்குப்பின் வந்த கலைஞர் என்னும் சாமானியரும் அவரைச் சேர்ந்தவர்களும் இந்தியாவின் தலையாய பணக்காரர்களின் பெயர் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்கள்.
இதில் கலைஞரின் பங்களிப்பு பெரும் பங்கு வகிக்கிறது.
இவர் ஆட்சிக்காலத்தில் தான் குடிப்பழக்கம் ஒரு லாபகரமான தொழிலாக வளர்த்தெடுக்கப்பட்டது.
இவர் ஆட்சிக்காலத்தில்தான் மருதம் திரிந்து பாலை ஆனது. ஆறுகள் மணல் வெளியை இழந்தன. இவர் ஆட்சிக் காலத்தில் தான் முள்ளிவாய்க்கால் வரலாற்று துரோகம் நடந்தது.
இவர் ஆட்சிக்காலத்தில் தான் காமராஜர் தொடங்கி வைத்த அரசு பள்ளிகளில் ஆசிரியர் இல்லாமல் ஆங்கில வழிக் கல்விக்கு குழந்தைகள் அணிவகுத்தார்கள். இவர் ஆட்சிக்காலத்தில்தான் தலித்துகள் வன் கொடுமைக்கு ஆளானார்கள்.
அப்படியானால் கலைஞரின் ஆட்சியில் சமூக அக்கறை சார்ந்த எதுவும் நடக்கவில்லையா என்று கேட்டால்.. நடக்கவில்லை என்று எவரும் சொல்லிவிடவும் முடியாது.
பொதுவுடமை பேசிய கம்யூனிஸ்டுகள் ஆண்ட மேற்கு வங்கத்தில் அவர்கள் செய்ய மறந்த செயலை.. மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்ஷாவை ஒழித்தது.. எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வந்தது.
பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கியது... இப்படி சில போற்றுதலுக்குரிய தருணங்கள் உண்டு.
ஒரு மாபெரும் அரசியல் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்த தலைவர் என்று அவரைப் புகழ்ந்து விடலாம் ஆனால் அந்தப் புகழ்ச்சிக்கு தமிழக அரசியல் கொடுத்த விலை அதிகம். கழகத்தில் கேள்வி கேட்பவர்கள் நியாயம் கேட்பவர்கள் எழுந்து நிற்பவர்கள் உரக்க குரல் கொடுப்பவர்கள் இவர்களை அவர் சகித்துக் கொண்டதே இல்லை.
அவர்கள்பகைக்கப்பட்டார்கள். தூக்கி எறியப்பட்டார். பாதகர்கள் என்று பழிக்கப்பட்டார்கள் . தமிழக அரசியல் பங்காளிகளின் சண்டைக் களமாக மாறியது.. தமிழகத்தின் பொது பிரச்சனைகளை கூட ஒற்றைக் குரலில் டெல்லியில் ஒலிக்க இவர்களால் முடியவில்லை.
மாநில உரிமைகளுக்காக நலனுக்காக எழுந்த அரசியல் இயக்கம் அவர் சொந்த ரத்த உறவுகளுக்காக சுருங்கிப்போன அவலம்.. அரங்கேறியது. தமிழனாய் தன்னை அறுதியிட்டுக் கொண்டே இந்திய தேசியத்தில் அவர் கரைந்து போனது கூட காரணமாகத்தான். இந்திய தேசியம் ஆவதை அவர் அறிந்தே தான் செய்திருக்கிறார்.
குமுதம் ரிப்போர்ட்டர் (17/7/2008) ஒரு செய்தியை வெளியிட்டது. அதாவது காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்றவுடன் தங்கபாலு கலைஞரின் ஆலோசனை கேட்கிறார் அவரிடம்"ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக தேசியம் ஆகி வருகிறேன் முழுவதும் மாறிவிட வேண்டுமா?" என்று
சிரித்துக்கொண்டேன் கேட்டாராம் கலைஞர். தன் அரசியல் மாற்றங்களை அறிந்தே ஆதாயங்களுடன்.. சுய ஆதாயங்களுக்காக அரங்கேற்றியவர் கலைஞர்... இப்படியாக கலைஞர் மீதான விமர்சனங்களை அடுக்கிக்கொண்டேபோகலாம்...
அனைத்தையும் தாண்டிய பிறகும்....
ஒரு புள்ளியில் அவர் என்னை வசீகரிக்கிறார். அந்த இடம் அவருக்கும் எனக்கும் ஆனது. அவரைக் கொண்டாடும் அந்த தருணம்... முக்கியமானது. கட்சியிலும் அரசியலிலும் மேலிடத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஜாதி சீழ்ப்பிடித்து நாற்றம் எடுக்கிறது. கட்சியிலும் கூட அவர் சாதி குறித்த அவரை கீழ்மைப் படுத்தும் உரையாடல்கள் கடைசிவரை தொடர்ந்தன.
"கலைஞர் தன்னை தலித் வீட்டு சம்பந்தி என்று சொல்லி பெருமிதப்பட்டுக் கொள்கிறாரே"என்று ஒருவர் வினவ
"அவர்பிறவிக்கு அதைவிட வேறென்ன பெருமை கிடைத்து விடப்போகிறது?"என்று ஏளனச் சிரிப்பு கிடையில் சொன்னவர்தான் கி. மனோகரன்.(ஆதாரம் கவிதா சரண்)இவை
எல்லாம் அறிந்தவர்தான் கலைஞர்.
மனித மாண்புகளை பேணத் தெரியாத
சாதி கழிசடை சமூகத்தில் சொல்லிக்கொள்ளும்படியான அடையாளமோ முகவரியோ பின்புலமோ குலப் பெருமையோ இல்லாத ஒரு சாமானியன் அதிலும் ஆக பிற்படுத்தப்பட்ட ஒரு அதி சூத்திரன்.. தான் வாழ்ந்த காலத்தில் புறக்கணித்துவிட முடியாத அரசியல் வரலாறாக தன்னை எடுத்து நிறுத்திக்கொள்ள முடியுமெனில் அந்த நம்பமுடியாத வரலாற்று விந்தையை நிகழ்த்திக் காட்டியவர் கலைஞர்.
திராவிட அரசியல் வரலாற்றில் கலைஞருக்கு மட்டுமே அவருடைய பிறப்பு கொடுத்த இடம் இது.
விதுரனின் அரசாட்சியில் விதுரன் மட்டும்தான் ஜாதி யால் ஒதுக்கப்பட்டவன் .. அரசும் அதிகாரமும் பணமும் செல்வாக்கும் விதுரன் வாரிசுகளுக்கு சாதியின் இழிவைச்
சுமத்தவில்லை.( அதற்கான காரணங்கள் மிகவும் வேடிக்கையானவை.)
இந்தப் புள்ளியில் கலைஞரை நான் நிமிர்ந்து பார்க்கிறேன்.. எல்லா விமர்சனங்களுடனும்.....
Friday, May 8, 2020
மன் கி பாத் மரண ஓலங்கள்

சிதறிக்கிடக்கும் சப்பாத்தி துண்டுகள் ..
money purse without money..யில் புன்னகைக்கும் முகங்க்கள்..
டியர் மோதிஜி...
உங்கள் அகண்ட பாரதக் கனவுகளில் இவர்கள்
இல்லை, இல்லவே இல்லை.
செத்தப் பிறகு 5 லட்சம் கொடுப்பதாக அறிவிக்கும்
நீங்கள்..உயிருடனிருக்கும் போது ரூ 500 செலவு
செய்திருந்தால் இந்த மரணங்கள் நடந்திருக்குமா?
4 மணி நேர அவகாசம் கொடுத்து லாக்டவுண் என்று
மக்களின் அன்றாட வாழ்க்கையை உங்களுக்கு நினைக்க
கடைசிவரை பறக்கவிட்டு வேடிக்கைப் பார்த்த உங்களுக்கு
நீங்கள் பேசும் "மன் கி பாத்"!!!! மனசுடன் ஒட்டவே இல்லை..!
வெறுமை சூழந்த விடியலில்
தண்டவாளத்திலிருந்து உயிர்த்தெழுகிறது
மீண்டும்மீண்டும் அந்த முகங்கள்...





