Sunday, October 6, 2019

பாலுறவு வறட்சி


பாலுறவு வறட்சி தான் குற்றங்களுக்கெல்லாம் காரணம்
என்ற  நிலைக்கு சமூகம் போய்க்கொண்டிருக்கிறதா?

நேற்று ஒரு விடீயோ காட்சி.. 15 வயது இருக்கலாம் அந்தப்
பெண்ணுக்கு. அவளை கூட்டுப்பாலியல் வன்முறை செய்து
அதைக் கைபேசியில் விடியோ எடுத்து … இதைச் செய்யும்
ஆண்பிள்ளைகள் அனைவரும் விடலைப் பருவத்தினர்.
அன்த விடீயோவைப் பார்த்தால் ஓரளவு விலை உயர்ந்த
கைபேசியில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவர் மாற்றி
ஒருவர்… அந்தப் பெண் “பையா  என்னை விட்டுவிடுவீர்களா ..”
என்று கெஞ்சுகிறாள்.. இது இந்தியாவில் தான் நடக்கிறது.
ஆள் நடமாட்டமில்லாத பாறைகளிருக்கும் ஒதுக்குப்புறத்தில்
நடந்திருப்பதாக தெரிகிறது. அப்பெண் என்னவானாள்?
பத்துபேருக்கும் மேலாக ஒருபெண்ணை வல்லாங்கு செய்தால்
அவள் பிழைத்திருப்பாளா..? 
அந்த விடீயோவை என்னால் முழுவதும்
பார்க்க முடியவில்லை! 1 நிமிடம் கூட என்னால் பார்க்க முடியாமல்
உடம்பெல்லாம் வேர்த்து கைகால் நடுங்க ஆரம்பித்துவிட்ட து!
அதன் பின்  ஏற்பட்ட தலைவலி.. இரவு 11 மணிக்குப் பின் தனியாக
கீழே போய் நடந்து பார்த்தேன்.
 கொஞ்ச நேரம் வாட்டர் டேங்க் மீது
உட்கார்ந்து கொண்டு ஓவென அழுதுவிடலாமா 
என்று கூட யோசனை வந்த து! 
வாட்ச் மேன் என்ன நினைக்க கூடும் என்று 
நினைத்துக் கொண்டே உட்கார்ந்திருந்தேன்.. 
குளிர்ந்தக் காற்று .. மெல்ல.. முகத்தில் படர்ந்து
என்னைத் தழுவிக்கொண்ட து கொஞ்சம் ஆறுதலாக இருந்த து.

கதறி அடங்கிப்போன அந்தப் பெண்ணுக்காக அழுதேனா..
அல்லது..
அவளைச் சுற்றி நின்று அவள் உடலை மேய்ந்த
 அந்த விடலைகளின்
அம்மாக்களுக்காக அழுதேனா.. ?
யாருக்காக நான் அழுதேன்,,?
அவன் களின் முகம்.. 
என்னைச் சுற்றி வல்லூறு போல
வட்டமிடுகிறது…
தாய்க்கோழியாய் சிறகுகள் விரித்து
அணைப்பாளோ பராசக்தி..




No comments:

Post a Comment