Monday, September 23, 2019

குப்பை குமாரும் சுவட்ச் பாரத்தும்

குப்பை குமாரும் சுவட்ச் பாரத் தும்
ஒரு குப்பைக் கதை
இது சென்ற ஆண்டு வெளிவந்த சினிமா.
அதனாலென்ன.. இப்போதும் பேசலாம் அதைப் பற்றி.
இந்த ஓராண்டில் அப்படி ஒன்றும் தலைகீழ் மாற்றங்கள்
 வந்துவிடவில்லை.
வீடுகளில் உணவுகள் உற்பத்தியாவதில்லை.
ஆனால் எல்லா வீடுகளிலும் குப்பைகள்..
உற்பத்தியாகின்றன.
எந்த வீடாவது இதற்கு விதிவிலக்கா?!
அம்பானி மிட்டல் வீடுகளிலும் குப்பைகளை
அகற்றியே ஆகவேண்டும்.
சாலையோரத்தில் குடியிருக்கும் அவர்களும் தினமும்
குப்பைகளை வாரி எடுத்துக் கொட்டிக் கொண்டுதான்
 இருக்கிறார்கள்.
வளர்ந்த நாடுகளும் வல்லரசு நாடுகளும்
மூன்றாம் நாடுகளைக் குப்பைத் தொட்டிகளாக
பாவிப்பது என்பது அயலுறவு கொள்கையின்
இருண்ட பக்கத்தில் இருக்கிறது.
அதெல்லாம் பெரிய இட த்து விசயங்கள்.
நமக்கு குப்பை குமாரின் கதையும் நம் சமூகம் பற்றிய 
தூய்மைவாதங்களும் தான்!
ஒரு குப்பைக் கதை என்ற தலைப்பில் சினிமாவாக
திரைக்கு வந்த தும் தற்கானசிலாகிப்புகள் 
என்ன மாதிரி எல்லாம் இருந்தது என்பது மட்டும் தான்.
“குப்பைக் கதையை பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்”
என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் வைகோ.
இன்னொரு விமர்சனக்கர்த்தா.. குப்பைக் கதை
 “அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட
 பெண்கள் கதி என்னவாகும்?”
என்ற நீதி நெறிப் புகட்டும் கதை என்று சொல்லி
கதையின் மையப் புள்ளியை பெண்ணின்
 கள்ளக்காதல் கதையுடன் – அதாவது திருமணத்திற்கு 
அப்பாற்பட்ட உறவாகவும் ஒரு பெண் படிதாண்டி விட்டால் 
அவளை மற்ற ஆண்கள் எப்படி எல்லாம் பார்க்க கூடும்
 என்பதற்காக எடுக்கப்பட்ட து போலவும்.. பயமுறுத்துகிறார்கள்.
இதெல்லாம் கதையில் இல்லையா? என்று கேட்டால்
இருக்கிறது. ஆனால் இதுவல்ல கதையின் மையப்புள்ளி.
படிதாண்டிய உறவுகளைப் பற்றி கதை எடுப்பதற்கு
குப்பை குமார் வேண்டியதில்லை.

குப்பை குமார்களை நம் சமூகம் எந்த நிலையில்
வைத்து பார்க்கிறது என்பதை மட்டுமே மையமாக்கி
அதற்கான உபகதைகளாக சில முடிச்சுகளைப் போடுகிறது.
ஏன்… குப்பைகளை தவிர்க்கவே முடியாத நம் சமூகம்
குப்பை குமார்களை மட்டும் தவிர்க்க நினைக்கிறது!
தூயமை வாதம் என்று சொல்லி கழண்டு கொள்வது எளிது.
சரி .. குப்பை குமார்களுக்கு கழிவின் நாற்றத்திலிருந்து
 விடுபட முடியாது என்பதாக நாம் நினைக்கிறோம்.
குப்பைனா நாற்றமெடுக்கத்தான் செய்யும்.. 
என்று சமாதானம் செய்து கொள்கிறோம்…
ஆனால்… நம்ம நாட்டு குப்பை வண்டி/ குப்பை லாரியிலிருந்து
 வரும் நாற்றம் மேலை நாட்டு குப்பைவண்டி/ குப்பை லாரியிலிருந்து
வருவதில்லை. 
 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 6 மாதங்கள் தங்கி இருந்தப் போது
அங்கு வரும் குப்பை லாரிகளை கவனிப்பதுண்டு.
குப்பைகளை ஒவ்வொரு அப்பார்ட்மெண்ட் பகுதியிலிருந்தும் எடுத்து கொட்டிக்கொண்டு செல்லும் அந்தக் குப்பைலாரிகள்
மற்ற லாரிகளைப் போல .. சாலையில் ..
அது எப்படி..?!!!!
எல்லா எழவுக்கும் அமெரிக்கா மாதிரி அமெரிக்கா மாதிரினு சொல்லிக் கொண்டிருக்கும் நம் அரசும் நம் மக்களும் இந்தக் குப்பை லாரி
 மெட்டரை ஏன் யோசிப்பதில்லை!
இதை நான் அங்கு என்னைச் சந்தித்த நண்பர்களிடம்
ச” யு.எஸ் வந்துட்டு குப்பை லாரி பற்றி
யோசித்த ஓரே ஆளு நீங்க தான்!!!” 
(இதை அவர் பாராட்டா சொன்னாரா ..
 கிண்டலடிச்சாரானு இன்னிக்கு வரை தெரியல!)
இன்னொருவர் சொன்னார்…
“குப்பை லாரியைப் பற்றி யோசிக்கும் தலைமுறை
அமெரிக்கா வரலைங்க.. வந்தவர்களும் .
. நவீன பிராமணிய வேடங்களைத் தரிப்பதில் 
காட்டும் முனைப்பை..இதில் காட்டுவதில்லை!”
ஒரு நாள் வீட்டில் டப் அடைத்துக் கொண்ட து. 
அதைச் சரி செய்ய வந்தவர் தன் வாகனத்திலிருந்து 
ஒரு நீண்ட டுயூப் மாதிரி ஒரு குழாயை எடுத்து
வந்து கழிவு நீர்ப் போகும் பகுதியில் போட்டு
காற்றை உறிஞ்சி கழிவுகளை அகற்றிவிட்டு ..
 தங்கள் வாகனத்தில் ஏறி சென்றார்கள். 
சீருடை, சரியான காலணிகள், கையுறைகள், 
வாகன வசதி, வீட்டுக்குள் நுழையும் போது 
அவர்கள் ஒரு ப்ளாஸ்டிக்
பையை (பை மாதிரி) காலில் மாட்டிக் கொண்டு 
ஹால் வழியாக நுழைந்தது...
. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..
இதில் 50% இந்தியாவில் கொண்டுவர முடியவில்லை.
ஆனால் நம்ம பிரதமர்கள் அமெரிக்கா போவதையும்
 வருவதையும் நாமும் பெருமையுடன் 
பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

குப்பைகளுக்கு சாதிகள் இல்லை.
எல்லா சாதி வீடுகளிலும் குப்பைகள் உண்டு.
ஆனால் எல்லா சாதி வீடுகளிலும் குப்பைகளை
 எடுத்துச் செல்கின்ற குமாருக்கு சாதி உண்டு.
அது .. குப்பையை விட அதிக நாற்றமெடுக்கிறது.

க்ளார்க் வேலை .. ப்யூன் வேல.. ஒகே.
ஆனா குப்பைலாரியில் குப்பையை அள்ளிக்கொண்டு
 போகும் வேலைன்னா மட்டும் நமக்கு குமட்டிக் கொண்டு
வருகிறது!
இதில் நாம் ஒவ்வொருவரும் எதோ ஒரு புள்ளியில்
அந்த தூய்மை வாத த்திற்குள் தள்ளப்படுகிறோம்.

என்னையே சுயவிமர்சனம் செய்து கொள்கிற மாதிரி

ஒரு கதை “காலியான பாட்டில்கள்” எழுதி இருந்தேன்.
மறைந்த பிரபஞ்சன் அவர்களுக்கு ரொம்பவும் 
பிடித்தக் கதை அது.

சுவட்ச் பாரத் - தூய்மை இந்தியா

நமக்கானது.. பொதுமக்களுக்கானது
என்பதை வெளிச்சப்படுத்தும் அரசும்
அறிவுஜீவிகளும் சுவட்ச் பாரத் திட்டம்
குப்பை குமாருக்கானதும் தான் என்பதை
உணர்ந்திருக்கிறார்களா?
குப்பைக் கதையைக் கிளறினால்..
நமக்குள்ளும் குப்பையின் நாற்றம்..

No comments:

Post a Comment