Friday, February 20, 2026

புதிய மாதவி நேர்காணல் -2


புதிய மாதவி நேர்காணல். பாகம் 2

கோடுகள் இதழ் 14.

கேள்விகள் முரளிக்கண்ணன்.

🔥

 மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது வாசகப்பரப்பு மிகக்குறைவாக இருக்க காரணம் என்ன? படைப்பிலக்கியங்கள் மூலை, முடுக்கெல்லாம் சென்றடைவதற்கான ஊடகவழி சாத்தியங்கள்குறைவாக இருப்பதுதான் இதற்கு காரணமா?அல்லது வாழ்வின் முன் படைப்பிலக்கியம் அதன் முக்கியத்துவத்தில் சிறுத்து விடுகிறதா? அல்லது பெரும்பான்மையான மனிதர்கள் இலக்கியத்தை நிராகரிக்க நியாயமான காரணங்கள் இருக்கிறதா? அது ஒரு சொகுசு, மேல்தட்டு, அசாதாரணம் என்பது போல.


இன்று நேற்றல்ல. எப்போதுமே மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது வாசகப்பரப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. அப்படித்தான் இருக்கும். ஆனால் ஒப்பீட்டளவில் பக்கத்து மாநிலம் கேரளாவில் இருக்கும் வாசகப்பரப்பு ஏன் தமிழ்நாட்டில் இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். வாழ்வின் முன் படைப்பிலக்கியம் அதன் முக்கியத்துவத்தில் சிறுத்து விடுகிறது என்ற முடிவுக்கு இதை வைத்துக் கொண்டு வருவதும் தவறான புரிதலுக்குத்தான் இட்டுச் செல்லும். இன்றைய ஊடக வெளிச்சம் யாரை எல்லாம் எழுத்தாளர்கள் என்று ஊதிப்பெரிதாக்கி காட்டுகிறதோ அவர்களின் எழுத்துக்கள் அதன் மேம்போக்கான நிலை, அவர்களின் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இருக்கும் பெருத்த வேறுபாடு, வெறும் வார்த்தைகளும் உத்திகளும் மட்டுமே படைப்பிலக்கியமாகி விடாது என்ற புரிதல் கொண்ட சிலரையும் கூட பாதிக்கிறது. விவகி நிற்க வைக்கிறது.


அல்லது எதிர்மறையான கூறுகள் அவற்றில் இடம்பெறுகிறதா? ஒரு இலக்கிய படைப்பில் புரியாமை, பூடகம், மர்மம், சிக்கலான சேர்க்கை போன்றவை தவிர்க்க முடியாதவையா? அது ஒருவேளை வாழ்வின் பூடகத்திலிருந்து வருவதா?


பூடகம் புரியாமை, மர்மம், சிக்கலான சேர்க்கை இவை அனைத்துமே ஒரு வாசகனின் வாசிப்பை பொறுத்து அமைவது. எல்லாவற்றையும் 1+1 = 2 என்று சொல்வது கணித அறிவியல். அதை 1 + 1 = 0 என்றோ, 1 + 1 = 1 என்றோ சொல்வது பூடகம் மர்மம். இம்மாதிரியான பார்வையிலிருந்துதான் படைப்பூக்கம் நிகழும், வெளிப்படையாகத்தான் சொல்ல வேண்டும் என்றால் விரிவாக கட்டுரைகளை தேவையான ஆதாரங்களுடன் எழுதிவிட்டுப் போகலாமே! ஏன் கவிதை, கதை என்ற வடிவங்களுக்குள் போக வேண்டும். படைப்பிலக்கியத்தில் இன்று புரியாதது நாளை புரியலாம். புரியாமலும் போகலாம். உங்களுக்குப் புரிவது, எனக்கும் உங்கள் புரிதலைப் போலவே புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்றால் அது படைப்பிலக்கியமாகாது. காதல், வீரம், சோகம், இயற்கை, இத்தியாதி மனித உணர்வுகள் மனிதனிடம் காலம் காலமாக இருக்கின்றன. அவற்றை வெளிப்படுத்தும் படைப்பிலக்கியமும் இன்னும் வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பது இந்தப் பூடகமான மர்மத்தின் முடிச்சில் தான் .

எழுத்தாளர்களில் பலரையும், வரலாறையும் பார்க்கும்பொழுது இயல்பான, வழக்கமான வாழ்வின் துயரச்சாத்தியங்களிலிருந்து அவன் ஒரு எழுத்தாணைக இருப்பதாலையே அதைவிட அதிகமான, குறிப்பான துயர்மிகுந்த வாழ்வை அடைகிறானா? அது அவனது சொந்த தனிப்பட்ட இயல்பூக்கங்களிலிருந்து முளைத்தெழுகிறதா? அல்லது சமூகம் அவனை தன்னிலிருந்து வேறுபட்ட பிரச்சனைக்குரிய அல்லது ஒவ்வாமை போல ஒரு மனிதனாக காண்கிறதா? அவனிடம் உள்ள பிரச்சனை என்ன? அல்லது சமூகத்திற்கு அவனிடம் உள்ள பிரச்சனை ດທ?


நீங்கள் குறிப்பிடும் எல்லாமும் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு எழுத்துள்ளமும் சந்திக்கும் பிரச்சனைகளாகவே இருக்கின்றன. தனிப்பட்ட சொந்த அனுபவத்தின் ஊடாகவே சமூகத்தின் இன்னொரு பக்கத்தையும் படைப்பு மனம் வாசிக்கிறது. கண்டும் காணாமல் செல்லும் பாதசாரிகளின் கூட்டத்தில் ஒருவனாக அவனால் இருக்கவே முடிவதில்லை. அதனாலேயே படைப்பாளன் சமூகத்தின் பொதுஜனப்புத்தியில் கரைந்துவிட முடியாமல் தனித்துவிடப்படுகிறான். ஒரு வகையில் இத்தனித்துவிடப்படும் உணர்வு நிலையே அவன் படைப்பூக்கத்திற்கானதாகவும் மாறுகிறது எனலாம்.


ஒரு படைப்பாளி தன் சொந்த வாழ்வின் நிஜமான வாழ்வனுபவங்களிலிருந்து தன்னுடைய படைப்பை உருவாக்கும் போதே. அப்படைப்பு படைப்புக்குரிய அழுத்தமான கூறுகளோடு வெளிப்பட முடியும். அவனுக்கு வேறுவழியில்லை, அவன் பலவற்றையும் கண்டிருக்கலாம். புரிந்திருக்கலாம். அது ஒருவரை அவரது அனுமதியில்லாமல் புகைப்படமெடுப்பது போலாகுமா? ஒரு படைப்பு அச்சு அசலாக நிஜம், செய்தித்தாளில் வெளிப்படுவதை போல வெளிப்படுவதில்லை என்ற போதிலும் அல்லது ஒரு வாசகளோ ஒரு பார்வையாலணே ஒரு படைப்பின் மேன்மையான கூறுகளை கருத்தில் கொள்வதற்கு முன் அது ஒன்றுமேயில்லையா?


படைப்பு அச்சு அசலாக, நிஜம் தான் என்றாலும் அது செய்தியாக மட்டுமே முடிந்துப் போவதில்லை. ஒரு படைப்பு மனம் அச்செய்தியை மனிதர்களின் வாழ்க்கையுடன் அன்றாட பாடுகளுடன், உறவுகளுடன், காதலுடன், இச்சமூகத்தின் அற ஒழுக்க கோட்பாடுகளுடன்... இப்படியாக பல முடிச்சுகளுடன் அவன் எழுத்துலகில் வந்துவிடுகிறது. அனுபவமும் இதோடு சேர்ந்து கை குலுக்குகின்றன. பிற எழுத்தாளர்களின் படைப்புகளைக் கொண்டு இதை முன்னிறுத்துவதை விட அண்மையில் வெளியான என் சிறுகதை தொகுப்பு. ரசூலின் மனைவியாகிய நான், இக்கதையில் ரசூல், அவன் மனைவி கவுரி, மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு, அதில் பாதிக்கப்பட்ட பொதுஜனம் எல்லாமே நிஜமானவை. செய்திகளாக வெளிவந்தவையும் கூட ஆனால் அவன் ரசூலாக இருப்பதும், அவள் கவுரியாக இருப்பதும் உடல் மட்டும் நான் இருத்தலின் அடையாளமா? ஒருவன் இருக்கிறான் என்பதன் அடையாளம் என்ன? என்ற வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளும், இப்படியாக ஓர் உண்மை சம்பவத்தின் பின்னணியில் எழுதப்பட்ட கதை. யாரையும் புகைப்படம் எடுக்கவில்லை. ஆனால் கதையின் மனவோட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் அவன் உணர்வுகளும் பெருநகரத்தின் சக்கரங்களைப் போல ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு படைப்பு இப்படியாக ஏதோ ஒரு அசலின் மையத்தைச்


சுற்றி புனைவுலகின் உத்திகளுடன் வலம் வருகின்றன.


கலையின் அசாத்தியமான சாத்தியங்களை கொண்டு பார்வையாளனிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதில் சினிமா தான் அதிகபட்ச சாத்தியங்களை என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும் கொண்டிருப்பது போல தோன்றுகிறது. நீங்கள் பிற கலைகளோடு இலக்கியத்தை எவ்வாறு ஒப்பிடுவீர்கள்? ஓவியம் - சிற்பம், சினிமா நாடகம். பாரம்பரிய இசை நடனம் இவற்றை அவை செயல்படும் முறையில் இலக்கியத்தோடு ஒப்பிட்டு கூற முடியுமா? அல்லது இந்த ஒப்பிடல் உபயோகமற்றதா? பொருத்தமற்றதா?


காட்சி ஊடகம் (சினிமா ) வலிமையானது என்பதில் ஐயமில்லை. ஆனால் காட்சி ஊடகத்திற்கு மொழிவழி வெளிப்படுத்தப்படும் இலக்கிய படைப்பிற்கு இருக்கும் பன்முகப் பார்வை இருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. இலக்கியத்தின் பன்முகப் பார்வையும், அவரவர் அனுபவத்தின் ஊடாக அப்பிரதி வாசிக்கப்படுவதும் நிகழ்கிறது. காட்சி ஊடகத்திற்கு இது சாத்தியமில்லை. அதனால் நான் காட்சி ஊடகத்தை விட இலக்கிய படைப்பு சிந்தனையைத் தூண்டுவதிலும், உணர்ச்சியின் பல்வேறு வடிகாலாகவும் அவரவர் வாசிப்பில் தன்னை இருத்திக் கொள்கிறது. ஆனால் மொழிவழியான இலக்கியம் அந்த மொழி சார்ந்த பிரதேச எல்லைகளுக்குள் முடங்கிவிடும். என்னதான் மொழியாக்கங்கள் வழி எல்லைகளைக் கடந்துவிட முயற்சி செய்தாலும் கூட ஒரு சிற்பத்திற்கும். ஓவியத்திற்கும், நிகழ்த்துக் கலைக்கும் கிடைக்கும் மொழி. தேச, இன எல்லைகளைக் கடந்து விடுவது போல அவ்வளவு எளிதல்ல. ஒப்பீடுகள் செய்யும் போது இந்த எல்லைக் கோடுகளின் வரையறைகளை முன்னிறுத்தி செய்தாக வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அந்த ஒப்பீடு அதன் பொருத்தப் பாடுகளை இழந்துவிடும்.


படைப்பாளிகள் தங்களுக்குள் அறிந்தோ, அறியாமலோ பல்வேறு காரணங்களால் பிளவுபட்டு இருக்கிறார்களா? ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதல்ல. ஒருவரையொருவர் நெருங்க முடியாதவாறு அல்லது ஒரு பகுதி இன்னொரு பகுதியை நெருங்க முடியாதவாறு இடையில் குறுக்கிட்டு நிறுத்தும் கூறுகள் ஏதேனும் இருக்கிறதா?


இருக்கிறது. பெரும்பாலும் சாதி சார்ந்த பிளவுபாடு இருக்கிறது. இந்த பிளவுபாடு வெளிப்படையாக தெரியாவிட்டாலும் பட்டியல் போடுவதில், புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதுவதில், பெரிய எழுத்தாளர்கள் தங்கள் பேச்சுகளில் அல்லது பதிவுகளில் குறிப்பிடும் எழுத்தாளர்களின் பெயர்களின் வரிசையில்... இப்படியாக சாதி, சுயசாதி அபிமானம் எழுத்தாளர்களிடம் இருக்கிறது. சுயசாதி அபிமானம் இருப்பதே மாபெரும் குற்றமா என்று கேட்டால் எழுத்து. இலக்கியம், தகுதி என்ற எல்லாமே புறக்கணிக்கப்பட்டு சுயசாதி அபிமானம் மட்டுமே முன்னிலையாகி முதல்நிலைப்படுத்தப்படும் போது அது கேள்விக்குரியதாகிறது.


சிறுபத்திரிக்கைகளின் செயல்பாடு தங்களுக்கு திருப்திகரமானதாக இருக்கிறதா? பல்வேறு தரத்தில், பல்வேறு வகையில், பல்வேறு பொருளில் எழுத்துக்கள் ஒரு சிறுபத்திரிக்கையை நோக்கி வருகிறது. 30 நாட்களுக்கு ஒருமுறை வெளியாகும் ஏறக்குறைய 80 பக்க ஒரு சிறுபத்திரிக்கையில் என்ன அடிப்படையில் எழுத்தாளர்களை தேர்வுசெய்து முன்னிறுத்துவது? சந்தேகமில்லாமல் அது

ஆசிரியரின் தனிப்பட்ட உரிமை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை வாங்கிப்படிக்கும் வாசகன் என்ற முறையில் அவனது எதிர்பார்ப்புகளை எப்படி வைத்துக்கொள்வது?


சிறுபத்திரிகையை ஒரு வாசகன் வாங்கி வாசிப்பதே அதன் கனமான வீரியமான படைப்புகளுக்காகவும், புதிய முயற்சிகளை அறிவதற்காகவும் நான். சிறுபத்திரிகை நடத்துபவரின் தனிப்பட்ட உரிமை சார்ந்த விஷயமிது. இன்னொரு வகையில் சொல்லப்போனால் சிறுபத்திரிகையை நடத்துபவரின் கருத்துநிலை, நோக்கம் சார்ந்த விடயம். எம்மாதிரியான வாசகர்களை அவர் பத்திரிகை சென்றடைகிறது என்பதையும் அல்லது எம்மாதிரியான வாசகர்களை சென்றடைய வேண்டும், உருவாக்க வேண்டும் என்பதைப் பற்றியும் சிறுபத்திரிகையின் ஆசிரியர் தெளிவான புரிதலுடன் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.


பதிப்பகத்தை ஒரு தொழிலாக நடத்துவதை தவிர்க்கமுடியாது என்ற நிலையில், பதிப்பகங்கள் பொதுவாக தீவிர படைப்பிலக்கியத்தை எப்படிப்பார்க்கின்றன? படைப்பிலக்கியத்தோடு ஏதேனும் ஒருவகையில் தொடர்போடு இருப்பவர்கள் தான் அதை பதிப்பிக்கிறார்களா? தீவிர படைப்பிலக்கியத்தின் விற்பனை பதிப்பாளர்களுக்கு லாபம் தரும் ஒரு தொழிலாக இருக்கிறதா?


பதிப்பகம் சார்ந்த இக்கேள்விக்கு சரியான பதிலை ஒரு பதிப்பகத்தார் மட்டுமே கொடுக்க முடியும். படைப்பிலக்கியத்தோடு ஏதோ வகையில் தொடர்பிலிருப்பவர்கள் தான் பதிப்பகம் நடத்துகிறார்கள். நீவிர படைப்பிலக்கியத்தின் விற்பனை இலாபமானதாக இருக்கிறதா என்று கேட்டால் பதிப்பகத்தாரின் ஓட்டு மொத்த குரலாக ஒலிப்பது இதில் இலாபமில்லை என்பதாகத்தான் இருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் பதிப்பகங்கள் புதிது புதிதாக தோன்றிக் கொண்டே தான் இருக்கின்றன. இலாபமே இல்லை என்றால் எப்படி? என்ற கேள்விதான் எழுகிறது.


இணையத்தில் தீவிர படைப்பாளிகளுக்கான சிறுபத்திரிக்கைகள், தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? அவை முழுமையாக படைப்பாளிகளால் தளங்கணேடு தொடர்ந்து தொடர்பில் இருப்பது. படைப்புகளை வாசிப்பது. படைப்புகளை அனுப்புவது பயன்படுத்தப்படுகின்றனவா? அல்லது அவை தனிப்பட்ட நபர்களின் ஆத்மதிருப்திக்காக நடத்தப்படுகின்றவைா?


தனிப்பட்ட நபர்களின் ஆத்மதிருப்திக்காக நட்த்தப்படுகிறது என்றெல்லாம் பொத்தம் பொதுவாக


சொல்லிவிட முடியாது. தனி நபர்கள் ஜெ.மோ, எஸ்.ரா. சாகுநிவேதிதா. நாஞ்சில் நாடன் இப்படியாக பலரும் அவர்களுக்கு என்று தனித்தனி வலைப் இணையதளம் வைத்திருக்கிறார்கள். இணையத்தில் தீவிர படைப்பாளிகளுக்கான சிறுபத்திரிகை இணைய தளங்கள் மிகவும் முக்கியமானவை. உலகம் முழுவதும் சிதறி இருக்கும் ஈழத்தமிழர்கள் தான் இதில் முக்கியமான பங்காற்றியவர்கள் என்று சொல்ல வேண்டும். இணைய இதழ்கள் அவர்களின் தேவைக்கானதாக மாறியது. அத்தோடு சேர்ந்து இலக்கியமும் இணைய இதழ்களில் இடம் பெற்றது. இதன் வீச்சு அபாரமானது என்று தான் சொல்வேன். கனடாவிலிருந்து வரும் பதிவுகள் இணைய இதழ், சுவிஸ்சர்லாந்தில் இருந்து வெளிவரும் பெண்களுக்கான பெண்கள் நடத்தும் இணைய இதழ், கவிதைகளுக்கான வார்ப்பு இணைய இதழ், இதுதவிர திண்ணை, அச்சில் வெளிவரும் சிற்றிதழ்களையும் உள்ளடக்கி தன் வாசிப்புக்கு கொடுக்கும் கீற்று இணைய இதழ். பெண்கள் இணைய இதழ், ஆறாம்திணை இப்படியாக இணைய இதழ்களின் பரப்பும் வீச்சும் அபாரமானவை. பக்கங்களில் அதனால் தான் இன்று வெகுஜன இதழ்களும் இணைய இதழ் பக்கங்களை உருவாக்கி தங்கள் வாசகர்கள் பரப்பை அதிகரிக்கும் போட்டியில் ஈடுபட்டிருக்கின்றன. படைப்பாளிகளால் அவை முழுமையாக பயன்படுத்தப் படுகின்றனவா என்று கேட்டால் என்னைப் போன்ற தமிழகச் சூழலுக்கு அப்பால் வாழ்பவர்களுக்கு இணைய இதழ்கள் எளிதாக இருக்கின்றன. அச்சு ஊடகத்திற்கு அனுப்பிவிட்டு காத்திருக்கும் அவஸ்தைகள் இல்லை. யாருடைய சிபாரிசுகளும் தேவைப்படுவதில்லை. சுதந்திரமாக செயல்படவும் முடிகிறது.

🔥

ஒரு படைப்பாளியோ அல்லது ஒரு வாசகனே 

இணையத்திற்கு சென்று ஒரு இலக்கிய படைப்பையோ, ஒரு இலக்கிய கட்டுரையையோ தொடர்ச்சியாக நுகர வேண்டுமானால் அவனிடம் ஒரு கணினி இருக்க வேண்டும், இணையத்தொடர்பு இருக்க வேண்டும், தேவையானவற்றை எடுத்து வாசிக்க ஒரு பிரிண்டர் இருக்க வேண்டும். இவையெல்லாம் இல்லையென்றால் அவன் ப்ரவுசிங் சென்டருக்கு சென்று கட்டணம் செலுத்தி குறைந்த நேரம், அதிக கட்டணம் அதை சாத்தியமாக்க வேண்டும். பொதுவாக தீவிர இலக்கிய வாசகர்கள் இணையத்தை எளிதில் அணுகி அதை பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்கு பொருளாதார சுதந்திரத்தோடு இருப்பவர்களா?


நடைமுறையில் இந்தச் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. நான் என் கிராமத்திற்குப் போகும் போது வெளியுலக இலக்கிய தொடர்புகள் அறுந்துப் போகின்றன. கைபேரியில் ரீசார்ஜ் செய்யும் பணத்திற்கு இரண்டு புத்தகம் வாங்கி வாசித்து கொண்டிருப்பேன். தமிழகச் சூழலில் ஒரு சினிமா பார்க்க செலவு செய்யும் தொகையுடன் ஒப்பிடும் போது தீவிர இலக்கிய வாசகன் இணையத்தை அணுகுவதில் தயக்கம் காட்ட மாட்டான் என்று நினைக்கிறேன். இதே இந்த இணைய வாசிப்பு களம் மாறும்போது மிகவும் உதவியாகவே இருக்கிறது. அதாவது வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் போது இணையம் தான் ஒரு நூலகம் போல நம்முடன் பயணிக்கிறது. இதை என் அனுபவத்தில் நான் உணர்ந்திருக்கிறேன். வெளிநாடு வாழ் தமிழர்களைச் சென்றடைய இணையமே வாசலாக இருக்கிறது.

🔥

ஒரு படைப்பாளி தன் வளர்ச்சிக்கு இணையத்தை எந்த அளவுக்கு, எந்த அடிப்படையில் நம்ப முடியும்? ஒரு வாசகன் தன் வளர்ச்சிக்கு இணையத்தை எந்த அளவுக்கு நம்ப முடியும்? தீவிர இலக்கிய செயல்பாடுகள் தன் வளர்ச்சிக்கு இணையத்தை எந்த அளவுக்கு நம்ப முடியும் என நினைக்கிறீர்கள்? சிறுபத்திரிக்கைகள், புத்தக வெளியீடுகள், படைப்பார்ந்த உரையாடல்கள், நிகழ்வுகள் இவற்றோடு ஒப்பிடும் போது இணையத்தின் பாத்திரத்தை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?


இன்று ஒவ்வொரு படைப்பாளிக்கு எல்லைகள் கடந்து பயனிக்க இணையத்தை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், ஜெ.மோ, எஸ்.ரா. சாருநிவேதிதா. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவர்களும் இணையத்தை ஒதுக்கவில்லை. தங்கள் படைப்புகள் இணையத்தில் இருப்பதால் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாசிக்கவும், அவர்களைச் சென்றடையவும் உதவியாக இருப்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். புத்தக வெளியீடுகள் முதல் விமர்சனக் கூட்டங்கள் வரை இப்போதெல்லாம் ஒலி-ஒளி காட்சி வடிவத்தில் வெளியிட்டு விடுகிறார்கள். ஆனாலும் இணையத்தை மட்டுமே ஒரு படைப்பாளி நம்ப முடியுமா என்று கேட்டால் அதற்கான சூழலோ வசதியோ தமிழகச் சூழலில் வரவில்லை என்று தான் சொல்வேன்.

🔥

ஒரு படைப்பை இணையத்திலிருந்து பிரிண்டவுட்டாக எடுத்து வாசிப்பதற்கும், ஒரு பத்திரிக்கையில் அதை வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடு இருப்பதாக கருதுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


எனக்கும் புத்தக வடிவில் வாசிப்பது தான் வசதியாக இருக்கிறது. ஆனால் 'கிண்டில்' வாசிப்பு அச்சு வடிவத்தின் புத்தக வாசிப்பை முழுமையாக கபளீகரம் செய்துவிடும் என்பது தான் இன்றைய இளம் தலைமுறையினர்

முன்வைக்கும் வாதம்.இந்தியா டிஜிட்டல் இந்தியாவாகட்டும். பார்த்து கொள்ளலாம்.


🔥


எழுத்து ஒரு வடிகாலா? அல்லது படைப்பாற்றல் என்ற தனியான ஒன்றிலிருந்து அது பிறந்து வர வேண்டுமா ? . வடிகாலாக இருந்தால் - வெறும் புலம்பல், வெறும் துயரக்காடு போன்று-  அதில் அதை வாசிக்கும் ஒரு வாசகனின் இடம் என்ன? அல்லது ஒரே சமயத்தில் அது இரண்டுமாக இருக்கிறதா?


இரண்டும் தான். வடிகால் வெறும் புலம்பலாக மட்டுமே வந்தால் அது இலக்கியமாகிவிடாது. அதை படைப்பாற்றலுடன் வெளிப்படுத்துவதே இலக்கியம் செய்யும் மாயவித்தை.

🔥


எழுதும் போது இது யாருக்காக எழுதப்படுகிறது என்ற பிரக்ஞை உள்ளே வருவது அல்லது உள்ளே செயல்படுவது ஒரு படைப்பின் போக்கை, ஒரு படைப்பின் அர்த்தத்தை திசைமாற்றி விடுமா?


இதை யாருக்காக எழுதுகிறோம் என்ற பிரக்ஞையுடன் எழுதுவதில்லை. குழந்தை இலக்கியம் மட்டும் விதிவிலக்கு.

🔥

படைப்புகளில் பொதுவாக பால்யகால அனுபவங்கள் தான் தீவிரமான உத்வேகம் கொள்ளவைக்கும் எழுத்துக்களை உருவாக்க காரணமாகிறது என்பது உண்மையா?


அப்படி சொல்வதற்கில்லை. இது ஒவ்வொரு தனி நபர் சார்ந்த விஷயம். எழுதுபவரின் வாழ்விடம். குடும்ப பின்புலம், வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள். திருப்பங்கள் இப்படியாக பல காரணிகள் இருக்கின்றன.

🔥

ஒருவர் தனக்காக எழுதுகிறார். அதை தன்னிடமே வைத்துக்கொள்கிறார். அல்லது வேண்டுமானால் பிறர் வாசித்துக்கொள்ளட்டும் என்று அனுமதிக்கிறார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதாவது ஒரு எழுத்தில் பிறர் என்ற பாத்திரத்தின் முக்கியத்துவம் என்ன?


எனக்காக எழுதுகிறேன் என்று சொல்லிக்கொள்ளலாமே தவிர யாரும் தனக்கே தனக்காக எழுதுவதில்லை என்பது தான் உண்மை. அப்படி எழுதுவது டைரி குறிப்பு. படைப்பிலக்கியம் என்பது ஒரு படைப்பாளன் தன்னை, தன் அனுபவத்தை, சமூகம் சார்ந்த தன் பார்வையை, சமகால அரசியலை இப்படியாசு தன்னைச் சுற்றி நடக்கும் அக, புற உலகத்தை தரிசிக்கும் அனுபவம் தான் படைப்பாகிறது. படைப்பு மனம் அதை தனக்கு தெரிந்த அல்லது தோதுவான ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அந்த படைப்புக்கும் வாசகனுக்குமான இடைவெளி குறையும் போது அக்குறிப்பிட்ட படைப்பு வாசகனுக்கானதாக மாறுகிறது.

🔥

இதுதான் பிரச்சனை, இதுதான் வாழ்க்கை, இதுதான் தீர்வு, சுபம் என எழுத்து ஒரு முற்றுப்புள்ளிக்கு வருவது ஏன் மிகச்சிறந்த எழுத்தாக கருதப்படுவதில்லை?


வாழ்க்கை அப்படி நேர்கோட்டில் இருப்பதில்லை. பன்முகத்தன்மையை படைப்பு இழந்துவிடும். பிரச்சனை, வாழ்க்கை, தீர்வு, ஏன் சுப முடிவுகள் கூட ஒன்று போலிருப்பதில்லை தானே.. எனக்குப் பிரச்சனையாக இருப்பது எல்லோருக்கும் பிரச்சனையாகவே இருக்கும் என்று எப்படி சொல்ல முடியும்? படைப்பு என்பதே இந்த முரண்களுக்குள் பயணிப்பது தானே.



நன்றி : கோடுகள் இதழ் 14

15/11/2019-1/1/2020


#பெண்ணியம்புதியமாதவி 

#புதியமாதவிநேர்காணல்

#புதியமாதவிபடைப்புகள்


புதியமாதவி நேர்காணல்



புதியமாதவி நேர்காணல்:

கோடுகள் இதழ் 13.

கேள்விகள் : முரளிக்கண்ணன்


🔥🔥🔥

உங்களது கல்வி கற்ற காலம் வரையிலான வாழ்வைப்பற்றி சொல்ல முடியுமா? தங்களிடம் தாக்கங்களை ஏதேனும் ஏற்படுத்தியதா என்ற முறையில் கல்விசூழல், குடும்பச்சூழல், சமூகச்சூழல் சார்ந்து பதிலளிக்க முடியுமா?


மும்பை தமிழ்ச் சமூகத்தில் நான் நாலாவது தலைமுறை. தாய்வழி, தந்தைவழி இருவழியிலும் எங்கள் வாழ்விடம் மும்பை தாராவி. என் ஆரம்ப சுல்வி மும்பை மாநகராட்சி பள்ளிகளில், ஆனால் எப்போதாவது புத்தகத்தை எடுத்துப் படித்ததாக இன்றுவரை எனக்கு நினைவில் இல்லை. எப்போதும் வீட்டுக்கு அருகில் இருந்தக் கடற்கரையில் தான் விளையாடுவோம். அந்தக் கடற்கரை இப்போது காணாமல் போய்விட்டது. கடலை நிரப்பி சயான் பாந்திரா நெடுஞ் சாலை வந்துவிட்டது. எங்கள் தலைமுறை தமிழர்களிடம் அவர்களின் வாழ்விட சிக்கல் சார்ந்து சில முறைகள் எழுதப்படாத சட்டங்களைப் போல இருந்தன.


அதாவது ஆரம்ப கல்வி படிக்கும் வரை பிள்ளைகளை தங்களுடன் மும்பையில் வைத்திருப்பவர்கள் அதன்பின் தமிழ்நாட்டில் அவரவர் ஊர்களிலோ அல்லது விடுதியில் தங்க வைத்தோ மேற்கொண்டு படிக்க வைப்பார்கள். என் தந்தையார் வங்கியில் வேலைப் பார்த்தார். நாங்கள் அனைவரும் விடுதி வாழ்க்கையில் தான் எங்கள் கல்வியைத் தொடர்ந்தோம். அன்றைய தமிழ்க் குடும்பங்களின் பெற்றோர். குழந்தைகள் கல்வி சார்ந்த வாழ்க்கை இந்தக் கோட்டில் தான் பயணித்தது. இதற்கான காரணம் எங்கள் தாராவி வாழ்க்கையின் வாழ்விடப் பிரச்சனை. கணவனும் மனைவியும் கால் நீட்டிக்கூட படுக்க முடியாத இடத்தில் வாழ்ந்தவர்கள் தான் நாங்கள். இதில் பிள்ளை குட் டிகளை

வைத்துக் கொண்டு வாழ்க்கையை எப்படி ஓட்டுவது? இப்படியாக ஐந்து அல்லது ஆறாம் வகுப்புக்கு ஊருக்குப் போய்விடுவோம். எங்கள் வீட்டில் என் படிப்பு விஷயத்தில் பெரிய பிரச்சனை ஏற்பட்டது. அதாவது எனக்கு மூத்த என் இரு சகோதரிகளைப் போல நான் விடுதியில் இருக்கத் தயாராக இல்லை. ஒரே அழுது அட்டகாசம். ஒருவழியாக என்னை என் தாய்வழி பாட்டியின் துணையுடன் பத்தமடை வீட்டிலேயே தங்கவைத்து இராமசேசய்யர் பள்ளியில் சேர்த்தார்கள். இப்போது நினைத்துப் பார்த்தால் என்பொருட்டு என் அம்மா அப்பாவுக்கு அக்காலத்தில் இதுவே ஒரு பிரச்சனையாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். எப்படியோ நான் ஜாலியாசு பாட்டி தூக்குப்போனி டப்பாவில் அடைத்து தரும் பழைய சோறு தயிர் எடுத்துக் கொண்டு ஸ்கூலுக்குப் போவேன், அந்த ஸ்கூல் அக்ரஹாரத்தில் இருந்தது. அக்ரஹாரத்து தெருக்களைக் கடந்து தான் ஸ்கூலுக்குப் போக வேண்டும். எங்கள் தெருவைப் போல இல்லாமல் ரொம்பவும் ஒழுங்கான வரிசையுடன் வாசலில் பெரிய பெரிய கோலத்துடன் அவர்களின் வீடுகள். அந்த வீட்டுப் பெண்கள் எப்போதும் தலையில் பூ வைத்துக் கொண்டு சிரித்த முகத்துடன். அந்த தெருக்களும் ரொம்பவும் அகலமானவை. அந்த சனங்களும், வாழ்விடமும் எனக்குப் புதியவை. படிப்பு, பரீட்சை இதைப்பற்றி எல்லாம் எதுவுமே கவலைப்படாமல் இருந்த நான் அத்தக் கூட்டத்தில் என்னை என் இருத்தலை உணர்த்த படிக்க ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன். படிப்பு ஒன்றும் அப்படி கஷ்டமாகவும் இருக்கவில்லை. அந்தப் பள்ளியில் வாத்தியாராக இருந்தவர்கள் ஓரிருவர் தவிர மற்ற அனைவரும் பிராமணர்கள் தான். ஆனால் இவ்விடத்தில் நான் மறக்காமல் ஒன்றைச் சொல்ல வேண்டும். அவர்கள் கற்பிக்கும் போது எந்த ஜாதி வேறுபாட்டையும் காட்டியதில்லை. எதையும் நான் விட்டுவைக்கவில்லை. சமஸ்கிருதம் வகுப்பு தனியாக நடத்தினார்கள். நான் அதிலும் சேர்ந்து சமஸ்கிருதம் படிக்க ஆரம்பித்தேன் என்றால் பாருங்களேன். என் அப்பா திரு. வள்ளிநாயகம் அவர்கள் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர். அவர் அரசியலில் திமுக தலைவர் அறிஞர் அண்ணாவை மட்டுமே தன் தலைவராக ஏற்றுக்கொண்டவர். அப்பா ஊருக்கு வந்துவிட்டால் கட்சி தோழர்கள் கூட்டம் கூட்டமாக அப்பாவைப் பார்க்க வருவார்கள். வீடே விழாக்கோலம் கண்டுவிடும். வீட்டு முன்னால் வரிசையாக கார்கள் நிற்பதே பள்ளிக்கூடத்திலிருந்து வரும் போது பெருமையாக இருக்கும். வாழ்க்கையில் இந்த வயதில் தான் நான் வீட்டில் குவியும் சிற்றிதழ்கள் பத்திரிகைகளை வாசிக்க ஆரம்பிக்கிறேன். வீட்டில் பெரியார், அண்ணா, பாரதிதாசன், கண்ணதாசன் எழுதிய எழுத்துகள், அன்றைய திராவிட இயக்கத்தை இன்றைக்கு இருப்பவர்களை வைத்துக் கொண்டு மதிப்பிடக் கூடாது. திராவிட இயக்கத்தினர் காலத்தில் 80-க்கும் அதிகமான சிற்றிதழ்கள் வெளிவந்தன. நிறைய மலிவு விலைப் புத்தகங்கள் அச்சில் வந்தன. ஒவ்வொரு முறையும் திமுக மாநாடுகளுக்கு என் அப்பா மும்பையிலிருந்து வருவார். வரும் போதெல்லாம் மாநாடுக்கு வருபவர் என்னையும் வந்து பார்த்துவிட்டுப் போவார். அப்போது குளிந்தப் புத்தகங்களை வாசித்தேன், ஆனால் பள்ளிகூடத்தில் என்னுடன் படித்த மாணவியரோ, அவர்கள் வீட்டிலோ இப்புத்தகங்களைப் பற்றி அறிந்தவர்களாக இல்லை. அவர்கள் கல்கி, ஆனந்த விகடன், குமுதம், ராணிஎன்று எனக்கு அறிமுகமில்லாத இதழ்களை வாசிப்பதை அறிந்தேன். ஆனால் இந்த இதழ்களை வாங்கிப் படிக்க என் பாட்டி காசு தர மாட்டார். இப்படி கொஞ்சம் விசித்திரமாகத் தான் என் வாசிப்புகள் ஆரம்பித்தன. பள்ளிக்கூடத்தில் தேசியகீதம் பாடுவதற்கு முன் சரஸ்வதி வணக்கம் பாடலைப் பாட வேண்டும். அந்த வயதில் இந்த இரு துருவ சிந்தனைகளுக்கு நடுவில் நான் சிக்கித் தவித்திருக்கிறேன். வாசிப்பு என்பது என்னிடம் வளர்ந்தது இக்காலக் கட்டத்தில் தான். இன்றுவரை பல நாட்கள் எதுவும் எழுதாமல் இருந்திருக்கிறேன். ஆனால் ஒரு நாள் கூட என்னால் வாசிக்காமல் இருக்க முடியாது. இதற்கான அடித்தளம் அன்றைய அந்த நாட்கள் தான். அதன்பின் இளங்கலை பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி, முதுகலை மதுரை பல்கலைகழகத்திலும் விடுதி வாழ்க்கை எனக்கு ஆரம்பமானது.

🔥

தங்களுக்கு எப்போது முதன்முதலாக வேலை கிடைத்தது? திருமணம் எப்போது. எப்படி நடைபெற்றது? குடும்ப வாழ்க்கை தங்களிடம் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியதா?


முதுகலையில் நான் கோல்ட் மெடலிஸ்ட் எனக்காக முனைவர்பட்ட ஆய்வுக்கு ஒரு சீட்டை ஒதுக்கி வைத்திருந்ததாக மதுரை பல்கலைகழகத்தில் சொன்னார்கள். ஆனால் வாழ்க்கையில் சிவ சம்பவங்கள். சில அனுபவங்கள் என்னைப் புரட்டிப் போட்டுவிட்டன. முதுகலை முடித்துவிட்டு மும்பை வந்திருந்த போது என் அப்பாவுக்கு இரண்டாவது ஹார்ட் அட்டாக் வீட்டின் நிலைமை எனக்கு அப்போது தான் தெரியவருகிறது. வங்கி வேலைகளுக்கு பரீட்சை எழுத ஆரம்பித்தேன். நான் தமிழ் இலக்கியம் படித்தவள் என்பதால். மும்பையில் பலர் என்னைப் பார்த்து சிரித்தார்கள். தமிழ்ப் படிச்சிட்டு பேங்கில வேலைபார்க்கப் போறாளாம்.. கிடைக்குமாக்கும்? இம்மாதிரி விமர்சனங்கள் என் காதுபடவே கேட்டேன். சரித்திரம் படித்து விட்டு வங்கியில் வேலை பார்க்கலாம். தாவரவியலும், விலங்கியலும் படித்துவிட்டு வங்கிக்கு வேலைக்குப் போக முடியும் என்றால் WHY NOT ME? வழக்கம்போல என் சுயம் விழித்துக் கொண்டது. முதல் வங்கித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால் அடுத்த SBI தேர்விலும, HSBC தேர்விலும் தேர்ச்சிப் பெற்றென். SBI அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் வருவதற்கு ஒரு வருடமானது. அதற்குள் HSBC வங்கியில் சேர்ந்து விட்டேன். அதன்பின் அரசு வங்கிக்குப் போக விருப்பமில்லை. எவ்வளவுதான்  திறமை காரணமாக பதவி உயர்வு பெற்றாலும் சாதி இடஒதுக்கீடு இல்லை என்றால் இவர்கள் எல்லாம் உயர்பதவிக்கு வரமுடியுமா என்று சொல்வது அரசு அலுவலகங்களில் இருக்கும் சூழல் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே எனக்கு அரசு வங்கிக்குப் போக விருப்பமில்லை. HSBC -யில் 22 ஆண்டுகள் வேலைப் பார்த்தேன். அதன்பின் விருப்ப ஓய்வு எடுத்து விட்டேன். வங்கி வேலையிலும் அச்சூழலிலும் நிறைய கற்றுக்கொண்டேன். என் திருமணம் பெற்றோர் பார்த்து நடத்தியது. 1982 மும்பையின் மழைக்கால ஜூன் மாதத்தில் எனக்கும், சங்கருக்கும் திருமணம் நடந்தது. எங்கள் திருமணம் சுயமரியாதை திருமணமாக நடந்தது. மாலை மாற்றிக் கொண்டோம். அவர் ONGC நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அவர் மும்பைக்குப் புதுசு. முன்பின் பழக்கமில்லாத ஒரு பெண்ணும், ஆணும் திருமண உறவில் இணையும் போது

எத்தனை விதமான பிரச்சனைகள் ஏற்படுமோ அதில் 90% பிரச்சனைகள் எங்கள் வாழ்விலும் ஏற்பட்டது. ஆனால் சங்கரும், நானும் அவரவருக்கான இடத்தைக் கொடுப்பதிலும், ஒருவரை ஒருவர் மதிப்பதிலும் வாழ்க்கை இருப்பதாக உணர்ந்தோம். என்னை விட சங்கர் கொஞ்சம் யதார்த்தமாக யோசிப்பவர். அதுவும் எனக்கு ஓரளவு உதவி இருக்கிறது. சங்கரை நான் திருமணம் செய்யும் போது எங்கள் சொத்து அவரிடமிருந்த ஒரு மர்பி ரேடியோவும், ஒரு சூட்கேசில் நாலு சட்டையும், ரெண்டு பேண்டும், ஒரு வாட்சும் தான். வாழ்க்கையை அடித்தளத்திலிருந்து ஆரம்பித்தோம். எதைப் பற்றியும் யோசிக்கவோ இளைப்பாறவோ நேரமில்லை. எப்படியும் ஒரு  வீடு வாங்கிவிட வேண்டும் என்பதே எல்லா நடுத்தரக் குடும்பத்து தம்பதியரைப் போல எங்களுக்கும் கனவாக இருந்தது. லோன் வசதி இருந்ததால் வீடு வாங்கும் சுனவும் நிறைவேறியது. இக்காலக் கட்டத்தில் நான் பவுண்டன் ஏரியாவில் இருக்கும் வங்கி மெயின் ஆபிஸில் வேலைப் பார்த்தேன். போய்வரும் சாலையின் இருப்பக்கமும் பழைய புத்தகங்களைக் கடைப்பரப்பி வைத்திருப்பார்கள். உலகில் எந்தப் புத்தகம் வெளி வந்திருந்தாலும் வந்து ஒரு வாரத்திற்குள் சாலையோர கடைகளில் மலிவு விலைக்கு வந்துவிடும். சில புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவேன். அப்படி வாங்கிய புத்தகத்தை மீண்டும் அவர்களிடமே கொடுத்துவிட்டு (கொஞ்சம், வாங்கியதை விட குறைந்த விலைக்கு) அடுத்தப் புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம். இப்படியாக என் வாசிப்பு தொடர்ந்தது. இக்காலக்கட்டத்தில் நிறைய ஆங்கில புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன். ராமச்சந்திர குஹா முதல் அருந்ததிராய் வரை எனக்கு நெருக்கமானார்கள்.

🔥

வாழ்க்கை துணையை புரிந்துகொள்வதற்கான சாத்தியங்கள் காதல் திருமணத்தை விட நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் குறைவாக இருக்கும் ஒரு சூழலில் ஏறக்குறைய பிறரால் நிச்சயிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைத்துணையை ஏற்றுக்கொள்வது பற்றி என்ன நினைகிறீர்கள்? பெண்பார்க்கும் படலம் ஒருமாதிரி அபத்தமாக இருக்கிறதா இல்லையா?


இப்படியான ஒரு புரிதல் காதல் திருமணத்தைப் பற்றியும். பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களைப் பற்றியும் இருப்பதை நானும் அறிவேன். மேலோட்டமாகப் பார்க்கும் போது இப்புரிதல் ரொம்பவும் சரியாகத்தான் தோன்றும். ஆனால் யதார்த்தம் என்பது இதுவல்ல. காதலிக்கும் போது அவன் காதலன், அவள் காதலி, அதிலிருக்கும் எதிர்ப்பார்ப்புகள் என்பதும், அவர்களே கணவன், மனைவியாகும் போது ஏற்படும் எதிர்ப்பார்ப்புகளும் வித்தியாசமானவை. இன்றைக்கு நிறைய காதல் திருமணங்களும் மணமுறிவுக்குப் போவது இதனால் தான். எந்த திருமணமாக இருந்தாலும் சரி, ஆணும் பெண்ணும் அவரவர்க்கான இடத்தைக் கொடுப்பதும், அதை ஏற்றுக்கொள்வதிலும் தான் வாழ்க்கையை செம்மையாக தொடர முடியும். பெண்பார்க்கும் படலம் " இது கொஞ்சம் அபத்தமானது தான். ஆனால் இன்று கணினி யுகத்தில் ஸ்கைப்பில் பார்த்து பேசி அதன்பின் ஒருவரைப் பற்றி ஒருவர் சமூக வலைத்தளங்களில் ஆய்வு செய்து N இப்படியாக பல கட்டங்களைத் தாண்டிய பிறகு தான் பெண்பார்க்கும் படலத்திற்கு தயாராகிறார்கள். அதுவும் மும்பை போன்ற பெருநகரத்தில் ஒரு காஃபி ஹவுசில் இரண்டு குடும்பமும், பையன், பெண்ணுடன்.

வந்து காஃபி குடித்துவிட்டு பெண்பார்க்கும் படலத்தை அபத்தமில்லாமல் செய்கிறார்கள்.


பொதுவாக திருமணம் என்ற ஒரு குடும்ப அமைப்பைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது மனிதனுக்கு அதிகப்படியான செயற்கையான சுமைகளை சுமக்கும்படி செய்கிறதா? ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தெணல் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஒரு அடிப்படையையே அது இல்லாமல் செய்கிறதா?


திருமணம் பெண்ணுக்குப் பாதுகாப்பைக் கொடுக்கிறது என்ற எண்ணத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்தாகி விட்டது. ஆனாலும் திருமணங்கள் தொடர்கின்றன. ஆண், பெண் உறவு திருமணம் இல்லாமலும் தொடர முடியும் என்ற நிலை சமூகத்தால் ஏற்கப்பட்டாலோ அல்லது ஆண், பெண் உறவில் பிறக்கும் குழந்தைகளை ஒரு கம்யூனல் சிஸ்டத்தில் அரசாங்கமே வளர்க்கும் என்ற நிலை ஏற்பட்டாலோ இங்கே பலர் திருமணத்தை விலக்கி வைத்துவிடுவார்கள். சொத்து, வாரிசுரிமை இதெல்லாம் ஆண் மைய சமூகத்தில் திருமண உறவை விலக்க முடியாததாக ஆக்கி விட்டன.


🔥


மேலே உள்ள அடுத்தடுத்த இரு கேள்விகளையும் நான் என்ன அடிப்படையில் கேட்கிறேன் எனில் பிரச்சனைகள் வருகிறது என்பதால் கேட்கிறேன் என்பது ஒருபுறம் நமக்கு ஒரு வாழ்க்கைத்துணை தேவை என்பதை சாதகமாக பயன்படுத்தி இந்த சமூக நடைமுறை என்பது நம்மை - ஒருவரையொருவர் நிச்சயமாக புரிந்துகொண்டே ஆகவேண்டும் என்பது நடவாது என்ற ஒருவித இக்கட்டிற்குள் கொண்டு வந்து நிறுத்துகிறது என்பது ஒன்று. சமரசமனோபாவம் இந்த இக்கட்டை துல்லியமாக உணரவிடாமல் நம்மை தடுக்கிறது. இரண்டாவது. என் அனுபவத்தில் ஒவ்வொரு மனிதனும் அதிகாரம் மற்றும் அதிகாரம் சார் அதிகாரங்களின் மறைமுக நிர்பந்தத்திற்குள் இருந்து தான் இதை எட்டி தொட முடிகிறது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். எனக்கு திருமணம் சார்ந்த ஒரு உறுதியான எண்ணம் அதாவது திருமணம் செய்துகொள்ள வேண்டுமெனில் உடல்ரீதியான, மனரீதியான, பொருளாதாரரீதியான என்ற இந்த மூன்றில் குறைந்தபட்ச அடிப்படை தகுதி நிச்சயமாக இருக்க வேண்டுமென அரசு சட்டமே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இதிலிருந்து தான் தோன்றுகிறது. நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் பல தந்திரமான கோர்த்து விடல்கள் நடந்தேறுவதை நான் அனுபவப்பூர்வமாக என்னுடைய அனுபவத்தில் இருந்து மட்டுமல்ல -உணர்ந்திருக்கிறேன். காதல் திருமணங்களில் தவறுகள் நடந்தேறுவதும் இதேவித சாத்தியங்களுக்குள்ளிருந்து வரும் இதேவிதமான ஒரு பிரச்சனை தான் என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். இதற்கு நேரடியான அர்த்தம் இதுதான். நான், யார்  எனக்கு  வாழ்க்கை   துணையாக வர வேண்டும் என்பதை நானோ என்  எதிர்கால  வாழ்க்கை துணையோ  முழுக்க முடிவு செய்ய முடியாது. இதைப்பற்றி தாங்கள் ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?


 நீங்கள் சொல்வதை   என்னால்  புரிந்து கொள்ள  முடிகிறது. இதை இப்படியும் பார்க்க ‌ வேண்டும்.  யார் வாழ்க்கை துணையாக வர வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட அந்த ஆணும் பெண்ணும் சுயமாக முடிவு செய்து கொள்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அதன்பின்..? அவர்கள் வாழும் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் சமூகத்தின் தலையீடு எதோ ஒரு வகையில் இருக்கிறது. இருக்கத்தான் செய்யும். மனிதன் என்றைக்கு கூட்டமாக வாழ ஆரம்பித்தானே அப்போதே இந்த சமரசங்கள் ஆரம்பித்துவிட்டன. எப்படி

கையாளுகிறோம் என்பதில் தான் ஆண் பெண்  இணைந்து வாழும் வாழ்க்கை அமைகிறது.

🔥

தங்களது இன்றைய காலம் வரையில் எத்தனை வேலைகள் செய்திருப்பீர்கள்? பொதுவாக ஒரு வேலையோ, ஒரு தொழிலோ செய்து பிழைப்பதில் என்ன மாதிரியான ஒரு சிக்கல் இருந்து செயல்படுகிறது என நினைக்கிறீர்கள்? அல்லது எந்த ஒரு சிக்கலையும் தாங்கள் காணவில்லையா?


எனக்கு பல வேலைகள் செய்த அனுபவமில்லை. பன்னாட்டு வங்கி வேலை, வேலைக்கான உத்திரவாதம் இருந்ததால், இன்னொரு வேலை தேட வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டதாக நினைக்கிறேன். ஆனால் நான் வேலைப் பார்த்த வங்கியில் ஆரம்பத்தில் நிறைய கலாச்சார பிரச்சனைகளை எதிர்கொண்டேன். ஆண்களுடன் கைகுலுக்கவே இன்னும் விலகி நிற்கும் தமிழ்ச்சமூக சூழலிருந்து யாரைச் சந்தித்தாலும் உடனே கைகுலுக்கி, நண்பராக இருந்தால், கைகுலுக்குவதுடன் தோள் அணைத்து, நட்பைக் கொண்டாடும் அலுவலக சூழல், பார்ட்டி நடந்தால் அவர்களுடன் உட்கார்ந்து ஜூஸ் குடித்துக் கொண்டிருந்த நாட்கள், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவரை சார் அல்லது மேடம் என்றழைக்காமல் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கம். இப்படி அலுவலக சூழலில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இந்த வேறுபாடுகளுக்கு நடுவில் நான் மனஉளைச்சல்களுக்கு ஆளாகி இருக்கிறேன்.

🔥

தீவிர இலக்கிய அறிமுகம் எப்படி ஏற்பட்டது? தங்களது வழிகாட்டிகள் யார் யார்? ஜரைஞ்சக படைப்புகளுக்கும், தீவிர இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புகளுக்கும் உள்ள வேறுபாட்டை நோக்கி எப்படி சென்றீர்கள்?


நான் முதுகலையில் தமிழ் இலக்கியம் படித்தேன். அதிலும் சிறப்புப் பாடமாக  மாடன்  லிட்ரேச்சர். எனவே  ல.சா.ரா , தி.ஜானகிராமன், நீல பத்மநாபன் இவர்கள் எல்லோருமே எனக்கு 

கல்லூரி காலத்திலேயே அறிமுகமாகி விட்டார்கள். பேராசிரியர்கள் கனகசபாபதி, ராமசாமி, நவநீத கிருஷ்ணன்

, வேங்கட் ராமன், தி.சு.நடராசன், இவர்கள் எல்லோருக்கும் நான் மாணவியாக இருந்தவள். தீவிர இலக்கியம் அக்காலத்தில் மிகச்சரியாக  எனக்கு அறிமுகமானது. அத்துடன் இலக்கிய 

 விமர்சனத்தையும் பல்கலை கழகத்தின் வியாழ வட்டங்கள் சொல்லிக் கொடுத்தன. மதுரை  பல்கலை கழகத்தின்

நூலகத்தில் இரண்டு ஆண்டுகள்  மிக அதிகமாக நேரத்தைச் செலவு செய்த மாணவியாக நான்தான் இருந்திருப்பேன்.அதுவரை திராவிட இயக்க கருத்துகளை மட்டுமே அறிந்திருந்த நான் பல்கலை கழக நாட்களில்தான் தீவிர இலக்கியத்திற்கும் பொதுவுடமை சித்தாந்தத்தைப் படிப்பதிலும் அது குறித்த விவாதங்கள் செய்வதிலும் ஈடுபட்டேன் என்று சொல்லலாம். ஜெயகாந்தன் அன்றைய இளம் தலைமுறைக்கு ஒரு ஹீரோ மாதிரி இருந்தார்.எனக்கு அப்படி எல்லாம் இல்லை என்றாலும் ஜெயகாந்தன் பொதுஜனம் பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்ததை நானும் கவனித்தேன்.அக்காலத்தில் எனக்கு நீல பத்மநாபனை ரொம்பவும் பிடிக்கும். May be his look. I don't know. நீல பத்மநாபனை விடுதியில் என் அறைக்கு அடுத்த அறையில் இருந்தப் பெண் தன் முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்திருந்தார். நான் எப்போதும் அவர் நீல பத்மநாபன் பற்றி சொல்வதை எல்லாம் ரொம்பவும் ஆவலுடன் கேட்பேன். நீல பத்மநாபன் கலந்து கொண்ட மு. வ. . அரங்கு நிகழ்வில் நான் தான் நன்றியுரை ஆற்றினேன். அன்று அவர் ப்ளூ கலர் சின்ன சின்ன கட்டம் போட்ட சட்டை அணிந்து இருந்தார். அது இன்னும் மறக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!தலமுறை  நாவல்கள் குறித்து நிறைய விவாதங்கள் நடந்தது. எனக்கு அவருடைய தலைமுறைகள் நாவலை விட பள்ளிகொண்டபுரம் தான் பிடிக்கும். இன்றுவரை அதில் மாற்றமில்லை.

🔥

எழுத வேண்டும் என எப்படி தோன்றியது? எப்பொழுது எழுத துவங்கினீர்கள்? பத்திரிக்கைகளில் எப்பொழுது அவை பிரசுரமாயிற்று?


கல்லூரி காலத்தில் எழுதியதும், பேசியதும் உண்டு. ஆனால் நான் உங்களிடம் சொல்லியது போல என் வாழ்க்கை திசை மாறிவிட்டது. இலக்கியம் படித்த நான் கணக்கு ஏற்றுமதி, இறக்குமதி என்று இன்னொரு துறையில் கால்வைத்தேன். இருத்தலை நோக்கிய பயணத்தில் திரும்பிப் பார்க்கும் போது எங்கே நிற்கிறேன் என்பதை நான் புரிந்துகொள்ளும் போது வருடங்கள் பல ஓடி விட்டன. அக்காலத்தில் மும்பையில் சீர்வரிசை என்ற மாத இதழ் ஆரம்பிக்கப்பட்டது. அந்த இதழுக்கு நூல் விமர்சனப்பகுதிக்கு தமிழகத்திலிருந்து நிறைய புத்தகங்கள் வர ஆரம்பித்தன. சீர்வரிசை ஆசிரியராக இருந்த சண்முகராசன் அவர்கள் அப்புத்தகங்களை என்னிடம் கொடுத்து வாசித்துவிட்டு எதாவது நாலு வரி எழுதித்தரச் சொன்னார். வாசிப்பது தான் எனக்கு மிகவும் பிடித்தமானதாயிற்றே. வாசித்து, ரசித்து எழுதிக்கொடுக்க ஆரம்பித்தேன். அதன்பின் புதியமாதவியின் விமர்சனத்திற்காக என்றே பதிப்பகங்கள் புத்தகம் அனுப்ப ஆரம்பித்தன. இக்காலத்தில் கவிதைகளும் எழுத ஆரம்பித்தேன். சௌந்தர சுகன், கணையாழியில் தான் முதலில் என் சிறுகதை வெளிவந்தது. சரியாக எதில், எப்போது என்றெல்லாம் நினைவில்லை. அதன்பின் சிற்றிதழ்கள் கவிதாசரண்.நாளை விடியும், சிந்தனையாளன், நடவு. புன்னகை, தமிழர் கண்ணோட்டம், கலை இலக்கிய இதழ், புதிய கோடாங்கி, மணல் வீடு என்று என் எழுத்துப் பயணம் தொடர்ந்தது. இக்காலக் கட்டத்தில் இணைய தொழில்நுட்பம் ஆரம்பித்தது. திண்ணை, வார்ப்புகள், பதிவுகள், ஊடறு, கீற்று என்று பல்வேறு இணைய தளங்களில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். இணையத்தில் எழுதுவது எனக்கும் இன்னும் வசதியாக இருந்தது. மும்பையிலும் அவ்வப்போது சிற்றிதழ்கள் பத்திரிகைகள் ஆரம்பிப்பதும், இரண்டு மூன்றாண்டுகள் நடத்திவிட்டுபின் தொடர முடியாமல் நின்று போவதும் இன்றுவரை தொடரந்தான் செய்கிறது. மும்பை வார இதழ் தமிழ்ப் போஸ்டில் முழுநேர எழுத்தாளராக இருந்த அனுபவமெல்லாம் உண்டு (இது சம்பளம் வாங்காத வேலை). நிறைய சோதனை முயற்சிகளை செய்வதற்கு மும்பை பத்திரிகைகள் சீர்வரிசை, மும்பை தமிழ்ப் போஸ்ட், மும்பைத் துடிப்பு, மும்பை தமிழ் டைம்ஸ் பத்திரிகைகள் எனக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றன. தமிழ்ப்போஸ்டில் வெளியான தனியறை சிறுகதைகள் அதில் முக்கியமானதாகும்.

🔥

வாழ்க்கைக்கு எப்பொழுதுமே ஒரு பொருளாதார பாதுகாப்பு தேவையாக இருக்கிறது. ஒரு எழுத்தாளனுக்கு வேலைக்கு செல்லுதல், சம்பாதித்தல் என்பது அவனுக்கு தான் நேசிக்கும் எழுத்தை நோக்கி போக விடாமல் ஒரு வகையான அக்கப்போரான இன்னல்களை அல்லது சொல்லொண இன்னல்களை பொதுவாக கொண்டிருப்பதாக இருப்பது எதனால்? தங்களுடைய அனுபவம் எப்படிப்பட்டது?


எல்லா மனிதனுக்கும் வயிற்றுப்பசி உண்டு. பட்டினி கிடந்த எல்லாம் புத்தகம்  வாசிப்பதோ, கவிதை எழுதுவதோ சாத்தியமில்லை. மண்ணில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசியும் தன் இருத்தலுக்கானதை தானே தேடிக்கொள்வதுதான் வாழ்க்கை. இதில் எழுத்தாளன் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? எழுத்தாளனுக்கு இதெல்லம் சொல்லொணா இன்னல்கள் கொண்டிருப்பதாக ஏன் நினைக்கிறோம்? இந்த மனநிலை காலம் காலமாக கற்பிக்கப்பட்டிருக்கும் கனவு மனநிலை. இன்னும் சொல்லப்போனால் பாட்டுப்பாடி அரசனிடம் பரிசுகள் வாங்கி வாழ்க்கையைக் கழித்த பேரரசு கால நிலவுடமை சமூகத்தின் மனநிலை, நான் எழுத்தாளனாக்கும், வேலை செய்வது பெரும் துயரமாக இருக்கிறது என்று சொல்வதன் அடுத்தக் கட்டம் தான் எழுத்தாளனை இச்சமூகம் பாதுகாக்க வேண்டும் என்று சொல்வதற்கான காரணமும் விவசாயியைப் பாதுகாக்காத சமூகம் எழுத்தாளனை மட்டும் பாதுகாக்க வேண்டுமா என்ன? வாழ்க்கையில் தன் அடிப்படைத் தேவைகளுக்கு ஒவ்வொரு மனிதனும் உழைத்தாக வேண்டும். அப்படி உழைக்கவில்லை என்றால் அவன் எங்காவது சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவான். இந்த நிலை மற்றவர்களை விட எழுத்தாளனுக்கும், அவன் எழுத்தறத்திற்கும் பேராபத்தாகத் தான் முடியும். என்னைப் பொறுத்தவரை என் தேவைகள் என்பது மிகவும் குறைவு. என் தேவைகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தை நான் எப்போதும் என் வசமே வைத்திருக்கிறேன். ஒப்பீடுகளை இவ்விஷயத்தில் தவிர்க்கவே விரும்புகிறேன். சமரசமில்லாமல் அதிகாரத்திற்கு வளைந்து கொடுக்காமல் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் உழைப்பும். வாழ்க்கையும் ஒவ்வொருவருக்கும் தேவையானது என்பது நான் என் கருத்து.

🔥


 இல்லை,  எழுத்தாளருக்கு வேலைக்கு செல்வதில் பிரச்சனை இருப்பது போல எனக்குத் தோன்றவில்லை. எழுத்தாள்கை   வாழ்வதற்கு என்ன தேவையோ அது பணம் சம்பாதிக்கவும் குடும்ப நடத்தவும் என்ன மனநிலை தேவையோ அது படைப்பாற்றலோடு இயங்க என்ன மனநிலை தேவையோ அதை, வழிமறித்து முற்றிலும் மாற்ற முயன்றபடி  இருக்கிறது. அதாவது பணம் சம்பாதிக. எழுத்திற்கு எப்பொழுதும் அகவயமாக, நிறுத்தி, நிதானித்து நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. பணம் சம்பாதித்தே ஆக வேண்டும் என்பது அவனை புறவயமான புழக்கத்திற்கு மீண்டும் அத்தனை எளிதில் திரும்ப முடியாத நீண்ட தூரத்திற்கு இழுத்து செல்கிறது. இதற்கு என்ன தீர்வு என்பது மாதிரி தங்களுக்கு ஏதேனும் சொல்ல தோன்றுகிறதா? ஆனால் தாங்கள் சுயசார்போடு இருக்க வேண்டும் என சொல்வதை முற்றிலும் ஒத்துக் கொள்கிறேன் 

.


பணம் சம்பாதிப்பது என்ற ஓட்டத்தில் எழுத்தாளனால் பங்கெடுக்க முடிவதில்லை. அவனைப் பொறுத்தவரை அவன் பிறரைச் சார்ந்திருக்காமல் சுயமாக வாழ்வதற்கான அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டால் போதும். ஆனால் சமூகம் குடும்பம் இதை அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு படைப்பு மனமும் எதிர்கொள்ளும் பிரச்சனை இதுதான். இதில் உடைந்துப்போனவர்கள் பலருண்டு, ஒதுங்கிவிட்டவர்களும் உண்டு. இன்னொரு வகையில் சொல்லப்போனால் இந்த அழுத்தமான மனநிலை எழுத்துகளின் எரிமலையாக கொப்பளிக்கிறது. தத்துவம் பேசுகிறது. மாயவித்தைகளைக் கொண்ட புனைவுலகத்தை

சிருஷ்டித்துக் கொள்கிறது. இம்மனநிலை நம் சமூக சூழலில் எழுத வஆண்களை விட மிகவும் அதிகமாக மனஅழுத்தத்திற்கு உள்ளாகி ஒரு அகப்போராட்டம் பெண் எழுத்தாளர்களிடம் ஏற்படுகிறது.

🔥

ஒரு படைப்பாளிக்கு வாழ்வு குறித்து எத்தனை தேடல், எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் இருக்கலாம். அதோடு அவன் எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம். அவன் பதில்களை அல்லது தீர்வுகளை அல்லது முடிவுகளையும் கூட கண்டடையலாம். ஆனால் ஒருபோதும் அவன் அறுதியிறுதியான முடிவுகளுக்கு அதன் பிறகு அதில் வேறு எதுவும் இல்லை என்பது போல வரமுடியாதவனாக இருக்க வேண்டும். ஒரு படைப்பாளியை இப்படி வரையறுக்க முடியுமா?


முடிவுகளைக் கண்டடையும் புள்ளியை நோக்கித்தான் ஒவ்வொரு மனிதனின் தேடலும். படைப்பாளி அந்தப் புள்ளியைத் தொட்டுவிடுவது அவ்வளவு எளிதல்ல. அது அவன் மனநிலைக்கு எளிதில் வசப்படும் ஒன்றல்ல. அப்படி வசப்பட்டு விட்டால் அவனிடம் வார்த்தைகள் மவுனித்து விடும்.

🔥

நான் இந்த விஷயத்தை இப்படி பார்க்கிறேன். எழுத்தாளன் வாழ்வின் ஊடாக, அதை உண்மையை தன் எழுத்தின் ஊடாக கண்டடைய பார்ப்பவன். வாழ்வு உணர்வுப்பூர்வமான தளத்தில் மையம் கொண்டிருக்கிறது. எனவே எழுத்தாளனும் உணர்வுப்பூர்வமான தளத்தில் மையம் கொண்டிருக்கிறான். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவெனில் உணர்வுப்பூர்வமான அணுகுமுறை எப்பொழுதும் நம்மை ஒரு திட்டவட்டமான உண்மையை நோக்கி நகர்த்தி செல்லாது. வேறு எப்படி அவன் வாழ்வின் ஊடாக, தன் எழுத்தின் ஊடாக எது உண்மையோ அதை நோக்கி செல்வது? இவ்விஷயத்தில் நாம் பகுத்தறிவின் உதவியை நாட தயாராக இல்லையெனில் அதை விட்டால் நாம் ஒன்றே ஒன்றைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. அற உணர்வு என்பது தான் அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில் பகுத்தறிவிற்கு என்ன மாதிரியான ஒரு உண்மையை நோக்கி செல்லும் சாத்தியம் இருக்கிறதோ, அதே மாதிரியான அதற்கு நிகரான ஒரு சாத்தியம் வெகுண்டு உச்சத்திற்கு செல்லும் அற உணர்விற்கும் இருக்கிறது என்பதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். இதற்கு உதாரணமாக நான் ஜெயகாந்தனை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். ஜெயமோகளையும் சொல்லலாம் தான். ஆனால் அவர் ஜெயகாந்தனை விட சற்று அறிவுப்பூர்வமானவராக மதிப்பிடுகிறேன். எனவே அற உணர்வை விட்டு விலகாத ஒரு பிரக்ஞை எழுத்தாளனுக்கு எப்போதும் தேவை என நினைக்கிறேன். அவனுக்கு வேறு வழியில்லை. வாழ்வில் உள்ள எந்த ஒன்றைப்பற்றியும் எழுத்தாளனால் திட்டவட்டமான ஒரு முடிவிற்கு எப்பொழுதும் வர முடியாது என்பதை போல தெரிவது அவன் எப்பொழுதும் தன் இலக்கிய பணியில் முழுக்க முழுக்க உணர்வுப்பூர்வமானதொரு தளத்தில் நின்று வேலை செய்கிறான் என்ற காரணத்தை தாங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? அல்லது வேறு காரணம் ஏதேனும் இருப்பதாக உத்தேசிக்கிறீர்களா?


அறஉணர்வு...? சமூகம் எதை அறம் / ஒழுக்கம் என்று கட்டமைத்திருக்கிறதோ அதைத்தான் சொல்வதாக நினைக்கிறேன். அப்படியானால் நீங்கள் சொல்வதைப் போல "அற உணர்வை விட்டு விலகாத ஒரு பிரக்ஞை எழுத்தாளனுக்கு எப்போதும் தேவை" என்ற உங்கள் கருத்துடன் மாறுபடுகிறேன். இங்கே அறம் / ஒழுக்கம் இத்தியாதி எல்லாம் எப்போதுமே ஆண்மையப்

பார்வையில் இருப்பதைக் கவனித்திருக்கின்றீர்களா? இன்றைய இலக்கியவாதியின் அனுபவங்கள் அவனுடைய பிரக்ஞையுடன் சேர்வதும் சமூகச் சூழலில் இந்தச் சேர்க்கையும் முரண்படுவதுமாக படைப்புவெளி உருவாகிறது. சீன தத்துவத்தில் ஒன்றைச் சொல்வார்கள். அதாவது "யின்" & "யேங்க்" இந்த இரண்டுக்குமான செயல்பரிமாற்றம் தான் மனித உலகின் தொடர் இருந்தலுக்கானது என்று. இலக்கியத்திலும் அப்படித்தான் இருக்கிறது. நீங்கள் அறஉணர்வு என்று சொல்வதை மனிதவாதம் முன்வைக்கும், ஒவ்வொரு மனிதனின் மனசாட்சி அல்லது அகக்குரல் என்று எடுத்துக் கொண்டால் இந்த மனசாட்சியை எது கட்டமைக்கிறது என்ற அடுத்தக் கேள்வி எழத்தான் செய்கிறது. அறஉணர்வுகள் கூட சமூகத்தின் புறவெளிகளால் தீர்மானிக்கப்படுபவையாக இருக்கின்றன.


போர்ச்சமூகத்தில் வீரமும், எதிரி நாட்டவரை அழிப்பதும் போர் அறமாக இருக்கிறது. புறநானூறு வீரத்துடன் பேசிய தாய்க்குல பாடல்களை எல்லாம் வீரம் கொப்பளிக்க எழுதிய படைப்புலகின் அறவுணர்வு, வீரர்களின் நடுகல் வழிபாடு இத்தனையும் கடந்து இன்றைய போர்க்களத்தில் அதே பெண்,


தாய் கேட்கிறாள்..


"கொலையுண்டு போன


என் புதல்வர்களின்


முற்றாப் பிஞ்சுடலின் ஊனருந்தி


தன் கோரப் பசியாற்றி


தாகம் தீரச் செந்நீரும் குடித்தபின்


இன்னுமா தாய்நிலம்


புதல்வர்களைக் கேட்கிறது? (ஈழம் கவிஞர் அவ்வையின் குரல்)


சித்தார்த்தா, புத்திர சோகத்தை அறிவாயா, மரணமில்லாத வீட்டில் சுடுகு வாங்க என்னை அனுப்பாதே" (புதியமாதவி கவிதை பாலைத்திணை)

 இப்போது அறவுணர்வு பற்றிய கேள்வியும் எழுகிறது தானே. எந்த ஒரு படைப்புக்கும் உணர்வுப்பூர்வமான தளம் முக்கியமானதாக இருந்தாலும் இன்றைய நவீன, பின்நவீனத்துவ இலக்கியத்திற்கு அது மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. ஒவ்வொரு படைப்பாளனும் சமூகத்துடனும் அவன் உணர்களும் அனுபவங்களுமாக இணைவதும் முரண்படுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. நேற்றைய இன்றைய அனுபவம் மறுக்கிறது.அவனுடைய  மனக்குரலில் பல்வேறு முகங்கள் பல்வேறு குரல்களுடன் மோதிக்கொண்டே இருக்கின்றன. படைப்பாளன் சுயத்துடனும் போராடிக் கொண்டே இருக்கிறான்.

🔥

இதை தாங்கள் உனர்ந்திருக்கிறீர்களா என தெரியவில்லை. வாழ்வின் எந்த ஒரு உண்மையும் தன்னந்தனி உண்மையல்ல. திட்டவட்டமான ஒரு முடிவை கண்டடைவது என்றால் என்ன? உண்மையை கண்டடைவது தான். ஆனால் அது சாத்தியமானால் அங்கிருந்து உடனடியாக அடுத்த கேள்வி தவிர்க்க முடியாமல் மற்றொரு உண்மையை நோக்கி எழுந்து திரும்ப ஆரம்பிக்கிறது. உண்மைகள் எப்பொழுதும் எண்ணற்ற உண்மைகளே எனவே அறிதலுக்கான ஒரு நகர்வும், கேள்விகளும் அதன்பிறகும் ஒரு குறிப்பிட்ட உண்மையை கண்டடைந்த பின்னும் - முற்றுப்பெறுவதில்லை அல்லவா? இதைப்பற்றி படைப்போடும், படைப்பாளியோடும் தொடர்புபடுத்தி தாங்கள் ஏதேனும் கூற முடியுமா?


திட்டவட்டமான முடிவைக் கண்டடைவது என்பதெல்லாம் சித்தர்களின் வழி. இன்றைய படைப்பு சூழலில் தேடல், தேடல், தேடல் மட்டுமே. ஒன்றின் போதாமை இன்னொன்றை நோக்கி நம்மை நகர்த்திச் செல்கிறது. இப்படித்தான். தேடலின் பாதையும் நம் வசமில்லை. வாசிக்க ஆரம்பிக்கும் போது எனக்கு கிடைத்தவை திராவிட இயக்க இதழ்கள் தான். அந்த இதழ்களின் வழி நான் அடைந்த இடம் எனக்கு போதுமானதாக இருந்தது என்று நான் நினைத்திருந்தால் நான் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்திருக்க முடியாது. அறிஞர் அண்ணா எனக்கு மிகவும் பிடித்தமான தலைவர் தான். ஆனால் அவரின் நாவல் 'பார்வதிபாய் பி.ஏ.' என்னைத் திருப்திப்படுத்தவில்லையே! எனக்கு புதுமைப்பித்தன் தேவைப்படுகிறார்.


ஒவ்வொரு மனித வாழ்விலும் இன்னும் வசப்படுத்த முடியாதது மனம். அந்த மனசின் ஒவ்வொரு நுண்ணிய உணர்வுகளும் படைப்பாளனுக்கு எப்போதுமே ஒரு மாயக்குகை. அந்தக்குகை வாசத்தில் கு.பா.ரா, ல.சா.ரா எல்லோரும் வருகிறார்கள். மண்ணோடு வாழும் மக்களின் வாழ்க்கையில் நாஞ்சில் நாடனின் கும்பமுனியின் குறும்புத்தனங்கள். கேலிகள், கிண்டல்கள்.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவை முற்றுப்பெறாது. புதிதுபுதிதாக முகம்காட்டிக்கொண்டிருக்கின்றன. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் இதன் போக்குகள் இன்னும் விசாலமாகி ஒரு பன்முகத்தன்மையைக் கொடுத்திருக்கின்றன.


வாழ்வை ஒருவன் எப்படி பார்க்கிறான் என்பது தான் அவனை ஒரு மிகச்சிறந்த படைப்பாளியாக ஆக்குகிறது. அது மனிதர்களின் பொதுப்படையான பார்வையிலிருந்து உருவாகி வருவதல்ல. அவனுடைய சொந்த அணுகுமுறையிலிருந்து, சொந்த பார்வையிலிருந்து உருவாகி வருவது. ஒரு படைப்பாக்கத்தில் இது என்ன மாதிரியான பாத்திரத்தை வகிக்கிறது?


உண்மைதான். ஆனால் இந்த வேறுபட்ட பார்வை என்பது வாழும் சூழல், வாசிப்பு, ஏன் நட்பு வட்டம் கூட தீர்மானிக்கிறது. இவை எல்லாம் சேர்ந்து தான் அவன் படைப்பாக்கத்தில் பங்காற்றுகின்றன. இப்பெருநகர வாழ்க்கை, என் குடும்பத்தின் அரசியல் பின்னணி, என் வாசிப்புகள், என் பணியிடம், ஏன் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் இப்பெருநகரத்தின் இரயில் வண்டியின் சக்கரங்கள், சாக்கடைகள், என் தாராவி வாழ்க்கை எல்லாம் சேர்ந்தது தான் நானும், என் எழுத்தும்.

🔥

நான் இதைப்பற்றி தான் சொல்கிறேன். வாழ்க்கையை வாழ நாம் எப்படி சமரசத்தை மேற்கொள்கிறோமோ அதேவித ஒரு சமரசத்தை நாம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை புரிந்துகொள்வதிலும் மேற்கொள்ள முடியாது. சமூகம் எப்பொழுதும் நம்மை பிழையான புரிதல்களுக்கு நிர்பந்திக்கிறது. இம்மாதிரி ஒரு சூழலை தாங்கள் நிச்சயமாக சந்தித்திருப்பீர்கள். சுற்றியுள்ள அத்தனை பேரும் ஒரு தவறான, பிழையான கருத்தை கொண்டிருப்பார்கள். அதை நம் மீதும் திணிப்பார்கள். நேரடியாக என்றாலும் பரவாயில்லை. மறைமுகமாக என்பது தான் முக்கியமான பிரச்சனையே. அக்குறிப்பிட்ட இடத்தில் ஒரு எழுத்தாளனுக்கு நிச்சயமாக இருந்தே ஆக வேண்டிய விசைகொண்டு எழ வேண்டிய அறவுணர்வு இல்லையெனில், சமரசம் அங்கும் இருக்குமெனில் - ஒன்றை புரிந்துகொள்வதிலும்


பத்து பேர் பத்து வகையான வழியை தங்கள் சௌகர்யத்திற்கு காட்டி போ என்கிறார்கள். அங்கு மொத்தமாக அத்தனை பேரையும் கடந்து நமக்கு என்ன மாதிரியான ஒரு விசையோ, கேள்வியோ எழ வேண்டுமோ அது அங்கு நிச்சயமாக எழ வேண்டும். நான் இதைப்பற்றியே கேட்கிறேன். பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இது இல்லை என தோன்றுகிறது. அதாவது சமூகம் அளிக்கும் திட்டமிட்ட பிழையான புரிதல்களுக்கு அவர்கள் இலக்காகிறார்கள். பலியாகிறார்கள், இதைப்பற்றி ஏதேனும் சொல்ல முடியுமா? கூட அங்கு என்ன கேள்வி எழ வேண்டுமோ அந்த கேள்வி நிச்சயமாக எழாது. பயணத்தில் திக்கு தெரியாத இடத்தில்


இதை ரொம்பவும் அதிகமாகவே நான் சந்தித்திருக்கிறேன். சந்தித்தும் வருகிறேன். காரணம், நான் ஒரு பெண்ணாகவும் இருப்பதால்! அதுவும் குடும்பம் என்ற நிறுவனத்தில் வாழும் ஒரு பெண்ணாக இருப்பதால் ஒவ்வொரு கணமும் அது என்னையே பலியாக கேட்கிறது. இத்துடன் இன்னொரு புதிய பலிபீடமும், ஊடகங்களைத் தான் சொல்கிறேன். இதில் ஊடகங்கள் வகிக்கும் பங்கு என்னவாக இருக்கிறது? சாதி, குழுமனப்பான்மை, அரசியல் அதிகாரம் எல்லாம் சேர்ந்து படைப்புகளைப் பலி கேட்கின்றன. அாடக வெளிச்சம், ஓரிரவில் உலக மகாப்புகழ் பெற்ற எழுத்தாளர் என்ற முத்திரை.. இப்படியாக கழுத்தில் அலங்காரமாகத் தொங்கவிடப்படும் மாலைகள்.. இதற்கான சமரசங்களில் எழுத்துகள் தன்னை மாய்த்துக் கொள்கின்றன. இந்தப் போராட்டத்தில் காயங்களுடனும், நிராகரிப்புகளுடனும் பயணிக்க வேண்டி இருக்கிறது. எதையும் கள்ள மவுனத்தில் கடந்துப் போய்விடுவதன் மூலம் அவர்களுடன் சமரசம் செய்யாத எழுத்தாளர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். இருட்டடிப்புகள் தொடர்கின்றன.

🔥

மனித உறவுகளுக்கென்று நடைமுறை வாழ்வு சார்ந்த, தொர்த்த வாழ்வு சார்ந்த ஒரு வேல்யூ இருக்கிறது. இவை மறைத்து நிற்கும் எத்தனை பொய்மைகளுக்கிடையிலும் உண்மையை காணும் திறன் ஒரு படைப்பாளிக்கு தெரிந்தோ, தெரியாமலோ ஒரு கட்டாயமான தேவையாக இருக்க வேண்டும். அது அவனையும் அறியாமல் நிகழ்ந்தால் அது அவன் அறிந்து நிகழ்வதை விட சிறப்பானது. இதை எப்படிப்பட்ட கூற்றாக பார்க்கிறீர்கள் ? இது ஒரு படைப்பாளிக்கு தவிர்க்க முடியாத முக்கியமானதொரு தேவையென சொல்ல முடியுமா? இதனால் அவனுக்கு அகமும், புறமும் போராட்டங்கள் ஏற்படலாம்.


சமூக அறம் என்பதை குடும்பம் சார்ந்த ஆண் பெண் உறவு நிலையில் முழுக்கவும் ஒரு பெண் மீது சுமத்தப்பட்டிருப்பாதாகவே உணர்கிறேன். அதிலும் குறிப்பாக பெண்ணின் உடல் சார்ந்தப் பார்வைகள், ஆண் மைய சமூகத்தின் இக்கட்டுப்பாடுகள் சொத்துடமையைப் பாதுகாக்கின்றன என்பதையும் விட சாதிய கட்டமைப்பை இறுக்கம் தளராமல் வைத்திருக்கின்றன. இயற்கையான எதிர்பாலின சுவர்ச்சியும், ஈர்ப்பும் கட்டுப்பாடுக்குள் அடங்க முடியாமல் திமிறி, அது வெளியில் தெரியும் போது, பெண் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அகமனப்போராட்டத்தில் சிக்கி சிதைவுறுகிறாள். இந்த நிலையை எந்தளவுக்கு ஒரு பெண்ணால் தன் படைப்புகளில் வெளிப்படுத்த முடியும் என்பதும், அவள் எம்மாதிரியான போர்வைகளைப் போர்த்திக் கொள்கிறாள் என்பதும், படைப்பாளியின் முகமாக மாறுகிறது. தி ஜானகிராமன் தன் எழுத்துக்களை பற்றி சொல்லும்போது ஒரு செவ்வியில் சொன்னார்

 " எனக்கே    எனக்கு என்று சொல்லுகிற எழுத்தைப்பற்றித்தான் இங்கு சொல்ல வேண்டும். அதுதான் மரியாதை. அதுதான் உயர்வு. அதுதான் கௌரவம். எனக்கே எனக்காக எழுதுவதைப்பற்றி என்ன சொல்லமுடியும்? விஸ்தாரமாகச் சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுதவேண்டும் போலிருக்கிறது. எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதில் இருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்லவேண்டும் என்றால் பிறர் மனைவியை காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு எல்லாம் அதில் இருக்கின்றன. கண்ய நஷ்டம், பாபம், பாபம் என்று மூலையில் முடங்கியவாறே கையாலாகாமல் முணுமுணுக்கிற மனசாட்சி, சந்தி சிரிப்பு, சந்தேகக்கண்கள் இத்தனையையும் பொருட்படுத்தாமல் முன்னேறுகிற பிடிவாதம், வெறி அதாவது ஆனந்தம் எல்லாம் அதில் இருக்கின்றன. உங்களுக்காக எழுதும் பொழுதோ, உங்களுக்கும் எனக்கும் எழுதும்போதோ மனைவியைக் காதலிக்கிற நல்லபிள்ளைத்தனமும் நிர்பந்தமும்தான் கண்ணுக்குத் தெரிகின்றன. பல சமயங்களில் நல்லபிள்ளையாகத்தான் காலம் தள்ளவேண்டியிருக்கிறது. மனிதவாழ்க்கையின் நெருக்கடிகளும் பிடுங்கல்களும் இந்த அப்படிச் நிர்பந்தங்கள் செய்துவிடுகின்றன. இல்லாதவர்களைக் கண்டும் பொறாமைப்படுகிறேன்"

,🔥

ஒரு படைப்பாளிக்கு தேடல் என்பது என்ன? அது ஒரு ஆள்மீக தேடலாக இருக்க முடியாது. தத்துவத்தேடலாகவும் இருக்க முடியாது. இரண்டுமே திட்டவட்டமான அணுகுமுறையோடு, திட்டவட்டமான வழிமுறையோடு இருப்பவை. ஒரு இலக்கிய படைப்பாளி இவ்விரண்டிலிருந்தும் எப்படி ஒரு வேறுபட்ட தேடலை கொண்டிருக்கிறான்? ஒரு படைப்பாளிக்கு தேடல் என்பது கட்டாயமானதா?


ஆன்மீக தேடலும், தத்துவத் தேடலும் இரண்டுமே திட்டவட்டமான அணுகுமுறையோடு இருப்பவை என்ற கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. ராமகிருஷ்ணர் விவேகானந்தர் சித்தர்கள் என்று ஆரம்பித்து ஓஷோ வரை ஆன்மீகத் தேடலும், தத்துவத்தேடலும் தொடர் பயணத்தில் இருக்கின்றன. எதுவும் முழுமையானதோ முற்றுப்பெற்றதோ இல்லை. அதனால் தான் ஒன்றின் போதாமையை இன்னொன்று வந்து இட்டு நிரப்ப நினைக்கிறது. படைப்பாளி இதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு படைப்பு மனமும் தன் சுயம் தேடலில் ஆரம்பித்து பயணித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கான புறக்காரணிகள் சில தருணங்களில் தேடலின் விரியத்தையும் பாதைகளையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. இது இப்படித்தான் இருக்கும் என்று எதையும் உடனே ஏற்றுக்கொண்டு கடந்துவிடும் மனநிலை ஒரு படைப்பாளிக்கு இருப்பதில்லை. அதனால் தான் அவன் அதன் காரணிகளைத் தேடுகிறான். அது அகம் சார்ந்தும் புறம் சார்ந்தும் தேடல் தொடர்கிறது. படைப்பாளியின் தேடல் தொடரவில்லை என்றால் அவன் எழுதுவதை நிறுத்திவிட்டு பழைய நினைவுகளை மட்டும் அசைப்போட்டுக்கொண்டு மேடைகளை மட்டும் அலங்கரித்துக் கொள்ளலாம்.

🔥

ஒரு படைப்பாளியை லௌகீகத்தளத்தில் வேரூன்றியிருந்து படைப்பாக்கத்தின் போது இடைவிடாமல் ஆன்மீகத்தளத்திற்கு


எத்தனிப்பவன் என்று சொல்லலாமா? லௌகீக தளத்திற்கும், ஆன்மீக தளத்திற்கும் இடையே போராடுபவனை போல. ஆன்மீகத்தளம் என்பது ஒரு படைப்பாளிக்கு லௌகீக உள்தைமாகவும் இருக்கலாம்...


இருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம். சங்க இலக்கியத்தில் லௌகீகம் உன்னதமாக இருக்கும். படைப்புகளைப் பார்க்கிறோம். ஆன்மீகத்தளம் என்பதை சொர்க்க, நரக புனைவுகள் தாண்டியதாகவே நீங்கள் கையாளுவதாக நினைக்கிறேன்.

🔥

எழுதப்போகும் ஒரு படைப்பைப்பற்றி முன்னரே தெளிவான, நிறைவான திட்டமிடலை கொண்ட வரைபடத்தோடு ஒரு படைப்பாளி இருக்கும் போது அப்படைப்பின் எல்லைகளும், சாத்தியங்களும் குறுகுகிறதா? ஒரு படைப்பாக்கத்தின் போது அவனை ஒரு முன்பின் தெரியாத வாழ்வின் வழியாக நிகழும், புத்தம்புதிய மொழிவழி பயணத்திற்கு எது ஆட்படுத்துகிறதோ அதுதான் படைப்பாற்றல் என்பதா?


கவிதை மட்டுமே திட்டமிடலுக்குள் சிக்குவதில்லை. ஆனால் சிறுகதையாகட்டும் அதிலும் குறிப்பாக நாவலாகட்டும். ஒரு வரைபடத்தை படைப்பு மனம் உருவாக்கிக் கொள்கிறது. ஆனால் அந்த வரைபடம் என்பது எந்த ஓர் அளவுகோலையும் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. சில நேரங்களில் திருப்பங்கள் கூட, படைப்புத்தளம் உருவாகும் போது பளிச்சென வந்துவிடுகிறது. மொழி ஆளுமை நிலையில் ஒரு சிறிய ஒற்றைச் சொல் கூட இப்படியான வித்தைகளைச் செய்துவிடும். புத்தம் புதிய மொழி வழி பயணம் அறிந்தும் அறியாமலும் நடக்கிறது. ஆனால் முன்பின் தெரியாத வாழ்வின் வழியாக அது நிகழ்வதில்லை.

🔥

ஏன் மனிதனுக்கு பிறரது எண்ணங்களின் வழியாக மொழியின் வழியாக பின்தொடர்ந்து சென்று ஒரு கருத்தையோ, ஒரு உண்மையையோ புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது? பிறரது எழுத்தை கண்டு பிரமிப்பளின், எழுத்தை கண்டு அதே பிறர் கண்டு பிரமிப்பது போல, மனப்பாடம் செய்து தக்கவைப்பது கடினம், புரிந்து படித்தால் தக்கவைப்பது எளிது என்பதை போல. அங்கு என்ன செயல்படுகிறது? படைப்பாக்க சுதந்திரம் என்பது என்ன?


மொழியின் வழியாக சொல்கிற போது அதே மொழி வாசிப்பனுபவமாக மாறும் இட்த்தில் வாசகனின் மொழி, அனுபவ வீச்சுடனும், அனுபவத்துடனும் தொடர்புடையதாகிறது. மகாகவி பாரதி சுவிதைகளை எடுத்துக் கொள்வோமே. 10 வயதில் வாசிக்கும் போது உணர்ந்ததையா பதின்ம வயதில் உணர்கிறோம்? அனுபவங்களின் ஊடாக மொழி இன்னொரு தளத்திற்கு ஒவ்வொரு வாசகனையும் அழைத்து செல்கிறது. இதனால தான் மொழி வழியாக காணும் படைப்புகள் பன்முகத் தன்மையுடன் வாசகனின் கைப்பிடிக்குள் அடங்கி விடாமல் விசுவரூபம் எடுக்கின்றன. நேற்று புரியாதது இன்று புரிகிறது. இன்று புரியாதது நாளை புரியும். புரியலாம். புரியாமலும் போய்விடலாம். இது என்னவோ நவீன இலக்கியத்திற்கான கூறாக நினைக்க வேண்டாம். மொழிவழி எண்ணங்கள் வெளிப்படத் தொடங்கிய காலத்திலிருந்து இருப்பதாகவே கருத வேண்டும். அதனால் தான் உரையாசிரியர்கள் உருவானார்கள்.

🔥

இலக்கிய படைப்பை அப்படைப்பிற்கு வெளியேயிருந்து அணுகும் ஒருவனுக்கு அவ்விலக்கிய


கோடுகள் இதழ் எண்: 13, 1.10.2019-15.11.2019எனக்கு என்று சொல்லுகிற எழுத்தைப்பற்றித்தான் இங்கு சொல்ல வேண்டும். அதுதான் மரியாதை. அதுதான் உயர்வு. அதுதான் கௌரவம். எனக்கே எனக்காக எழுதுவதைப்பற்றி என்ன சொல்லமுடியும்? விஸ்தாரமாகச் சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுதவேண்டும் போலிருக்கிறது. எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதில் இருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்லவேண்டும் என்றால் பிறர் மனைவியை காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு எல்லாம் அதில் இருக்கின்றன. கண்ய நஷ்டம், பாபம், பாபம் என்று மூலையில் முடங்கியவாறே கையாலாகாமல் முணுமுணுக்கிற மனசாட்சி, சந்தி சிரிப்பு, சந்தேகக்கண்கள் இத்தனையையும் பொருட்படுத்தாமல் முன்னேறுகிற பிடிவாதம், வெறி அதாவது ஆனந்தம் எல்லாம் அதில் இருக்கின்றன. உங்களுக்காக எழுதும் பொழுதோ, உங்களுக்கும் எனக்கும் எழுதும்போதோ மனைவியைக் காதலிக்கிற நல்லபிள்ளைத்தனமும் நிர்பந்தமும்தான் கண்ணுக்குத் தெரிகின்றன. பல சமயங்களில் நல்லபிள்ளையாகத்தான் காலம் தள்ளவேண்டியிருக்கிறது. மனிதவாழ்க்கையின் நெருக்கடிகளும் பிடுங்கல்களும் இந்த அப்படிச் நிர்பந்தங்கள் செய்துவிடுகின்றன. இல்லாதவர்களைக் கண்டும் பொறாமைப்படுகிறேன்"


ஒரு படைப்பாளிக்கு தேடல் என்பது என்ன? அது ஒரு ஆள்மீக தேடலாக இருக்க முடியாது. தத்துவத்தேடலாகவும் இருக்க முடியாது. இரண்டுமே திட்டவட்டமான அணுகுமுறையோடு, திட்டவட்டமான வழிமுறையோடு இருப்பவை. ஒரு இலக்கிய படைப்பாளி இவ்விரண்டிலிருந்தும் எப்படி ஒரு வேறுபட்ட தேடலை கொண்டிருக்கிறான்? ஒரு படைப்பாளிக்கு தேடல் என்பது கட்டாயமானதா?


ஆன்மீக தேடலும், தத்துவத் தேடலும் இரண்டுமே திட்டவட்டமான அணுகுமுறையோடு இருப்பவை என்ற கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. ராமகிருஷ்ணர் விவேகானந்தர் சித்தர்கள் என்று ஆரம்பித்து ஓஷோ வரை ஆன்மீகத் தேடலும், தத்துவத்தேடலும் தொடர் பயணத்தில் இருக்கின்றன. எதுவும் முழுமையானதோ முற்றுப்பெற்றதோ இல்லை. அதனால் தான் ஒன்றின் போதாமையை இன்னொன்று வந்து இட்டு நிரப்ப நினைக்கிறது. படைப்பாளி இதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு படைப்பு மனமும் தன் சுயம் தேடலில் ஆரம்பித்து பயணித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கான புறக்காரணிகள் சில தருணங்களில் தேடலின் விரியத்தையும் பாதைகளையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. இது இப்படித்தான் இருக்கும் என்று எதையும் உடனே ஏற்றுக்கொண்டு கடந்துவிடும் மனநிலை ஒரு படைப்பாளிக்கு இருப்பதில்லை. அதனால் தான் அவன் அதன் காரணிகளைத் தேடுகிறான். அது அகம் சார்ந்தும் புறம் சார்ந்தும் தேடல் தொடர்கிறது. படைப்பாளியின் தேடல் தொடரவில்லை என்றால் அவன் எழுதுவதை நிறுத்திவிட்டு பழைய நினைவுகளை மட்டும் அசைப்போட்டுக்கொண்டு மேடைகளை மட்டும் அலங்கரித்துக் கொள்ளலாம்.


ஒரு படைப்பாளியை லௌகீகத்தளத்தில் வேரூன்றியிருந்து படைப்பாக்கத்தின் போது இடைவிடாமல் ஆன்மீகத்தளத்திற்கு


எத்தனிப்பவன் என்று சொல்லலாமா? லௌகீக தளத்திற்கும், ஆன்மீக தளத்திற்கும் இடையே போராடுபவனை போல. ஆன்மீகத்தளம் என்பது ஒரு படைப்பாளிக்கு லௌகீக உள்தைமாகவும் இருக்கலாம்...


இருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம். சங்க இலக்கியத்தில் லௌகீகம் உன்னதமாக இருக்கும். படைப்புகளைப் பார்க்கிறோம். ஆன்மீகத்தளம் என்பதை சொர்க்க, நரக புனைவுகள் தாண்டியதாகவே நீங்கள் கையாளுவதாக நினைக்கிறேன்.


எழுதப்போகும் ஒரு படைப்பைப்பற்றி முன்னரே தெளிவான, நிறைவான திட்டமிடலை கொண்ட வரைபடத்தோடு ஒரு படைப்பாளி இருக்கும் போது அப்படைப்பின் எல்லைகளும், சாத்தியங்களும் குறுகுகிறதா? ஒரு படைப்பாக்கத்தின் போது அவனை ஒரு முன்பின் தெரியாத வாழ்வின் வழியாக நிகழும், புத்தம்புதிய மொழிவழி பயணத்திற்கு எது ஆட்படுத்துகிறதோ அதுதான் படைப்பாற்றல் என்பதா?


கவிதை மட்டுமே திட்டமிடலுக்குள் சிக்குவதில்லை. ஆனால் சிறுகதையாகட்டும் அதிலும் குறிப்பாக நாவலாகட்டும். ஒரு வரைபடத்தை படைப்பு மனம் உருவாக்கிக் கொள்கிறது. ஆனால் அந்த வரைபடம் என்பது எந்த ஓர் அளவுகோலையும் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. சில நேரங்களில் திருப்பங்கள் கூட, படைப்புத்தளம் உருவாகும் போது பளிச்சென வந்துவிடுகிறது. மொழி ஆளுமை நிலையில் ஒரு சிறிய ஒற்றைச் சொல் கூட இப்படியான வித்தைகளைச் செய்துவிடும். புத்தம் புதிய மொழி வழி பயணம் அறிந்தும் அறியாமலும் நடக்கிறது. ஆனால் முன்பின் தெரியாத வாழ்வின் வழியாக அது நிகழ்வதில்லை.


ஏன் மனிதனுக்கு பிறரது எண்ணங்களின் வழியாக மொழியின் வழியாக பின்தொடர்ந்து சென்று ஒரு கருத்தையோ, ஒரு உண்மையையோ புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது? பிறரது எழுத்தை கண்டு பிரமிப்பளின், எழுத்தை கண்டு அதே பிறர் கண்டு பிரமிப்பது போல, மனப்பாடம் செய்து தக்கவைப்பது கடினம், புரிந்து படித்தால் தக்கவைப்பது எளிது என்பதை போல. அங்கு என்ன செயல்படுகிறது? படைப்பாக்க சுதந்திரம் என்பது என்ன?


மொழியின் வழியாக சொல்கிற போது அதே மொழி வாசிப்பனுபவமாக மாறும் இட்த்தில் வாசகனின் மொழி, அனுபவ வீச்சுடனும், அனுபவத்துடனும் தொடர்புடையதாகிறது. மகாகவி பாரதி சுவிதைகளை எடுத்துக் கொள்வோமே. 10 வயதில் வாசிக்கும் போது உணர்ந்ததையா பதின்ம வயதில் உணர்கிறோம்? அனுபவங்களின் ஊடாக மொழி இன்னொரு தளத்திற்கு ஒவ்வொரு வாசகனையும் அழைத்து செல்கிறது. இதனால தான் மொழி வழியாக காணும் படைப்புகள் பன்முகத் தன்மையுடன் வாசகனின் கைப்பிடிக்குள் அடங்கி விடாமல் விசுவரூபம் எடுக்கின்றன. நேற்று புரியாதது இன்று புரிகிறது. இன்று புரியாதது நாளை புரியும். புரியலாம். புரியாமலும் போய்விடலாம். இது என்னவோ நவீன இலக்கியத்திற்கான கூறாக நினைக்க வேண்டாம். மொழிவழி எண்ணங்கள் வெளிப்படத் தொடங்கிய காலத்திலிருந்தே இருப்பதாக கருத வேண்டும்.

அதனால்தான் உரையாசிரியர்கள் உருவானார்கள்.

🔥


ஒரு இலக்கியப் படைப்பை , அப்படைப்பிற்கு வெளியிலிருந்து அணுகும் ஒருவனுக்கு அவ்விலக்கிய


படைப்பின் மதிப்புவாய்ந்த, பொருட்படுத்தத்தக்க கூறு என்ன? ஏதோ ஒன்றை காட்டி இலக்கியத்தின் பக்கமாக ஒருவனை திருப்ப முடியுமானால் அது என்னவாக இருக்க முடியும்? திரும்பவில்லையெனில் அதை ஒரு இழப்பு என்று எப்படி கூறுவது? அதை வெறும் ஆர்வத்தின் கைகளில் ஒப்படைத்து விடலாமா?


இதை தீர்மானிப்பது இலக்கிய படைப்பு அல்ல. இதை தீர்மானிப்பு வாசக அனுபவம். ஜெயகாந்தனை சிலருக்கு பிடிக்கும். தி.ஜாவை சிலருக்குப் பிடிக்கும் ஜெமோவை வாசிப்பவர்களுக்கு ஜெ.மோ நான் ஆகச்சிறந்த எழுத்தாளர். இந்த படைப்புலகத்தை தீர்மானிப்பது வாசகனின் ஜனநாயக உரிமையாக இருக்க வேண்டும். கல்கியை வாசித்துவிட்டு தான் லா.ச.ராவை வாசிக்க ஆரம்பிக்கிறோம். இதன் ஆரம்பம் ஆர்வத்தின் கைகளில் இருந்தாலும் அதன்பின் ஆர்வம் தேடலாகி இன்னொரு மாற்றம் பெறுகிறது. வாசகனுக்கும் படைப்பாளிக்கும். இருவருக்குமே. LALIGSSTLE/TS


படைப்பாக்கத்தில் கவிதைக்கும், கதைக்கும், நாவலுக்குமான தனியாக பிரித்தறிந்து பார்க்கக்கூடிய வேறுபாடு என்ன? கவிஞனின் மனம் பிரத்யேகமான முறையில் செயல்படுகிறதா? ஒரு கதையையோ, நாவலையோ விமர்சிக்க அணுகுவதை போல ஒரு சுவிதையை அணுகுவது கடினமாக இருப்பது தெனால்? அங்கு தர்க்கங்களுக்கான சாத்தியம் குறைகிறதா?


கவிதை முழுக்கவும் உணர்வுநிலை சார்ந்த கொதிநிலையின் இன்னொரு வடிவம். அதுவே கவிதைக்கு பன்முகத்தன்மையை கொடுக்கிறது. அதனால் தான் கவிதையை அணுகுவது கடினமாக இருக்கிறது. கவிதை ஒரு மின்னலைப் போல, பட்டென்று கண்களில் திரண்டு விடும் கண்ணீரைப் போல. கவிதை ப்ரியமானவனைக் கண்டவுடன் தோள் அணைத்து முத்தமிட நினைத்து அது இயலாமல் பார்வைகளில் பட்டுத் தெறிக்கும் மொழியின் கீற்று போல தெருவோரத்தில் அழும் குழந்தையின் கண்ணீர் அடிவயிற்றை பிசையும் வலியாக மாறுவது


படைப்பாற்றல் / கற்பனை வளம் / மொழியில் புலமை மற்றும் மொழியை கையாளும் விதம் / வேறுபட்ட பரந்துபட்ட வாழ்வனுபவங்கள் / இடைவிடாத இலக்கிய அறிமுகம் மற்றும் இலக்கிய வாசிப்பு / நடுநிலை மற்றும் தர்க்க அறிவு / சொந்த பண்பாட்டு கலாச்சாரத்தில் வேரூன்றி இருத்தல் / சுயதேடல், கேள்விகள், உரையாடல், அவதானிக்கும் திறன், தேர்ந்தெடுக்கும் திறன், ஞாபகத்திறன் / ஆன்மீக அறிவு / மன ஆரோக்கியம் இவற்றில் அதன் வேறுபட்ட முக்கியத்துவம் அடிப்படையில் வரிசைப்படுத்தச்சொன்னால் எப்படி வரிசைப்படுத்துவீர்கள்? நீக்க வேண்டியதும், சேர்க்க வேண்டியது என்ன?


ஆரோக்கியம் என்பதை நீக்கிவிடுவேன். வேண்டுமானால் மனப்பிறழ்வு என்று இச்சமூகம் சொல்வதை சேர்க்க வேண்டி இருக்கும்!! வரிசைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். வரிசைப்படுத்துவதே படைப்புக்கும், படைப்பாளிக்கும் ஒவ்வாதவை.


ஒரு படைப்பாளியையும், படைப்பாற்றலையும் தற்செயலான சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தான் முடிவு செய்கிறதா? அல்லது படைப்பாளியும், படைப்பாற்றலும் கடவுளின் அருளைப்போல வருகின்றனவா? சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான் என்றால் சகல வசதி வாய்ப்புகளும் அளிக்கப்படுமானால் வேண்டுமாணலும் யார் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள


முடியுமா? கடவுளின் அருள் என்றால் அந்த அருள் தவறவிடப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? அதாவது அந்த அருள் இருந்து ஒருவன் படைப்பாளியாக பரிமளிக்க முடியாமல் போக முடியுமா? அல்லது எவரெல்லாம் படைப்பாளியோ அவருக்கு அது இருக்கிறது எனக்கொள்ளலாமா? அதுதான் அளவுகோல் என்பதை போல.


காளிதாசனுக்கு காளி தேவதை தாம்பூலம் கொடுத்த கதை எல்லாம் படைப்புக்கும் படைப்பாற்றலுக்கும் எவ்வகையிலும் சம்பந்தமில்லாதவை. கடவுள் அருள் போரிலக்கியம் சார்ந்த எழுத்துகளை சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தீர்மானிக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தியாதிகளுடன் எனக்கு உடன்பாடில்லை.


படைப்புகள் என்று வந்து விட்டால் சிலவற்றை நிராகரிக்க வேண்டும். சிலவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். சிலவற்றை கொண்டாட வேண்டும். சிலவற்றை குப்பை என ஒதுக்க வேண்டும். சிலவற்றை வளர்த்தெடுக்க வேண்டும். சிலவற்றை அவற்றின் இடத்தை ஒன்றன் பின் ஒன்றாக உறுதிசெய்ய வேண்டும். தெற்கு முதல் முக்கியத்துவம் கொடுப்பது, எதற்கு இரண்டாம் முக்கியத்துவம் கொடுப்பது என்பது போல. இதை அந்தரங்கமாக நீங்கள் எப்படி செய்கிறீர்கள்? அல்லது இது ஒரு சிக்கலுக்குரியதும், பிரச்சனைக்குரியதும் என விட்டுவிடலாமா?


பொதுவாக கட்டுரையை எழுத வேண்டிய செய்திகளைக் கூட சிலர் கவிதைகளாக்கி அப்படி கவிதையாக எழுதினால் தான் இலக்கிய அந்தஸ்து பெறும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டிருப்பதைப் பார்க்கிறேன். அறுபது எழுபது வயதில் பதின்ம வயதின் காதல் கவிதைகளை எழுதுபவர்களை எப்படி யாசிப்பது? அந்த படைப்பாளி கடந்து வந்த அனுபவம் வயது கற்பித்தவை எதுவுமே இல்லாத எழுத்துகள் என்னளவில் காகிதப்பூக்கள் தான். என்னால் அதை எல்லாம் என் வாசிப்புக்கு எடுத்துச் செல்ல முடிவதில்லை. இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. இருக்கின்ற 24 மணி நேரத்தில் எதை வாசிக்க வேண்டும். எதை விட்டுவிடலாம் என்பதை அவரவர் அனுபவம் தான் தீர்மானிக்கிறது. நானும் விதிவிலக்கல்ல. இதுவும் ஒவ்வொருவருக்கும் அந்தரங்கமானது தான், அதை அந்தரங்கமாக செய்து கொண்டிப்பது தான் நல்லது.



நன்றி: கோடுகள் இதழ் 13

13/10/2019 - -15/11/2019ட

#புதியமாதவிநேர்காணல் 

#புதியமாதவிபடைப்புகள் 

#பெண்ணியம்புதியமாதவி

Sunday, January 18, 2026

பெண் எழுத்து - பெருவெளி




பெண்களுக்கு எழுதுவதற்கு என்ன இருக்கிறது?

கைப்பிடித்த கணவனின் பிரதாபங்களை எழுதுவதைத் தவிர.

 காலை முதல் இரவு வரை அவள் வாழும் சமையலறையின் சமையல் குறிப்புகளை பெண்கள் எழுதலாம். குழந்தை வளர்ப்பு எழுதுவது தாய்மையின் வரப்பிரசாதம். நவீன நாகரீகப் பெண்மணியா.., அப்படியானால், அவள்

அழகுக்குறிப்புகளை எழுதலாம். ஓய்வான நேரம் வாய்த்தால் உங்கள் பூ பின்னல் கலைகளைப் பதிவிடலாம். உங்கள் கலை உள்ளத்தை வெளிப்படுத்த கோலம் வரையலாம். இப்படியாக பெண்கள் எழுதலாம். இப்படியாகத்தான் பெண்கள் எழுத வேண்டும் என்பதே இன்றும் கூட “பெண்கள் சிறப்பிதழ்கள்” மற்றும் ‘மங்கையர் மாத இதழ்கள்’ களின் அடிப்படை அம்சங்கள். இதைத்தாண்டி ஆண்டுக்கு ஒருமுறை வந்துப்போகும் மகளிர் தினத்தில் (மார்ச் 08) பெண்களின் உரிமைகள் என்று முழங்கி தொண்டை வறண்டு மீண்டும் பழைய வாழ்க்கைக்குள் பத்திரமாக ஒதுங்கிவிடும் பெண்ணுலகம். .

 பெண்கள் சுயசரிதைகள் எழுதினால் கூட அதில் எழுதுவதற்கு எதுவுமில்லை. அதை ஒரு ரிவென்யு ஸ்டாம்பின் பின்பக்கத்தில் எழுதிவிடலாம் என்றுதானே ஆணுல அறிவு ஜீவிகள் சொல்லி இருக்கிறார்கள். அம்ருதா ப்ரீதமின் சுயசரிதைக்கு ரிவென்யு ஸ்டாம்ப் என்று குஷ்வந்த் சிங் ‘நக்கலாக ‘ சொன்னதையே தலைப்பாக்கியதை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியுமா என்ன?

 ஆனால், இம்மாதிரியான குறுகலான பாதைகளில் பயணித்தாலும் பெண்களின் பார்வைகள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடங்கிவிடவில்லை.

சன்னல் கம்பிகளின் ஊடாகத் தெரியும் வானத்தின் சிறியத் துண்டுகளும் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்பதை அறிந்தவள் பெண். அந்தச் சின்னச் சின்ன துண்டுகளை ஒன்றாக்கி விரித்து பார்க்கும்போது நாம் காணும் பெண்ணுலகம் அண்டவெளியை சிறியதாக்கிவிடுகிறது. ‘எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்’ பெண்ணிய வாசிப்பு கட்டுரைகள் .. இந்த அசாதாரணமான பெண்வெளியை அவர்களின் எழுத்துகளின் வழியாக அடையாளம் காட்டி இருக்கிறது. பேராசிரியர்.அ. ராமசாமி அவர்கள் , பெண்களின் சிறுகதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு பெண்ணியப் பெருவெளியை ஒரு கோட்டோவியாமாக வரைந்திருக்கிறார். இதில் பிரபலங்கள் புதியவர்கள் என்ற அளவுகோல்களை அவர் முற்றிலும் விலக்கி வைத்திருப்பது இக்கட்டுரை தொகுப்பின் தனித்துவம்.

 பெண்கள் எழுதுவதால் அவை பெண்ணிய சிறுகதைகளா, தலித்துகள் எழுதுவதால் அவை தலித்தியமா என்ற விவாதங்களுக்கு பேராசிரியர் தன் தன் முன்னுரையில் ஒரு வகுப்பெடுத்துவிட்டுதான் நகர்ந்திருக்கிறார்.

“பொதுச்சொல் உணர்த்த நினைப்பது எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடிய பேருண்மையை. ஆனால் சிறப்பு சொற்கள் உணர்த்துவது அறிதலின்தொடக்கம். வேற்றுமையைக் கண்டறிவது மூலமே சிறப்புச் சொற்கள் உருவாகின்றன “ (பக் 20) என்று வகுப்பு எடுக்கிறார் பேராசிரியர்.

ஓளவையை ஓர் அறிவாளியாக காட்டும் எழுத்துகள் ஒளவை ஒரு பெண் என்பதையும் காட்டுகின்றன என்று சிறந்த எடுத்துக்காட்டுகளுடன் தன் பெண்வாசிப்பு தளத்தை நகர்த்தி இருக்கிறார். பேராசிரியரின் இந்த வகுப்பு நேரம் இக்கட்டுரைகளின் ஊடாக பயணிக்கும் புதிய வாசகர்களுக்கு தேவையானதாக இருக்கிறது. சில தெளிவுகளுடன் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துவிட முடிகிறது.

 இக்கட்டுரைகள் 26 பெண் எழுத்தாளர்களின் சிறுகதை வடிவத்தை எடுத்துக் கொண்டு கதைகளை கோட்பாட்டு ரீதியாகவும் கதையின் உள்ளடக்கத்தில் பயணிக்கும் பெண் கதாப்பாத்திரங்களின் வழியாகவும் என்று இரண்டு வகையிலும் எழுதப்பட்டிருப்பது இதுவரை எழுதப்பட்ட பெண் எழுத்துகளின் பக்கங்களிலிர்ந்து இக்கட்டுரைகளை தனித்துவப்படுத்தும் இன்னொரு முக்கியமான அம்சமாகும். சமகால அரசியலுடன் கோட்பாடு ரீதியான புரிதலையும் ஒவ்வொரு எழுத்தாளர்களின் ஒரு தனி சிறுகதையை மட்டுமே எடுத்துக் கொண்டு கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அதிலும் எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த சிறுகதைகளை எடுத்துக்கொள்ளாமல், பேராசிரியர் ஒவ்வொரு எழுத்தாளரின் ஒரு சிறுகதையை மட்டும் எடுத்துக்கொண்டு அதைக் கோட்பாட்டு ரீதியாக அணுகி இருப்பதால் கட்டுரை தெளிவான புரிதலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் , அவர் எடுத்துக்கொண்ட 26 பெண் எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த படைப்புகளுடன் கட்டுரையாளருக்கு இருக்கும் வாசிப்பு அனுபவத்தையும் இக்கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன.

 டாக்டர் திரிபுரசுந்தரி என்ற எழுத்தாளர் லட்சுமியின் ‘ ஏனிந்த வேகம்’ சிறுகதையை எடுத்துக் கொண்ட கட்டுரையில் ‘ லட்சுமியின் வாழ்க்கையை அவர் புனைகதைகளுக்குள் தேடினால் வாசிப்பவர்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே. ஆனால் முடிவு எடுத்தல், தனித்து வாழ்தல், சார்பற்ற வாழ்க்கைக்கு பெண்கள் தயாராதல் போன்றவற்றை முன்மொழியும் கதைகளின் வழியாகத் தன்னைக் கதைகளுக்குள் கொண்டுவந்தவர் அவர்”

(பக் 41) . இப்படியாக பல கட்டுரைகளில் அந்தக் குறிப்பிட்ட எழுத்தாளர் குறித்த ஒரு கோட்டோவியத்தை வாசகரின் முன் வைத்துச் செல்கிறார் பேராசிரியர். இதில் அவருக்கு இருக்கும் தெளிவு அவரின் ஆழ்ந்த வாசிப்பு பின்புலத்திலிருந்து வெளிவந்திருக்கிறது. ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒளிவட்டங்களிலிருந்து விலகி அவரவர் எழுத்துகளின் தனித்துவத்தைக் கண்டடையும் முயற்சியாக வெளிப்பட்டிருக்கிறது. இனி எதிர்காலத்தில், இலக்கிய உலகமும் பெண்ணியத் தளமும் , இக்கட்டுரைகளின் இந்த கோட்டோவியங்களை அக்குறிப்பிட்ட எழுத்தாளரின் படைப்புலக அடையாளமாக அடிக்கோடிட்டு காட்ட முடியும்.

 சிறுகதை வடிவம் என்பது ஓர் உணர்வு நிலை, அதன் வெளிப்பாடு என்ற கட்டுமான நெருக்கடி கொண்டதுதான். எனினும் ஒரு தேர்ந்த படைப்பாளர் இந்த நெருக்கடிகளைத் தாண்டி, கதை மாந்தரின் இரண்டு மூன்று நிலைகளையும் உணர்வுகளையும் ஒரே கதைக்குள் கொண்டுவர முடியும். எழுத்தாளர் திலகவதியின் ‘போன்சாய் பெண்கள்” சிறுகதை இந்த நெருக்கடியை அனாயசமாக கடந்து வந்திருக்கிறது என்பதை பதிவு செய்திருப்பதன் மூலம் பெண் எழுத்துகள் சிறுகதை வடிவத்தில் எம்மாதிரியான சோதனை முயற்சிகளையும் செய்திருக்கின்றன என்பதை முன்வைக்கிறது ‘ஒடுக்குதலின் அழகியலும் விடுதலையும் ‘ (பக் 74) என்ற கட்டுரை.

 பெண்ணிய வெளியில் இக்கட்டுரைகள் முன்வைக்கும் கலை வடிவமும் அரசியல் வடிவமும் முக்கியமானவை. ஒவ்வொரு கட்டுரையின் முன்பாதி விளக்கங்கள் கோட்பாட்டு ரீதியாகவும் சமகால அரசியல் ரீதியாகவும் பெண்ணியத்தை அணுகி இருக்கின்றன.

“நிகழ்காலத்தில் பெண்ணியம் எனும் கலைச்சொல் முழுமையான அரசியல் கலைச்சொல்லாக மாறிவிட்ட து. இப்படியொரு கலைச்சொல்லை உருவாக்கித் தங்களின் விடுதலை அரசியலைப் பேசுவதற்குப் பெண்ணிய இயக்கங்கள் கடந்து வந்த நடைமுறை தடைகளும் கருத்தியல் முரண்பாடுகளும் பற்பல. உடலியல், உளவியல், சமூகவியல் கூறுகள் ஒவ்வொன்றிலும் முன்வைக்கப்பட்ட விவாதங்களை வென்றே பெண்கள் கடந்து வந்துள்ளார்கள் “ (பக் 31) என்று பெண்ணியம் என்ற அரசியல் கலைச்சொல்லின் இயக்க வரலாற்றை எழுதிச் செல்கிறார்.

  காதலையும் காமத்தையும் பசலையாகவும் புலம்பலாகவும் கட்டமைத்த ஆண் எழுத்துகளிலிருந்து பெண் எழுத்துகள் முற்றிலும் வேறானவை. பெண்ணுடல் என்பது காமத்தின் கொள்கலன் மட்டுமல்ல. அது அவளுக்கான உடலரசியலாக இருந்ததையும் தாண்டி அவள் வாழும் நிலத்தின் சமகால அரசியலில் என்னமாதிரியான வினை புரிகிறது என்பதை ஈழவாணியின் ‘வெண்ணிறத்துணி’ சிறுகதையை எடுத்துக் கொண்டு எழுதியிருப்பது சிறப்பு.

 ஈழவாணியின் இக்குறிப்பிட்ட சிறுகதை பெண்ணுடல் மீது திணிக்கப்பட்டிருக்கும் பண்பாட்டு அரசியலை எடுத்துக்கொண்டு அதை அப்பெண்ணுடல் எம்மாதிரியான சமகால அரசியல் ஆயுதமாக கையாண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் முக்கியமான தளம் இக்கதை. இக்கதையைத் தெரிவு செய்திருப்பதன் மூலம் பெண்ணுடல் பெண்கதைகள் என்பதை தமிழ்ப்பெண்ணுடல் தமிழ்ப்பெண்களின் பண்பாடு கலாச்சாரம் இத்தியாதிகளை எளிதில் கடந்து பயணிக்கும் எழுத்தாக்கி, சமகால அரசியலில் பெண்வெளியின் மிக முக்கியமான புள்ளிகளை அடையாளம் காட்டுகிறது இக்கட்டுரை.

 இக்கட்டுரையின் அரசியல் களம் : இலங்கை., கதையை எழுதியவர் ஈழவாணி. கதையில் எழுதப்பட்ட பெண் சிங்களப்பெண். அவளும் அவள் முன்வைக்கும் அரசியலும் மொழி இன எல்லைகளைக் கடந்த பெண்ணுடலின் அரசியல்.

 நிர்மலி அவள் ஆர்மிக்காரனின் மனுஷி. ஆர்மிக்காரனின் மனுஷி என்பதால் இளசுகள் முதல் முதியவர்கள் வரை தள்ளி நின்றாலும் திமிரிக்கொண்டு திரியும் அந்த அரபுக்குதிரையை ரசிக்க அந்தக் கண்கள் தவறியதில்லை. சிங்களவர் கலாச்சாரப்படி திருமணம் முடிந்தப்பின் முதலிரவில் விரிக்கப்படும் வெள்ளைத்துணியில் ரத்தக்கசிவு இருக்க வேண்டும். அது அப்பெண்ணின் கன்னிமைத்தன்மையை உறுதிப்படுத்தும். இல்லை என்றால் அவள் திருமணத்திற்கு முன் உடலின் காமத்தை அனுபவித்தவளாகி, கற்பிழந்தவளாக கருதப்பட்டு, விலக்கி வைக்கப்படுவாள். இக்கதையில் நிர்மலியின் வெள்ளைத்துணியில் ரத்தக்கசிவு இல்லை. ஆனாலும் அவள் கணவன் கொடித்துவக்கு அவளை விலக்கி வைக்கவில்லை. கொடித்துவக்கு என்ற ஆணுடலின் அரசியல் என்னவாக இருக்கிறது. அதை நிர்மலி என்ற காமம் கொப்பளிக்கும் பெண், தன் பெண்ணுடலை அரசியலாக்கி எவ்வாறு எதிர்கொண்டாள் என்பதே அப்பெண்ணுடலில் கதை. இக்கதையின் அதிர்வலைகள் பெண்ணுடல் எழுதிய போர் அதிகாரம்.

 “ அவன் அடங்காத காமத்தோடு அவளைத் தீண்டி உச்சமடையும் தருணங்களில் எல்லாம் கற்பழித்து சீரழிக்கப்பட்ட இசைப்பிரியாவை பற்றி கேட்கத் தொடங்கினாள். இன்னும் சில கூட்டு புணர்ச்சியால் சீரழிக்கப்பட்டம் வன் காமப்புணர்வால் சாகடிக்கப்பட்ட பெண்களிற்கும் காரணமாக இருந்தவர்களில் நீயும் ஒருத்தன் தான் எனவும், எப்படி.. எந்த முறையில் இப்படியா.. இப்போது நீ என்னைப் புணர்வது போன்றா.. என்ற கேள்விகளை ஒவ்வொரு தொடுகையின் போது சத்தமிட்டு ஆவேசமாக கேட்கத் தொடங்கினாள்…..” (பக் 231)

  தேச மொழி இன அரசியலை பெண்ணுடல் வழியாக எழுதி அதிகாரம் எப்போதும் பெண்ணுடலுக்கு எதிராகவே செயல்படுகிறது என்ற நுண்ணரசியலையும் பெண்கள் எழுதுகிறார்கள் என்பதற்கு ஈழவாணியின் இக்கதை ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. “ ஒரு பெண்ணாக எனக்கு தேசமில்லை, ஒரு பெண்ணாக நான் தேசத்தை விரும்பவும் இல்லை. ஒரு பெண்ணாக என் தேசமே என் உலகம் “ என்ற வர்ஜீனியா வுல்ஃப் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

தேசம் இனம் மொழி போர் வெற்றி இப்படியாக அதிகார மையத்தை நோக்கி நகரும் அனைத்தும் பெண்ணுடல் எதிர்கொள்ளும் சவாலாகவே இருக்கின்றன.

 இந்தியாவிலிருந்து கு ப சேதுஅம்மாள், பாவை, லட்சுமி, ஆர், சூடாமணி, எம். ஏ. சுசிலா, ஜோதிர்லதா கிரிஜா, திலகவதி, ச.விசயலட்சுமி, பாமா, காவேரி, புதியமாதவி, அம்பை, உமாமகேஸ்வரி, கவிதா சொர்ணவல்லி, சந்திரா, தீபு ஹரி, இலங்கையிலிருந்து தமிழ்க்கவி, லறீனா, கறுப்பி சுமதி, தமிழ் நதி, மஜீதா, ஈழவாணி, பிரமிளா பிரதீபன், சிங்கப்பூரிலிருந்து சுஜா செல்லப்பன், ஹேமா, அழகு நிலா ஆகியோரின் கதைகளை எடுத்துக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் கட்டுரைத் தொகுப்பு. சிறுகதை இலக்கிய வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது என்பதையும் தெளிவாக முன்வைக்கிறது.

  பெண்களின் உடலரசியல், உளவியல். குலம், குடும்பம் , தாலி ,பிள்ளைப்பேறு, பெண்களின் இரட்டை மன நிலை, ஒன்றாகவே பிறந்து வளர்ந்தாலும் பெண்களின் விருப்பங்களும் வாழ்க்கை முடிவுகளும் வேறுபடுவதன் காரணங்கள், கணவன் நண்பன் என்ற சொல்லாடல்களின் ஊடாக சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டும் பெண்கள், குடும்ப நிறுவனத்தின் கற்பிதங்களும் அதன் மீறல்களும் என்று பெண்ணின் அகமும் அவள் வாழும் சூழலின் அரசியலும் எழுதும் பெண்களின் எழுதப்படும் பெண்களை எவ்வாறெல்லாம் கதைகளாக்கி அக்கதைகளின் ஊடாக ஒரு பெருவெளியில் பயணித்திருக்கின்றன என்பதை இக்கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன

 . பெண்ணிய சிந்தனைவெளியில் ஓர் அரை நூற்றாண்டு பெண்வெளியை தொகுத்திருக்கும் இக்கட்டுரைகள் தனித்துவமானவையாகவும் கோட்பாட்டு ரீதியாக கதைகளை அணுகும் ஆய்வாளர்களுக்கு ஓர் ஆவணமாக கவனத்துடன் தொகுக்கப்பட்டிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. . விசாலமான வாசிப்புத் தளமும் கவனமாக தெரிவு செய்திருக்கும் கதைகளும் அதன் போக்குகளும் பெண்ணிய தளத்தில் கவனிப்புக்குரியவை.

  26 பெண் எழுத்தாளர்களைப் பற்றிய சிறுகுறிப்பு பிற்சேர்க்கையாக சேர்க்கப்பட்டிருந்தால் ஆய்வு மாணவர்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும். மேலும் எடுத்துக்கொண்ட கதைகள் எழுதப்பட்டு வெளிவந்த ஆண்டுகள் சில கதைகளில் மட்டுமே தெரியவருகிறது. அக்குறிப்பு இணைக்கப்பட்டிருந்தால் கதைகளில் எழுதப்பட்ட பெண்களையும் முழுமையாக அக்காலப் பின்னணியுடன் எதிர்கால வாசகர்கள் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். இவை இம்மாதிரி கட்டுரை தொகுப்புகளின் ஆய்வு ரீதியான பார்வைக்கு வழிவகுக்கும்..

 -----------------------

கட்டுரை நூல் : பெண்ணிய வாசிப்புகள் :

 எழுதப்படும் பெண்களும் எழுதும் பெண்களும்.

எழுத்தாளர். அ. ராமசாமி

வெளியீடு : ஜீரோ டிகிரி.

பக் : 246 விலை ரூ 300.

------------------------------

நன்றி. அம்ருதா இதழ் 

Sunday, January 4, 2026

இந்தி வாத்தியாரு பொண்ணு.


பரமு சித்தப்பா டோம்பிவலியில்தான் இருக்கிறாராம். கேள்விப்பட்டதிலிருந்து அவரைப் போய் எப்படியும் பார்த்துவிட்டு வர வேண்டும் என்ற ஆசை அதிகமானது. டோம்பிவலி ஒரு குட்டி மெட்ராஸ். அவரோட அட்ரஸ் இல்லை. அவர் என்ன செய்கிறார் என்றெல்லாம் எந்த விவரமும் இல்லை. பரமு சித்தப்பா வீட்டில ட்யுஷன் போகிறாளாம்

என்னோட ப்ரெண்டோட மகளோட பிரண்டுக்கு மகள்.. அதுவும் இந்தி

டியுஷனாம்! பரமு சித்தப்பா வீட்டில இந்தி டியுஷனா என்ற மாபெரும்

சரித்திர கேள்விக்கு விடை தெரியாட்டி தலை சுக்கு நூறா வெடிச்சிடும்போல ஆயிடுச்சி நிலைமை.

 பரமு சித்தப்பாவும் இந்தி டியுஷனும் என்பது எம்புட்டு பெரிய ஷாக் நியுஷ், ப்ரேக் நியுஷ்னு பரமு சித்தப்பா பற்றி தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும். அதுக்கு கொஞ்சம் ப்ளாஷ் பேக் தேவைப்படும். ப்ளாஸ்பேக்கில் பரமு சித்தப்பாவைக் காட்டினா தானே எனக்கு ஏன் பரமு சித்தப்பாவைப் பார்த்தே ஆகனும்னு பரபரப்பா இருப்பது புரியும்!

 பரமு சித்தப்பா அந்தக் காலத்தில எங்க ஊரு ஹீரோ. அவரு தலைமுடியை நெற்றிக்கு மேலே ஒரு நத்தைக்கூடு மாதிரி சுருட்டு விட்டிருப்பாரு. எப்பவும் இப்படித்தான் அவரு முடி சுருண்டிருக்குமானு அவர் தூங்கி எந்திருக்கிறப்போ பார்த்தவங்களுக்குத்தான் சொல்ல முடியும். அது என்னவோ தெரியல.. அவரு முடியை சுருட்டி சுருட்டி வாரியதில அவரு வாய்க்காலில் குளிச்சிட்டு தலையைத் துவட்டினா கூட முடி அதே மாதிரி முன்னாலே சுருண்டிடும்னு எங்க பக்கத்துவீட்டுக்கார ரத்தினம் சித்தி அடிக்கடி சொல்லும்.

 ரத்தினம் சித்திக்கு ரெண்டு பிள்ளைங்க. சித்தப்பா துபாய்ல. சித்திக்கு பரமு சித்தப்பா மேலே ஒரு ‘இது’ . தன் புருஷன் துபாயிலிருந்து கொண்டுவந்த செண்டுபாட்டில், டீஷர்ட், பாட்டு கேசட்டு, கூலிங்க்ளாஸ் .. இப்படியா எதையாவது பரமு சித்தப்பாவுக்கு கொடுக்கும்.

இது ஊர்ல எல்லாருக்கும் தெரியத்தான் செய்யும்.. எப்போதாவது தெருச்சண்டை வந்தாதான் இந்தக்கதை எல்லாம் வெளியில வரும். இல்லாட்டி கண்டும் காணாம அவுங்கவுங்க பாடுஜோலியைப் பார்த்திட்டு இருப்பாங்க எங்கத்தெரு பொம்பளங்க.

 எங்கத் தெருவில இருந்து ஸ்கூலுக்குப் போற பிள்ளைங்க எல்லாருக்குமே பரமுதான் லீடர். அரைமணி நேரம் நடந்துதான் ஸ்கூலுக்குப் போகனும். நாங்க நடப்போம். பரமு சித்தப்பா அப்போவே ஸ்டைலா சைக்கிளில்தான் ஸ்கூலுக்குப் போவாரு. அவரு சைக்கிள் பின்னால மற்ற பசங்க சைக்கிள் போகும். என்னவோ ஒரு மந்திரி பின்னால வண்டிகள் போறமாதிரி இருக்கும். படிப்பும் நல்லா படிப்பாரு. அதிலும் கணக்கு நல்லா போடுவாரு. இங்கிலீஷ் பேசுவாரு.

 எங்கத் தெருவில அவரோடு குடும்பம்தான் அந்தக் காலத்திலேயே படிச்சக் குடும்பம். வக்கீலு குடும்பம்னு பேரு. வக்கீல்னு சொன்னவுடனே என்னவோ கறுப்பு அங்கியை மாட்டிக்கிட்டு கோர்ட்டு வாசலில் நடக்கும் எல் எல் பி வக்கீலானா கேட்டிடாதீங்க. அப்படி எந்தக் கோர்ட்டு வாசலிலும் எட்டிப்பார்க்காத வக்கீலு குடும்பம். பரமு சித்தப்பாவோட அப்பா அந்தக் காலத்திலேயெ இலங்கைப் போயி வெள்ளைக்காரங்கிட்டே வேலைப்பார்த்தவரு. வெள்ளைக்காரதுரைக்கு மனு எழுதறது, கலைக்டர் ஆபிஸ்க்கு மனு எழுதிக்கொடுக்கறது, அப்புறம் சட்டப்படி என்ன செய்யலாம்னு ஊர்ப்பஞ்சாயத்தில அட்வைஸ் செய்யறது, அவரு வக்கீல் மாதிரி பாயிண்ட் பாயிண்ட்டா பேசுவாராம். ஆதலால் அவரு எங்க ஊரு வக்கீலானாரு. அவரோட வீடு தான் வக்கீல் வீடு. அவரோட குடும்பமே வக்கீல குடும்பம்னு ஆயிடுச்சி. அவருக்கு 14வது பிள்ளையா அவரோடு மூணாவது பொண்டாட்டிக்கு பிறந்தவரு பரமு சித்தப்பா.

 பரமு சித்தப்பாவை எப்படியும் உண்மையான வக்கீல் தொழிலுக்கு படிக்கவச்சிடனும்னு கிழவனுக்கு ஆசை இருந்திச்சி. எல்லாம் இந்த 65 ல இந்திப்போராட்டம் வந்து கெடுத்திடுச்சி.. அதுவரை அவரு பெரியார் கட்சியில இருந்தவருதான்.. கட்சி மாறி காங்கிரசுக்குப் போயிட்டாரு.. இதெல்லாம் எங்க ஊரு போராட்டத்தில் நடந்த உபகதைகள்.

 இந்தி ஒழிக , தமிழ் வாழ்க .. மாணவர்கள் போராட்டம் .. ஸ்கூல் காலேஜ் எல்லாம் காலவரையறையின்றி மூடப்போறதா அறிவிப்பு வரப்போவதுனு செய்திவருது. மூடிட்டா எப்படி போராட்டம் நட்த்தறதுனு பரமு சித்தப்பா டீம் யோசிக்கிறாங்க. போராட்டம் ஆரம்பிச்சிடறாங்க. எந்த ஒரு முன் அறிவிப்பு ப்ளான் எதுவும் கிடையாது. ஆனால் போராட்டம் பத்திக்கிடுச்சி. ஸ்கூலுக்கு வெளியே இருந்து கிளம்பின வரிசை அப்படியே ஸ்கூல் எல்லையைத் தாண்டி மெயின்ரோடு வந்து பஸ் ஸ்டாண்டுக்கு வருவதற்குள் பேரணி பெரிசாயிடுச்சி. மாணவர்களோடு சேர்ந்து ரோட்டில நின்னவுங்க கட்சிக்காரங்க வேடிக்கையா கலந்துக்கிட்டு வரிசையில வந்தவுங்கனு வரிசையில் தலைகள் எண்ணிக்கை கடல் அலைமாதிரி வந்திட்டே இருந்திச்சி. கலைக்டர் ஆபீஸ்க்குப் போகணும். அதுதானே ஸ்ட்ரைக் பேரணி முடியற இடமா இருக்கும்.

 போகிற வழியில தான் போலீஸ் ஸ்டேஷன். கூட்டத்திற்கு போலீஸ் ஸ்டேஷனைப் பார்த்தவுடனே வீரம் வெறியா மாறிடுச்சி.. யாரு முதல்ல கல்லை எறிஞ்சானு யாருக்கும் தெரியாது. ரோடு போட ரோட்டோரம் இருந்தக் கல்லே ஆயுதமாச்சு.. சரமாரியா கல்லைத்தூக்கி வீசுனாங்க.போலீஸ் வெளியில வந்து கூட்டத்தைக் கலைஞ்சிப் போகச்சொல்லி அடிக்க ஆரம்பிச்சாங்க. .. புகைவெடியை வீசினவுடனே கூட்டம் கலைஞ்சிடுச்சி.. மாணவர்கள் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தார்கள். பத்து நிமிடம் ஓட்டம்.. எதிரே வாய்க்கால். வாய்க்காலைத் தாண்டினா அக்கிரஹாரம். கூட்ட்த்தில லீடரா இருந்தவுங்களத்தான் போலீஸ் குறிவைச்சதா செய்தி வந்திச்சு. இருக்கலாம். பரமு சித்தப்பாவை விரட்டுனதில அவரு ஓடிப்போயி வாய்க்காலைத்தாண்டி எதிரே இருக்க அக்ரஹாரத்து கொள்ளைப்புறத்தில சுவரேறி குதிச்சிருக்காரு.

 கதையில இந்தக் காட்சிதான் க்ளைமாக்ஸ். அவரு குதிச்சப்போ இந்தி வாத்தியாரு பொண்ணு விசலாட்சி குளிச்சிட்டு இருந்திருக்கு. அம்புட்டுத்தான்.

அது திடீர்னு குதிச்சவனைப் பார்த்து அலற.. ..

வேறென்ன..! அதோடு முடிஞ்சிப்போச்சு எல்லாமும்.

 சினிமாவில காட்டறமாதிரி இந்தப் பரமு சித்தப்பா விசாலம் வாயைப் பொத்தி இருக்கலாம். அப்புறம் அதுவே காதலா மாறி எங்க ஊரு வாய்க்காலில் “வேதம் புதிது” அப்பவே வந்திருக்கும். . சவத்தே..அப்படி எல்லாம் எதுவும் நடக்கல. இதில பரமு சித்தப்பா ஒரு ஹீரோ அந்தஸ்த்தை இழந்திட்டாருனு தோணிச்சு.

 பவாம்.. விசாலாட்சிதான். அவ இந்தி வாத்தியார் பொண்ணா வேற போயிட்டாளா.. கதையை டுவிஸ்டு பண்ணி பெரிய ப்ரேக் நியுஸ் ஆக்கிட்டாங்க.

 விசாலம் கத்தினதை கமுக்கமா வச்சிருக்கனும். ஆனா பாவம் அந்த இந்தி வாத்தியாரும் ஏழைதான். வாத்தியாரு ஆத்து மாமி அக்ரஹாரத்தில நல்லது கெட்டதுக்கு எல்லா ஆத்திலேயும் போய் கூடமாட உதவி செய்வாளாம். விசாலாட்சி சொல்லி இருக்கு. பிரைவேட் ஸ்கூல். இந்தி வாத்தியாருக்கு வேற பாடம் எதுவும் சொல்லிக்கொடுக்கவும் தெரியல. அதனால ஸ்கூலில் அவருதான் ஹெட்மாஸ்டருக்கு கையாளுமாதிரி எல்லா வேலையும் செய்வாரு. மனுஷன் இந்தி சொல்லிக்கொடுக்கறதிலேயும் குத்தம்சொல்ல முடியாது. கொஞ்சம் சாதுவானவருதான்.

 விசாலம் கத்தினப்போ பக்கத்து வீட்டு மாமிதான் அதை அக்ரஹாரத்திற்கே செய்தி ஆக்கிட்டா.

“ஏன் டீ,, நீ குளிச்சிட்டிருக்கிறப்போ குதிச்சானா.. இல்லை குளிச்சி முடிச்சப்போ குதிச்சானானு எதுவும் விவரமா கேட்கவே இல்லை! “

 கேட்கும் போதே.. “ஏன் டீ.. பார்த்திட்டானா.. பார்த்திட்டான்லியோ.. கர்மம்” தலையில அடிச்சிக்கிட்டு மாமி கேட்கும்போது விசாலத்தின் அழுகை சத்தம் இன்னும் அதிகமானது. அதனால வேற மாமி இன்னும் அதிகமா அதே காட்சியை விரிவாக்கிட்டா.

“ பொட்டுத்துணி இல்லாம குளிச்சாலாமே விசாலம்,”

“அப்போன்னா அந்தப் பிள்ளை எட்டிப்பார்த்துட்டான்’

‘அது எப்படி.. கரெக்டா .. விசாலம் குளிக்கறப்போ அந்த

சுவத்தை ஏறி குதிச்சானாம்.. டவுட்டா இருக்குதுனோ’’

‘ பாரோன்..தாயும் மகளும் ஊமை மாதிரி இருந்திட்டு

என்ன காரியம் செய்திருக்கா , பாருங்கோ’

“எப்பவும் துணி இல்லாம குளிக்கப்பிடாதுனு சொல்லியாச்சு.

அது என்ன அம்மண குளிப்போ! யாரு கண்டா விவஸ்தை கெட்ட

ஜென்மங்கள்’

அக்ரஹாரமே இந்தி வாத்தியாரு பொண்ணுப்பத்தி இப்படியாக வாய்க்கு வந்தப்படி எல்லாம் பேச ஆரம்பிடுச்சி. இந்திப் பாடமே ஸ்கூலில் கிடையாதுனு அறிவிச்சிட்டா.. பாவம் .. இந்தி வாத்தியாருக்கு வேலையும் போயிடுமோனு பயம் வந்திடுச்சி.. மாமியையும் இப்போதெல்லாம் யாரும் எந்த உதவிக்கும் கூப்பிடறதில்ல. என்ன நடந்திச்சோ.. மனுஷன் என்ன நினைச்சாரோ .. இந்தி வாத்தியாரு தூக்கில தொங்கிட்டாரு.. பெத்த பொண்ணு மானம் போயிடுச்சினு தூக்கில தொங்கிட்டதாதான் அக்கிரஹாரமே சொல்லிச்சே தவிர அந்த தெரு மனுஷாள் எல்லாம் வாத்தியாரை ஒதுக்கிவைச்சியே கொன்னுட்டதை ஒத்துக்கலை.

 இந்தி வாத்தியார் தற்கொலைனு தந்திக்காரன் கொட்டை எழுத்துல செய்தி போட்டு தெரிஞ்சவா தெரியாதவா எல்லாருக்கும் விசாலாட்சி குளிச்சக்கதையைப் பரப்பிவிட்டா. அதனாலே அதிகமா.. ரோஷம் வந்திடுச்சி வக்கீலுக்கு.

சிலம்பம் ஆடற கம்பாலா சுழட்டி சுழட்டி பரமு சித்தப்பாவை அடிச்சித் துவைச்சிட்டாராம். அப்பன் மகனுக்கு எப்போ சண்டை வந்தாலும் அப்பன்னு பார்க்காம எதிர்த்து கையை ஓங்கற பரமு சித்தப்பா அன்னிக்கு மட்டும் கிழவரு கொடுத்த அடியை தலையை நிமிர்ந்துப் பார்க்காம வாங்கி கிட்டாராம். ஒரு வார்த்தை ஐயாவை எதிர்த்து பேசலியாம். அதை எப்பவும் பக்கத்து வீட்டு ரத்தினம் சித்தி சொல்லி சொல்லி பரமுவை இந்த ஊரே விரட்டுடுச்சினு சொல்லும்.. அதுக்குப்பிறகு பரமு சித்தப்பா படிப்பை பாதியிலேயே விட்டுட்டு பம்பாய்க்கு டிரெயின் ஏறிப்போயிட்டாருனு கேள்வி.

 இப்போ பம்பாயி மும்பை ஆகி கதை எல்லாம் பழைய கதையாகிப் போனப்பிறகு இதே கதையில இப்படி ஒரு திகில் திருப்பம்தான் பரமு சித்தப்பாவைத் தேடிக் கண்டுப்பிடிக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கி இருக்கு..

 இதைக் கேள்விப்பட்டதிலிருந்து விதம்விதமா கனவுகள் வேறு வந்து தொலைக்குது..

கனவு 1:

பரமு சித்தப்பா இந்தி வாத்தியாரு தூக்கில தொங்கினதினாலே மனசு பாதிச்சி அதுக்குப் பிராயசித்தமா இந்தி படிச்சி அவரே இந்தி வாத்தியாராயிட்டாராம்!

இந்தி வாத்தியாருக்கு கணக்குப்பாடமும் நல்லா வரும் , அதில அந்தக் காலத்திலேயே அவரு இங்கிலீசு பேசின ஆளுங்கிறதால இந்தியோட சேர்த்து கணக்கும் இங்கிலீசும் டியுஷன் எடுக்கறதால அவரு டியுஷன் ஃபேமஸ் ஆயிடுச்சி. நம்ம தமிழ்ப்பிள்ளைங்களுக்கு இந்த 3 பாடமும் கொஞ்சம் வீக் என்பதால அவரு காட்டில வருஷம் பூரா மழையாம்.

கனவு 2:

பரமு சித்தப்பா டாக்சி ஓட்டினாராம். அப்பொ அவரோட டாக்சியில விசாலம் ஏறிச்சாம். பரமு கண்டுப்பிடிச்சிட்டாராம். இது நம்ம இந்தி வாத்தியாரு பொண்ணு விசாலமாச்சேனு. ஆனா விசாலம் பரமுவை அடையாளம் கண்டுக்கலியாம்.. இப்படியா பல நாளு டாக்சி ஸ்டாண்டில விசாலத்திற்காக காத்திருந்து கூட்டிட்டுப்போயி .. எப்படியோ நான் தான் பரமுனு சொல்ல

அப்படியே அந்தக் கனவு பாதியில முடிஞ்சிப்போச்சு….ச்சே..

 என்னவெல்லாமோ தொடரும்போது கனவு மட்டும் தொலைக்காட்சி தொடர்மாதிரி தொடரக்கூடாதா என்ன?! அதே கனவின் தொடர்சி மறுநாள் பகல்கனவா வந்திச்சி.. அதில …

கனவு 3:

 பரமு சித்தப்பா சொல்றாரு “ விசாலம், செளக்கியமா இருக்கியா? என்னைத்தெரியுதா , நான் தான் பரமு” அப்படினு

விசாலம் ஒண்ணுமே சொல்லாம உட்கார்ந்திருக்கு. ஸ்கூல் வந்தவுடனே விசாலம் காரிலிருந்து இறங்கும்போது

” தெரியும் , நீதான் பரமுனு முதல் நாளே தெரியுன்மு” சொல்லிட்டு இறங்கியாச்சு.

கனவு கட் கட் கட்.

அதன்பிறகு கனவு தொடரலை. அதனாலே கதை ரொம்ப சஸ்பென்சா இருக்கு.

பரமு சித்தப்பாவை எப்படி தேடிக் கண்டுப்பிடிப்பதுனு தெரியல.

டோம்பிவலி தமிழ்ச்சங்கம் நெல்லைப் பைந்தமிழிடம் விசாரிச்சதில

டோம்பிவலியில் முக்குக்கு முக்கு டியுஷன் நடக்கு. ஒவ்வொரு பில்டிங்க்லேயும் எதாவது ஒன்றிரண்டு வீடுகளில் டியுஷன் நடந்திட்டு இருக்கும். வேறு எதாவது க்ளு கொடுங்கனு சொல்றாரு.

 எங்க ஊரு ஆட்கள் ஒன்றிரண்டு பேரிடம் நைசா விசாரிச்சதில்

பரமு சித்தப்பா முழுப்பேரு பரமு இல்லையாம். பரமானந்தம், பரமேஸ்வரன், பரசுநாதன், பிரம்மானந்தம் இப்படியாக பல பெயர்களைச் சொல்கிறார்கள்.

வக்கீலு மகன் பரமுனு ஊர்ல கேட்டா இப்போ அந்த வீட்டுக்கதையைத் தெரிஞ்ச யாரும் உசிரோட இல்லை. பக்கத்து வீட்டு ரத்தினம் சித்தியும் மண்டையைப் போட்டாச்சு. அது உயிரோட இருக்கும்போதே கேட்டிருந்தா அவரோட பெயராவது உருப்படியா தெரிஞ்சிருக்கும்.

 என்னவோ.. இப்போதும் பரமு சித்தப்பா எனக்கு ஹீரோ அந்தஸ்தில முடி நரைச்சிப்போன தல தள அஜீத் மாதிரி இருக்காரு. விசாலம்தான் யாருனு இன்னும் சரியா முகம் நினைவுக்கு வர மாட்டேங்கு. அதனால என்ன இப்போ..!

 இந்தக்கதையை இப்படி எந்த முடிவும் சொல்லாம முடிக்கறதில எனக்கும் விருப்பமில்ல. அதுக்காக பரமு சித்தப்பாவும் விசாலமும் எங்க ஊரு வாய்க்காலில் நீந்திக்கொண்டே டூயுட் பாடற மாதிரியோ இல்ல டோம்பிவலி ஸ்டேஷனில் டிரெயின் ஓடிட்டு இருக்கும் பின்னணியில் நாலாவது ப்ளாட்பாரத்திலிருந்து இரண்டாவது ப்ளாட்பாரத்திற்கு பாடிக்கொண்டே ஸ்லோமோஷனில் வருகிறமாதிரியோ கதையை முடிச்சிட முடியுமா என்ன! ம்கூம்.. முடியாதுங்கறேன்.

 எப்படியும் பரமு சித்தப்பாவை கண்டுப்பிடிக்கிற வரைக்கும் கதை சஸ்பென்ஸாகவே இருக்கட்டும்.!

(ஐவருமாய் தொகுப்பிலிருந்து)

Tuesday, December 23, 2025

பெய்யென பெய்யும் மழை ?

"நாங்களும் திருக்குறளுக்கு உரை எழுதுவோமில்ல!"


"ஆண் பெண் உறவில் பெண்ணை இழிவுப்படுத்தி

அதைக்கொண்டுபோயி பெய்யற மழையோட 

தொடர்புபடுத்தி எழுதப்பட்ட உரைகள்தான்

தமிழ் இலக்கிய உலகில் புனைவுகளின் பித்தலாட்டம்." 


தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் 

பெய்யெனப் பெய்யும் மழை. 

குறள் எண் – 55. 


அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்.

திருக்குறளில் காலமெல்லாம், அனைத்து உரையாசிரியர்களும் தவறாகப் பொருள் கண்ட திருக்குறள் இதுதான். இதில் அதிசயமாக உரை எழுதிய பெண்களும் விதிவிலக்கல்ல,

பெண்ணின் கற்புக்கும் பெய்யும் மழைக்கும் தொடர்புண்டு  என்று சொன்னதுதான் தமிழ் இலக்கியத்தில் ஆகப்பெரிய புனைவு.

பித்தலாட்டம்.

மழை அறிந்தவன் வள்ளுவன்.

மழை நேரமும் காலமும் அறிந்தவன், நட்சத்திரங்களின் இருப்பை அறிந்தவன், அரசனுக்கு நேரம் கணித்து சொன்னவன் வானவியல் அறிவுடன் வாழ்ந்தவன் வள்ளுவன். 

அவன் “பெய்யெனப் பெய்யும் மழை” என்று எதைச் சொல்லி இருப்பான்? 

இக்குறளில் ஏன் : தெய்வம் தொழாஅள்” என்றான்?

யார் இந்த தெய்வம்?

ஓர் இல்லறவியல் பெண்ணை அடையாளம் காட்டுபவன்

எதற்காக “தெய்வம் தொழாஅள்” என்று உச்சமான 

ஒர் அடையாளத்தைக் கொண்டு வந்து சேர்க்கிறான்? 


“கணவன் திரும்பிவர பொய்கையில் புனித நீராடலுக்கு 

புண்ணிய ஸ்தலங்களுக்கு அழைத்தப்போது

“பீடன்று” என்று சொன்ன சிலப்பதிகாரம்

பெண்ணின் பீடு எது? என்று சொல்கிறது!

தினமும் தெய்வத்திற்கு பூஜை, விரதம். கோவில் கோவிலாக சுற்றி வருவது.. இதெல்லாம் அறத்துப்பாலின் இல்லறவியல் அல்ல,

இல்லறவியலின் வாழ்க்கைத்துணை நலமும் அல்ல.

இதெல்லாம் வேண்டாம் இல்லறவியலுக்கு என்று சொன்னவன் வள்ளுவன்.

உன்னோடு வாழ்கிறவனைக் கொண்டாடு.

அதுபோதும், அப்படி ஒரு துணை கிடைத்துவிட்டால் 

அந்த வாழ்க்கைத்துணை நலம் என்பது

 “பெய்யெனப் பெய்யும் மழை”

அவ்வளவுதான்..! 

வெரி சிம்பிள். வெரி லாஜிக்.

இதை விட்டுட்டு அடேங்கப்பா…

கற்பரசி சொல்லிட்டா மழைவரும்னு சொல்லி

சொல்லியே மழையை வரவிடாம பயமுறுத்தி

.. நீங்களும் உங்கள் உரைகளும்..பித்தலாட்டங்கள்.


மழைனா பெய்ய வேண்டிய இடத்தில பெய்யனும்.

அன்பும் மரியாதையும் பூஜையும் நம்பிக்கையும்

இருக்க வேண்டிய இடத்தில இருக்கனும்.

அதுதான்டா இல்லறவியல்.

அப்படி இருந்திட்டா… 

ஆஹா.. அவள் பெய்யெனப் பெய்யும் மழை..

எல்லா மழையும் வாழ்விப்பதில்லை.

பெய்கிற மழை எல்லாம் அறத்துப்பால் பேணுவதில்லை.

இப்படி ஒரு பெண் உனக்கு வாழ்க்கைத்துணையா இருந்தா அவ “பெய்யென பெய்யும் மழை” மாதிரிடா. 


காட்சி 1

என்ன இசக்கியம்மா வயக்காடு நட்டாச்சா?

எங்க நட, குளத்தில தண்ணி நிரம்பலியே

 நாத்து  நடறதுக்கு யோசனையா இருக்கு..

கிணறு இருக்குல்ல, ஒரு வயலையாவது நட்டுப்போடு,


“நாறப்பய மழ ..பெய்ய வேண்டிய இடத்தில பெய்யாம

சம்சாரி பொழப்பக் கெடுக்குது..!”

ஊரில் கனமழை என்று தொலைக்காட்சியில் செய்திகள்

ஓடிக்கொண்டிருந்தப்போதுதான் இப்படி ஒரு காட்சியை நான் பார்த்தேன்.

மழை மலையடிவாரத்தில் பெய்யவில்லை.குளம் நீர் நிலைகள் நிரம்பாது. 

ஊரில் பெய்து என்ன பயன்?

எங்கே மழை வேண்டுமோ அங்கே பெய்திருந்தால்தான்

மழையும் இனிது. இல்லை என்றால் மழையால் என்ன பயன்!

மழைன்னா அது ‘பெய்யெனப் பெய்யும் மழை”யா இருக்கனும். இதுதான் வாழ்க்கை.


காட்சி 2..

வானம் கருக்கிறது. வறண்ட பூமி, மழை வருமா என்று

காத்திருக்கும் ஊர்.. ( லகான் திரைப்படத்தில் மழைப்பாடல்)

அப்போது கொட்டுகிறது பாருங்கள் வானம்.

ஊரே கூடி ஆடிப்பாடி .. கொண்டாடும்.

பெய்யெனப் பெய்யும் மழை 

அது மகிழ்ச்சியின் உச்சம்.


 நேரம் கணித்து சொல்லும் வள்ளுவனையே

அவன் அறிவையே இம்புட்டு கேவலப்படுத்த முடியும்னா

அதில பெருமைப்பட்டுக்க என்னடா இருக்கு?!


#புதியமாதவி_வள்ளுவம்

Friday, December 19, 2025

அம்பேத்கர் தனிமைப்படுத்தப் பட்டாரா?

 



அண்ணல் அம்பேத்கர் தனிமைப்படுத்தப்பட்டாரா?

நாக்பூரில் இலட்சக்கணக்கான தன் ஆதரவாளர்களோடு 1956 அக்டோபர் 14ல் இந்து மதத்திலிருந்து வெளியேறி பெளத்தம் தழுவினார்.அதன்பின் 53வது நாளில் டிச 06 அவர் டில்லியில் திடீரென மரணம் அடைந்தச் செய்தி..

இது குறித்த சந்தேகங்கள்

வழக்குகள்

அம்பேத்கருடன் இருந்தவர்கள் எழுதி இருக்கும் புத்தகங்கள்

எல்லாமும் அப்படியே மெளனத்தில் உறைந்துப் போயிருக்கின்றன.

என்ன நடந்தது,?

ஏன் நடந்தது?

யார் காரணம்,?

யார் அறிவார்,?!

இது குறித்து எனக்குத் தெரிந்ததைப் பதிவு செய்தாக வேண்டும்.

அன்றைய பம்பாய் தாராவி தமிழ் இளைஞர்கள் எப்போதாவது தாதரில்  அம்பேத்கரின் இல்லத்தில் அவரைச் சந்திப்பதுண்டு.

அதில் முக்கியமானவர்கள்

தொல்காப்பியனார்,

என் தந்தை எஸ். வள்ளிநாயகம், நெல்லை இராமானுஜம்புதூர் இளைஞர்கள் . அண்ணலின் இறுதிக் காலங்களில் தாராவியிலிருந்து இவர்கள் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் கதவு திறக்கப்படவில்லை!சந்திப்பு மறுக்கப் பட்டிருக்கிறது.

அம்பேத்கர் குறித்து இந்திய பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளைச் சேகரித்து இவர்கள் அண்ணலிடம் கொடுப்பது வழக்கம்.

தங்களின் தலைவர் தனிமைப்படுத்தப் பட்டார் என்று இவர்கள் வருந்தினார்கள். அண்ணலின் உடல்நிலை ஓய்வு நேரம் இதெல்லாம் காரணமாக இருந்திருக்கும்,

தாராவிக்காரர்கள் என்பதால் இவர்களுக்கு அனுமதி இல்லை என்று இவர்கள் நினைத்துக் கொண்டார்கள். இப்படித்தான் நானும் நினைத்தேன்.

அண்ணலின் மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த தாராவியும் நிலை குலைந்துப் போனது.

என் வீட்டில் என் தந்தை காரணமே சொல்லாமல் பட்டினி கிடந்திருக்கிறார். அண்ணலின் உடல் மறுநாள்தான் பம்பாய் வந்தது. டில்லியிலிருந்து மும்பை விமானத்தில் வந்த அண்ணலின் உடலைப் பார்க்க  சயான் சாலையில் கூடி இருந்த தாராவி தமிழர்கள் அந்த வாகனத்தின் பின்னால் ஓடி இருக்கிறார்கள்.

என் அப்பாவின் மெளனத்தை அம்மா புரிந்துக் கொள்ளவில்லை,!அப்பாவும் அதை தன் மனைவியுடன் பகிர்ந்துக் கொள்ளவில்லை. ஆனால் அப்பாவின் மெளனம் ஒரு பெண்ணாக என் அம்மாவை குழப்பியது. கைக்குழந்தையோடு என் அம்மா தன் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டார். மூன்று ஆண்டுகள் அம்மா தன் பிறந்த வீட்டில்தான் இருந்தார். அதன்பின் அப்பா போகிறார். எதுவும் பேசவில்லை அம்மா. அப்பாவுடன் கிளம்பி மீண்டும் பம்பாய் வந்துவிடுகிறார்.

அப்பாவுக்கும் அன்றைய தாராவி இளைஞர்களுக்கும் தங்கள் தலைவர் பாபாசாகிப் தனிமைப்படுத்தப்பட்டார் என்ற வருத்தம் ஒரு குற்றச்சாட்டாக கடைசிவரை இருந்தது.

இது குறித்து மாமா சீர்வரிசை சண்முகராசனிடம் பேசி இருக்கிறேன்.அவருக்கும் இதே கருத்துதான்.

வரலாறு பல மர்மங்களைக் கொண்டது.

உண்மைகள் சைத்யபூமியில் உறங்குகின்றன.


ஜெய்பீம்.

Tuesday, December 16, 2025

ஆண்டாளும் ஆத்தங்கரை சாமியும்

 

m

வெளியில் காத்திருக்கும் அவனை அடையாளம் தெரிகிறாதா ? ‘

மேளச்சத்தம் மிக நெருக்கத்தில்.. சாமி நம்ம தெருவிற்குள் வந்துவிட்டதுனு புத்தகத்தை மூடிவிட்டு

சன்னலருகில் வந்து எட்டிப் பார்த்தேன். அவர்கள் தெருவில் நுழையும்போது மட்டும் சாமியின்

ஒற்றைக்கால் மடித்துக் கட்டப்பட்டது.

இனி ஒற்றைக் காலுடந்தான் அவர்கள் தெருவில் சாமியின் ஆட்டம். காலை மடித்துக் கட்டியாதாலோ என்னவோ

குதித்து குதித்து ஆத்தங்கரைச் சாமி அவர்கள் தெருவில் ஆடிக் கொண்டே வந்தார்..

எல்லா பெண்களும் குடத்தில் மஞ்சள் தண்ணி வைத்து சாமியின் தலையில் கொட்டினார்கள்..

சாமி ஒற்றைக் காலுடன் அவர்களுக்கு விபூதிக் கொடுத்து அருள்வாக்குச் சொல்லிக்கொண்டே வந்தார்.

ஒற்றைக்காலுடன் ஆடும் அந்த இளைஞனின் ஆட்டத்தில் ஒரு வெறி.. ஒரு பலி தீர்க்கும் வெறி..

கண்களில் நெருப்பின் துண்டுகள்..அவன் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மேளக்காரன்

கை சோர்ந்து போனான்.

அவனின் அவள் அந்த தெருவில் ஏதொ ஒரு வீட்டின் மாடியிலோ கதவிடுக்கிலோ நின்று

கொண்டு அவன் ஆடுவதைப் பார்த்து அழுதுக் கொண்டிருப்பாளோ என்று எனக்கு

எண்ணத் தோன்றியது.

எங்கள் தெருவில் எல்லா பெரிசுகளும் சாமி அள்ளித்தந்த விபூதியை பயபக்தியுடன் பூசிக்கொள்வதைப்

பார்க்கும்போது அவர்கள் பேச்சுதான் நினைவுக்கு வந்தது.

பள்ளு பறையனுக இப்போ எல்லாம்..!

கால் மடித்துக் கட்டிய வலியின் வேதனைத் தெரியாமாலிருக்க இந்த ஆட்டமா ?

அல்லது வேறு எந்த வலியை மறக்க இந்த வலி மறந்து ஆடுகிறாய் ?

ஆண்டாளின் தோல்வி அருள்தரும் அம்மன்சந்நிதியில் கற்பூர ஆரத்தியாய்..

ஆத்தங்கரையானின் தோல்வி இன்னும் ஒற்றைக்காலுடன் ..உயிரின் வலியாய்..

.

ஆண்டாளின் சந்நிதிக்குப் போகும்போதெல்லாம் இப்போதெல்லாம் ஆத்தங்கரைச் சாமியும்

நினைவுக்கு வந்து ஒற்றைக்காலுடன்.. வெறியுடன் பலிதீர்க்கும் வெறியுடன் என் கர்ப்பஹிரகத்தில்.

( மீள்)

மின்சாரவண்டிகள் சிறுகதை தொகுப்பு 2005.