Tuesday, August 27, 2013

UNTOLD STORIES OF IPKF in Madras Cafe




India became more actively involved in the late 1980s, and on June 5, 1987, the Indian Air Force airdropped food parcels to Jaffna while it was under siege by Sri Lankan forces. At a time when the Sri Lankan government stated they were close to defeating the LTTE, India dropped 25 tons of food and medicine by parachute into areas held by the LTTE in a direct move of support toward the rebels.[
Weisman, Steven R. (5 June 1987). "India airlifts aid to tamil rebels". STEVEN R. WEISMAN (New York Times). .

A  book on IPKF Operations in Sri Lanka:
Intervention in Sri Lanka: The IPKF Experience Retold, written by Major General Harkirat Singh throws fresh insight on IPKF operations and identifies the gaps and pitfalls which lead to its failure. General Harkirat was the first General Officer Commanding (GOC) for the IPKF and gives a first hand account of the initial phase of the operation.

General Singh argues that the IPKF did not succeed in achieving its mandate because it `did not have a clear-cut aim'. The IPKF went into operation within hours of the Accord being signed without adequate planning and preparation. The politicians and bureaucrats, including RAW, failed to address the real issues on the ground. Education and communication with the rural people were further road-blocks of success with the peacekeeping intervention.

First secretary in the Indian High commission in Colombo conveyed to Prabakaran that Rajiv Gandhi was waiting
to meet him to discuss certain issues prior to signing the accord.
Prabakaran was delighted to receive this message and agreed to leave for New Delhi.

On his arrival in New Delhi, Prabakaran had preliminary discussion with the Prime minister on 28th July, 1987, he was lodged in room 518 of the Ashoka Hotel and awaited for another meeting with the prime minister, unaware that the latter was already in Colombo negotiating an agreement for which, J N Dixit, India's high commissioner in Srilanka had laid the ground, the Prime minister's visit was telecast live, and watching it the
LTTE leaders felt betrayed"  - page 26


" On the night of 14/15 september 2987, I received a telephone call from Dixit, directing me to arrest or shoot Prabakaran when he came for the meeting. Telling Dixit that I would get back to him I placed a call to the OFC, Lt.Col. Gen. Depinder Singh directed me to tell Dixit that we as an orthodox army, did not shoot people in the back when they were coming for a meeting under white flag. I then spoke to Dixit in Colombo and conveyed the message emphasising that I would not obey his directive. I pointed out that LTTE supremo had beedn invited by the IPKF in order to find solution to the problems in the implementation of the Accord. Dixit replied "HE (Rajiv Gandhi) has given these instructions to me and the Army should not drag its feet, and you as the GOC, IPKF will be responsible for it"
- page 57.


மெட்ராஸ் கஃபே ..





ராஜீவ்காந்தியின் படுகொலை பின்னணியை வைத்து 1993ல் ஆர் கே செல்வமணி 'குற்றப்பத்திரிகை" என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் எடுத்திருந்தார். அந்த திரைப்படம் 90 களில் வெளிவந்த சாதாரண மசாலா
படங்களையும் விட மேசமாக இருந்தது.  அந்த திரைப்படத்தில்
வந்த ஒரே ஒரு வசனத்தில் ராஜிவ்காந்தியின் பாதுகாப்புக்கு இருந்த
காவல்துறை அதிகாரியை அரசியல் வாதி குற்றம் சுமத்தும் காட்சியில்
அந்த அதிகாரி அரசியல்வாதியைப் பார்த்து  ஒரு கேள்வி கேட்பார்,

நீங்கள் யாரும் குண்டு வெடிக்கும் போது அருகில் இல்லையே, யாரும் காயப்படவில்லையே அது எப்படி? என்று

இந்த ஒரு வசனம் தவிர இத்திரைப்படத்தில்  பாராட்டும் அளவுக்கு
எதுவுமில்லை. ஆனால் இத்திரைப்படம் தணிக்கையாளரின் பெட்டியில்
பல காலம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அதுவும் ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல. சற்றொப்ப 15 வருடங்கள் சென்சார் போர்ட் இத்திரைப்படத்தை வெளியிட அனுமதி மறுத்தது. அதன் பின் ஏகப்பட்ட எடிட்டிங் நடந்திருக்கும்.
அப்படி ஒரு மசாலா படத்தை வெளியிட  அனுமதி மறுத்த இந்திய தணிக்கை
ஆணையம் தற்போது வெளிவந்திருக்கும்
மெட்ராஸ் கபே திரைப்படத்திற்கு
எவ்விதமான இடையூறுகளுமின்றி அனுமதி கொடுத்தது எப்படி?
ஏன்?

இந்தக் கேள்வி தான் மெட்ராஸ் கபே திரைப்படத்தின் மூலம்
 இந்திய அரசு என்ன சொல்ல வருகிறது என்பதைப் பார்ப்பவர்களுக்கு யோசிக்க வைக்கிறது.


தமிழ் ஈழம் வரலாற்றையும் போராட்டங்களையும் அறியாத குறிப்பாக
தமிழரல்லாத  பிற மாநிலத்து இளைஞர்களிடம் இத்திரைப்படம்
உறுதியாக ஒரு இந்திய வல்லரசின் பிம்பத்தை நிலைநாட்டுகிறது.

அத்துடன் ஹாலிவுட் திரைப்படங்களில் அமெரிக்க உளவுத்துறை
உலக நாடுகளுக்கே சட்டாம்பிள்ளையாக இருப்பதைக் காட்டி
எல்லாம் அறிந்த பரம்பொருள் போல ஒரு பிம்பத்தைக் கட்டமைத்திருப்பார்கள். அதே பாணியில் மெட்ராஸ் கபேயும்
இந்திய  "ரா' உளவு அமைப்பைக் காட்ட முனைந்திருக்கிறது.
ஓரளவு திரைப்படத்தின் மிகச்சிறந்த காட்சி அமைப்புகளின் ஊடாக
அதை நிலைநாட்டியும் இருக்கிறது.  அதாவது இந்தியாவின் ரா உளவு
அமைப்புக்கு ராஜீவ்காந்தியின் அந்தக் கோர முடிவு குறித்து ஏற்கனவே
தெரியுமாம்! ஒரு மயிரிழையில் அவர்கள் பிந்திவிடுகிறார்களாம்!
அவ்வளவு திறமையான அமைப்பாம் இந்தியாவின் "ரா"

இந்திய ரா குறித்து இம்மாதிரியான ஒரு எண்ணத்தை இந்திய இளைஞர்களிடம் மட்டுமல்ல, உலகமெங்கும் காட்டியாக வேண்டிய
ஏதோ ஒரு நிர்பந்தம் இந்தியாவின் 'ரா'வுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது.

அது என்ன நிர்பந்தம் என்பதை 'பஞ்சாபி சமோசா' என்று  எதிர்காலத்தில்
யாராவது எழுதுவார்கள் அல்லது திரைப்படமாகவும் எடுக்கலாம்.
மெட்ராஸ் கபே ஃபில்டர் காபியை விட  வரப்போகும் 'பஞ்சாபி சமோசா"
ரொம்பவே சூடாக இருக்கும்.

------





Sunday, August 18, 2013

நேர்படப்பேசு, ஆனா பேசாதே!

.

அண்மைக்காலங்களில் புதியதலைமுறை தொலைக்காட்சி
 மட்டுமல்ல, சன், தந்தி , வின் என்று இந்த நேர்படப்பேசுகின்ற
 நிகழ்ச்சியை அவரவர் விருப்பம் போல வெவ்வேறு பெயர்களில்
 நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மும்பையில் என் தோழி ஒருவர், அவரும்  ஊடகத்துறையில்
இருப்பவர்தான், அடிக்கடி இந்த நிகழ்வுகள் குறித்துப் பேசிக்
 கொள்வோம்.
ந கைச்சுவை நடிகர் வடிவேலு புதுசா படங்களில்
நடிக்கவில்லையே என்ற குறையை இந்த நிகழ்ச்சியில் கலந்துக்
கொள்ளும்  சிலர் தீர்த்து வைக்கிறார்கள், மனம்விட்டு வாய்விட்டு
சிரிக்கலாம், சிரிப்பது உடம்புக்கும் உள்ளத்துக்கும் நல்லது,
அதுவும் இரவு தூங்குவதற்கு முன் இந்த நிகழ்ச்சிகள்
 இருப்பதால் ரொம்பவே நல்லது என்று அடிக்கடி
எனக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பார்.



அப்படித்தான் ஒருநாள் திமுக அரசியல் கட்சி சார்பாக
 கலந்து கொண்டவர்    நிகழ்ச்சியாளர் கேட்காமலேயே
 'அப்படியானால் ராஜ்யசபா  தேர்தலில்நீங்கள் ஏன்
கனிமொழிக்கு  ஆதரவு தேடி காங்கிரசிடம் போனீர்கள்?
என்று கேட்க கூடும்" என்று சம்பந்தமே இல்லாமல்
உளறிக்கொட்டினார். கனிமொழியின்
பெயரை உச்சரிக்க வேண்டிய அவசியமோ அல்லது
 ராஜ்யசபை தேர்தலில் திமுக ஏன் தன் ஒரே ஒரு உறுப்பினருக்காக காங்கிரசின் உதவியை நாடியது ஏன் என்பதைப் பற்றி
கேள்வி எழும் சூழலே அந்த நிகழ்வில் இல்லை,
இல்லவே இல்லை. ஆனால் பாவம் அவர், அப்படி ஒரு காமெடி
நிகழ்ச்சியைக் கொடுத்ததைக் கண்டு நிகழ்ச்சி நடத்துபவருக்கே
சிரிப்பு வந்தது.
கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு நாம் கேட்காமலேயே
கனிமொழி குறித்த  இச்செய்தியைப் பகிர்ந்து கொண்டமைக்கு
நன்றி என்று கூறி அந்த நிகழ்ச்சியை கஷ்டப்பட்டு நடத்தினார் .

இப்படித்தான் அரசியல் கட்சிகள் சார்பில் கலந்துக்
கொள்பவர்களுக்கு நிறைய சிக்கல்கள் இருக்கும் போல.
கனிமொழி குறித்து கட்டாயம் கேட்பார்கள், நீங்கள் இந்தப் பதிலைச் சொல்லுங்கள் என்று எழுதிக் கொடுத்து
அனுப்பி இருப்பார்களோ, அதற்குப் பயந்து அவர்கள்
கேட்டாலும் கேட்காவிட்டாலும் நாம சொல்லிடுவோம்னு
அவரு சொல்லியிருக்கலாம்!
காங்கிரசு கட்சி சார்பில் கலந்துக் கொண்ட ஒருவர்
இவர்கள் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார்.
" உங்க டி.,வி எப்பவும் காங்கிரசுக்கு எதிரா இருக்கு,
சிபிஐ ரெய்டு நடத்திடுவோம் , ஜாக்கிரதை ; என்று
 போட்டார் பாருங்கள் ஒரு போடு,
சிபிஐ ரெய்டுக்கான காரணங்கள் என்ன என்று
அறியாதவர்களுக்கும் அறிந்து கொள்ளும் வகையில்
 அவர் ரகசியங்களைப் போட்டு உடைத்துவிட்டு போனார்.

 மார்க்சியவாதிகளும் அறிவியல் பொறியியல்
பொருளாதர வல்லுநர்களும்  கலந்துக் கொள்ளும் போது
 குடுமிப்பிடி சண்டை மாதிரி இருக்கும்.
அந்த நிகழ்ச்சிகளை ஒலி ஒளி காட்சியாக பார்க்க கூடாது,
 ஒலியின் அளவை முழுவதுமாக நிறுத்திவிட்டு
வெறும் ஒளிப்படமாக பார்த்தால் மட்டும் போதும்.
 பயமில்லாமல் தொடர்ந்து நிகழ்ச்சியைப் பார்க்க முடியும்.

ரொம்பவும் சூடான பிரச்சனைகளை எல்லாம் நம்ம டிவிக்காரர்கள்
பேசுகின்றார்களே, சமூக மாற்றத்திற்கான புரட்சியை அறவழியில்
அறிவு ஆயுதம் ஏந்தி நடத்துகின்றார்களே என்றெல்லாம் சில நேரங்களில்
அவர்கள் பேசுகின்ற தலைப்புகளை வைத்து நாம் கனவுகளுடன்
டிவி முன்னால் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்போம்.
அப்படித்தான் அண்மையில் இரண்டொரு நாட்களுக்கு முன்
தமிழ்நாட்டில் நடக்கும் மணல் கொள்ளை என்ற தலைப்பில் நேர்படப்பேசு
நிகழ்ச்சியில் பூவுலகின் நண்பர்கள் குழுமத்திலிருந்து தோழர் சீனிவாசன்
கலந்து கொண்டு பேசினார்.

தன் கருத்தாக " இந்த தாதுக்கள் நிரம்பிய மணலை அள்ளும் வேலையைச்
செய்பவர்கள் பெரும்பான்மையோர் தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட மக்களும் தான் " என்றார். உடனே நிகழ்ச்சியாளர் குறிப்பிட்ட எந்தச் சாதியின் பெயரையும் சொல்லாதீர்கள் என்று இடைமறித்தார்.
என்னவோ சாதியின் பெயரைச் சொல்லிவிட்டால் மணல் கொள்ளை விவகாரம் சாதிக்கலவரமாகிவிடுவதைப் போல ! மணல் கொள்ளைக்கும்
சாதியைப் பற்றி பேசுவதற்கும் சம்பந்தமில்லை என்று புதியதலைமுறை
நிகழ்ச்சியாளர்  நினத்தாரோ என்னவோ!!

ஒரு சட்டத்திற்குப் புறம்பான செயல், தொடர்ந்து நடக்கிறது, அரசும்
சட்டமும் இதை எல்லாம் அனுமதிக்கிறது, இதைப் பற்றி எல்லாம் பேசுலாம்,
பேசுகிறார்கள் நம் அறிவுஜீவிகள்.
ஏன் அரசு மவுனமாக இருக்கிறது? என்பதற்கான காரணத்தின் முடிச்சை
அவிழ்க்க வந்தால் அடிமடியில் கை வைத்தது போலிருக்கிறது நம் அறிவுஜீவிகளுக்கு! பாதிக்க்கப்படும் மக்கள் தலித்துகளாகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும் இருப்பதால் தான் இந்த நாட்டின் அரசும்
சட்டம் ஒழுங்கும் கள்ளமவுனம் சாதிக்கிறது! இந்தக் கருத்தையோ இந்தக் கருத்து நோக்கி இட்டுச் செல்லும் எந்த ஒரு புள்ளியும்இருந்தால் நம் டிவிக்காரர்களுக்கு அலர்ஜி.

சாதிகள் இல்லையடி பாப்பா... பாரதி, உன்னிடமும் சொல்கிறேன்.
நீ சொன்ன அதே ரெளத்திரம் பழகி உன்னிடன் சொல்கிறேன்.
பாரதி , நேர்படப் பேசு. 
சாதிகள் இருக்குதடி பாப்பா..

Sunday, August 4, 2013

ஓடு மில்கா ஓடிக் கொண்டே இரு...





ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினான்,
இந்தியாவுக்கு விடுதலை வந்த அதே 1947.. எல்லைக்கோடுகள் ரத்தக்காட்டேரிகளாகி அவனைத்துரத்தியது. .
அப்போது ஓடி விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் எல்லைகளைத் தாண்டி ஓடுகிறான் ஓடுகிறான்
ஓடுவதே அவன் வாழ்க்கையாகிவிடுகிறது. அந்த ஓட்டமே
அவன் அடையாளமானது மட்டுமல்ல, அதுவே இன்று
திரையரங்குகளில் அந்தக் காட்சியைப் பார்க்கும் அனைவரையும் "ஓடு மில்கா ஓடு" பாஃக் மில்கா பாஃக்
என்று ஓட வைத்திருக்கிறது.

அக்டோபர் 8, 1935 ல் லயல்புர் (அன்றைய ஒன்றுபட்ட இந்தியாவின் ஒரு பகுதி, இன்று பாகிஸ்தான்) கிராமத்தில் பிறந்த மில்கா சிங்கின் சுயசரிதையை வாசித்த திரைப்பட இயக்குனர் ராகேஷ் மெஃரா ,( ரங் தே பசந்தி என்ற வெற்றி திரைப்படத்தைக் கொடுத்தவர்) எப்படியும் மில்கா சிங்கின் வாழ்க்கை சரித்திரத்தை திரைப்பட மாக்கியே தீர்வது என்ற
முடிவுக்கு வருகிறார். இந்திய தேச வரலாற்றில் பாகிஸ்தான் என்ற நாடு உருவான கதையின் பின்புலத்தில்
அதனால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் கதையாக
இருப்பதால் மட்டுமே மில்காவின் கதை வெற்றி பெற்றிருக்கிறது என்று சொல்வதற்கில்லை.

அவன் தன் வலியைச் சுமந்துக் கொண்டு தன் சோகத்தை
தன் காயத்தை அவன் கண்முன்னால் நடந்தக் இனக்கலவரத்தை தன் உறவுகளின் பிணங்களைத் தாண்டி
அவன் அடைந்த வெற்றிகள் என்ற புள்ளியில் குவித்து
ஓர் இரசாயணவித்தையை ஏற்படுத்தி இருக்கிறது இத்திரைப்படம்.
மில்காவின் கதையை திரைப்படமாக்க  சற்றொப்ப 3 வருடங்கள் ஆனது இயக்குநருக்கு. அக்காலக்கட்டத்தில்
ஏற்பட்ட பொருளாதர சிக்கலைத் தீர்க்க குர்ஹாவில் இருந்த தன் சொந்த வீட்டை விற்றும் தன் மனைவிக்குச் சொந்தமான சொத்துகளை விற்றும் இந்த திரைப்படத்தை
எடுத்து முடித்திருக்கிறார் ராகேஷ் மெக்ரா. தன் கதையை
இயக்குநருக்கு திரைப்படம் ஆக்கும் உரிமைக்காக மில்கா வாங்கிக்கொண்டது வெறும் ரூபாய் 1/ மட்டுமே! இன்றைய
ரூபாய் மதிப்பில் இந்த ஒரு ரூபாயை அமெரிக்க டாலரில்
மாற்றுவது கூட கடினம்!

மில்காவின் கதைப்பாத்திரத்தை உயிரோட்டமாக திரையில் கொண்டுவந்ததில் பெரும்பங்கு மில்காவாக நடித்திருக்கும்
அந்தச் சிறுவனும் பஃர்ஹான் அக்தரும் தான். மில்காவின்
பாத்திரத்தை ஏற்று நடித்த பஃர்ஹான் இந்த ஒரு திரைப்படத்திற்காக மட்டுமே திரைப்பட உலகில் ஒரு
நிரந்தரமான முத்திரையைப் பதித்திருக்கிறார் எனலாம்.

'நான் என் வாழ்க்கையில் அனுபவித்த வேதனைகளில் 20 விழுக்காடு தான் இத்திரைப்படம் பேசி இருக்கிறது என்கிறார் மில்கா. 1956ல் திரைப்படம் பார்த்த மில்கா அதன்பின் 57 வருடங்கள் கழித்து இப்போது தான் அதுவும்
தன் கதையே திரைப்படமாக வந்திருப்பதைப் பார்த்து
மனம் நெகிழ்ந்திருக்கிறார் என்கிறார்கள். எதிர்ப்பார்த்ததைவிட அதிகமாக வருவாயை இத்திரைப்படம்
கொட்டிக்கொண்டிருக்கிறது. அதிலும் மராட்டிய மாநிலம்,
மத்திய பிரதேசம் மற்றும் டில்லியில் இத்திரைப்படத்திற்கு
வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்கிறது.

1960ல் ரோமில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கண்ணிமைக்கும் தருணத்தில் தன் தங்கப்பதக்கத்தை இழந்துவிடும் மில்காசிங்
என்று ஆரம்பமாகும் திரைக்கதை அதன் பின் ஒவ்வொரு
காட்சியிலும் மில்கா நடந்து வந்தப் பாதையை நோக்கிப்
பயணிக்கிறது. இந்திய பாகிஸ்தான் பிரிவினை என்ற வரலாற்று நிகழ்வு இக்கதையின் அடிநாதமாக ஓடிக்கொண்டே இருக்கிறது. உலகப்போரில் நடந்த ஹோலோகோஸ்ட் மரணங்கள், ருவண்டாவில் நடந்த இனப்படுகொலை, ஏன் நம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இந்த இரத்தம் படிந்த வரலாற்று நிகழ்வுகளில் எல்லாம் சொல்லொணா துயரத்தை அனுபவித்தவர்கள் பெண்களும் குழந்தைகளும் தான்.
மில்கா அதில் ஒருவன்.
எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தின் மீதோ மதத்தின் மீதோ
வெறுப்பு ஏற்படும் வகையில் கதையோட்டத்தை
நகர்த்தாமல் திரைப்படத்தை எடுத்திருக்கும் இயக்குநரை
எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தன் இனப்பெருமையை தத்ரூபமாகக் காட்டுகிறேன் என்று
சொல்லிக்கொண்டே சாதி ஆணவத்திமிரைக்  காட்டும்
நம் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் இக்கதையைத் திரைப்படமாக்கியிருந்தால் சர்தார்களின் சரித்திரம் என்ற ஒரு சின்ன வட்டத்திற்குள் அடைத்திருப்பார்கள்.

திரைக்கதையோட்டத்தில் மில்கா வெளிநாட்டு பயணத்தின்போது ஒரு பெண்ணின் வலையில் வீழ்வதும்
அதனாலேயே தன் விளையாட்டு போட்டியில் சரிவதும்
காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இக்காட்சியைப் பார்த்த மில்கா "அய்யய்யோ இப்படி எல்லாம் எதுவுமே என் வாழ்க்கையில் நடக்கவில்லையே!" என்று அலற அருகில் இருந்தவர்கள் இக்காட்சி மில்காவின் ஆண்மையைக் காட்டுவதற்காக சேர்க்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்களாம்.
கடைசிவரை மில்காவிற்கு இக்காட்சிக்கும் தன் ஆண்மைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பது புரியவே இல்லையாம். இதனால், ஊடகத்துறை அன்பர்களுக்கு மில்கா ஓர் அதிசயமாக தெரிவதாக சொல்கிறார்கள்!


பாகிஸ்தானுடன் நேச உறவை வளர்க்கும் வகையில் நடக்கும் விளையாட்டுக்குழுவில் தலைமை ஏற்று பாகிஸ்தான் செல்ல மில்கா மறுக்கின்றான்.
"என்னால் முடியவில்லை, என்னால் பாகிஸ்தான் செல்ல இயலாது " முஜ்ஷெ நஹி ஹோகா, மெ பாகிஸ்தான் நஹி
ஜாவோன்ஹா" என்று அவன் சொல்லும் வசனத்திற்காக
பாகிஸ்தான் அரசாங்கத்தின் திரைப்பட தணிக்கை குழு
இத்திரைப்படத்தை பாகிஸ்தானில் திரையிட அனுமதி
மறுத்திருக்கிறது. திரையிடுவதற்கான பேச்சுவார்த்தைகள்
நடந்துக்கொண்டிருக்கின்றன என்கிறார் இயக்குநர்..

இத்திரைப்படத்தின் வருவாயிலிருந்து கிடைக்கும் பணத்தின்
ஒரு பகுதி மில்காவின் அறக்கட்டளைக்கு வழங்கப்பட இருக்கிறது. மில்கா சிங் தன் அறக்கட்டளை மூலமாக
நலிந்தோருக்கு மருத்துவ உதவிகள், வறிய இளம் விளையாட்டு  வீரர்களுக்கும் விளையாட்டு மைதானத்திலிருந்து வயோதிகம் அல்லது உடல் ஊனம் காரணமாக ஓய்வு பெற்றிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு
உதவி என்று சமூக தளத்திலும் ஆரவாரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்.

விளம்பரங்களில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நம் கிரிக்கெட் வீரர்கள் எவரும் விளையாட்டு வீரர்களுக்காக
ஏதேனும் தொண்டு நிறுவனங்கள் வைத்திருக்கிறார்களா?
எப்போதாவது உதவிகள் செய்திருக்கின்றார்களா?
நாமும் தான் அவர்களை விடாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்!



மில்காவின் கடைசி ஆசை ஒன்றே ஒன்றுதான்.
"எந்த ரோம் ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கான தங்கப்பதக்கதை நான் இழந்தேனோ அந்தப் பதக்கத்தை என்
வாழ்நாளில் நான் உயிருடன் இருக்கும்போதே ஓர் இந்திய விளையாட்டு வீரன் கொண்டுவர வேண்டும் " என்கிறார்.

நிறைவேறுமா மில்காவின் ஆசை?