Saturday, September 8, 2018

திமுக வின் எதிர்காலம் அதிமுக வின் (தினகரன்)கையில்




திரு.ஸ்டாலின் அவர்கள் திமுக தலைவரானவுடன்
எல்லோரும் வாழ்த்து சொன்னார்கள்.
எனக்கு அது ஏன்? என்று இன்று வரை புரியவில்லை.
எதுக்கும் நாமும் 
வாழ்த்து சொல்லி வைப்போம் என்று சொல்லியிருக்கலாம்!
எப்படியும் கலைஞரின் மறைவுக்குப் பிறகு
செயல்தலைவராக இருந்த அவர் தான் 
திமுக வின் தலைவராக வருவார் என்பது
அரசியல் அறியாத பச்சப்பிள்ள கூட சொல்லிடும்.
மேலும் அரசியல் கட்சியில் தலைவர்கள் ஆவது
ஆகாதது அந்தந்தக் கட்சி சார்ந்த செயல்பாடு.
இப்படி நான் எதாவது எதார்த்தமா எழுதப்போனா
அதுவே வினையாகி வம்பாகி வழக்காகி ..
நண்பர்கள் முறைக்க.. நான் முறைத்துக்கொள்ள
சரி விட்டுத்தள்ளுங்கள். 
திமுக தலைவரான ஸ்டாலின் அவர்களுக்கு
ஆளாளுக்கு அட்வைஸ் சொன்னார்கள்.
அது எனக்கு இன்னும் கடுப்பாயிடுச்சி..
அத்தனை அறிவுரைகளையும் கேட்டு
அவர் நல்லபிள்ளையா அரசியல் நடத்தனும்னு
அவசியமில்ல. 
திமுக வின் எதிர்காலம் அதிமுக வின் கையில்
என்று எப்போதோ நான் ஒரு பதிவு போட்டிருந்தேன்.
அது எவ்வளவு முக்கியமானதுனு இப்போ தான்
அதை எழுதின எனக்கேேபுரியுது!!
இப்போஅதையேதான் கொஞ்சம் சுருக்கி
சொல்ல வேண்டியது வந்திருக்கு.
டிடிடிவி தினகரன் (எத்தனை டிடிடிவி போடறது உண்மையிலேயே
மறந்துப் போச்சு நைனா..) விரைவில் அதிமுக வின் 
தலைவராக வேண்டும். அப்போ தான் திமுக வுக்கும் 
திரு ஸ்டாலின் அவர்களின் அரசியலுக்கும் 
எதிர்காலம் இருக்கும். 
அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின் 
கலைஞரின் திமுக அரசியலை தூக்கி நிறுத்தியது
அதிமுக வின் எம் ஜி ஆரும் ஜெயலலிதாவும் தான்.
இப்போ அதிமுக வில் இருக்கிற டம்மி தலைவர்களுடன்
ஸ்டாலின் அரசியல் நடத்துவது சரியல்ல.
அதனால் செய்ய வேண்டியது என்ன வென்றால்
----------- கோடிட்ட இடத்தை நிரப்புக.
திமுக ஆட்சியில் இல்லாத போதும்
கலைஞர் அரசியல் ஜேஜேனு தான் இருந்தது.
கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது
இப்போ.. இந்த திருக்குறள் வேறு
நினைவுக்கு வந்து தொலைக்குது.

1 comment: