Thursday, August 29, 2019

RBI ரூ 176,000 கோடி.... கோவிந்தா.. க்க்கோவிந்தா



கோவிந்தா க்கோவிந்தா
Image result for rbi 1.76 lakh crore

RBI க்கு கோவிந்தா..
தொகை கொஞ்சம் பெரிசு..
ரூ 176,000 கோடி..
யாருக்குமே இப்படி ஒர் அறிவுப்பூர்வமான படா கில்லாடித்தனமான
 பொருளாதர சிந்தனை வரவே இல்லை. அடேங்கப்பா….
அடிச்சிப் புடுச்சி.. இல்லாத தகிடு்தத்த்தமெல்லாம் செய்து 
கடைசியா.. பிடுங்கின தொகை..
ரூ. 176,000 கோடி.
பிஜேபி அரசுக்கு இதுக்காகவே 176 வடை செய்து 
வடைமாலை சாத்தனும்..
அப்புறம்.. இந்தப் பொருளாதர வல்லுனர்கள் எல்லாம்
 இருக்கும் இந்திய நாட்டின் மத்திய வங்கி..
ரிசர்வ் பேங்க்க்.. க்கு
கோவிந்தா கோவிந்தா..
இனிமே .. என்ன பொருளாதர சரிவு வந்தாலும்
எங்க பணப்பெட்டி பீரோவும் 
அடுக்களையில் காயம் டப்பாவில் போட்டு வச்ச 
சில்லறையும் காப்பாத்திடும்னு எகானிமிக்ஸ் டைம்ஸில
ஃபீலா விட்டீங்க.. .. 
அப்போ தான் இருக்கு.. 
உங்களை எல்லாம் துண்டைக் காணும் துணியைக் காணும்னு
 பாஷா ரேஞ்சில ரிசவ்ர் வங்கி முன்னால அப்படியே 
அந்த பங்குச் சந்தையைச் சுற்றி சுற்றி ஓட விடனும்.. 

எந்தப் பொருளாதரத்தில் இப்படி எல்லாம்
 சொல்லிக்கொடுத்தாங்கனு தெரியலயே..

ட்டேய்.. சரவணா.. 
எங்களுக்கும்.. ஆடிட்டரை ஏப்பம் விடறதிலிருந்து
 வருமான வரியை ஏமாத்தற வித்தை வரை தெரியும்.
 எண்களுடன் எப்புடி விளையாடறதுனு  வித்தை எல்லாம்
 தெரியும்டே.. ஆனா..
இப்படி ஒரு வித்தையை எவராலும்
 கற்பனை கூட பண்ண முடியாதோடேய்..
….
ரிசர்வ் வங்கி சாமியாடிக்கெல்லாம் 
என்ன பூஜை செய்தாங்கனு தெரியலையே.
அது என்னப்பா.. போன நிதியாண்டில் 50,000 கோடியாக
 இருந்த உபரி வருமானம் (EXCESS INCOME) 
இந்த நிதியாண்டில் ரூ 176,000 கோடி நு
ச்சுய்ங்க் நு மேல ஏறிடுச்சி..
எப்பா.. என்ன செஞ்சு தொலைச்சீங்கனு தெரியலையே..
சரவணா..
ரூபாய் மதிப்பு ஏறுவதும் இறங்குவதும்..
அதுவும் இப்போ எல்லாம்
ஒரே இறங்குமுகத்தில் குடை ராட்டினம் ரிப்பேராகி
 கிடக்கும் போது
என்னத்தை செய்து இந்த அதிக வருமானம் 
காட்டுனாகனு தெரியலையே
மவராசா.. கணக்கு எங்க்டேயோ உதைக்குதே வாத்தியாரே..
Image result for rbi 1.76 lakh crore

எப்பா.. இந்த தேசத்தின் பொருளாதர சரிவுகளை 
சரிகட்ட டாலரை விற்பதுனு கேள்விப்பட்டிருக்கேன்..
 அது நடந்தும் இருக்கு.
ஆனா.. இவுக தொந்தரவு பொறுக்காமா.. நீங்க பாட்டுக்கு 
வெளி சந்தையிலே
வச்சிருக்கிற டாலர் பணத்தை வித்துட்டீகளா..
ஒன்னுமே புரியல..
எப்படிப்பா இம்புட்டு அதிகமாச்சு திடீர்னு..
2018ல் உங்க கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்தப்போவே
 உங்க திட்டம் படா டேஞ்சரா தான் இருக்கும்னு தோணிச்சி.
இப்போ..என்னவோ .. நடந்துப் போச்சு.
ட்டேய் சரவணா.. அப்படி என்ன
சமாளிக்க முடியாத பேரிடர் வந்துவிட்ட து?
தேசத்தின் இன்சூரன்ச் பாலிசி அதன் வட்டி 
இதெல்லாம் தான் ரிசர்வ் வங்கியின் இச்சேமிப்பு.

இதை எடுத்து செலவு செய்ய வேண்டிய அளவுக்கு
இந்திய தேசத்தின் பொருளாதர நிலை இருக்கிறதுனு..
ஒத்துக்கிட்டாங்கய்யா...
நிச்சயமாக யானைப் பசிக்கு இது சோளப்பொரிதான்..

பி.கு:
நிர்மலா சீதாராமன் அவர்களின் பட்ஜெட் பாடல் வரிகளைக் 
கொண்டு ரிசர்வ் பேங்கிடம் எப்படி பணம் வாங்குவது 
என்பதை விளக்கவும்.
விளக்கவுரை:
“காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும் பல்நாட்டு ஆகும்
நூறுசெறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே
வாய்புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே
கோடியாத்து நாடு பெரிது நந்தும்
மெல்லியன் கிழவன் ஆகி,வைகலும்
வரிசை அறியாக் கல்என் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போல
தானும் உண்ணான் உலகமும் கெடுமே ! “
(புறம் 184)
அரசே! நெல்லை அறுத்து யானைக்கு உணவு சமைத்துப் போட்டால், அது பலநாட்களுக்கு உணவாகும். அதுவே, யானையே சாப்பிட்டுக் கொள்ளட்டும் என்று யானையை நெல்வயலில் விட்டால், அது பசியாற உண்பதைக் காட்டிலும் அதன் காலால் மிதித்துச் சிதைப்பது மிகுதியாகும். அதுபோல அறிவுடைய அரசனே குடிமக்களிடம் (ரிசர்வ் பேங்க்கிடம்)முறையாக வரி (உபரி வருமானத்தை ) வாங்கினால் கோடியாக செல்வம் வளரும் நாட்டு மக்களும் விரும்புவர். முறையற்று தன் ஆட்களை ஏவி கருணை இன்றிப் பிடுங்கும் செல்வமானது யானை புகுந்த நிலம் போல் ஆகும். தானும் உண்ண மாட்டான். மக்களும் கெடுவார்கள்” என விளக்குகின்றார்.
----------------------------
இதனால் அறிய வருவது என்னவென்றால் பிசிராந்தையார் கோபித்துக் கொள்ள மாட்டார் என்பது தான்.. !
--- நாளைக்கு இன்னொரு ப்ரேக் நியுஸ் வந்திட்டா
சரவணா..நம்ம ஆட்கள் அதில ப்ஸியாகிடுவோமில்ல.

Wednesday, August 21, 2019

தொல் திருமாவளவனின் தேர்தல் அரசியலும் அரசியல் நோக்கமும்

Image result for thol thirumavalavan interview kaveri channelகூட்டணிகள் எப்போதுமே கூட்டணி கட்சிகள் தங்களின் அடிப்படைக் கொள்கைகள் என்று அறிவித்திருக்கும் கொள்கைகளின் ஒட்டுமொத்த அடிப்படையில் அமைவதில்லை.
குறைந்தபட்ச எதிர்கால திட்டங்களின் அடிப்படையில்
 கூட்டணிகள் இந்திய அரசியல் தேர்தல் களத்தில் அரங்கேறி
பல காலமாகிவிட்ட து.
ஆனால் தொல். திருமாவளவன் அவர்கள் மட்டும்
கொள்கை மாறாத தேர்தல் கூட்டணி வைத்தாக வேண்டும்.
(அடேங்க்கப்பா.. என்ன ஒரு எதிர்ப்பார்ப்பு.. மயிர்சிலிர்க்கிறது!!)
திராவிட அரசியலைப் பேசிய / அடையாளப்படுத்திக்கொண்டிருப்பதான
ஓர் அடையாளத்தை வைத்திருக்கும் திமுக ..
ஒரு காலத்தில் பிஜேபியுடன் கூட்டணி வைத்த்தும்
அவர்கள் கூட்டணி தர்மத்தில் வாஜ்பாய் அவர்கள் 
மகான் ஆக்கப்பட்ட தையும்
எவ்விதமான சலசலப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்ட
புத்திஜீவிகள் தான்..
திருமா கொள்கை கூட்டணியைப் பற்றி 
பதில் சொல்லியாக வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள்!
அதுமட்டுமல்ல…
ராகுல்காந்தி சட்டைக்குள் போட்டிருக்கும் 
பூணூலை எடுத்துக் காட்டியது ஏன்? 
அது மதவாதமல்லவா.. என்ற கேள்விக்கெல்லாம் கூட
தோழர் திருமா தான் பதில் சொல்லியாக வேண்டும்!

இதைக் காங்கிரசுக்கார்ர்களிடம் கேட்க மாட்டார்கள்.
ஏன் .. ராகுல்காந்தியிடம் கூட கேட்க மாட்டார்கள்..
ஒருவேளை தமிழ் நாட்டில் காங்கிரசு இல்லவே இல்லை
என்று இவர்களே முடிவு செய்துவிட்டார்களோ..
இதைக் கவனிக்க வேண்டியது காங்கிரசு தான்.
தோழர் திருமா அல்ல.
அது என்ன.. 370 கூட திருமா வின் அரசியலாக
முன்வைக்கப்பட்டு கேள்விகள் அவசரம் அவசரமாக்
கேட்கப்பட்ட தன் பின்னணி என்ன?
அதிலும் .. எனக்குத் தெரியாது… என்று ரொம்பவும்
தெளிவாக தோழர் திருமாவளவன் அவர்கள் சொன்ன பிறகு
“ஆஹா.. இதுதான் நம்ம கேள்விக் கணைகளைத்
 தொடுத்து எப்படியும் தலையைச் சுற்றி 
ஒளிவட்ட த்தைக் காட்டியே ஆகவேண்டும் என்ற முனைப்பு…
ரொம்பவும் வேடிக்கையாக முடிந்துப் போனது.
370 குறித்து வைகோ தான் அதிகம் பேசினார்.
ஆம்…
காஷ்மீருக்கு இந்திய அரசு செய்த துரோகத்தின்
 வரலாறு நேரு காலத்திலேயே ஆரம்பித்துவிட்ட து.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து குறித்து 
இந்தியச் சட்டம் சொல்வதும் 
காஷ்மீர் சட்டம் சொல்வதும் ஒன்றல்ல..
காஷ்மீரில் 70 ஆண்டுகள் நடந்த கலகம் 
தொடர் போராட்டங்கள்
இவை அனைத்துக்குமே காரணம்
 இந்தியா அரசு செய்த இந்த ஏமாற்றுத்தன வேலைகள் தான்.
இதை எல்லாம் மறைத்துவிட்டு…
அம்பேத்கரின் பெயரை வேண்டுமென்றே 
கேள்வியில் இழுத்துக் கொண்டு வந்து .. 
தன் கேள்விகளின் நோக்கம் என்ன என்பதை
வெட்ட வெளிச்சமாக்கிய 
மதன் அவர்களுக்கு கோடானக் கோடி நன்றிகள்…

We , the people of the state of the Jammu Kashmir…
ஜம்மு காஷ்மீர் குடிமக்களாகிய நாங்கள்….
இந்தியக் குடிமகன் எவனாவது இப்படி சொல்ல முடியுமா..
தமிழ் நாட்டு குடிமகனாகிய நாங்கள்… என்று
கேள்வி கேட்ட நீங்கள் சொல்ல முடியுமா..
இந்தியச் சட்டம் அனுமதிக்குமா..
எது என்னய்யா.. அவர்கள் ஜம்மு காஷ்மீர் குடிமக்களாகிய நாங்கள் …
(ஜம்மு-காஷ்மீர் குடிமக்களாகிய நாங்கள், இந்த எங்கள் மாநிலம் 26.10.1947இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதையும், அதன் பிரிக்க முடியாத பகுதியாக ஆனதையும் தொடர்ந்து, இந்தியாவுடன் ஆன எங்கள் உறவை வரையறுக்கும் தன்மையிலும் உறுதி பூண்டு இச்சட்டதை இயற்றிக் கொண்டோம்.)

உங்கள் கேள்வியில் ரொம்பவும் திடமான வலுவான கேள்வி
370 காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை
மயாவதி ஆதரிப்பதும் திருமா எதிர்ப்பதும் ஏன்? என்ற கேள்விதான்.
ஆனால் தமிழகத்தின் மா நில சுயாட்சி அரசியலை
முன்வைத்து பதில் சொல்லி இருக்க வேண்டிய 
ஆகச்சிறந்த வாய்ப்பை தோழர் திருமா அவர்கள் 
நழுவ விட்ட தில் எனக்குச் சின்னதாக ஒரு வருத்தம் ஏற்பட்ட து.

கூட்டணியில் கொள்கை தர்மம் இருக்க வேண்டும்
 என்று எதிர்ப்பார்ப்பது ஒரு கனவு. நடைமுறைக்கு ஒவ்வாத கனவு.
ஆனால் அந்த நடைமுறைக்கு ஒவ்வாத அனைத்தும்
தோழர் திருமாவளவனின் தேர்தல்அரசியலில் மட்டும் 
இருக்க வேண்டும், இருந்தாக வேண்டும்…
மற்றவர்கள் செய்தால் அரசியல் சாணக்கியம்.
தோழர் திருமா செய்தால் மட்டும் துரோகம்...
 இறுதியாக
நீ எப்படி மக்களை ஏமாற்றலாம்
என்றெல்லாம் கேள்வி கேட்பது…
உங்கள் கேள்வியின் அறத்தை வெளிப்படுத்தியதாக 
நீங்கள் நினைக்கலாம்.
. ஆனால் அது உங்கள் கேள்வியின் அரசியலை
வெளிப்படையாக உணர்த்திவிட்ட து.
வேறு எந்த ஒரு அரசியல் தலைவரையோ 
கட்சி மேலிட த்தையோ கேள்வி கேட்கும் போதெல்லாம் 
சவக்குழியில் கிடக்கும்\\தர்மங்கள் கொள்கைகள்.. எல்லாம்..
தோழர் திருமாவளவன் எதிரே உட்கார்ந்தால் மட்டும்
உயிர்ப் பித்துக் கொண்டு வெளிவருகின்றன.!
அந்த ஒற்றைத் தகுதி தோழர் திருமாவளவனுக்கு
மட்டுமே இருக்கிறதாக எடுத்துக் கொள்ளலாமா..
அல்லது
இதுதான் இவர்களின் குதர்க்கமான ஊடக அரசியல்
என்று புரிந்து கொள்ளவா..

Tuesday, August 20, 2019

அவளும் புடவையும்


அவளும் புடவையும்
அவள் புதுப்புடவை வாங்குவதற்கு காரணம் எதுவும் பெரிசா
இருக்காது. குடும்பத்தில் யாருக்குப் பிறந்த நாள் என்றாலும்
அவளுக்குப் புதுப்புடவை உண்டு. வி நாயகர் சதுர்த்தி முதல் தசரா வரை
அனைத்து பண்டிகைகளுக்குப் புதுப்புடவை வாங்கிவிடுவாள்.
ஏன் .. சுதந்திர தினத்திற்கு கூட புதுப்புடவை வாங்கிக் கட்டி
இருந்தாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
இதெல்லாம் அதிர்ச்சியாக இல்லை.
தேர்தல் வந்தப் போது ஓட்டுச்சாவடியில் போய்
ஓட்டுப்போடுவதற்கும் அவள் புதுப்புடவை வாங்கிக் கொண்டு
ஓட்டுப் போட்டு மோதியை ஜெயிக்க வைத்த தாகச் சொன்னாள்..


அன்று அவளுடைய 50 வது திருமண   நாள்.
மிகவும் அழகானப் புடவையில் அவள் ..
நாங்கள் அனைவரும் அவளுக்கு வாழ்த்துகள் சொன்னோம்.
அவள் திருமண  நாளின் நினைவுகளில் மிதந்து கொண்டிருந்தாள்.
அவள் முகத்தில் அந்த நாணம் … கண்களில் வெட்கம்..
அவள் கொண்டையில் செவ்வந்தி வேணி..
நான் எதுவும் சொல்லாமல் அவளையே ரசித்துக் கொண்டிருந்தேன்.
அவள் தன் கணவர் அவளைப் பெண்பார்க்க வந்த நாளில்
எந்த நிறத்தில் புடவை கட்டி இருந்தாலோ அதே வண்ணத்தில்
புடவை தேடி  அலைந்து வாங்கியதாகவும் ஆனால் பார்டர் மட்டும்
அப்படி கிடைக்கவில்லை என்றும் கொஞ்சம்
 வருத்தப் பட்டுக் கொண்டாள்..
அப்போதுதான் சொன்னாள்…
“எனக்கு அவர் வந்துப் பார்த்துவிட்டுப் போன பிறகு
 அந்தப் புடவையைக் கழட்டிக் கொடுக்கவே மனசு வரவில்லை. இப்படித்தான் வரன் பார்க்க வரும் போதெல்லாம்
 அம்மா பக்கத்து வீட்டில் அல்லது பக்கத்து தெருவில்
யாரிடமாவது நல்ல புடவையை வாங்கி வந்து தருவாள்.
நான் கட்டிக் கொள்வேன்.
அப்போதெல்லாம் தினமும் யாராவது
 என்னைப் பெண் பார்க்க வரக் கூடாதா 
என்று நினைப்பேன். 
அம்மா அடுத்தவர்களிடம்
வாங்கி வரும் புடவையைக் கட்டிக் கொண்டு 
கையளவு கண்ணாடியில் என்னைப் பார்ப்பதில் 
எனக்கு ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே கிடையாது.

ஒரு வழியா திருமணம் ஆகி மும்பை வந்தப்போ..
அவரு வேலை வேலைனு .. அடிக்கடி வெளியில் போயிடுவாரு.
அவரோட தங்கை அவள் பெட்டியில் 
நிறைய நைலான் புடவைகள் வைத்திருந்தாள். 
ஒரு புடவையாவது தரமாட்டாளா, 
கட்டிட்டு கொடுக்கலாமே
என்று மனசு ஏங்கு. அவள் புடவை வைத்திருக்கும்
 பெட்டியை பூட்டுப் போட்டு
பூட்டி சாவியை இடுப்பில் சொருகிக் கொள்வாள்…

வாழ்க்கை ஓடியது.. இரண்டு மகன், மகள் பிறந்தார்கள்..
கணவர் வெளியூர் போகும்போதெல்லாம் எனக்கு புடவை
வாங்கி வந்தார். நான் ரொம்பவும் சந்தோஷமாகிவிடுவேன்.
அதனாலேயே எங்கு போனாலும்
 எனக்குப் புடவை வாங்காமல் வர மாட்டார்.. 
அடுத்தப் பிறவி இருக்கானு தெரியல. இந்தப் பிறவியிலேயெ
எத்தனை விதமான புடவைகள் உண்டோ 
அத்தனையும் கட்டிடனும்னு ஆசை.. ..! ..”

இப்போதெல்லாம் அவள் புதுப்புது புடவையில் வரும்போது
நான் மறக்காமல் அவள் அந்தப் புடவையில்  ரொம்ப அழகா
இருப்பதாகச் சொல்லுகிறேன். ! 
 நான் அவளையும் அவள் புடவைகளையும் ரசிக்க
ஆரம்பித்துவிட்டேன்!




Thursday, August 15, 2019

பிச்சைப்பாத்திரம்

உறவுகள் & உடன்பிறப்புகள், நட்பு.. இவர்களின் விருந்துகளில் கறிவேப்பிலையாக இருந்திருக்கிறேன் என்பதை ரொம்பவும் காலம் கடந்து உணர்கிறேன்.
இளமையின் காதல் , வசந்தங்கள் , துடிப்பு உற்சாகம் உழைப்பு, பணம் இப்படியாக என் இழப்புகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. இத்தனையும் இழந்ததெல்லாம் யாருக்காக?
அந்த இழப்பில் ஏதோ ஒரு போதை
தூக்கமில்லாத நாட்கள்
களத்தில் தனித்து நின்று களமாடிய நாட்கள்
தொட்டிலை ஆட்ட மறந்து
குழந்தைக்கு ஊட்ட மறந்து ஓடிய ஓட்டங்கள்
இணையவில்லை தண்டவாளங்கள்.
எதையுமதிர்ப்பார்க்காமல் எவரிடமும் கை ஏந்தாமல் 
கொடுத்தே வாழ்ந்தது
 பெருமைக்குரியதாக இல்லாமல்
 இவ்வளவு ஏமாளியாகவா இருந்திருக்கிறோம்
 என்று யோசிப்பது யார்?
அந்த நான் தானா!
என் நடை தள்ளாடுகிறது.
 அட்சயப்பாத்திரம் உடைந்துவிட்டதாக 
அவர்கள் நினைக்கிறார்கள்.
யாரறிவார்..?
அம்மாவின் ஏழுகல் மூக்கூத்தி மின்னுகிறது.
அவர்களிடம் பெறுவதற்கு எனக்கு எதுவுமில்லை.
திருவந்தாதியின் பக்கங்களைப் புரட்டுகிறேன்
கர்ப்பஹிரகத்தின் வாசலில் காத்திருப்பது 
எச்சில் பருக்கைகளுக்காக அல்ல.
சிவகாமி..யின் ஒரு துளி கண்ணீர்..
அது என் பிச்சைப்பாத்திரத்தை நிறைத்துவிடும்.
பேயுரு கொண்டு இரவும் பகலுமாய்
அலைந்து அலைந்து களைத்துப் போனவளின்
காயம் .. ஆறுமோ..
அடியே .. இன்னும் என்ன மெளனம்..?

Wednesday, August 14, 2019

சுதந்திர இந்தியாவின் இரத்தக் கறைகள்



சுதந்திர நாளின் இரத்தக் கறைகளுடன்
“At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom,” announced Nehru, India’s first prime minister. (1947)
இந்த விடுதலையின் இன்னொரு பக்கத்தில்
ரத்தக் கறைகள்.
அழுகிய பிண நாற்றம்.
மரண இரயிலின் பயணம்.
Image result for india partition
கடந்த நூற்றாண்டின் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வு இந்தியப் பிரிவினை..
மிக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் தங்கள் வாழ்விடம் விட்டு நகர்ந்த / துரத்தப்பட்ட ரத்தக்கறைகளுடன் தான் இந்திய சுதந்திரத்தின்
வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.
பிரிட்டிஷ் இந்தியா பிரிக்கப்பட்ட போது மதச்சார்பற்ற இந்தியா ‘யூனியன் ஆஃப் இந்தியா’ என்றும்; முஸ்லிம்களின் பாகிஸ்தான் ‘டொமினியன் ஆஃப் பாகிஸ்தான்’ என்றும் பிரிந்தன. இந்த இரண்டையும் பிரிக்கும் எல்லைக்கோடுதான் ராட்கிளிப் கோடு. அதை உருவாக்கிய ராட்கிளிப்பின் பெயரால் அது அழைக்கப்பட்டது.
இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டபடி பிரிக்கப்பட்ட பகுதிகளில் பஞ்சாப்,வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட சோகம் அந்த மக்களின் வாழ்க்கையில் சொல்லொணா துயரத்தை எழுதி இருக்கிறது.
இந்தியா பக்கம் இருக்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் இந்தியாவுக்கும் இடம் பெயர வேண்டும்.மொத்தம் ஒரு கோடியே 45 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்தார்கள்.1951ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 72 லட்சத்து 27 ஆயிரம் முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குக் குடி பெயர்ந்தார்கள் என்று பாகிஸ்தான் தெரிவித்தது. அதே போல 1951 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இந்துக்களையும், சீக்கியர்களையும் சேர்த்து பார்க்கும்போது சுமார் 72 லட்சத்து 96 ஆயிரம் பேர் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் விரும்பி இந்த இடப்பெயர்ச்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையைச் சொன்னால் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டார்கள். பலர் உயிருக்குப் பயந்து ஓடி வந்தார்கள். இது இரு தரப்பு மக்களுக்கும் பொருந்தும்.
இந்தியப் பிரிவினையில் இறந்தவர்கள் 4 லட்சம் பேர் என்று வைத்துக்கொண்டால், அவர்களுள் 2 லட்சம் பேர் முஸ்லிம்கள்; சற்றொப்ப இறந்தவர்களில் சரிபாதிக்கு மேலானவர்கள் இசுலாமியர்கள்.. சுமார் 75 ஆயிரம் பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்கள்.
பிரிவினை பூகம்பம் பஞ்சாபை மிக மோசமாகப் பாதித்து உலுக்கியெடுத்தது. இடம் பெயர்ந்த ஒரு கோடியே 45 லட்சம் பேரில் சுமார் ஒரு கோடி பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள்.பிரிவினை வன்முறைகளின் போது உயிர் இழந்தவர்களில் மிகுதியானவர்களும் அவர்கள்தாம்.
இந்தியப் பிரிவினைக்கு யார் பொறுப்பு?
ஜின்னா மட்டும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கற்பிக்கப்படுவது வரலாற்றின் ஒரு பக்கத்தை இருட்ட டிப்பு செய்துவிடும். 
ஜின்னா, நேரு, நேஷனல் காங்கிரசு , இந்துத்துவ அமைப்புகள் , பிரிட்டிஷ் அரசாங்கம் எல்லோரும் தான் காரணம். 
இது நடந்த து சரியா என்பதற்கு அப்பால்…
இது நடந்த விதம் மிகவும் அதிர்ச்சிக்குரியதாகவும்
சமூக அரசியலையும் பொதுஜன உளவியலையும்
புறம் தள்ளிய அதிகாரத்தின் முகமாகவும் இருக்கிறது.
பிரிவினையைத் தவிர்த்திருக்க முடியாது. பிரிவினைக்குப் பிறகு இரு பிரதேச மக்களும் இடம் பெயர்வதற்கான கால அவகாசத்தை ஒரு உடன்படிக்கை வாயிலாக சாத்தியப்படுத்தி இருக்கலாம். இடப்பெயர்வு கலவரமின்றி
அமைதியாக நடைபெற இரண்டு நாடுகளும் ஒத்துழைத்திருந்தால் இன்றைய விரோத மனப்பான்மை ஆரம்பத்திலேயே முறியடிக்கப்
பட்டிருக்கும். 
இப்படியான ஒரு திட்ட த்தை அன்று இராஜாஜி அவர்கள் முன்வைத்திருக்கிறார். 
C R FORMULA என்று தேடினால் அதைப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன.
சி.ஆர் ஃபார்முலாவில் முதல் திட்டமே இடைக்கால அரசு தான். 
அப்படி ஒரு திட்டமிடலுடன் பிரிவினை நடந்திருந்தால்…
இந்திய சுதந்திரத்தின் ரத்தக்கறைகளாவது இல்லாமல் இருந்திருக்கும்.
எது நடந்ததோ அதை இனி ஒன்றும் செய்துவிட முடியாது.
ஆனால் அது இவ்வளவு கொடூரமாக நடந்திருக்க வேண்டாம். அதற்கான விலையை நாம் இன்றுவரை
கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
அந்த மரண இரயிலில் உறங்கிப்போன
கனவுகளுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Sunday, August 11, 2019

கண்ணா.. நீ தான் மோதிஜியா இல்லை



Image result for modi as krishna
மழைக்கால பாராளுமன்ற சிறப்பு பட்டிமன்றம்..
கண்ணன் யார்?
காண்டீபன் யார்?
அமித்ஷாவா ? மோதிஜியா!
காணத்தவறாதீர்கள்..
......
கண்ணா .. நீயும் மோதியா இல்லை
நீ தான் அமித்ஷாவா..
காஷ்மீர் மாறினால் கெளரவம் மாறுமா – நெவர்
கண்ணா நீயும் மோதியா இல்லை 
நீதான் அமித்ஷாவா
அறிவைக் கெடுத்ததோ தேர்தலின் கெளரவம்
அவர் மேல் தொடுத்ததோ அர்ஜூனன் கெளரவம்
நடந்தது அந்த நாள்
முடிந்ததா பாரதம்
நாளைய பாரதம் யாரதன் காரணம்?
ஹே.. கண்ணா
மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே
மூன்றென வைத்ததோ மக்களின் தலையிலே
வளர்த்த மக்களோ வெள்ளத்தின் பிடியிலே
மாறும் அவதாரமே அதுதான் உலகிலே
ஹே கண்ணா…
மக்களின் கெளரவம் தேர்தலின் முடிவிலே
மரிக்கின்ற உரிமையோ உங்களின் வடிவிலே
ஆகட்டும் பார்க்கலாம் ஆட்ட த்தின் முடிவிலே
இருவரும் ஆடினால் நீதி வெல்லுமோ உலகிலே
காலம் மாறினால் கெளரவம் மாறுமா
மக்களின் கனவுகள் மரித்து தான் போகுமா.. 
நெவர்..
ஹே கண்ணா..
நீயும் மோதியா இல்லை நீதான் அமித்ஷாவா..
நெவர்..

Thursday, August 8, 2019

காஷ்மீர் - லடாக் கின் குரல்

  Image result for ladakh mp

லடாக் தொகுதி மக்களவை உறுப்பினர் இனமான போராளி ஜம்யங் செரிங் நேம்ஜியலினார் அவர்கள் ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.

தோழரின் உரையை தமிழில் மொழி பெயர்த்த நெறியாளர் ஜெயகுமார் ஸ்ரீநிவாசன் அவர்களுக்கும், மொழி பெயர்ப்பு கட்டுரையைப் பிரசுரித்த நடுநிலை பத்திரிகை வலம் மாத இதழின் ஆசிரியருக்கும் நெஞ்சார்ந்த நன்றி

"பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் தவறான முடிவினால் நேர்ந்த பிழையை இன்றைய அரசாங்கம் சரிசெய்துள்ளது. அதை நாங்கள் வரவேற்கிறோம். இங்கே பேசிய பலரும் லடாக்கிலே, கார்கிலிலே என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் லடாக் என்றால் என்னவென்று தெரியுமா? கார்கில் என்றால் என்ன என்று தெரியுமா? இவற்றின் முழு விவரம் தெரியுமா?

இப்படிப் பேசிய பலரும் லடாக்கைத் தூக்கி ஓரமாகப் போட்டிருந்தார்கள். அங்கே உண்மையில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்று கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை. இதே நாடாளுமன்றத்தில், லடாக்கில் புல் கூட முளைப்பதில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். லடாக்கின் மொழி, உணவு, கலாசாரம், வேலைவாய்ப்பு, வாழ்க்கை முறை எல்லாம் அவர்களுக்குத் தெரியுமா? லடாக்கைக் குறித்துப் பேசிய அவை உறுப்பினர்களில் எத்தனை பேர் நேரில் லடாக்கை பார்த்திருக்கிறார்கள்? அவர்களுக்குத் தெரிந்த லடாக்கெல்லாம் புத்தகங்களில் வாசித்த லடாக் மட்டுமே.

லடாக் கடந்த 71 வருடங்களாக யூனியன் பிரதேசமாக மாற போராடிக்கொண்டிருக்கிறது. 1948ல் உருவான லடாக் ஜனசங்கத்தின் தலைவர், நேருவிடம் லடாக்கை, தனி யூனியன் பிரதேசமாக மாற்ற கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையில் லடாக்கை யூனியன் பிதேசமாக மாற்றுங்கள் அல்லது இந்தியாவின் இதர பகுதிகளோடு இணையுங்கள்; ஆனால் ஜம்மு காஷ்மீரோடு மட்டும் இணைத்து விடாதீர்கள் என்று கோரியிருந்தார். அன்றைய நேரு அரசாங்கம் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, அதைப்பற்றி யோசிக்கக்கூட தயாராக இல்லை.

காஷ்மீரத்தோடு சேர்த்ததால்தான் எங்கள் மொழி, வாழ்க்கை, கலாசாரம், வளர்ச்சி எல்லாம் தடைபட்டுப்போனது. பெரு மரியாதைக்குரிய டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, ஜம்மு காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து கொடுப்பதை எதிர்த்ததோடு, லடாக் ஜம்மு காஷ்மீரோடு இணைக்கப்படக்கூடாதென்றும் போராடினார். அவரை நாங்கள் இன்று நன்றியோடு நினைவுகூர்கிறோம்.

இன்னொன்றையும் மறந்துவிடாதீர்கள். பாகிஸ்தானோடு நடந்த அனைத்துப் போர்களிலும் லடாக் தனது பங்களிப்பையும் பலிதானத்தையும் இந்திய நாட்டிற்காக வழங்கியுள்ளது. 1948, 1972 மற்றும் 1999 வருடங்களில் நடந்த அனைத்துப் போர்களிலும் லடாக் மக்கள் தங்கள் இன்னுயிரை அளித்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் லடாக்கியர்கள் இந்தியாவைத்தான் தனது நாடாகக் கருதினார்கள். தங்களை இந்தியர்களாகத்தான் கருதினார்கள். இந்தியாவுக்கே தங்கள் வாழ்வையும் சாவையும் அர்ப்பணிக்க ஆசைப்பட்டார்கள். ஆனால் எங்கள் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக ஜம்மு காஷ்மீரோடு இணைக்கப்பட்டோம்.

மரியாதைக்குரிய காஷ்மீரைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ இவற்றை நீக்குவதால் என்னாகிவிடும் என்று கேட்டார். இதற்கு என்னுடைய பதில், இந்தச் சட்ட பிரிவுகள் நீக்கத்தால் மக்களுக்குச் சேரவேண்டிய பணத்தை, இரு குடும்பங்கள் மட்டுமே பிடுங்கித் தின்பது நிற்கும். மற்றும் ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை வளர்ச்சி பெறும். அதே உறுப்பினர்கள் இனி கார்கில் என்ன ஆகும் என்றெல்லாம் கவலை தெரிவித்தனர். ஆனால் கார்கிலின் 70% மக்கள் யூனியன் பிரதேசமாக ஆவதை முழு மனதுடன் வரவேற்கிறார்கள். 2014 தேர்தல் அறிக்கையிலேயே யூனியன் பிரதேசமாக மற்றுவதை சேர்க்கச் சொல்லியிருந்தோம். 2019 தேர்தல் அறிக்கையிலும் இதே கோரிக்கையைச் சேர்க்க வைத்தோம்.

கார்கில் மற்றும் லடாக்கின் ஒவ்வொரு கிராமத்தின் ஒவ்வொரு வீடுகளிலும் (பெளத்தர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் என்ற பாகுபாடில்லாமல் அனைவரிடமும்) சென்று யூனியன் பிரதேசமாக ஆவதின் அவசியத்தையும், நன்மையையும் எடுத்துச் சொல்லியிருந்தோம். அவர்கள் அனைவரும் ஒருமனதாகவும் முழுமனதாகவும் இதுவரை லடாக் பகுதியிலிருந்து தேர்வான பாராளுமன்ற உறுப்பினர்களைக் காட்டிலும் அதிகபட்ச வாக்குவித்தியாசதில் என்னை அவைக்கு அனுபிவைத்துள்ளனர். மக்கள் பாரதப் பிரதமர் திரு. மோதியை முழுமையாய் நம்பினார்கள். இந்தத் தனி யூனியன் பிரதேசத்து அறிவிப்பை முழுமனதுடன் வரவேற்கின்றனர்.

கார்கிலைப் பற்றிப் பேசும் அவை உறுப்பினர்களுக்கு கார்கிலைப் பற்றி என்ன தெரியும்? நாடாளுமன்ற கூட்டுக் குழு ஜம்மு மற்றும் காஷ்மீருக்குச் சென்றனர். மதிப்பிற்குரிய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் லே வந்திருந்தார். அப்போது அவர் கேட்ட ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்ற கேள்விக்கு, லடாக்கைத் தனி யூனியன் பிரதேசமாக மாற்றுங்கள் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்தது. வேறு என்ன வேண்டும் என்ற கேள்விக்கு, ‘லடாக்கைத் தனி யுனியன் பிரதேசமாக மாற்றுவது மட்டுமே எங்கள் கோரிக்கை; வேறு எதுவும் வேண்டாம்’ என்றோம். லடாக்கின் அனைத்து மத அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைவரும் ஒரே குரலில் லடாக்கைத் தனி யூனியன் பிரதேசமாக ஆக்க கையெழுத்திட்டு மனு அளித்தோம். இந்த மனுவில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கையெழுத்திட்டிருந்தன. ஆனால் ஜனநாயகம் பேசும் காங்கிரஸ் என்ன செய்தது? அம் மனுவில் கையெழுத்திட்ட காங்கிரஸ் தலைவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதுதானா உங்கள் ஜனநாயகம்? இதுதானா உங்கள் பேச்சுரிமை?

நேற்று (5-8-2019) காலை 11 மணியிலிருந்து சபை உறுப்பினர்கள் பேசுவதைக் கேட்டுகொண்டிருக்கிறேன். இந்த சட்டப்பிரிவுகளை நீக்குவதால் காஷ்மீர மக்களின் நிலைமை என்னாகும், அவர்களின் உரிமை என்னாகும் எனத் தொண்டை கிழிய கத்திக்கொண்டிருந்தனர். இந்த அவை மூலமாக அப்படிப் பேசுபவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். அவர்கள் மூலமாய் ஜம்மு காஷ்மீரத்தை ஆட்சி செய்பவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். இந்திய அரசாங்கத்திடம் இருந்து வரும் பணம் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கான பணம். ஆனால் நீங்கள் லடாக்கின் வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள்? லடாக்கிற்கான பணத்தையும் சேர்த்து காஷ்மீருக்குச் செலவு செய்தீர்கள். இதுவா உங்கள் சம உரிமை?

அடுத்ததாக, ஜம்மு மற்றும் காஷ்மீரத்திற்கு இரு தலைநகரங்கள். குளிர்காலத் தலைநகரம் மற்றும் கோடைகாலத் தலைநகரம். அதில் லடாக்கிற்கான பிரதிநிதித்துவம் என்ன என்பதைப் பாருங்கள். தலைமைச் செயலகத்தில் 1000 வேலை வாய்ப்புகள் உருவாகிறதெனில் காஷ்மீரிகள் எடுத்துக்கொண்டது போக, ஜம்மு மக்கள் சண்டையிட்டுப் போராடிப் பெற்றுக் கொண்டது போக, மீதம் உள்ளதில் எத்தனை இடங்கள் லடாக்கிகளுக்கு தந்தீர்கள். இதுவா உங்கள் சம உரிமை?

திரு அத்னான் என்ற உறுப்பினர் மத்தியப் பல்கலைக்கழகம் குறித்துப் பேசினார். காஷ்மீரிகளுக்கு ஒன்றும், போராடிப் பெற்ற ஜம்மு மக்களுக்கு ஒன்றும் கிடைத்தது. ஆனால் லடாக்கிற்காக, நான் மாணவர்கள் தலைவனாக, அனைத்து மாணவர்களையும் ஒன்றுதிரட்டி தலையில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமெனப் போராடினேன். கொடுத்தீர்களா? இதுவா உங்கள் சம உரிமை?

இப்போது லடாக்கின் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்படும் காங்கிரஸ் உறுப்பினர்கள், முதலமைச்சராக இருந்தபோது லடாக்கின் வளர்ச்சிக்காக என்ன செய்தீர்கள்? புதிய மாவட்டங்களைப் பிரிக்கும்போதும் பாதி காஷ்மீருக்கும் மீதி ஜம்முவிற்கும் கொடுத்தீர்கள். லடாக்கிற்கு என்ன கொடுத்தீர்கள்? இதுவா உங்கள் சம உரிமை?

வரிவடிவமே இல்லாத காஷ்மீர மொழிக்கு அந்தஸ்து கொடுத்தீர்கள். ஜம்முவின் மொழிக்கும் அந்தஸ்து கொடுத்தீர்கள். ஆனால் வரிவடிவமும், பேச்சு வடிவமும் கொண்ட தனித்துவம் கொண்ட லடாக்கிய மொழிக்கு இன்றுவரை மொழி அந்தஸ்து கொடுக்கவில்லை. இதுவா உங்கள் சம உரிமை?

உறுப்பினர்கள் அனைவரும் மதச்சார்பின்மை, மற்றும் மக்களாட்சி குறித்துப் பேசினார்கள் . அது குறித்தும் நான் பேச விரும்புகிறேன். சட்ட பிரிவு 370 இருக்கும் தைரியத்தில் காஷ்மீரப் பண்டிட்டுகளை இரவோடு இரவாக அடித்து விரட்டினீர்களே, இதுவா உங்கள் மதசார்பின்மை? இதுவா உங்கள் சம உரிமை?

அவை உறுப்பினர் ஒருவர் சொல்கிறார், லடாக்கில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகமுள்ளது, அவர்களின் நிலை என்னாகும் எனக் கவலைப்படுகிறார். நான் சொல்கிறேன், இதே சட்டப் பிரிவுகளைத் தவறாகப் பயன்படுத்தித்தான் லடாக்கிய பெளத்தர்களைப் படுகொலை செய்து, திட்டமிட்டே இஸ்லாமியர்களின் எண்ணிக்கை உயரும்படி செய்தீர்கள். இதுவா உங்கள் செக்யூலரிசம்?

இந்த இரு குடும்பங்கள், நான் சொல்கிறேன், அவர்கள் ஆட்சி செலுத்தவில்லை, ராஜாங்கம் நடத்தினார்கள்! இதே குடும்பம், 1979ல், லடாக்கை இரு பகுதிகளாகப் பிரித்தது. பெளத்தர்கள் மெஜாரிட்டியுடன் லே மாவட்டம், இஸ்லாமியர்கள் மெஜாரிட்டியுடன் கார்கில் மாவட்டம் எனப் பிரித்தீர்கள். லடாக்கிய சகோதரர்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள். இதுவா உங்கள் சம உரிமை? இதுவா உங்கள் செக்யூலரிசம்?

இங்கு அமர்ந்துகொண்டு கார்கிலில் முழு அடைப்பு எனச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு யார் சொன்னது கார்கிலில் முழு அடைப்பு என? புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்! நானிருக்கிறேன், லடாக்கிலிருந்து வந்திருக்கிறேன். எந்தப் புத்தகத்தையும் பத்திரிகைகளையும் படித்துவிட்டுப் பேசிக்கொண்டிருக்கவில்லை. கள நிலவரத்தை நான் லடாக்கியனாகப் பேசுகிறேன். நீங்கள் லடாக்கிலிருந்து வரவில்லை. நான் வந்திருக்கிறேன். இதுவரை நீங்கள் பேசி நாங்கள் கேட்டோம். இன்று நாங்கள் பேசுகிறோம், நீங்கள் கேளுங்கள். சௌகரியமாக அமர்ந்து கேளுங்கள்.

இவர்கள் அனைவரும் ஒரு சாலையையும், மார்கெட்டையும் கார்கில் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சகோதரரே, உங்களுக்கு கார்கிலைப் பார்க்க வேண்டுமெனில் சம்ஸ்கர் செல்லுங்கள், வாகா முல்கோட் செல்லுங்கள், ஆர்யன் பள்ளத்தாக்கிற்குச் செல்லுங்கள், த்ஸ்தி கர்கோன்னைப் பாருங்கள். 70 சதவீதப் பகுதிகளும், மக்களும் இந்த முடிவிற்கு வரவேற்பு அளிக்கின்றனர். இந்தச் சட்டத்திருத்தத்திற்கு நன்றி சொல்கின்றனர். கார்கிலில் இன்று நடப்பதாகச் சொல்வதெல்லாம் உண்மையில் நடக்கவில்லை, இங்கிருப்பவர்கள் அங்கே தொலைபேசி மூலம் பேசிச் செய்ய வைக்கின்றனர். அவர்களுக்கே தெரியாது தாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என. கார்கில் மக்கள் தங்கள் நலனைக்குறித்து யோசிக்க வேண்டும், இங்கிருந்து உத்தரவு கொடுப்பவர்களின் பேசுக்களைக் கேட்டுக்கொண்டிருக்கக்கூடாது.

ஜன சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி ஒரு தீர்மானம் எடுத்தார். ஒரு நாட்டில் இரு அரசு, இரு அடையாளங்கள், இரு தலைமைகள் இருத்தல் கூடாது, கூடாது, கூடாது என. இதே சங்கல்பத்துடன் நான் கர்வத்துடன் சொல்கிறேன், இவர்களுக்கே தெரியாது, இதுவரை லடாக்கியர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என. இவர்கள் இன்றைக்கு ‘எங்கள் கொடி போகிறது’ என ஒப்பாரி வைக்கிறார்கள். சகோதரா, லடாக்கியர்கள் 2011லேயே உங்கள் கொடியை அகற்றிவிட்டோமே, லடாக் ஹில் அட்டோனமஸ் டெவலப்மெண்ட் கவுன்சில் சேர்மன் , கவுன்சிலர், டெப்டி மினிஸ்டர் ஒரு தீர்மானம் செய்து ஜம்மு காஷ்மீர் கொடியை அகற்றிவிட்டு இந்திய மூவர்ணக் கொடியை அல்லவா பயன்படுத்தி வருகிறோம்! ஏனெனில் நாங்கள் இந்தியாவின் பகுதியாகவே இருக்க விரும்புகிறோம். இதுதான் லடாக்.

நான் இரு குடும்பங்களைப் பற்றிப் பேசி வருகிறேன். காஷ்மீரின் கௌரவம் காஷ்மீரின் கௌரவம் என தண்டோரா அடித்துக்கொண்டிருக்கிறார்களே, அவர்கள் சமாதானம் பேசுபவர்களல்ல. அவர்கள்தான் பிரச்சினையே. அந்தப் பிரச்சினை முடிவுக்கு வருகிறது. காஷ்மீர் தனது பாட்டன் சொத்து என்ற திமிரில் அவர்கள் அதிகார போதையிலிருக்கிறார்கள். அப்படி இல்லை, இல்லவே இல்லை.

எனது உரையை முடிக்கும் முன்னர் இந்திய அரசுக்கும், மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கும், அமித்ஷா ஜி அவர்களுக்கும், மற்றும் இந்த அவை உறுப்பினர்களுக்கும், இன்று எதிர்ப்பு தெரிவித்துவிட்டு நாளை இதன் பலனை அனுபவிக்கப் போகிறவர்களுக்கும் எனது முழு நன்றிகளை லடாக்கியர்கள் சார்பாகத் தெரிவிக்க விரும்புகிறேன், ஏனெனில், இந்திய சரித்திரத்தில் முதன்முறையாய் லடாக்கியர்களின் தேவைகளை, எண்ணங்களை இந்த அரசு கேட்கிறது. கார்கிலிலும், சீனத்தை ஒட்டியுள்ள பகுதியிலும் கஷ்டங்களை அனுபவிக்கும் லடாக்கியர்களின் கஷ்டங்களை இந்த அரசு புரிந்துகொள்கிறது.

இந்தச் சட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இதற்குப் பின்னரும் குழப்பத்தில் இருப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நாட்டின் மீது அன்பிருப்பின் அதை வெளியில் சொல், யாருக்காகவும் காத்திருக்காதே. கர்வத்துடன் சொல் ஜெய் ஹிந்த்! அபிமானத்துடன் சொல், நாங்கள் இந்தியர்கள் என!"

Tuesday, August 6, 2019

காஷ்மீர் 370.. எது வரலாற்று பிழை?

Image result for kashmir 370
எது வரலாற்றுப் பிழை?
காலம் தான் பதில் சொல்லும்.
நேருவின் வரலாற்று தவறு நீங்கிவிட்ட து.
பாரத மாதாக்கி ஜே.. என்று இன்றைய பிரதமர் மோதிஜி அவர்கள் மகிழ்ச்சியுடன் ..
காஷ்மீருக்கு 370 கிடையாது.
இனி காஷ்மீர் இந்திய நடுவண் அரசின் நேரடிப்பார்வையில் யுனியன் டெரிடரியாக… என்று அமித்ஷா அறிவிக்கும் போது
என் காலடி நிலம் அதிர்ந்து அடங்கியது.
ஜன நாயகப் படுகொலை .. என்று எதிர்க்கட்சிகளின் குரல்..
வெற்றுக்கோஷமாக முடங்கிப்போனது உண்மை.
370 சட்டவிதிப்படி காஷ்மீருக்கு கொடுத்திருக்கும் தனி அந்தஸ்து இந்திய வரலாற்றில் நீண்ட நெடிய திருப்பங்களைக் கொண்ட து.
370 ஐ சட்டமேதை அம்பேத்கர் ஆதரிக்கவில்லை என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. அதற்கான ஆதாரங்கள் அம்பேத்கரின் நேரடி எழுத்திலிருந்து கிடைக்கவில்லை.
1991ல் பிஜேபி பத்திரிகை தருண் பாரத் (an editorial in Tarun Bharat, an RSS mouthpiece, dated 1991 citing the verbal account of Balraj Madhok, an RSS veteran, about Ambedkar – four decades after his death!)
அம்பேத்கர் 370 ஐ எதிர்த்தார் என்று சொல்கிறார்கள்.
ஆனால் 370ஐ அம்பேத்கர் எழுதவில்லை என்பதும்
காஷ்மீருடனும் நேருவுடனும் நெருக்கமானவரும்
சட்ட வரைவுக்குழுவில் இருந்தவருமான கோபாலசாமி அய்யங்கர் அவர்கள் தான் எழுதினார் என்பதும் ஆதாரப்பூர்வமானவை. இந்த ஆதாரத்துடன் பார்க்கும் போது காஷ்மீருக்கு கொடுத்த 370 ஐ அம்பேத்கர் வரவேற்கவில்லை என்ற முடிவுக்குத்தான் வர வேண்டி இருக்கிறது. அம்பேத்கர் சொன்னதாக சொல்லப்படும் சொற்றொடர்களை விலக்கினாலும் கூட இந்த முடிவுக்கு மட்டுமே வர வேண்டி இருக்கிறது.
காஷ்மீர் விசயத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுடன் சர்தார் வல்லபாய் படேல் ஒரு விலகல் மனப்பான்மையுடன் இருந்த தையும் காஷ்மீர் நேருவுடன் சம்பந்தப்பட்ட நேரடி பிரச்சனையாக உருவகிக்கப்பட்ட தும், காஷ்மீர் ஒரு தலைவலி என்று படேல் சொன்னதும் இப்படியாக பல்வேறு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.
இனி…..
370 .. இல்லை.
காஷ்மீருக்கு என்று இருந்த தனி சட்டங்கள் ( சட்டப்புத்தகம்) இல்லை. காஷ்மீருக்கு தனிக்கொடி இல்லை. இந்திய சட்டங்கள் அனைத்தும் காஷ்மீர் மக்களுக்கும் பொருந்தும். காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து சிறப்பு விதிவிலக்குகளும் விலக்கப்படுகின்றன.
இதனால்.. காஷ்மீர் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.
காஷ்மீர் பொருளாதர வளர்ச்சி அடையும்.
என்று பிஜேபி அரசு சொல்கிறது.
ஒகே. நம்புகிறோம்.
காஷ்மீரில் இனி இந்திய இராணுவத்தின் கெடுபிடி
இருக்காதா,,?
370 ஐ நீக்கியதால் காஷ்மீர் தீவிரவாத அச்சுறுத்தலில்
இருந்து தப்பிக்கும் அல்லது குறையும் வாய்ப்புகள்
என்னவெல்லாம் சாத்தியம்?
என்னமாதிரியான பொருளாதர வளத்தை காஷ்மீருக்கு இந்திய அரசு கொடுக்கப்போகிறது?
இந்தக் கேள்விகள் எழுகின்றன.
இது ஜன நாயகப் படுகொலை என்ற ஒற்றை வார்த்தைக்குள் எதிரணி கூச்சலிடுவதில் அர்த்தமில்லை.
உலக நாடுகளின் வரலாற்றில் ஒவ்வொரு வல்லரசும்
இந்த மாதிரி தான் கலக க்குரல்களை அடக்கிவிடுகின்றன.
வளர்ச்சி, பாதுகாப்பு என்ற பெயரில் இந்த அடக்குமுறை தொடர்கிறது. இந்தியாவும் தன்னை வல்லரசு என்று நிரூபித்துவிட்ட து.
கல்வி பொருளாதாரம் நிம்மதியான வாழ்க்கை ..
இதற்காக காஷ்மீர் மக்கள் தங்கள் தனித்துவத்தை
விலையாக கொடுக்கப் போகிறார்கள். இதற்கு அவர்கள் காரணமில்லை என்றாலும் காஷ்மீர் அரசியல் காரணமாகிவிட்ட து.
காஷ்மீரில் இனி நிலம் வாங்கலாம்.!
வீடு கட்டலாம்..!
நட்சத்திர விடுதிகள் கட்டலாம்!!
தொழிற்சாலைகள் ஆரம்பிக்கலாம்..!!
காஷ்மீர் ஆப்பிள்களில் சிலர் தங்கள்
பிராண்ட் முத்திரைகளைக் குத்தலாம்.!!!
காஷ்மீரின் இயற்கை அழகுக்கு
வெளி நாட்டு முதலாளிகள் அள்ளிக்கொடுப்பார்கள் தானே!!!
இந்தியாவின் ஜிடிபி கூட இதனால் அதிகரிக்கும் வாய்ப்புண்டு… 
அடேங்க்கப்பா..
மோதிஜி…
வரலாற்றுப்பிழையை நீக்கியதாக சொல்கின்றீர்கள்..
எது வரலாற்றுப்பிழை என்பதை
காலம் தான் பதில் சொல்லும்.

அகண்ட பாரதக் கனவுகளில்
இமயம் கொஞ்சம் நடுங்கத்தான் செய்கிறது.
டியர் மோதிஜி.. & respected Amith Shah 
வரலாறு உங்களை மறக்காது.
 எங்களையும் தான்.!