Tuesday, February 28, 2017

ஜெ வழக்கும் மகாத்மாவின் தண்டனையும்




பொதுஜன உளவியல் பூதம்
"ஜெ" வின் வழக்கின் போது அண்மையில் கணம் நீதிபதியே கேட்கிறார்.
.. "ம்காத்மா காந்தியடிகளும் தண்டனை பெற்றவர்தானே என்று"??!!
முகநூல் / வலைப்பூ பதிவுகளை மட்டுமே கணக்கில் கொண்டு
 தமிழ்ச் சமூகத்தின் உளவியலை வாசித்துவிட முடியுமா?
என்ற கேள்வி எப்போதும் எனக்குண்டு.
அதிலும் குறிப்பாக அக்மார்க் அரசியல் பற்றிய பதிவுகளைச்சொல்லியாக
 வேண்டும். அரசியல் பதிவுகளை எழுதி பலரின் நட்பை இழந்திருக்கும்
 நானும் இதில் அடக்கம்.
அண்மையில் பிரேக் பிரேக் போட்ட தமிழக அரசியல் செய்திகளும்
 களங்களும் முகநூலில் நக்கலாக நையாண்டியாக
 அறச்சீற்றமாக ஏன் நாடக இயக்கத்தின் காட்சிகளாக
 இப்படி சகலமாகவும் அனைவரையும் எழுத வைத்துவிட்டது. 

ஜெ சட்டப்படி குற்றவாளி என்ற தீர்ப்பு வந்தப்பிறகும்
மக்கள் மன்றத்தில் ஜெ ஒரு குற்றவாளி என்ற பிம்பம்
 இன்னும் பதியவே இல்லை. அப்படியானால் அரசியல்
என்றாலே கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்
என்பதை மக்கள் எளிதாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்
என்றே எண்ண தோன்றுகிறது.
லஞ்சம், ஊழல், அதிகாரத்தைப் பயன்படுத்துவது என்பது
இன்று ஒவ்வொரு தமிழனின் - இந்தியனின் - 
ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்க்கை முறையாக இருக்கிறது.
தன் மகனுக்கோ மகளுக்கோ டாக்டர் /எஞ்சினியர் சீட்டோ
அல்லது போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலையோ 
இத்தியாதி எதையாவது பெறுவதற்கு மேற்சொன்ன லஞ்சமோ அதிகாரத்தைப் பயன்படுத்தலோ இல்லாத எந்த ஒரு குடும்பமாவது இருக்கிறதா என்று கேட்டால் ஏழரை கோடி தமிழர்கள் வாழும் மண்ணில் 
அப்படி வாழும் குடும்பங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
 இன்னாரின் சிபாரிசு இருந்ததால் இந்த வேலை சுலபமானது
 என்பதைக் கொஞ்சமும் வெட்கமின்றி வெளிப்படையாக 
சொல்லிக்கொள்கிறோம். அப்படி எல்லாம் எவராவது 
ன் வாழ்க்கையில் ஆதாயம் தேடவில்லை என்றால் அவரை
"சரியான பேக்கு... பிழைக்கத்தெரியாதவன்.உதவாக்கரை
useless... " இப்படி பல அடைமொழிகள் கொடுத்து ஒதுக்கி
வைத்துவிடுகிறோம்.
எனவே இயல்பாகவே லஞ்சமும்
அதிகாரத்தை தன் சுயலாபத்திற்காக பயன்படுத்துவதும்
வாழ்க்கையின் சாதாரண அம்சமாக மாறிவிட்டது 
என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.

இந்த உளவியல் மாற்றங்களை மிகவும் குறுகிய காலத்தில்
 கொண்டுவந்ததில் நம் கல்விமுறைக்கு பெரும்பங்குண்டு.
முன்னேறு.. என்று மட்டுமே சொல்லிக்கொடுக்கும் நம்
கல்விமுறையில் அடுத்தவனை மிதித்துக் கொண்டு
அடுத்தவனை அழித்துக்கொண்டு அடுத்தவன் தலையில்
ஏறி அடுத்தவன் அழிவில் தன்னை நிலைநிறுத்திகொள்ளும்
 உத்திகளை மட்டுமே கற்பிக்கிறது.
 இருத்தலியலை மட்டுமே வாழ்க்கையின் வெற்றியாகமாற்றிவிட்டது .
 எனவே கடந்துவந்தப் பாதையை விட நிற்கும் இடமே 
பிரதானமாகிவிடுகிறது.
கலை இலக்கியம் சினிமா என்று சமூக மாற்றத்திற்கான
தளங்களும் இதில் அடக்கம்.
 எனவே அரசியலில் இதெல்லாம் சகஜம்பா என்பதை
 பொதுஜனம் சாதாரணமாக ஏற்றுக்கொள்கிறார்.
இவை அனைத்தையும் விட முக்கியமானது...
 அரசியல் தளத்தில் கட்சி கொள்கை கோட்பாடு பேசுவதற்கோ
 லஞ்சம் ஊழல் சொத்துக்குவிப்பு பற்றி அறச்சீற்றம் கொள்வதற்கோ 
தகுதி உடைய தலைவரோ கட்சியோ 
மக்கள் மத்தியில் இல்லை
அதனால் தான் "ஜெ" குற்றவாளி என்று தீர்ப்பு வந்தப் பிறகும்
 அவரைக் குற்றவாளி என்று சொல்கிற தகுதி
இங்கே எவருக்கு இருக்கிறது? என்ற கேள்வியை 
போகிற போக்கில் கேட்கிறார் பொதுஜனம்.
குற்றம் சொல்ற இவன் பெரிய யோக்கியனா..?
சொல்ல வந்துட்டான் ! இம்மாதிரி வசனங்களை
உரையாடல்களை நாம் எல்லா தரப்பு மக்களிடமும்
கேட்கலாம். 
("நீங்கள் அத்தனைப் பேரும் உத்தமர் தானா ..? சொல்லுங்கள்..." பாட்டு )

1000 குற்றவாளிகள் இருக்கிறார்கள்
. அதில் ஒரு குற்றவாளியைக் கண்டுபிடித்து
 தண்டனைக் கொடுக்கும் போது மீதி 999 குற்றவாளிக்கும்
 தண்டனைக் கொடுத்து விட்டு இந்த ஆயிரமாவது
 குற்றவாளிக்குத் தண்டனைக் கொடுங்கள் என்பது லாஜிக்காக
 ரொம்பவும் சரியானது போல தோன்றும்.
 ஆனால் சமூக நீதியை நிலைநாட்ட
விரும்பும் போது யதார்த்த நிலையில்
 நிருபணமாகிவிட்ட குற்றவாளியைத் தண்டிக்காமல்
 இருப்பதற்கு எந்தக் காரணமும் காரணங்களில்லை
. எழுதப்பட்ட சட்டப்படியும் சரி, 
எழுதப்படாத தர்ம நியாயங்களின் படியும். சரி. 
ஆனால் இந்த சரியான லாஜிக் எல்லாம் 
நம்ம கணம் பொதுஜனத்தாரிடம் எடுபட மாட்டேங்குதே!!
இப்படி ஒரு பொதுஜன உளவியல் பூதகாரமாக..
எல்லாத்தையும் "ஜீ பூம்பா" மந்திரம் சொல்லி
நம்மை இந்த நிலைக்குக் கொண்டு தள்ளி இருக்கிறது.
அதனால் தான் நீதிமன்றத்தில் மகாத்மா காந்தியடிகளின் 
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கான சிறைவாசத்தையும்
 "ஜெ" வின் சிறைத்தண்டனையையும் ஒப்பிட்டு 
அண்மையில் தலைமை நீதிபதி வழக்குரைஞர்களின் 
வாதங்களின் போது கேட்கிறார்..
"மகாத்மா காந்தியடிகள் கூட தண்டனை பெற்றவர் தானே?" என்று.

கணம் நீதிபதியே இப்படி கேட்டால் அப்புறம் 
பொதுஜனங்கள் என்ன செய்வார்கள்!

Saturday, February 25, 2017

சிவலிங்க நாயகனே!



ஒளிப் பிழம்பாய்
மழைத் துளியாய்
ஆகாயத்தை எரிக்கிறது
உன் நெற்றிக்கண்ணின்
ஒற்றைத்துளி.

கருகி சாம்பலாகி
காற்றில் கலக்கிறது
நினைவுச் சுருள்
மீன் கொத்திப் பறவையின்
றக்கையிலிருந்து உதிர்கின்றன
காதல் கடிதங்கள்.

சாட்சியங்கள் ஒவ்வொன்றாக
ஆணுறைகள் நிரம்பி வழியும்
குப்பைத்தொட்டிக்குள் விழுகின்றன.

இருளைத் தின்று செரித்த
பெருநகரப் பிசாசுகள்
வெளிச்சத்தை வன்புணர்வு செய்கின்றன.

நதி ஒன்று
சாக்கடைக்குள் விழுந்து
மரணித்துவிடுகிறது.

ஹே சென்னி மல்லிகார்ஜுனா
சிவலிங்க நாயகா
திருவண்ணாமலையில்
சித்தர்கள் கிரிவலம் வரும் இரவில்
உன்  புதல்வி 
பூப்பெய்துவிட்டதற்காக
காமாட்டிப்புரத்தில்
விழா எடுக்கிறார்கள்.

Sunday, February 19, 2017

மும்பை மாநகர தேர்தல் களம்



மும்பையில் தேர்தல் களம் மாறிவிட்டது.
உள்ளாட்சி தேர்தல் வருவதும் போவதும் தெரியாதிருந்த
காலம் இருந்தது,  உள்ளாட்சி தேர்தல் என்பதும் அரசியல்
கட்சிகளின் ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்டது என்பதற்கிணங்க
அக்காலத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில்
அரசியல் தலைவர்களோ அமைச்சர்களோ கலந்து
கொள்வதில்லை. இன்று அதே தேர்தல்  களம் மாறிவிட்டது.
மராட்டிய மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்
கூட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். வெள்ளித்திரை சின்னத்திரை நடிகைகள் பிரச்சாரத்தில் முகம் காட்டுவது
ஒரு பக்கம் என்றால் தமிழ்நாட்டிலிருந்து குஷ்பு இங்கு
வந்து தான் சார்ந்த காங்கிரசு கட்சிக்காக பிரச்சாரம் செய்கிறார்.
இரு சக்கர வாகனங்கள் மட்டுமல்ல,
 மூன்று சக்கர வாகனங்கள் (ஆட்டோ ரிக்‌ஷாக்கள்)
 அரசியல் கட்சிகளின் கொடிகளுடன் சாலையில்
  சர்சர் என்று வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
 ஆகாயவிமானமும் மும்பையின் புகழ்மிக்க மின்சார ரயில்களும் தவிர அனைத்து வாகனங்களும் பிரச்சாரத்தை துப்பிக் கொண்டிருக்கின்றன.

கொடி பிடித்துக் கொண்டு ஊர்வலம் செல்லவும் வீடு வீடாக
சென்று ஓட்டு கேட்கவும் கூட்டம் கூட்டவும் ஏஜண்டுகள்..
அவர்களுக்கு நல்ல சம்பாத்தியம். ஒரு நாள் ஊர்வலத்தில்
கலந்து கொண்டால் ரூ 500/ ரொக்கப்பணம் + சாய்+ வடாபாவ் + பிஸ்லரி வாட்டர் இத்தியாதி வழங்கப்படுகிறது கட்சிக் கொடியுடன் ஓடும் வாகனங்களுக்கும் ஒரு நாளைக்கு
ரூ 500 முதல் 1000 வரை..
(இம்மாதிரியான தேர்தல் உத்திகளை இவர்கள்
 பிற மாநிலங்களிலிருந்து குறிப்பாக நம் தமிழகத்திலிருந்துதான்
அறிந்திருக்க வேண்டும்... )
 இப்படியாக தேர்தல் பிரச்சாரம்
சூடு பிடித்து இதோ இன்றுடன் முடிகிறது.
21/02/17 நாளை மறுநாள் தேர்தல்.

மற்ற மாநகராட்சி தேர்தலை விட மும்பை மாநகராட்சி
 தேர்தல் களம் வாழ்வா சாவா என்ற நிலையில் ஒவ்வொரு
முறையும் .. மராட்டிய மாநில சட்டசபை தேர்தலை விட
மும்பை மாநகராட்சி தேர்தல் அதி முக்கியத்துவம்
வாய்ந்ததாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும்
முக்கியமான காரணம் மும்பை பெருநகரின்
வருவாய் மட்டுமே. 2014 - 15 மும்பை மாநகரின் பட்ஜெட்
(estimate budget)  Rs, 31, 178  கோடி. இது கடந்த ஆண்டு
பட்ஜெட் தொகையை விட 27.72% அதிகம். கடந்த ஆண்டு
பட்ஜெட் தொகை ரூ 27,578/ கோடி. இந்த பெருநகரின் பட்ஜெட்
 இந்தியாவின் சில மாநிலங்களின் பட்ஜெட் தொகையை விட அதிகமானது என்பதையும் சேர்த்து வாசிக்கவும்.  இந்திய அரசின் வருமானத்தில் 40% மராட்டிய மாநிலத்திலிருந்துதான் வருகிறது என்றால் அதற்கு காரணமாக இருப்பது மும்பை தான். 
எனவே தான் மராட்டிய மாநிலத்தின் சட்டசபையை விட
மும்பை மாநகரின் மாநகராட்சி அரசியல் களத்தில் அதி
முக்கியத்துவம் உடையதாக மாறி இருக்கிறது.
மாநகராட்சியின் நெளிவு சுழிவுகளை இன்றைய அரசியல் வாதிகள்  தெளிவாக அறிந்து கொண்டதால் மும்பையின்
உள்ளாட்சி தேர்தல் களத்தின் முகம் மாறிவிட்டது.
இந்த மாற்றத்தை என்னைப் போல ஒவ்வொரு மும்பைவாசியும்
 பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சிவசேனா களத்தில் ஏன் உறுமுகிறது என்பதையும்
புரிந்து கொள்வது எளிதாக இருக்கிறது.
மாநகராட்சி சிவசேனா கைகளில் இருப்பதே
 மும்பைவாசிகளுக்கு நல்லது என்று மும்பைவாசிகள்
நினைப்பதற்கு எடக்கு மடக்கான காரணங்களும் உண்டு.
(வெளிப்படையாக எழுத முடியாது தானே)..
 
இந்த ஆண்டு மாநகராட்சி தேர்தலில் பல்வேறு வார்டுகளில்
தமிழர்கள் களத்தில் நிற்கிறார்கள். பிஜேபி, காங்கிரசு, அதிமுக
என்று அரசியல் கட்சி சார்ந்து நிற்பவர்களும்
சுயேட்சையாக நிற்பவர்களும் உண்டு.
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து
அயல்மாநிலத்தில் வாழும் தமிழர்கள்  களத்தில் நிற்கும்
தமிழர்களுக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று விரும்புகிறேன்.
  15 இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள்
வாழும் இம்மண்ணில் தமிழர்கள் அரசியல் சக்தியாக மாறுவது சாத்தியமில்லை என்றாலும் மாநகராட்சியில்
தமிழர்கள் வந்தால் அவர்களை அணுகுவதும்
 அடிப்படை வசதிகளைக் கேட்டு பெறுவதும் எளிதாகும்
என்ற நம்பிக்கை இருக்கிறது. செய்வார்களா...






Tuesday, February 14, 2017

மாற்று அரசியலுக்கான தருணம்



ஆபரேஷன் சக்சஸ் நோயாளி மரணம்.
இதுதான் நாம் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கும்
சொத்துக்குவிப்பு வழக்கின் வரலாற்று புகழ்மிக்க ( அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள்)  தீர்ப்பின் முடிவு.

ஊழலுக்கு எதிரான அரசியல்வாதிகள் இனி அச்சப்படுவார்கள் என்பதும் அரசியலில் இனி ஊழலே இருக்காது என்பதும் என்னளவில் இந்திய
அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும்போது
ஒரு மாயக்கனவுலக எண்ணமாகவே  - (UTOPIAN THOUGHT) இருக்கிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முதல்
குற்றவாளி மறைந்த "ஜெ" அவர்களின் மறைவும்
மக்கள் மனநிலையும் தலைவர்களின் அஞ்சலி செய்திகளுக்கு அப்பால் சொல்லப்பட்ட வார்த்தைகளும் ஒரு ஃப்ளாஷ்பேக் போல ஓடிக்கொண்டிருக்கின்றன. சசிகலா & அவர் உறவினர்கள் தண்டனைக்குரியவர்கள் தாம் என்பதை
ஏற்றுக்கொள்ளும் தருணத்தில் இதையும் சேர்த்தே வாசிக்க
வேண்டி இருக்கிறது.
அதிமுக கட்சியை உடைத்ததும் குழப்பம் ஏற்படுத்தியதும்
பிஜேபிதான் என்று சொல்லும் கருத்துடன் எனக்கு முழுமையான உடன்பாடில்லை.
ஏனேனில் பதவி ஆசைக் காரணமாக முதல்வர் பதவியை
சசிகலா கேட்டிருக்காவிட்டால் இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்? சசிகலாவின் முதல்வர் நாற்காலி ஆசை இன்னும் கொஞ்சகாலம் கடந்து வந்திருந்தால் கூட அதிமுகவின்  நிலை வேறுமாதிரி இருந்திருக்கும்.
சசிகலாவிடன் இப்படி ஒரு தேவையற்ற விருப்பத்தை
விபரீத ஆசையை அவருடைய பலநாள் கனவை
மிகவும்  தவறான நேரத்தில் வெளிப்படுத்த சொன்னது யார்?
பிஜேபியா? திமுக வா? யார்?

இங்குதான் அதிமுக தன்னைத்தானே படுகுழியில்
 தள்ளிக்கொண்டிருக்கிறது. இந்தச் சரிவில் வந்து
பந்து விளையாடுவது இந்திய அரசியல் போக்கில்
 எப்போதும் நடுவண் அரசில் இருப்பவர்கள் நடத்தும்
 விளையாட்டு.  காங்கிரசு இருந்தாலும் இதைத்தான் செய்திருக்கும் தோழர்களே.
பிஜேபி வந்துவிடும் வந்துவிடும் என்று இன்றைக்கு
 முகநூலில் பலர் அச்சத்துடன் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
பிஜேபி என்ற ஒரு அரசியல் கட்சி வரவேண்டும் என்றால்
அந்தக் கட்சியின் சில கொள்கைகள் தமிழ்நாட்டில் பெரியார் வாழ்ந்த மண்ணில் வாழும் மக்களிடம் இருக்க வெண்டும்.
பிஜேபியும் இந்துத்துவாவும் பிரிக்க முடியாதவை.
பிஜேபியும்  அதை விரும்புவதில்லை. ஆனால் தமிழகத்தில் 
மண்சோறு தின்பதும் அலகு குத்துவதும் மொட்டை அடிப்பதுமாக தன் விசுவாசத்தைக் காட்டும் தொண்டர்களை
உருவாக்கி வைத்திருப்பதற்கு பிஜேபி காரணமா அல்லது
இங்கிருக்கும்  அரசியல்வாதிகள் காரணமா ? ஊடகங்கள் காரணமா?
சமூகப்புரட்சி செய்த மகான்கள் பலர் இருக்க மதத்தில்
புரட்சி செய்த மகானைத் தேடிக் கண்டுப்பிடித்து அதை
காட்சி வடிவத்தில் காட்டி சொர்க்கவாசல்
கதவைத் தட்டிவிடலாம் என்று நினைக்கும்/ நினைத்தவர்கள்
காரணமா?
1999ல் திமுக பிஜேபியின் அரசியல் கூட்டணியை
ஏப்ரல் 26, 1999 அவுட்லுக் தன் கவர்ஸ்டோரியில்
"ஒரு சகாப்தம் முடிந்தது" this is the end of an era  அப்போது அந்த கூட்டணியை அரசியல் சாணக்கியம் என்று சொன்னவர்களும் உண்டுதானே!

சொத்துக்குவிப்பு வழக்கின் நோக்கம் ஊழலுக்கு எதிரானது என்று மட்டுமே புரிந்து கொள்வது ஆபத்தானது. இப்படி சொல்வதால் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவகள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்பதல்ல. அதிகாரம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முனையும் போது நீதிமன்ற வாசல்களில் நீதிதேவனின்
தரிசனம் கொடுக்கப்பட்டு புனித நீர் தெளிக்கப்படுகிறது.
அதே அதிகாரம் தனக்குத் தேவை என்றால்
ஊழலின் ராஜாங்கத்திற்கு பத்மவிபுஷன் விருது கொடுத்து
 தன்னைக் கவுரவித்தும் கொள்கிறது
. இரண்டு மாறுபட்ட காட்சிகளும் அரசியல் நோக்கம் கொண்டவை.
இந்த சொத்துக்குவிப்பு வழக்கிற்கு அரசியல் நோக்கமில்லை என்று சொல்லிவிட முடியாது. வழக்குத் தொடுத்தவர்களுக்கு வெற்றி என்றாலும் கூட இந்த வெற்றியை அவர்களால் கொண்டாட முடியவில்லை.
ஏனேனில் 'ஜெ"யின் மரணம் முந்திக்கொண்டது.
 ஜெ தன்னுடைய மரணத்தின் மூலம் இந்த வழக்கில்
 அவர்களை வெற்றி கொண்டுவிட்டார்.
இதுவே ஜெ வின் விசுவாசிகளுக்கு
பெரும் ஆறுதலாக இருக்கிறது.

மாநில அரசுகளை மாநில அரசியல்வாதிகளை அடக்குவதற்கும் மாநிலக்கட்சிகளை  உடைத்து சிதைப்பதற்கும்
 இந்த வழக்கின் தீர்ப்பை நடுவண் அரசினர்
எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும்
 ஆபத்தும் இருக்கிறது.
1000 கட்சிகள் .. அவற்றின் தலைவர்கள்.
ஊழலில் ஊறிப்போயிருக்கும் சமூகம்.
இங்கே எந்த ஒரு அரசியல்கட்சியும் சரி,
அரசியல்வாதியும் சரி, ஊழலற்றவர் என்று
சொல்லிவிட முடியாத நிலையில்
மாநிலக்கட்சிகளின் நிலைப்பாட்டை
இந்திய இறையாண்மையை கவலையுடன்
அணுக வேண்டி இருக்கிறது.

இம்மாதிரியான குழப்பமான சூழலில் தான்
சமூகம் தனக்கான தலைவரை அடையாளம் காணும்
என்பதும் சமூக அரசியல் இயக்கம் உருவாகும் என்பதும்
சமூகவியலாரின் கருத்து.
காளைமாட்டுக்காக காளைமாட்டில் தமிழர் கலாச்சாரம்
 காப்பாற்ற எழுந்த இளைஞர்கள் இனி தமிழக அரசியலில் ஒரு விடிவெள்ளியாக எழுவார்களா?
மாற்று அரசியலை உருவாக்குவார்களா?
களம் காண்பார்களா?
இல்லை வழக்கம்போல...
மாறி மாறி ஓட்டுப்போட்டு
மாறி மாறி ஓட்டுப்போட்டு
தங்கள் ஜனநாயகக்கடமையை
நிறைவேற்றியதாக நினைத்து
எப்போதாவது மெரீனாவில் கூடி தங்கள்
இருத்தலைக் காட்டிக்கொள்வதுடன் நிறுத்திக் கொள்வார்களா..?
இனி,,,

அரசியல் இளைஞர்கள் வசப்படட்டும்.

ஒளி படைத்த கண்ணினாய் வா வாவா...
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா...
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா...
சிறுமை கொண்டு பொங்குவாய் வா வா வா...
#மாற்று அரசியலுக்கான தருணம் இது#




Saturday, February 11, 2017

எம்ஜிஆரின் கனவு நனவாக...

எம்ஜிஆரின் கனவை நனவாக்க... இரு முதல்வர்கள் தேவை
அதிமுக வின் நிறுவனர் எம்ஜிஆர் என்பதில்
இன்றைய அதிமுக ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவருக்கும்
 இருவரின் அணியினருக்கும் கருத்து வேறுபாடு 
இருக்க முடியாது என்ற நம்பிக்கையில் இந்த ஆலோசனையை
 முன்வைக்கிறேன். மேலும் இம்மாதிரியான தீர்வை,
அதாகப்பட்டது இன்று கொதிநிலைக்கு தமிழகத்தை
கொண்டுவந்துவிட வேண்டும் என்று கையில் தீப்பெட்டி
மண்ணென்ணெய்யுடன் காத்திருப்பவர்களை முறியடிக்க
வேண்டும் என்றும் அசாதரணமான தமிழக அரசியலை
சாதாரணமான நிலைக்கு கொண்டுவரும் முயற்சியாகவும்
 இக்கருத்தை முன் வைக்கிறேன்.
அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் அவர்கள் திருச்சி மாநகரை
 தமிழகத்தின் தலைநகராக, அல்லது இணை தலைநகராக்க
 ஆசைப்பட்டார். ஆனால் அவர் ஆசை நிறைவேறவில்லை.
 அவருடைய ஆசையை மறைந்த " அம்மா" அவர்கள் கூட
 மறந்து விட்ட ஆசையை நிறைவேற்றியதுடன் இன்றைய 
அரசியல் சிக்கலைத் தீர்த்ததாகவும் இருக்கும்
  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று இதைத்தான் சொல்வார்கள்.
ஆளுநர் சென்னை மாநகருக்கு இணையாக திருச்சியையும்
 தமிழகத்தின் இணை தலைநகராக்க வேண்டும்.
சென்னையை தலைநகராக கொண்டு ஒருவரும் 
திருச்சியை தலைநகராகக் கொண்டு இன்னொருவரும் 
ஆக தமிழ்நாட்டில் இரு முதல்வர்கள். அவர்கள் விரும்பினால்
 மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது ஆறுமாதத்திற்கு
 ஒரு முறையோ தலைநகரை சுழற்சி முறையில் மாற்றிக்கொள்ளலாம்.
 இதில் சென்னையில் யார் முதல்வர், 
திருச்சியில் யார் முதல்வர் என்பதை மெரினா கடற்கரையில்
அம்மாவின் கல்லறையில் சீட்டுப் போட்டு தேர்ந்தெடுத்துக்
 கொள்ளலாம். 
அம்மாவின் தீர்ப்பே இறுதி தீர்ப்பு என்பதை 
கட்டுக்கோப்பான அம்மாவின் ஒன்றரை கோடி கட்சித் தொண்டர்கள்
 ஒற்றுமையாக ஏற்றுக்கொள்வார்கள்.
இம்மாதிரியான ஒரு தீர்வை எதிர்கட்சியாக இருக்கும் திமுகவினரும் ஏற்றுக்கொள்வார்கள். நாளைக்கு அவர்களும் ஆட்சிக்கு வந்தால்..
அவர்கள் வீட்டுப் பிரச்சனையில் .(!!)..
முதல்வர் யார் என்ற பிரச்சனைக்கு இதுவே அருமையான தீர்வு.

எனவே நிகழ்கால , வருங்கால தமிழகத்தின் அசாதாரணமான
 அரசியல் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு..
.தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக ஆளுநர் அவர்கள் 
இம்மாதிரி ஒரு தீர்வை முன்மொழியும் படி.. 
இதுக்கு இந்திய சட்டத்தில் இடமிருக்கிறதா என்று
டிவிக்காரர்கள் அக்னிப்பரீட்சை, நேர்படப்பேசு என்று
பேசி நம்மைக் குழப்பலாம். குழம்பிய குட்டயில் மீன் பிடிக்கலாம். கவனம்.
விடாதீர்கள்... புறப்படுங்கள்..
எம்ஜிஆரின் கனவை நிறைவேற்றியே தீருவோம்
.
(எப்பாடா இப்படியாக  ஒரு தீர்வைக் கண்டுபிடித்தப் பின் கொஞ்சம் தலைவலி குறைந்த மாதிரி இருக்கு. வாசித்த உங்களுக்கும் தலைவலி குறையவேண்டும் என்ற நல்லெண்ணத்தில்... )

Thursday, February 9, 2017

இந்துத்துவ பூச்சாண்டி

பன்னீருக்குப் பின்னால் முன்னால் பாரதிய ஜனதா. ஒகே.
சசிக்கு இடப்பக்கம் பிஜேபி
திமுக வுக்கு வலப்பக்கம் பிஜேபி.
இவுங்க எல்லோரையும் சுற்றி காவி ஒளிவட்டம்
சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது.
இதிலே பன்னீருக்கு மட்டும் ஏன் வறுத்தெடுப்பு?
இதுதான் எனக்குப் புரியலை.
அப்புறம் அது என்ன இந்துத்துவ பூச்சாண்டி..?
எங்கே எப்போ இல்லை இந்துத்துவ..!
நடுவண் அரசில்
காங்கிரசு ஆண்டபோது இந்துத்துவ இல்லையா
இல்லை இருந்ததை மறந்துவிட்டீர்களா.
இன்றைக்கு பிஜேபி வந்துடும் இந்துத்துவ வந்துடும்னு
பூச்சாண்டி காட்டுகிறவர்கள் ..
தமிழகத்தின் சர்வ அரசியல்வாதிகளுக்கும்
பின்னாலும் முன்னாலும் பிஜேபியும் இந்துத்துவமும்
இல்லை என்று சொல்ல வருகிறார்களா?
இல்லை என்று ஆணித்தரமாக 
எந்த ஒரு அரசியல்வாதியோ அரசியல் கட்சியோ
 சொல்லிவிடமுடியுமா?

பின்குறிப்பு: இப்பதிவை வாசித்துவிட்டு சட்டுனு
நான் இந்துதுவவாதி, பிஜேபி சப்போர்ட்னு
முத்திரை குத்திடாதீங்கப்பா.

Wednesday, February 8, 2017

அதீத உணர்வுகளின் மந்தைவெளி (உணர்ச்சி வழிபாடு அரசியல்)


#உணர்ச்சி வழிபாடு அரசியல்#

துள்ளு தமிழ் நடை தமிழ் மேடையை கைப்பற்றி
 தமிழ் மக்களை க்கர கர குரலுக்கு மயக்கி
அரசியல் தளத்தில் தனியிடம் பெற்று
 பெருந்தலைவர் காமராஜர் போன்றவர்களையும்
வெற்றி கொண்ட போது
அந்த மாற்றத்தை தமிழ்ச்சமூகத்தில் ஏற்பட்ட
மிகப்பெரிய மாற்றமாக கருதினோம். கொண்டாடினோம்.
அப்படிக்கொண்டாடியவர்களில் நானும் ஒருத்தி.

தமிழ் மொழி, தமிழினம், தமிழ்க் கலாச்சாரம் என்ற
தனித்துவ அடையாளங்களும் திராவிட நாடு, திராவிடதேசம்
என்பெதெல்லாம் சுருங்கி மாநில சுயாட்சியாக மாறியபோதும்
 அதையும் தமிழ்த் தேசிய அடையாளமாகவும்
இடதுசாரித் தமிழ்த்தேசியமாகவும் கொண்டாடினோம்.
தந்தை பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியமாகவே
என்னைப் போன்றவர்கள்  எண்ணி எண்ணி அதுகுறித்த
வாசிப்புகளிலும் தேடல்களிலும் இருந்ததும் உண்டு.
திராவிட அரசியல் களத்தில் மேற்குறிப்பிட்ட அனைத்தும்
எதற்காகப் பயன்படுத்தப்பட்டது, ஏன் பயன்படுத்தினார்கள்,
அப்படி பயன்படுத்தியதால் யாருக்கு லாபம்?
இதைப் பேசியவர்களும் பேசியவர்களின் வாரிசுகளும்
தலைவர்களானதும் இக்கருத்தியலை நம்பியவர்கள்
கொண்டாடியவர்கள் ஏமாற்றப்பட்டதும் கடந்த கால
அரசியல் வரலாறு.
இன்று திராவிட அரசியலை பிற அரசியல்
கட்சிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டும்
 எந்த ஒரு தனித்துவமும் 
தனித்துவமான தத்துவக் கூறுகளும் இல்லை.
இல்லை. இல்லவே இல்லை.
இதையும் தாண்டிய அவலம் என்னவென்றால்
மேலே குறிப்பிட்ட சொற்களை
வெறும் சொற்களாக மட்டுமே அறிந்திருக்கும்
 பெரும் கூட்டத்தை இன்றைய தலைமைகள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
அரசியல் களத்தில் நாற்காலிகளைக் காப்பாற்றிக் கொள்ள
என்ன தேவை, எது தேவையில்லை என்பது மட்டுமே
முன்னிலை வகிக்கிறது.
ஆனால் எந்த விதை விதைக்கப்பட்டதோ அந்த விதையின்
அறுவடை காட்சிகள் தான் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
உணர்ச்சிகள் உணர்ச்சிகள் உணர்ச்சிகள்
அதீத உணர்வுகளை ஊட்டுவதில் தேர்ந்தவர் எவரோ
அவரே மக்கள் மன்றத்தில் வலம் வருகிறார்.
சொற்கள் வெறும் ஒலிக்குப்பைகளாகி அரசியல்
களத்தில் குப்பைத்தொட்டிகளில் நாற்றம்..
நாற்றமெடுக்கிறது என்று சொன்னவர்களின்
நாசிகளை வெட்டி எரிந்தார்கள்.
அடையாளங்களுக்காக அலைந்த உடல்களில்
பால்வினை வியாதிகள் பரவியது.

புத்தனின் சிதைக்கப்பட்ட சிற்பங்களைப் போல
முடிந்துப்போனது அதிகாரவெளியை எதிர்த்தவர்களில்
வாழ்க்கை.
கவிதைகள் வாழ்த்துப்பாக்களாக மாறின.
விவாதங்கள் பட்டிமன்ற மேடைகளாகி இரண்டு
பக்கமும் கை தட்டும் அரங்கத்தை உருவாக்கினார்கள்.
மேடைகளில் முழக்கமிட்ட தமிழில் பாலாறும் தேனாறும்
ஓடின.
 எவ்வளவுதான் யதார்த்தநிலை அவர்கள் சொல்வதிலிருந்து
முற்றிலும் வேறுபட்டதாக இருந்தாலும்
அது பொதுப்புத்தியில் உறைப்பதில்லை.
இதை வளர்தெடுப்பதில் காட்சி
ஊடகங்கள் பெரும்பங்காற்றின.
பருவம் தவறி பெய்யும் மழையில்
துளிர்க்கும் பச்சை இலைகளையும்
 பெயர்த்தெரியாத காட்டுப்பூக்களையும்
ஏன் பட்டுப்போன மரத்தில் துளிர்த்த இலைகளையும்
ஆட்டுமந்தைகளுக்குத் தீனியாக்குவதில்
மந்தையை மேய்ப்பவர்கள் கவனம் செலுத்தினார்கள்.

கலை இலக்கிய தளமும் இந்த அரசியல் வேட்டையில்
தன்னை இழந்ததும் அரசியல் வேட்டைக்கு உதவும் 
நாய்களுக்கு மட்டுமே இடம் கொடுக்கப்பட்டு 
நாய்கள் குரைப்பதும் வாலை ஆட்டுவதும் மட்டுமே
ஆகச்சிறந்த கலை இலக்கியமாக மாறிப்போன அவலமும்
தமிழ்நாட்டில் மட்டுமே கடந்து அரைநூற்றாண்டுகளாக
நடந்திருக்கிறது...
 இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும்
இம்மாதிரியான அதீத உணர்வுகளின் மந்தைவெளிகள்
உருவாக்கப்பட வில்லை
. மண்ணின் மைந்தர்கள் கொள்கையை வளர்த்தெடுத்ததன் மூலம்
 அரசியல் களத்தில் இடம்பெற்ற சிவசேனா கூட
 அதீத உணர்வுகளின் மந்தைவெளியை உருவாக்கவில்லை.

இந்த அதீத உணர்வுகளின் மந்தைவெளியில் ஆடுகளை
மேய்ப்பவனுக்கு அதீத உணர்வுகளுக்கு தீனிப்போட
தெரிந்திருக்க வேண்டும்.  இல்லை என்றால் அவன் அவுட்.
அதனால் தான் எளிமையானவர்கள், திறமையானவர்கள்,
சிந்தனையாளர்கள் ஒதுக்கப்ட்டுவிட்டார்கள்,
தீண்டத்தாகதவர்களாக ஒடுக்கப்பட்டுவிட்டார்கள்.
அவர்களில் சிலரின் சிந்தனைகளும் எண்ணங்களும்
காயடிக்கப்பட்டுவிட்டன.
இனி... அதீத உணர்வுகளின் மந்தைவெளி...
மெரீனாவில் கூடி தமிழர் கலாச்சாரத்தைக் காப்பாற்றுங்கள்.
மெரீனாவில் தியானம் செய்து விழித்துக்கொள்ளுங்கள்.
நாற்காலி ஆசையில் உப்பிட்டவனைக் கொலை செய்யுங்கள்.
அண்ணன் தம்பி, அண்ணன் தங்கை,
தலைவி தோழி , அப்பா மகன் பேரன் மனைவி துணைவி,
தலைவர் தொண்டர்...
எல்லோரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு
கைகளில் மறைத்து வைத்திருக்கும் புலிநகத்தால்
ஒருவர் வயிற்றை ஒருவர் கிழித்து ரத்தம் குடியுங்கள்.
எல்லாம் முடிந்ததா...
இறுதியாக...
உங்கள் நீதிமன்றங்களில் இளைப்பாறிக்கொண்டிருக்கும்
ஆயுள்தண்டனைப் பெற்ற கைதிக்கு
முடிசூட்டுங்கள்.




...





அம்மா வேஷம் சகிக்கலை


கானமயிலாட கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாக பாவித்து தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே
சின்னம்மாவின் அம்மா வேஷம்.
சின்னம்மா... உங்க அரசியல் நெருக்கடியான தருணத்தில்
இதை எழுத வைத்ததற்கும் நீங்க தான் காரணம்...
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்... உங்கள் கருத்து என்ன?
என்ன என்று அறிவதற்காக தொலைக்காட்சியில்
 உங்களைப்பார்க்கும் போதெல்லாம்
 நீங்கள் நீங்களாக தெரிவதில்லை.

அது என்னவோ அம்மாவை நீங்கள் அப்பல்லோவுக்கு
அனுப்பிய பிறகு 
அம்மாவின் புடவை, அம்மாவின் கொண்டை,
 அம்மாவின் ரவிக்கை , அம்மாவின் கை அசைப்பு, 
அம்மாவின் நடை... 
அண்மையில் பார்த்தப்போது அம்மாவை போலவே
 நெற்றியில் பொட்டும் அந்தப் பொட்டுக்கு மேலே நாமமும்..
. (யாருக்கு நாமம் போடவோ!)
நீங்கள் இந்துப்பெண்ணின் வடிவம் என்று உங்கள் மீது
சொத்துக்குவிப்பு வழக்குப் போட்ட
 தற்போது உங்கள் குருவாக இருக்கும் சு.சுவாமி கூட 
உங்களுக்கு சர்டிபிகேட் கொடுத்துவிட்டார். 
அப்புறம் என்ன? எதற்காக இந்த மேக்கப்? நீங்கள் நீங்களாக இருங்கள்.
இந்த மேக்கப் உங்களுக்கும் உங்க கேரக்டருக்கும்
 கொஞ்சமும் பொருந்தவில்லை.
#சின்னம்மாவின் அம்மா வேஷம்#

Monday, February 6, 2017

I TOLD JAYALALITHAA WHO TO APPOINT

Image result for சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு


சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் நாள் ... நெருங்க நெருங்க..
சில நேரங்களில் சில மனிதர்கள் பேசியதை வழக்கம் போல மறந்துவிடும்
தமிழினத்திற்கு ஒரு நினைவூட்டல்... நடராஜன்... (சசிகாலாவின் கணவர்)
நேர்காணலிருந்து சில வரிகள்

"I told Jayalalithaa who to appoint.. She had no other option"
" நான் யாரை அடையாளம் காட்டினேனோ அவர்களைத்தான் அமைச்சர்களாக்கவும்
உள்துறை செயலாலர்களாகவும் அரசு அதிகாரிகளாகவும்  1991 ல் முதல்வரான
ஜெ  அவர்கள் நியமித்தார். ஆட்சியும் அதிகாரமும் அவருக்குப் புதிது என்பதால்
அனுபவமிக்க (?!!) என் சொற்களுக்கு செவிமடுத்தார்."
*
சசிகலா மற்றும் சசிகலா உறவினர்கள் பெயரில்  ஆரம்பிக்கப்பட்ட 23 கம்பேனிகளுக்கு
பணம் எங்கிருந்து வந்தது?
அரசு அதிகாரத்தில் இருந்தால் பணம் தானே வந்துவிடும்.
"When you are behind a political force, money will come"
**
அப்படியானால் இக்கம்பேனிகள் அனைத்தும் சசிகலாவுக்கு சொந்தமானதா?
> ஆமாம் .. நிச்சயமாக . இக்கம்பேனிகள் முழுக்க முழுக்க சசிகலா மற்றும்
அவர் உறவினர்களுக்குச் சொந்தமானது. இதில் ஜெ வுக்கு எந்தப் பங்கும் இல்லை.
ஜெ வின் பதவியையும் அதிகாரத்தையும் நான் பயன்படுத்தி இருக்கலாம்.
NDTV: So you are saying that could be the properties and assets belonging to you and other members of the Sasikala family
Natarajan: Yes, yes. Family only. It's not Jayalalithaa's.
I am not occupying any government position. I might have misused her position, misused her office also. 

முழு நேர்காணலும் வாசிக்க : http://www.ndtv.com/elections-news/i-broke-contact-with-jayalalithaa-554634?site=full

**

Thursday, February 2, 2017

பச்சைக்கிளி


எப்படி இருக்கும் என் பச்சைக்கிளி..
என்ன பேசுவேன் என் பச்சைக்கிளியிடம்
கடந்துபோன 38 ஆண்டுகளையும் விட
காத்திருந்த அந்த சில நிமிடங்கள்
நீண்டுக்கொண்டே இருந்தது.
பச்சைக்கிளி ... என் பச்சைக்கிளி...
பேசும் மொழி மறந்த பச்சைக்கிளி
காற்றில் கரைந்துப்போனது பெருமூச்சு.
எலிபெண்டா குகை சிற்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்
அவளையே நானும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அழகான சிற்பங்கள் ...
சிற்பத்தை சிதைத்தவர்கள் யார்?
கைகாலை உடைத்தவர்கள் யார்?
அவள் கேட்டுக்கொண்டே இருந்தாள்..
கடல் காற்று வீசியது..
குகையில் பார்த்த அதே சிற்பம்
என் பச்சைக்கிளியாக மாறியது அறியாமல்
படகு கடலலையில் தள்ளாடி தள்ளாடி
மதுரை மீனாட்சியின்
நினைவுகளைச் சுமந்துக்கொண்ட