Monday, October 1, 2018

மகாத்மாவின் ஆன்மீக மனைவி



காந்தியின் ஆன்மீக மனைவி 


"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும்
போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்"
காந்தி எப்போதுமே நம் விமர்சனத்திற்கும்
வியப்புக்கும் உரியவராகவே இருக்கிறார்.
இன்று அக்டோபர் 02.. அந்த மனிதனின்
நினைவுகளின் ஊடாக அந்த மனிதனின்
மனம் கவர்ந்த அவளும் .. 
அப்பெண்ணின் பெயர் சரளாதேவி. 
தன் “ஆன்மிக மனைவியாக”spiritual wife
என்றே எழுதுகிறார் காந்தி.
தென் ஆப்பிரிகாவில் இருக்கும் தன் நண்பருக்கு
10 ஆக 1920 ல் எழுதியக் கடிதத்தில் 
எங்கள் உறவு எந்த வரையறைக்கும் உட்பட்டதல்ல.
நான் சரளா தேவியை என் ஆன்மீக மனைவி என்று 
சொல்கிறேன்.. “
சரளாதேவியும் அவர் கணவரும் காந்தியைப் பின்பற்றி
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். அவர் 
கணவர் சிறை சென்றவர். சரளாதேவி வங்கக்கவிஞர்
ரவீந்திர நாத் தாகூரின் சகோதரி மகளாவார்.
இவர்களின் உறவைப் பற்றிப் பேசும் காந்தியின்
பேரன் ராஜாஜியின் கண்டிப்பான கடிதத்திற்குப் பிறகுதான்
காந்தி தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக
எழுதுகிறார். 
ஆன்மிக மனைவி, ஆன்மிகத் திருமணம்,
ஆன்மிக உறவு இவை எதுவுமே நடைமுறையில் 
சாத்தியமானவை அல்ல என்று சொல்லி காந்தி
தன் மனம் கவர்ந்த சரளாதேவியின் உறவுக்கு
முற்றுப்புள்ளி வைக்கிறார். 
50 வயதில் தான் தான் சந்தித்த 47 வயது பெண்ணான
சரளாதேவி யின் அறிவும் அழகும் காந்தி என்ற
மனிதனுக்கு தேவைப்பட்டிருக்கிறது ,
ஆனால் மகாத்மாவுக்கு?
காந்தியும் சாதாரண மனிதர்களின் இச்சைகளுடன்
வாழ்ந்திருக்கிறார். ஆனால் அதை அவர் கடந்து
வந்த பயணம்.. முக்கியமானது.
மனித உறவுகளுடன் எப்போதும் அவர் போராடிக் கொண்டே
இருந்திருக்கிறார். அந்தப் போராட்டத்தில் அவர்
தனக்குத் தானே எதிரும் புதிருமாக நின்று போராடியதில்…
சரளாதேவியும் ஒரு அத்தியாயம்.
சத்தியசோதனையில் அடங்காத அத்தியாயம்.

No comments:

Post a Comment