Thursday, March 23, 2017

ஆதித்தியாநாத் யோகியும் மர்மநபர்களும்

Image result for yogi adityanath image



உ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர்.
33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா..!
உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங்களை மூடப்போகிறார்.
இதில் மட்டும் சகிப்புத்தன்மையைக் காட்டக்கூடாது என்று
அதிகாரிகளுக்கு உத்தரவு. அதிரடி ஆட்டம் ஆரம்பித்துவிட்டது.
 கேட்டால் சட்ட விரோத பசுவதைக் கூடங்களை மூடப்போவதாக
 பிஜேபி தங்கள் தேர்தல் அறிக்கையில்
அறிவித்ததை செயல்படுத்தப்போவதாக சொல்லப்படுகிறது.
தேர்தல் அறிக்கையில் சொல்லிட்டா செயல்படுத்திடறது
 நியாயம்தானே! இருநாட்களுக்கு முன்  கன்சிராம் காலனியில் இருக்கும் இறைச்சி , மீன் கடைகளை மர்மநபர்கள் தீவைத்துக்
கொளுத்திவிட்டார்கள்.
யோகியின் சக்தி... ஆதித்தியா யோகியின் சக்தி.. 
மர்மநபர்கள் பலரை உருவாக்கும் சர்வ வல்லமைப் படைத்தது.
உங்கள் சக்தியின் முன்னால் எங்கள் ஜனநாயம் வெறும் தூசு.
யோகி ஆதித்தியா நமஹ..
(2)
உங்கள் சர்வவல்லமை சக்தியைப் பயன்படுத்தி
 உங்களின் புனித நதியான கங்கை மற்றும் யமுனையும்
காப்பாற்றுங்கள்.
கங்கையில் மட்டும் 1.5 பில்லியன் கழிவுநீர்
  (sewage )கலக்கிறது.
காசியில் செத்தால் சொர்க்கம் போகலாம் என்பதால்
 காசியில் மட்டும் 32000 எரிக்கப்பட்ட பிணங்கள்  மிதக்கின்றன.
அதனால் 300 டன் அளவு பிணங்களின் சதை நாற்றத்தால்
 அழுகிக் கொண்டிருக்கிறது கங்கை.
முடிந்தால் உங்கள் மர்மநபர்களைக் கொண்டு
 கங்கையைக் காப்பாற்றுங்கள்.. யோகிஜி.

மோதி நமஹ. யோகி ஆதித்தியா நமஹ.
ஓம் கங்கா ஸுதாய நமஹ

No comments:

Post a Comment