Friday, September 14, 2018

அறிஞர் அண்ணாவும் மோகன் ராணடேவும்




யார் இந்த மோகன் ராணடே?
அவருக்கும் தமிழக அரசியல் தலைவரான அண்ணாவுக்கும்
என்ன தொடர்பு?
மோகன் ராணடே தமிழர் அல்ல.
அவர் மராட்டியைத் தாய்மொழியாகக் கொண்டவர்.
ராணடே யார் என்று தமிழர்களுக்குத் தெரியாது.’
ராணடே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டால்
அதனால்… அதைச் சொல்லி..அதைவைத்துக் கொண்டு
தமிழக அரசியலில் எதையும் செய்து விட முடியாது…
இத்தனை தூரங்கள் 
மோகன் ராணடேவுக்கும் அவர் விடுதலைக்காக
போப்பாண்டவரைச் சந்தித்த அறிஞர் அண்ணாவுக்கும்
இருக்கிறது.

அண்ணாவின் இந்த அரிய செயல் 
அவருடைய அறிவாற்றலுக்கும் அப்பால்
அந்த சிறிய உருவத்தை என் நினைவுகளில்
விசுவரூபமாக்குகிறது.
அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில்
(செப்டம்பர் 15 ) ராணடே நினைவுகளுடன் நான்.





அண்ணாவுக்கு போப்பாண்டவரை சந்தித்து 
தன் வேண்டுகோளை வைத்துவிட்டு திரும்புகிறார்.
ராணடே வை விடுதலைச் செய்ய வேண்டும் என்று
இந்திய அரசு செய்த முயற்சிகள் தோற்றுப்போயின.
நேருவின் கடிதங்களும் நிராகரிக்கப்பட்டன. 
இச்சூழலின் தான் (POPE PAUL VI ) போப் அண்ணா
சந்திப்பு வாடிகன் அரண்மனையில் நடக்கிறது. 
மோகன் ராணடேவின் விடுதலைக்கு
தன் விருப்பத்தை ஒரு கோரிக்கையாக
வைக்கிறார் அண்ணா. கடிதமும் எழுதுகிறார்.
அண்ணாவின் இக்கோரிக்கை ஓர் அதிர்ச்சிகலந்த
சந்தோஷத்தை போப்புக்கு கொடுக்கிறது.
போப்பின் (சிபாரிசு) முயற்சியால் 
அதன் பின் ராணடே 1969 ஜனவரியில்
விடுதலை செய்யப்பட்டார்.
மராட்டிய ஆசிரியராக கோவாவில் வேலை செய்த ராணடே
கோவா விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட
இளைஞர். கோவாவில் ஆயுதம் ஏந்திப் போராடியவரும் கூட.
1955 அவரை கோவாவை ஆட்சி செய்து கொண்டிருந்த
போர்த்துகீசிய அரசு கைது செய்து சிறையில்
வைத்தது.
அதன் பின் அவரை கண்டெய்னர் கப்பலில் ஏற்றி
போர்ச்சுகல் நாட்டிலிருக்கும் லிஸ்பன் சிறையில்
அடைத்தது. அங்கிருந்து விடுதலையாகி வந்த
ராணடேவுக்கு இந்திய அரசு பத்மஶ்ரீ விருது கொடுத்து
கெளரவித்தது. கோவா அரசு புரஸ்கர் விருது கொடுத்தது.

1 comment:

  1. அண்ணா
    ராணடே
    நினைவுகளைப் போற்றுவோம்

    ReplyDelete