Wednesday, January 17, 2018

ஆண்டாள் எழுதிய திருவெம்பாவை..??

ஆண்டாள் எழுதிய திருவெம்பாவை
"ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு 
நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது!"
அறிக்கையின் முதல்வரி :
"ஆண்டாள் தமிழச்சி, 3000 ஆண்டுகளாக பேசவும் எழுதவும் படும்
இழையறாத தமிழ்மொழியில் 1200 ஆண்டுகளுக்கு முன்பே
திருவெம்பாவை திருப்பாவை பாடியவர்...."

ஆண்டாள் கட்டுரை விவகாரத்தில் வைரமுத்துவுக்கு
ஆதரவாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை
மின்னம்பலம் வாயிலாகவும் தோழி மீராவின் முகநூல் பதிவு
மூலமாகவும் அறிந்து... நொந்து நூலாகிப்போயித்தான்
இதை எழுதுகிறேன்.
ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது.
ஜனநாயக ரீதியாக கருத்து சுதந்திரம் என்ற ஆகச்சிறந்த
தளத்தில் நின்று ஓர் அறிக்கையைத் தயாரிப்பவர்களின்
தகுதியை இதை வைத்து நிர்ணயிப்பதா?
அல்லது நாங்க தான் மேதாவி, நாங்க சொல்றதுதான்
கனமானது என்ற கண்மூடித்தனத்தைக் கண்டும்
காணாமல் இருப்பதா?
இதெல்லாம் ஜஸ்ட் கவனக்குறைவு என்று மேம்பாக்காக
சொல்லவருபவர்களின் ஜஸ்ட் லைக் தட் என்ற
மனநிலைக்குப் போவதா..?
ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு
நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது!
ஓம் நமசிவாய.
மாணிக்கவாசகர் எம் தமிழ் கூறு நல்லுலகை மன்னிக்க
வேண்டும்.

அறிக்கை :
Image may contain: 8 people, people smiling, text

9 comments:

  1. பிரபலமானவர்கள் "சரக்கு" தீர்ந்து விட்டால் இப்படி செயலில் இறங்குவது காலங்காலமாக இருக்கத்தான் செய்கிறது.

    ReplyDelete
  2. ஆண்டாள் பாடியது ‘திருப்பாவை’ – மாணிக்கவாசகர் பாடியது ‘திருவெம்பாவை’ – இரண்டையும் ஒருவரே (ஆண்டாள்) பாடியது போன்று அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். படித்துப் பார்க்காமலேயே அறிக்கையில் ‘மொட்டைக் கையெழுத்து’ போடும் இவர்களை என்னவென்று சொல்வது.

    நாளையே, எங்கள் பெயரில் உள்ள இந்த அறிக்கையில் எங்கள் பெயர்தான் உள்ளது. ஆனால் நாங்கள் கையெழுத்து இடவில்லை என்று மறுப்பு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை,

    ReplyDelete
    Replies
    1. //நாளையே, எங்கள் பெயரில் உள்ள இந்த அறிக்கையில் எங்கள் பெயர்தான் உள்ளது. ஆனால் நாங்கள் கையெழுத்து இடவில்லை என்று மறுப்பு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை,//
      (: உண்மை.

      Delete
  3. கவிப்பேரரசு திருத்திக்கொள்வார்!
    காவிகள் திருந்தமாட்டார்கள்! என்று பழமையான பத்திரிகைக்கு எழுதினேன்...ஏனோ வெளியிடவில்லை.
    வைரமுத்துவும், தினமணியும் வருத்தம் தெரிவித்து விட்டது.
    அடுத்தக் கட்டத்திற்கு செல்வோம்.
    -மும்பை இரா. சரவணன்

    ReplyDelete
  4. அதைத் தவிர அம்மடலில் வேறெந்த கருத்துப்பிழையிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்த ஒரு பிழைக்காக முழ்மடல் வைக்கும் வாதத்தைத்தள்ளினால் உங்களுக்கொரு உள்ளோக்கம் இருப்பதாகத்தான் நினைக்க வேண்டிவரும். உள்ளோக்கமேன்? நேரடியாகவே எதையும் சொல்லலாமே?

    மடல் வைக்கும் கருத்து தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்தைக் காப்பதற்காகவே. தமிழ்ப்புலவர்களை, தமிழ் இலக்கியத்தை ஒரு மதவாதிகளே தமதாக்கிக்கொள்ளும் நிலைவரும்போது என்னாவாகும் என சிந்தித்துப் பாருங்கள். அந்நிலை வரலாமா என்ற கேள்வியைத்தான் இம்மடல் நமக்கு எச்சரிக்கையாக வைக்கிறது.

    இதே கருத்தைத்தான் என் பதிவிலும் வலியுறுத்தியிருக்கிறேன். எட்டு கோடி தமிழர்களின் சொத்து ஒரு சிறிய கூட்டத்தால் அபகரிக்க விடக்கூடாதென்பதே பேராசை.

    வெப்சைட்: https://freeflowofthoughts.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. ஓர் அறிக்கையை அதுவும் பிரச்சனை தீவிரமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் போது வெளியிடும் ஆதரவு அறிக்கையில் இவ்வளவு கவனக்குறைவா ? இதுதான் இப்பதிவின் நோக்கமும் ஆதங்கமும். இதையே உள்நோக்கம் என்று சொன்னால், இப்படி ஓர் அறிக்கையை முதல்வரியிலேயே தவறாக வெளியிட்டதற்கும் உள்நோக்கம் உண்டோ என்ற கேள்விதான் எழுகிறது. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

      Delete
  5. Thiruppavai Controvercy is leading to a new dimension. Bunch of Tamil Scholars collectively supported on behalf of Vairamuthu. Casually neglected to verify the authorship of Gorilla so and Tiruvempavai.

    ReplyDelete
  6. Correction: Authorship of Tiruppavai and Tiruvempavai

    ReplyDelete
  7. அறிக்கை தயாரிந்தவர்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் பாணியை அப்படியே பின்பற்றியிருக்கிறார்கள்.
    ஆண்டாள் தமிழச்சியாக இருந்தாலும் எல்லா இனங்களுக்கும் பொதுவானவர்.
    ஒரு இனத்துக்குள் அவரை அடைக்க முடியாது.
    அனைத்து இனங்களுக்கும் மதங்களுக்கும் பொதுவானவர்.
    ஜனநாயக ரீதியாக கருத்து சுதந்திரம் வைரமுத்துவிற்கு மறுக்கபட்டு அவர் மீதான பயமுறுத்தல்களுக்கு எதிராக கண்டணம் தெரிவிப்பதற்கு பதிலாக மதவாதிகள் பாணியை பின்பற்றினால் இப்படி தான் பொய்களை அடித்து விடவேண்டும்.

    ReplyDelete