Saturday, January 30, 2016

தேசப்பிதாவும் ஒரு தமிழனும்

டியர் தேசப்பிதாவே...

Ahmedabad, January 15, 1916 _ Gandhi's letter to VOC, whose draft reply is seen below Gandhi's signature.

உங்கள் நினைவு நாளில் உங்களைப் போற்றவில்லை என்றால்
நான் தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்படலாம்.
எனவே..
போற்றி போற்றி
தேசப்பிதாவைப் போற்றி
போற்றி போற்றி
மகாத்மாவைப் போற்றி..
போற்றி போற்றி
எப்போதும் லேட்டாகவே
விழித்துக்கொள்ளும்
மகாத்மாவின் உள்ளுணர்வைப் போற்றி..
போற்றி போற்றி போற்றி..
வாழ்க தேசப்பிதா.

இதெல்லாம் இருக்கட்டும்.
ரூ 394 & 12 அணா தொகை
தென்னாப்பிரிகாவில் வாழும் தமிழர்
கப்பலோட்டிய வ உ சிக்கு திரட்டிய நிதி..
வாங்கி வந்த நீங்கள்
வ உ சி கேட்காமலேயே அவருக்குத் திரட்டிய தொகையை
கொடுத்திருக்க வேண்டும்.
அல்லது நீங்கள் சென்னை வந்திருந்தப்போது
1915 மே மாதத்தில் வ உ சி உங்களைச் சந்திக்க வந்திருந்தப்போதே
எடுத்துக் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால்.. நீங்களோ.. 6 மாத காலம் எடுத்துக் கொண்டீர்கள்.
அதுவும் வ உ சி பலமுறை கெஞ்சியும்
பணம் பெறுவதற்கான உரிமையைக் கோரியும்
நீங்கள் காலம் தாழ்த்தினீர்கள்.
வாங்கி வந்த தொகை எவ்வளவு என்று தெரியாது
என்று சொன்னீர்கள்.
தென்னாப்பிரிகாவிலிருந்து அவர்கள் ரசீதுகள்/கணக்கு ஏடு
அனுப்பும் வரை காத்திருக்க வைத்தீர்கள்..

சரி.. எபபடியோ..
ரூ 394,& 2 அணாவை
நீங்கள் திருப்பிக் கொடுத்துவிட்டீர்கள்!
அதற்காகவே உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!!

நீங்கள் கணக்கு விஷயத்தில் இவ்வளவு கறாராக
இருந்தது சரிதான். ஆனால் அத்தொகை உங்களிடம் சிலகாலம்
இருந்ததால், அதற்குரிய வட்டிப்பணத்துடன் நீங்கள் திருப்பிக்
கொடுத்திருந்தால் .. இன்னும் கூட இரண்டு போற்றி போற்றி
கூடுதலாகப் போட்டிருப்பேன்.

அது எப்படி.. உங்கள் சத்தியசோதனையில்
இந்தக் கணக்கு மட்டும் கழிக்கப்பட்டது?

மகாத்மாஜி..
உங்களுடன் உங்கள் பரிவாரத்தில் இருந்த
கவிக்குயில் சரோஜினி நாயுடு சொன்னதுதான்
இத்தருணத்தில் நினைவுக்கு வருகிறது.
"To keep Gandhiji in Poverty , the congress party has to spend
millions of rupees"

நன்றி: வ உ சிக்கு காந்தி எழுதிய கடிதங்களைப் பதிப்பித்து
உண்மையை வெளிக்கொண்டு வந்த ஆ.இரா.வேங்கடாசலபதி
அவர்களுக்கு..



Tuesday, January 19, 2016

நிழல்களிலிருந்து நட்சத்திரங்களை நோக்கி..




அவன் தற்கொலைக்கு நாமும் தான் காரணம்

அவனுக்காக கண்ணீர் வடிக்கும் உங்கள்
கண்ணீரின் ஈரம் வற்றிவிடுவதற்குள்
என் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிடுங்கள்
பதில் சொல்வது
உங்களுக்குப் பழக்கமல்ல என்றால்
உங்கள் மனசாட்சியிடம்
இக்கேள்விகளை விட்டுவிடுங்கள்.
அவன் தற்கொலைக்கு அவன் மட்டுமா காரணம்?
நீங்களும் தானே.
சாதி வன் கொடுமைகள், இம்மாதிரி அதிர்ச்சி தரும்
தற்கொலைகள் நடந்தால் மட்டுமே
கண்ணீர் சிந்தும் உங்களின் கருணை உள்ளம
உங்களை சாதிக்கொடுமைக்கு எதிரானவராக
காட்டும் தூரிகையாக இருக்கிறதே தவிர
இன்றுவரை நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?
எதை / எவரை எல்லாம் கொண்டாடுகிறீர்கள்?

இதோ பாருங்கள்,,,

நம் எல்லோருக்குமே இரு அடையாளங்கள் இருக்கின்றன.
ஒன்று இன அடையாளம், இன்னொன்று சாதி அடையாளம்.
இது தவிர்க்கமுடியாத யதார்த்தம்.
சமூக நெருக்கடிகள் ஏற்படும்போது இரு அடையாளங்களும்
எதிரெதிராக .அம்மாதிரி சந்தர்ப்பங்களில் நாம் எப்படி
நடந்து கொள்கிறோம்?
சாதிக்கொடுமையைச் செய்தவர் நம் சொந்த சாதிக்காரன் என்றால்
அவனைக் க்ண்டித்த கலைஞன்/ எழுத்தாளன் யார்?
நிகழ்காலத்தில் சாதிகள் ஒன்றையொன்று மனிதாபிமானமில்லாமல்
தாக்கிக்கொண்டிருக்கும் போது
சங்ககாலத்தின் வீரத்தையும் காதலையும் பேசி, ஜல்லிக்கட்டில்
நம் பண்பாடு புதைந்திருப்பதாக வெத்துக்கூப்பாடு போடும்
கூட்டத்தை/ உரத்துப் பேசும் தலைவர்களை வளர்த்துக்
கொண்டிருக்கிறோம்.
இதோ இந்த ம்ரணத்திற்காகவும் ராகுல்காந்தி முதல்
டில்லி முதல்வர் அரவிந்த் ஜெஜ்ரிவால் வரை
கண்டண அறிக்கைகளை வெளியிடலாம்
இந்த அரசியல் நமக்குப் புதிதல்ல.
ஏனேனில் கண்டன அறிக்கையில் சொல்லப்படும்
எதையும் செயல்படுத்தும் திட்டம்
இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும்/தலைவருக்கும் இல்லை.

*

ரோஹித்.. உன் தற்கொலைக்கு நீ மட்டும் காரணமல்ல.
எனக்குத் தெரியும்.. ஒடுக்கப்பட்ட மக்களின் இறையாண்மையை
மதிக்காத ஒவ்வொரு இந்தியனும் உன் தற்கொலைக்கு
காரணமானவர்கள்.

*

உங்கள் அடிமைத்தனத்திலிருந்து அக்குவேர், ஆணிவேருடன் முழுமையாய்
விடுதலை பெற நீங்கள் உறுதிபூண்டு அதற்காக இன்னல்கள் இடர்கள்
எவை வரினும் எதிர்கொள்ளத் துணிவீர்களாயின், நான் நிறைவேற்ற
முயன்று கொண்டிருக்கும் இக்கடும் பணியின் பேரும் புகழும்
உங்களையே சாரும்.

நமது உரிமைக்ளுக்காக நாம் நமது சொந்தக் கால்களில்
நின்றுதான் போராட வேண்டும். எனவே, உங்கள்
ஆற்றலனைத்தையும் திரட்டித் தொடர்ந்து போராடுங்கள்.
போராட்டத்தின் வாயிலாகவே அதிகாரமும் பெருமிதமும்
உங்களை வந்தடையும்...
- டாக்டர் அம்பேத்கர்
(1931, ஆக 14ல் வட்டமேசை மாநாட்டுக்கு
இலண்டனுக்குப் புறபப்டுவதற்கு முந்திய நாள் அவருக்கு
ஏற்பாடு செய்திருந்த வழியனுப்பு விழாவில் பேசியது)

**

my BIRTH IS MY FATAL ACCIDENT ??????????????????????????

**

ROHIT'S SUICIDE NOTE: :

காலை வணக்கம்!

இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கும் தருணத்தில் நான் உங்களுடன் இருக்க மாட்டேன். அதற்காக என் மீது ஆத்திரம் கொள்ளாதீர்கள். உங்களில் சிலர் என் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள், என்னை நேசித்தவர்கள், என்னை நன்றாக நடத்தியவர்கள் என்பது எனக்குத் தெரியும்.

எனக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. எப்போதுமே என்னால் மட்டும்தான் எனக்கு பிரச்சனை. என்னுடைய ஆன்மாவுக்கும் உடலுக்கும் இடையேயான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாகவும் நான் ஒரு ராட்சசனாக மாறி விட்டதாகவும் உணர்கிறேன்.  நான் ஒரு எழுத்தாளராக இருக்கவே எப்போதும் விரும்பினேன். கார்ல் சாகனைப் போல் ஒரு அறிவியல் எழுத்தாளராக… இறுதியில், இதோ இந்த ஒரு கடிதத்தை மட்டுமே என்னால் எழுத முடிந்துள்ளது.

எனக்கு அறிவியல், நட்சத்திரங்கள், இயற்கை அத்தனையும் பிடிக்கும். மக்களையும்…. அவர்கள் இயற்கையிடமிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டார்கள் என்பது புரியாத போதும். நமது உணர்வுகள் இரண்டாம் பட்சமானவை. நமது அன்பு கட்டமைக்கப்பட்டது. நமது நம்பிக்கைகள் சாயம் பூசப்பட்டவை. நமது சுயத்தன்மை செயற்கையான கலவையின் மூலமாகவே மதிக்கப்படுகிறது.

ஒரு மனிதனின் மதிப்பு வெறும் உடனடியான ஒரு அடையாளத்திற்குள் சுருக்கப்பட்டுவிட்டது. ஒரு ஓட்டாக, ஒரு நம்பராக… கல்வி பயிலும் இடம், தெருக்கள், அரசியல் எங்கும் யாரும் மனிதனை அவனது மனதுக்காக மதிப்பதில்லை. வாழ்விலும் சாவிலும் கூட…. ஒருபோதும் நட்சத்திர துகள்களிலிருந்து உருவாக்கப்பட்ட ஒளி படைத்த மனிதனாக அவனை நடத்துவதில்லை. காயப்படாமல் அன்பு செலுத்துவதென்பது கடினமாக இருக்கிறது.

இதுபோன்ற ஒரு கடிதத்தை இப்போதுதான் நான் முதன்முறையாக எழுதுகிறேன். இதுவே கடைசியாகவும் அமைந்து விட்டது. எனது கருத்துகள் அர்த்தமற்றதாக இருந்தால் அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.

என்னுடைய பிறப்பு மோசமான ஒரு விபத்து, என்னுடைய குழந்தைப்பருவ தனிமையிலிருந்தே நான் இன்னும் மீளவில்லை. நான் யாராலும் பாராட்டப்படாத ஒரு குழந்தை, ஒரு வேளை, இந்த உலகத்தை நான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். அன்பை, வலியை, வாழ்க்கையை, மரணத்தை தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். ஒரு அவசரமும் இல்லை. ஆனால் நான் எப்போதும் அவசரகதியிலேயே இருந்தேன்.

இந்தநொடி நான் காயமடைந்தவனில்லை. நான் சோகமாக இல்லை. வெறுமையாக இருக்கிறேன். என்னைப் பற்றிய அக்கறை சிறுதும் அற்றவனாக இருக்கும் இந்தநிலை மிகவும் பரிதாபகரமானது. அதனால்தான் நான் இதைச் செய்கிறேன்.

மக்கள் என்னை கோழை என்று அழைக்கலாம். சுயநலக்காரன் மற்றும் முட்டாள் என்று கூட. ஆனால், நான் போன பிறகு நீங்கள் என்னைப் பற்றி சொல்வது குறித்து எனக்கென்ன அக்கறை?. இறப்புக்கு பிறகான கதைகள், பேய்கள் அல்லது ஆவிகள் குறித்தெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி ஏதேனும் இருந்தால் அவற்றின் மூலம் நட்சத்திரங்களுக்கு பயணித்து வேறு உலகங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் என நம்புகிறேன்.

இந்தக் கடிதத்தை படிக்கும் உங்களில் யாராவது, எனக்கு ஏதாவது செய்ய முடியுமானால், ஒரு சிறிய வேண்டுகோள்.

எனக்கு பல்கலைக்கழகத்திலிருந்து ஏழு மாதங்களாக வர வேண்டிய கல்வி உதவித் தொகையான ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிலுவையில் உள்ளது. அந்தத்தொகை எனது குடும்பத்தாருக்கு கிடைக்க வழிசெய்யுங்கள். என் நண்பன் ராம்ஜிக்கு நான் 40 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். அவன் அதை திருப்பிக் கேட்கக் கூடியவன் இல்லைதான். இருந்தாலும், தயவு செய்து அவனுக்கு அந்த பணத்தை திருப்பிக் கொடுத்து விடுங்கள்.

என்னுடைய இறுதிஊர்வலம் அமைதியாகவும் ஆர்ப்பாட்டமின்றியும் இருக்கட்டும். நான் தென்றலைப் போல வந்து தென்றலைப் போல போய்விட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். உயிரோடு இருப்பதை விட சாவதே எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

“ நிழல்களிலிருந்து நட்சத்திரங்களை நோக்கி”

உமா அண்ணா, உன்னுடைய அறையில் தற்கொலை செய்து கொண்டதற்காக என்னை மன்னித்துக் கொள்.

அம்பேத்கர் மாணவர் பேரவை குடும்பத்தினருக்கு,

உங்களை எல்லாம் ஏமாற்றியதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் என் மீது தீவிரமான அன்பு செலுத்தினீர்கள். உங்கள் எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்

கடைசி முறையாக, ஜெய்பீம், அம்பேத்கர் வாழ்க!

(இதுபோன்ற தற்கொலைக்கடிதங்களில்) வழக்கமாக எழுதும் ஒன்றை நான் மறந்து விட்டேன்…!

என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணமல்ல. தங்களது செயலாலோ வார்த்தைகளாலோ என்னை யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை. இது என்னுடைய முடிவு, இதற்கு நான் மட்டுமே பொறுப்பு. நான் போன பிறகு என்னுடைய நண்பர்களை தொந்தரவு செய்யாதீர்கள். எதிரிகளையும்…

Tuesday, January 12, 2016

MONOPOLY ராஜ்யங்கள்


அரசியலில் எதிர்கட்சி அந்தஸ்த்து கூட இல்லாவிடாலும் திமுக தான்
ப்ரதான எதிர்கட்சி போல ஒரு தோற்றம். அவர்களிடன் ஊடக எதேச்சதிகார
வல்லமை இருப்பதால் தான் இத்தோற்றத்தை தொடர்ந்து தக்கவைத்துக்
கொள்வது சாத்தியமாகிறது. இதை எந்த புதிய ஊடகக் கொம்பனும்
கண்டுகொள்வதில்லை! என்ற உண்மை குறிப்பிட்ட அக்கட்சியின்
அதிகார எல்லையின் சாம்ராஜ்ய வலிமை.
அரசியல் எதேச்சதிகாரம் இந்தியாவின் பிறமாநிலங்களில் இல்லையா என்று
கேட்டால் 'இருக்கிறது' இன்றும் உள்ளாட்சி தேர்தல்களில் தகுதி நிர்ணயித்ததன் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களை எப்போதுமே ஆளப்படும் வர்க்கமாக வைத்திருக்கும் அரியானா
போன்ற மாநிலங்களில் குறிப்பிட்ட அரசியல் கட்சி, தலைவர்கள்,
ஆதிக்கச்சாதி எதேச்சதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால்,
தமிழகத்தில் மட்டும் தான், எட்டுக் கைகளுடன் அவதாரம் எடுத்து
எட்டுத் திசைகளிலும் தன் அதிகாரத்தை நிறுவி அதன் மூலம் ஒரு
மோனோபோலி ராஜ்யத்தை உருவாக்கி அரசாண்டு கொண்டிருக்கிறது.

கலை, இலக்கியம், சினிமா, தொலைக்காட்சி , கருத்தரங்கம் என்று
தமிழ்நாட்டின் அறிவுஜீவிகள் சங்கமிக்கும் தளத்தில் ' தமிழ், தமிழினக்
காவலர்" என்ற அடையாளங்களை வலிமையாக முன்னிறுத்தியும்
இந்த அடையாளங்களை எப்போதும் கூவிக்கொண்டிருக்கும்
பைங்கிளிகளை வளர்த்து பறப்பது போல நூல் கட்டி பறக்க
விட்டிருப்பதும் இந்த ராஜாங்கத்தின் வெற்றி.
சமூக விடுதலை என்று பேசும் போதெல்லாம் "பெரியாரின் வாரிசுகள்"
என்ற பொய்யான முகம்.. எப்போதாவது அந்த வேஷமும் இவர்களின்
நாடக மேடைகளில். அப்போதெல்லாம் கோமாளி கள் போல
இவர்கள் காட்சி அளிக்கிறார்கள். இருந்தாலும் 'நிறுத்துடா உன்
கோமாளித்தனத்தை' என்று நெஞ்சுத்திராணியுடன் சொல்ல
ஒரு அசல் கருப்புச்சட்டைக்காரன்  தமிழ் மண்ணில் இல்லை.
கவிப்பேரரசு வகையாறாக்களை உருவாக்கி 24 x 7  அதீத சுயமோக
மனநோய்ப்பிடித்து சீழ்ப்பிடித்து வடிகிறது இந்த ராஜாங்கம்
உருவாக்கி இருக்கும் நம் சமூகம்.
இதை எல்லாம் கேள்வி கேட்பதாக தன்னைக் காட்டிக்கொள்ளும்
அதி நவீன இலக்கியத்தோட்டத்தின் ஒட்டு மொத்தக் குத்தகைக் காரர்கள்
கண்ணுக்குத் தெரியாத இன்னொரு சாம்ராஜ்யத்தை நிறுவி இருக்கிறார்கள்.
அவர்கள் நடத்தும் இலக்கிய இதழ்களில் கவிதை கதை வெளிவந்தால் மட்டுமே கவிஞர் அந்தஸ்த்து உலக அரங்கில் கிடைக்கும் என்ற
மோனோபோலி. அதிலும் குறிப்பாக சமூக பிரக்ஞையற்ற, ஹார்மோன்
பிரச்சனைகளில் அவஸ்தைக்குள்ளாகும் முலை யோனிகள் மட்டுமே
அந்த ராஜாங்கத்தின் பெண்ணிய முத்திரைகள். எதிரணியில் இருக்கும்
பைங்கிளிகள் கூட அத்தோட்டத்தில் பறந்த வந்தப்பிறகுதான்
தனக்கான பச்சை நிறச்சிறக்குகளை பெற்றன என்பது இந்த ராஜாங்கத்தின் பெருமையும் தனிச்சிறப்பும்! இவர்களின் பதிப்பகத்தின் மூலம் புத்தகம் வெளீவந்தால் தான் இலக்கிய அந்தஸ்த்து கிடைக்கும் என்ற பம்மாத்து
இந்த கண்ணுக்குத் தெரியாத ராஜாங்கத்தின் கதவுகள் இரும்பை விட
வலிமையானவை. இதன் காவலர்கள்  ஆயுதம் ஏந்துவதில்லை என்றாலும்
எந்தப் புரட்சிக்காரனையும் மடக்கிப்போட்டும் மடக்க முடியாதவனை
கள்ள மவுனத்தில் கடந்து சென்று இல்லாமல் ஆக்கிவிடும் புதிய போர்முறைக்கு சொந்தக்காரர்கள். 
இந்த இரு ராஜாங்கமும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல தோற்றமளிக்கலாம். ஆனால் இவர்களுக்குள் ஓர் புரிந்துணர்வு
இருக்கிறது. கப்பம் கட்டாத புரிந்துணர்வு. வியாபார உத்திக்காக
தேவைப்பட்டால் ஒருவர் முதுகை ஒருவர் சொறிந்து ரத்தம் வரும்
காட்சிகள் கூட அரங்கேறும்.  ஆனால் இந்த இரு இராஜாங்கத்தின்
காவலர்கள் தான் பொது ஜனங்களின் பொதுப்புத்தியில் அபிப்பிராயங்களை
கருத்துகளை உருவாக்குகிறார்கள் என்பது மட்டுமல்ல, இவர்கள் தான்
அறிவுஜீவிகளின் மண்டை ஓட்டிலிருந்து ஒளிவட்டமாக சுழன்று
கொண்டும் இருக்கிறார்கள்.
இந்த எதேச்சத்கார ராஜாங்கத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தில்
தீவிரமாக செயல்பட்ட  'கவிதாசரண்' போன்றவர்கள் இன்று காணாமல்
போய்விட்டார்கள். இன்னும் சிலர், அதள பாதாளம் வரைக்கும்
பாய்ந்திருக்கும் இவர்களின் அதிகாரத்தின் முன்னால் துவண்டு போய்
ஒதுங்கிவிட்டார்கள்.
இதோ... இன்னும் மிச்சமிருக்கிறது
எங்கள் இரவுகளும்
இரவுகளுக்குத் துணையாக சன்னல் ஆகாயத்தில் 
துணைநிற்கும் நட்சத்திரவெளியும்.


Tuesday, January 5, 2016

பதன்கோட் தாக்குதல் .. இந்திய உளவுத்துறையின் தோல்வி


பதன்கோட் தாக்கப்பட்டிருப்பது கவலை தரும் செய்தி.
பதன்கோட் சதாரண விமானப்படை தளம் மட்டுமல்ல.
அத்தளத்திற்கு சில சிறப்பம்சங்கள் உண்டு.
* பாகிஸ்தானின் தாக்கினால் அதை எதிர்கொள்ள இந்திய
இராணுவம் உருவாக்கிய முதல் சிறப்பு விமானப்படைத்தளம்.
*108 Squadron Hawkeyes that fly the MiG-21 fighters and also the 125 Helicopter Unit Gladiators.
*தேவைப்பட்டால் பாகிஸ்தான் பகுதியைத் தாக்கும் மிக் போர்விமானங்கள் எப்போதும்
தயார் நிலையில் இருப்பதும் இத்தளத்தில் தான்.
*இந்திய-பாகிஸ்தான் போர் நடந்தப்போதெல்லாம் முதல் தாக்குதலுக்குள்ளாகும் முக்கியமான போர்த்தளம் இது
.
கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட தளத்திற்கு இந்திய இராணுவ உடையில் தீவிரவாதிகள் ஊடுருவ முடிகிறது என்பதும், தாக்குதல் நடத்த முடிகிறது என்பதும்
கவலைப்பட வேண்டிய செய்தி.
"நேற்றுவரை பாகிஸ்தான்நமக்கு எதிராக எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதிலிருந்து
நாம் எந்தப்பாடமும் கற்றுக்கொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கூச்சலிடுவோம்.
விவாதம் செய்வோம். அவ்வளவுதான். அதன் பின் வழக்கம்போல அடுத்த ப்ரேக்
நியூஸ் .. வெட்ககேடு.. " என்று கொந்தளிக்கிறார் மேஜர் ஜெனரல் சட்பீர் சிங் (ஓய்வு).
நம் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? உளவுத்துறையின் தோல்வி இது
என்று தன் கருத்தை வைக்கிறார் அவர்.
"இது தீவிரவாதிகளின் தாக்குதல் அல்ல
.ஐ எஸ் ஐ த திட்டமிட்டு நடத்திய தாக்குதல்.
தீவிரவாதிகள் என்ற பெயரில் பாகிஸ்தான் நம்மீது நடத்திய யுத்தம் ."என்கிறார்
இராணுவ அறிவியல் ஆய்வு செய்யும் அசோக் கே பெகுரியா .
இது ஒன்றும் எதிர்பாராமல் நடந்த தாக்குதல் அல்ல. எப்போது நம் பாரதப்பிரதமர் மோடி அவர்கள் லாகூரில் இறங்கி பிறந்தநாள் வாழ்த்து சொன்னாரோ அப்போதே
இதற்கான ஒத்திகையும் காட்சிகளும் எழுதப்பட்டு விட்டன.
எப்போதெல்லாம் பாகிஸ்தான் ஆட்சியில் இருப்பவர் இந்தியாவுடன்
நல்லுறவு கொள்ள விரும்புவதாக தெரிந்தால் கூட போதும்..
பாகிஸ்தானின் இராணுவமும் உளவுத்துறையான ஐ எஸ் ஐ யும் இப்படி எதையாவது செய்து எல்லா கதவுகளையும் மூடிவிடும்..
சொல்லப்போனால்,
இந்திய பாகிஸ்தான் உறவு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட இரு நாடுகளின் தலைவர்களொ அவர்களின் ஆட்சியோ தீர்மானிக்கும் விஷயமட்டும் அல்ல.
அதற்கும் மேலே.