Sunday, September 16, 2018

பெரியார் துணை.



பெரியாரை ஊறுகாய் மாதிரி தொட்டுக் 
கொண்டிருந்தவர்களுக்கு 
இப்போதெல்லாம் விருந்துகளில் 
ஊறுகாய் தேவையில்லை என்ற நிலைக்கு
வந்து விட்டார்கள்.
ஓட்டுப்பொறுக்கி மருத்துவமனையில் 
மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனையாகக்
கூட இருக்கலாம்.!
என்னைப் போன்ற 
ரொம்பவும் சாமானியமானவர்களுக்கு
தந்தை பெரியார் தண்ணீரைப் போல.


நான்கு தலைகளுடன் அலையும் பிரம்மம்
எட்டுக்கைகளுடன் உரித்தாலும்
உரிக்க உரிக்க 
வெங்காயம் வெங்காயம் தான்.
எப்படி உரித்தாலும்
எங்களுக்கு கண்களில் கண்ணீராய்
இன்னும் மிச்சமிருக்கிறது
தமிழ்ச்சாதியின் தீட்டு.
(17 செப்டம்பர் - பெரியாரின் பிறந்த நாள்)

1 comment: