Tuesday, December 29, 2015

நீ கற்பனையாகவே இருந்துவிட்டுப்போ



நீ இருப்பதாக நான் நினைப்பதெல்லாம் கற்பனையாம்
மருத்துவர் சொல்கிறார்.
 புரியவில்லை சூர்யா.. எதுவும் புரியவில்லை.
கண்கள் குளமாகும் போதெல்லாம் என் அருகில் வந்து
"நானிருக்கிறே..!ன்" என்று கனத்த குரலின் மெல்லிய ஒசை
காற்றில் தவழ்ந்து வருகிறதே..
அதுவும் கற்பனையா சூர்யா?
உன் தோள்களில் தலைசாய்த்து அழும்போதெல்லாம்
தாயின் தாலாட்டு வாசனைக்கு ஈடான
நட்பின் வாசனை என்னைச் சூழ்கிறதே,,!
இதுவும் கற்பனையா சூர்யா?
எனக்கு கற்பனை வியாதியாம்.
கொஞ்சம் ஒருமாதிரி ஆகிவிட்டேனாம்
என்னைப் பிச்சி என்று அடையாளப்படுத்துகிறது
அவர்களின் அறிவியல் உலகம்.
கற்பனைகள் உடையும் போது நானும் உடைந்துவிடுவேன்
பயமுறுத்துகிறது அவர்களின் ஆராய்சி முடிவுகள்..
அப்படியானால் எனக்குள் இருக்கும் நீ..
என்னை உடையாமல் வைத்திருக்கும்
நீ.. நிஜமா ? கற்பனையா? கனவா?
இதோ இந்த  இரவில் தூக்கம் தழுவாத இரவில்
கனவுகள் வர மறுக்கும் இரவில்
உன்னிடம் இறுதியாக சொல்கிறேன் சூர்யா..
அவர்களின் குறிப்புகள் குறித்தக் கவலை எனக்கில்லை.
சூர்யா.. நீ கற்பனையாகவே இரு.
என் கனவுகளில் மட்டுமே வா.
போதும் எனக்கு.
மருத்துவர் சொன்னது உண்மையாகவே இருந்துவிட்டுப்போகட்டும்.
நிஜங்களை நம்பி நம்பி தொலைந்துப்போவதை விட
 என்னைத் தொலைக்காமல் இருக்க
சூர்யா.. நீ கற்பனையாகவே இருந்துவிட்டுப்போ.
என் கனவுகள் நிஜமானவை என்று அப்போதுதான்
அவர்கள் நம்புவார்கள்..

Sunday, December 27, 2015

சத்துணவு திட்டமும் தமிழ்நாடும்




சத்துணவு திட்டம் என்று சொன்னவுடன் எம்ஜிஆரின் நினைவுதான் அனைவருக்கும் ஏற்படும். இத்திட்டத்தை தன்னுடைய கனவுத்திட்டம் என்று தான் எம்ஜிஆர் அறிவித்தார்.
"3 வயது நிரம்பிய நான், என் தாயார், தமையனார் மூவரும் பட்டினி கிடந்தப்போது பக்கத்துவீட்டுத்தாய் முறத்தில் அரிசி கொடுப்பார். அதைக் கஞ்சியாகக் காய்ச்சி, சாப்பிட்டிருக்காவிட்டால், நாங்கள் இந்த உலகத்தை விட்டே மறைந்திருப்போம். பசித்தால் அழ மட்டுமே தெரிந்த வயதில், பசிக்கொடுமைக்கு ஆளாகும் அனுபவத்தை நான்
இளமையில் அறிந்ததன் விளைவுதான் இந்தத்திட்டம்" என்று சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்த போது உருக்குமாக சொன்னார் எம்ஜிஆர்.

ஆனால் அதற்கு முன்னரே பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்திருந்தார் என்பதை நாம் அறிவோம். மதிய உணவு திட்டத்தின் வளர்ச்சியாக சத்துணவு திட்டத்தை எவரும் குறிப்பிட்டால், "அதுவேறு, இதுவேறு" என்று வாக்குவாதம் செய்வார்கள் அதிமுகவினர்.
பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்னரே நீதிக்கட்சியின் ஆட்சியில் நீதிக்கட்சியின் தலைவர் பி.டி.தியாகராய செட்டியார் முயற்சியால் 1920 ஆம் ஆண்டு  MID DAY MEALS SCHEME கொண்டுவரப்பட்டது. சென்னை ஆயிரம் விளக்கு
பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தான் முதன் முதலாக இத்திட்டம் அமுலுக்கு வந்தது.
ஒரு மாணவனுக்கு உணவு செலவு ஓர் அணாவை தாண்டக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்ப்ட்டது. இத்திட்டத்த்தினால் அரசாங்கத்திற்கு அதிகச் செலவு ஏற்படுவதாக கருதிய ஆங்கிலேய அரசு இத்திட்டத்தை 1925ல் கைவிட்டது. எனினும் நீதிக்கட்சி தலைவர்களின்
தொடர் போராட்டத்தால் மீண்டும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
இத்திட்டத்தின் வளர்ச்சியாகத்தான் பெருந்தலைவர் காமராசர் 1956ல் மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்தார் எனலாம்.
நீதிக்கட்சிக்கு மட்டுமல்ல, காமராசருக்கும் எம்ஜிஆருக்கும் இத்திட்டம் கொண்டுவந்ததில் பெரும் எதிர்ப்புகள் இருந்தன.
இந்த விவரங்கள் எல்லாம் சத்துணவு திட்டத்தின் படிப்படியான வளர்ச்சி /நிலை .
ஆனால் இச்சத்துணவு திட்டத்தால் தான் இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் நுழைவுக்கும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்தது என்ற செய்தி
இன்று பலர் மறந்துவிட்ட அரசியல் வரலாறாக இருக்கிறது.!

சத்துணவு திட்டம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தக் காலத்தில்
மதுரை மாவட்டத்திற்கு சென்ற ஜெயலலிதா, அங்குள்ள சத்துணவு கூடத்திற்கு காவல்துறை அதிகாரி சகிதம் சென்று சோதனை செய்தார். இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.
 "அரசாங்கத்தின் திட்டத்தை நேரில் சென்று
சோதனை செய்யும் அதிகாரம் ஜெயலலிதாவுக்கு
 இருக்கிறதா? இவருக்கும் சத்துணவு திட்டத்திற்கும்
 என்ன தொடர்பு? இவர் யார் ..? "
இக்கேள்விகளுக்கு ஓர் அறிவிப்பு மூலம் பதிலடி
 கொடுத்தார் எம்ஜிஆர்.
"சத்துணவு திட்ட உயர்மட்டக்குழு உறுப்பினராக ஜெயலலிதாவை
நியமித்திருப்பதாக அறிவித்தார்"
இதுதான் "ஜெ" வுக்கு எம்ஜிஆர் கொடுத்த முதல் , முக்கியமான அங்கீகாரம்.
இதிலிருந்து தான் "ஜெ" யின் அரசியல் நுழைவு தீவிரமாகி ..




Friday, December 25, 2015

அஜயா.. ஆட்சி அதிகாரத்தின் இன்னொரு சரித்திரம்





கைகளில் சதா வில்லும் அம்புமாக திரியும் வேட்டைக்காரனுக்கு
மரத்தில் இருக்கும் பறவையின் கண்கள் மட்டுமே தெரியும்.
ஆனால் இயற்கையை ரசிக்கும் கலைஞனுக்கு
காதலைக் கொண்டாடும் கவிஞனுக்கு
பற்வைகளின் கூட்டிலும் கிளையிலும் தனனையே தரிசிக்கும்
அன்பனுக்கு வெறும் பறவையின் கண்கள் மட்டுமே எப்படி
தெரியும்? அவனுக்கு மரத்தின் கிளையில் இருக்கும் இணைப்
பறவைகளைப் பார்க்கும் போது காதல் கட்டாயம் தெரிந்திருக்கும்.
அதனூடாக அவன் ஜீவராசிகளின் ஆன்மாவைத் தரிசனம் செய்திருப்பான்.
இயற்கையின் பிரபஞ்சம் அவனுக்குள் ஆகாயமாய் விரிந்திருக்கும்.
அவன் கலைஞன், அவன் உயர்ந்த மனிதன்.
ஆனால் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே கற்றுக்கொடுக்கும்
துரோணாச்சாரிய குருகுலத்தில்
அவன் கடைமாணக்கனாக ஒதுக்கப்பட்டவன்.
துரோணாச்சாரிகளுக்குத் தேவை போரும் போரில் கிடைக்கும்
வெற்றியும் ஆட்சி அதிகாரங்களும் தான்.
அவர்கள் வேட்டைக்காரனையே உருவாக்குவதில்
அன்று முதல் இன்றுவரை அயராது உழைக்கிறார்கள்.
பறவையைக் கொன்றவனையே கொண்டாடும் கலாச்சார
சீரழிவை அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றவர்கள் அவர்கள்.
பானுமதியின் சுயோதனன் (துரியோதனன்) தூற்றப்படுவதும்
காண்டீபம் கொண்டாடப்படுவதும் வெறும் கதையல்ல.
போர் சமூகத்தின் இன்னொரு முகம் தான்..
*
மீன் கூடைக்காரி. சதா மீன் மணக்கும் குடிசையில் வாழ்பவள்.
சதயவதியின் வயிற்றுப்பிள்ளைகள் தான் குரு வம்சத்தினர்.
அதுவும் சத்யவதி தன் மகன் இறந்தப் பின் தன் மருமகள்களின்
கருவறைத் திறக்க தன் முதல் மகன் வியாசனை, அதுவும் திருமண உறவு இன்றி அவள் அஸ்தினாபுர அரசனை மணப்பதற்கு முன் பிறந்த தன் வயிற்று மகன் வியாசனை அழைக்கிறாள். அந்த வியாசன் வழி குரு பரம்பரையில் வந்தவர்கள் தான் திருதராஷ்டிரன், பாண்டூ, விதுரன்
மூவரும். அப்போதெல்லாம் மீனவர் குலப் பெண்ணை, ஒரு சூத்திரப்பெண்ணை அரசியாக ஏற்றுக்கொண்ட அரண்மனையும் அஸ்தினாபுர சமூகமும் அடுத்த தலைமுறைக்கு வரும்போது சாதிப்பிரிவின் உச்சத்தில் வாழ்கிறது. கர்ணன் தேரோட்டியின் மகன் என்பதாலேயே அங்கதேசத்து அரசனான பின்னரும் ஒதுக்கப்படுகிறான.
சுயோதனன் கர்ணன் நட்பு சாதி சமூகப்பின்னணியில்
வைத்து இன்னும் பேசப்பட வேண்டிய இன்னொரு மகாபாரதக்கதை.
**
கேரளாவில் மாளநடா கோவில், பொருவழி கிராமத்தில் இன்றைக்கும்
அக்கோவிலின் வழிபாடு தெய்வமாக பவனி வருகிறான். 100,000 மக்களுக்கு மேல் அனைத்து சாதியினரும் கூடுகிறார்கள் அவனைக் கொண்டாட.
அக்கோவில் துரியோதனனால் கூர்வ குலத்து (தாழ்த்தப்பட்ட சாதி) பெண்ணுக்கு கொடுக்கப்ப்ட்டது. அதனாலேயே இன்றும் அக்குலத்தவரே அக்கோவிலின் முதல் மரியாதைக்குரியவர்களாக இருக்கிறார்கள்.
இக்கோவில் சம்ப்ந்தப்பட்ட கதை : துரியோதனன் வனவாசம் சென்ற பாண்டவர்களைத் தேடி தென் திசை வருகிறான். பசியால் வாடிய அவன் வழியில் ஒரு பெண்ணிடம் தண்ணீர் கேட்கிறான். அவளும் தண்ணீர் என்று சொல்லி அவனிடம் புளித்துப்போன காடியை கொடுத்து பருகச் சொல்கிறாள்.
அவன் அஸ்தினாபுரத்து அரசிளங்குமரன் என்று தெரிந்ததும் அச்சம் கொண்டு தனக்கு தண்டனைக் கிடைக்கும், அதுவும் சாதியில் தாழ்ந்த தன் கையால்
அவனுக்கு காடி கொடுத்த பாவத்திற்கு சிரச்சேதமே செய்யப்படும் என்றும் அவளுக்குத் தெரியும். இருந்தும் தன் சாதி அடையாளத்தை மறைக்காமல்
சொல்கிறாள். அரசனோ "பசியும் தாகமும் சாதியற்றவை. " என்று
மறுமொழி சொல்கிறான். "தண்டனைகளைப் பற்றி எண்ணாமல் என் தாகம் தீர்த்த தாய் நீ" என்று கொண்டாடுகிறான். அக்கிராமத்தவருக்கு கோவில் கட்ட நிலம் தானமாய் வழங்கிச் செல்கிறான். அக்கோவிலில்
க்டவுள் சிலை இல்லை. அவனையே தெய்வமாக அவர்கள் கொண்டாடுகிறார்கள்" என்று சொல்கிரார் ஆனந்த் நீலகண்டன்.
***
அசுரா எழுதிய புனைவுகளின் தொடர்சியாக
ஆனந்த் நீலகண்டன் எழுதி இருக்கும் AJAYA, EPIC OF THE KAURAVA CLAN,
roll of the dice .. முக்கிய இடத்தைப் பெறுகிறது. அதிலும் குறிப்பாக
தமிழ் வாசிக்கத் தெரியாதவர்களுக்கு "அஜயா" புனைவுகளின்
ஊடாக கொண்டு செல்லும் இடமும் சங்கமிக்கும் புள்ளிகளும்
முக்கியமானவை.

Thursday, December 17, 2015

இப்படியும் தீர்ப்பு சொல்லலாம்ம்ம்ம்ம்ம்


ஆகமவிதிகளின் படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று
உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லி இருக்கிறது.
அதே நேரத்தில் எல்லோரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக
அரசு கொண்டுவந்த சட்டத்தையும்  ரத்து செய்யவில்லை.
ஆகமவிதிகளின் படி அர்ச்சகர் நியமிக்கப்பட வேண்டும் என்றால்
எல்லோரும் அர்ச்சகராக முடியாதே..!!
அடடா.. இப்படியும் கூட தீர்ப்பு சொல்ல முடியுமா.?
**
ஆகமவிதிகளை மீறுவதே இல்லையா இந்துமதக் காவலர்கள்?
டிசம்பர் 31 நள்ளிரவில் கோவில் திறந்திருக்கிறது . ஆகமவிதிகளின் படி
அர்த்தஜாம பூஜை நடந்தப்பின் மறுநாள் அதிகாலையில் தான் நடை
திறக்க வேண்டும். இடையில் எக்காரணம் கொண்டும் நடை திறக்க
அனுமதி இல்லை.
 ஆங்கில புத்தாண்டை முன்வைத்து கூடும் பக்தர்கள் கூட்டத்தின்
மூலம் கிடைக்கும் வருவாயைக் கண்டு ஆகமவிதிகளைக் காற்றில்
பறக்கவிடும் இந்துமதக் காவலர்கள், இந்த அர்ச்சகர் விஷயத்தில் மட்டும்
ஏன்..?
**
ஆகமவிதிகளுக்கும் இந்திய சட்டத்திற்கும் என்ன தொடர்பு?
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அமுலுக்கு கொண்டுவரும் போது அச்சட்டத்தின் சொல்லப்பட்டவை மட்டுமே சட்டமாகவில்லை, அதற்கு முன்பிருந்த சட்டங்களும் வால் போல ஒட்டிக் கொண்டே வந்தன. அந்த வால் வலிமையானது என்பதை உணர்ந்த பாபாசாகிப் அம்பேத்கர்  சட்டத்தில் மிகவும் தந்திரமாக நுழைக்கப்பட்டிருக்கும் வர்ணாசிரம தர்மம்,
சடங்கு சம்பிரதாயங்களைக் காப்பாற்றும் வரிகளை நீக்க இந்து சட்ட வரைவை முன்வைத்தார்.
(Dr. Ambedkar as chairman of the constitutuon drafting committee was aware that those who prepared the first draft of the constitution in 1947 had cunningly enjoined provisions to protect Varunashrama dharma and traditional customs and usages. with an aim to defeat their purpose , Ambedkar presented the amendment in the form of the
"Hindu code bill " in 1947, that all the laws which were in force till date of adoption of the Indian constitution will stand abolished)
ஆனால் அவர் தோல்வி அடைந்தார். அவர் தோல்வி அடைய யார் யார் காரணமாக இருந்தார்கள்
என்பது ஒரு பெரிய கதை..அதை அறிந்தால் தலைவர்கள் மீது அவநம்பிக்கை ஏற்படும்
இதெல்லாம் என்னவோ பரம ரகசியம் இல்லை.
இந்த நாட்டில் பாராளுமன்றத்தில் இருப்பவர்களில் பாதிபேருக்கு
வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். சிலருக்குத் தெரிந்தும்
தெரியாமல் இருப்பது போலவே இருப்பதில் அதிக பாதுகாப்பு இருக்கிறது. இதைப் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் தான் இருக்கிறார்கள்.
இலவசங்களில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இன்றைய அரசியல் தலைவர்களுக்கு இதைப் பற்றி எல்லாம் பேசவோ
அல்லது சிந்திக்கவோ நேரமில்லை. பெரியார் தொண்டர்களில் ஆனைமுத்து அவர்கள்
மட்டுமே இக்கருத்தை முன்வைத்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்.

***
இன்றைக்கும் நிறுவனமயமான கோவில்களில் அர்ச்சகராக
மட்டுமே இந்தக் கோர்ட், வழக்கு வாய்தா எல்லாம்!
ஆனால் நம்ம ஊரு முனியாண்டி,
மாடசாமி, இசக்கி அம்மன் கோவில்களில் சூத்திர பஞ்சம பூசாரிகள் தான்.  இது ஏன்?
**
இந்த நாட்டில் கடவுள்களுக்கும் சாதிகள் உண்டு.
திருப்பதி பாலாஜி
திருச்செந்தூர் முருகன்
திருநெல்வேலி மாடசாமி
சாதிப்படிநிலையின்  அடையாளங்கள்.

Wednesday, December 16, 2015

ரொம்ப லேட்டா குடைப் பிடிக்கிற "ஜெ"

-

"எனக்கென்று தனிவாழ்க்கை கிடையாது
எனக்கு எல்லாமும் தமிழக மக்கள்தான்'
தமிழக முதல்வர் "ஜெ" வாட்ஸ் அப்.

350பேர் மழைக்குப் பலியாகி, கருமாதி எல்லாம்
செய்தாகிவிட்டது. இப்போது தமிழக முதல்வர்
நான் இருக்கிறேன், உங்களை மீட்டெடுக்கும் தேவதையாக
என்று சொல்வது ஒரு சினிமா மாதிரிதான் இருக்கிறது.
இரண்டரை மணிநேரம் தியேட்டரில் அடி, உதை, சண்டை,
கடத்தல், கண்ணீர் என்று கதையை ஓட்டி கடைசி காட்சியில்
"சுபம்" என்று போட்டு முடிக்கிறமாதிரி இருக்கிறது.
ஜெ வின் இந்த வசனம் ரொம்ப லேட்.

சென்னை நிலையத் தகவல் படி , வெள்ளம் "ஜெ" க்கு
எதிரான விளைவுகளையே கொடுக்கும் என்றே தெரிகிறது.
சென்னை மட்டும் தமிழகம் அல்ல என்ற எண்ணம் சிலருக்குண்டு.
ஆனால் டி,வி,யின் புண்ணியத்தில் இம்முறை சென்னைவாசிகள்
மழையில் பட்டப்பாட்டை ஒட்டுமொத்த தமிழகமும் கண்டது.
இயற்கைப்பேரிடர் வருவதைத் தடுக்கும் அதிகாரமோ சக்தியோ
எந்த அரசுக்கும் கிடையாது என்ற அடிப்படை உண்மை தெரியாதவர்கள்
அல்ல தமிழக மக்கள். அவர்கள் எதிர்ப்பார்த்தெல்லாம் விரைவாக
இயங்கும் ஓர் அரசு எந்திரத்தை.
ஆனால் தண்ணிரைத் திறந்துவிடுவதிலிருந்து காணொளியில்
கட்டிடம் திறப்பது வரை எல்லா வாசல்களில் சாவிக்கொத்தும்
"ஜெ" வசம் இருப்பதுதான் பிரச்சனை. அதிகாரிகள் எளிதில் அணுகும்
முதல்வராக ஜெ இருந்தாரா? இருக்கிறாரா?
"ஜெ"வின் இக்குணாதிசியம் தமிழக மக்களை ஓர் இக்கட்டான
சூழலில் எவ்வளவு பாதித்திருக்கிறது!
வெங்காய விலை கூட நம் நாட்டில் தேர்தலின் வெற்றி தோல்விகளைத்
தீர்மானித்திருக்கும் போது.. இந்த ம்ழை வெள்ளம் மட்டும் பாதிக்காதா
என்ன?
இப்படி மழை கொட்டோ கொட்டென்று கொட்டி தீர்க்கும் என்பது
தெரிய வேண்டியவர்களுக்குத் தெரிந்திருந்தால்.. பாவம்..
தெருத் தெருவாக சைக்கிள் விட்டிருக்க வேண்டியதில்லைதான்

Monday, December 14, 2015

ந்நோ பீப் பீப்ப் ..கெட்டவார்த்தை பேசுவோம்


அண்மையில் சமூக வலைத்தளங்களில்  நாறு நாறாக கிழிந்துக் கிடந்த பீப் பீப் ..
காகிதங்களை ஓரளவு ஒட்ட வைத்து வாசித்தப்போது
கோபம் வந்தது உண்மை. ஆனால் கொலைவெறி அளவுக்கு அல்ல.
"கெட்டவார்த்தை பேசுவோம்" என்ற தலைப்பில் பெருமாள் முருகன் மணல்வீடு சிற்றிதழில் எழுதியிருந்த கட்டுரைகளைத் தொடராக வாசித்திருக்கிறேன்.
(புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது) நாட்டுப்புற வழக்கில் சர்வசாதாரணமாக சில வார்த்தைகள் கோபத்தில் வெளிவரும். அச்சொல் கோபத்தின் உச்சத்தைக் காட்டும்.
சிற்றிலக்கியம் என்று பாரதிக்கு முந்திய காலக்கட்டத்தில் படைக்கப்பட்ட தமிழ் இலக்கியத்தில் பெண் காமப்பசி தீர்க்கும் நுகர்ப்பொருள்.காளமேகப்புலவரின் சிலேடை வெண்பாக்கள் இந்த கெட்டவார்த்தை ப்பேசுவோம் விஷயத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன. சிறுகதைகளில் புனைவுகளில் கெட்டவார்த்தைகள்
பேசுவதாலேயே நவீன எழுத்தாளர்களாக தங்களை முத்திரைக் குத்திக் கொண்டவர்கள் உண்டு.
அப்போதெல்லாம் எவரும் அதை விமர்சனப்படுத்தியதில்லை.
கறுப்பு சிவப்பு சித்தாந்தவாதிகளும் இதில் விதிவிலக்கல்ல.
சினிமாக்களில் உதயசூரியனை முலைக்கவசமாக அணிந்து தன் கதாநாயகிகளுடன் வலம் வந்தார் எம்ஜிஆர். இன்றைய முதல்வர் ஜெ அவர்களை அவருடைய அரசியல்
ஆட்சியை விமர்சிப்பதைவிட அவர் ஒரு நடிகையாக இருந்தவர் என்பதையும் அவர் பெண் என்பதையும் முன்னிலைப் படுத்தி விமர்சிக்கும் அரசியல்வாதிகளைத்தான் தமிழகத்தில் பார்க்கிறோம். தமிழ்க்கலாச்சாரத்தில் பொற்காலம் என்று போற்றப்படும் சங்க இலக்கியத்தில்( கலித்தொகை) அடுத்தவன் மனைவியை அதுவும் சேரநாட்டு அரசியை
அவள் அல்குல், முலை குறித்த வர்ணனைகளுடன் பாடி இருக்கும் புலவனும் இருக்கிறான்.
ராஜ்கெளதமன் இம்மாதிரி வர்ணனைகள் ஒப்பீட்டளவில் சேரநாட்டு பெண்களைப் பற்றி அதிகமாகவும் பாண்டியநாட்டு பெண்கள் குறித்து குறைவாகவும் இருப்பதாக சொல்கிறார்.
பாரதக் கலாச்சாரத்தில் பெண்ணின் பதிவிராத தன்மையைக் கொண்டாடும் மண்ணில் யு டூயுப் தளத்தில் பாலான பாலான படங்களும் பாடல்களும் இந்திய மொழிகள் அனைத்திலும் மலிந்து கிடக்கின்றன. அப்போதெல்லாம் அதைப் பார்த்தும் பார்க்காமல் போன நாம்
இன்று எதற்காக இவ்வளவு ஆத்திரப்படுகிறோம்?
ஆத்திரப்படுவதைக் கேள்வி கேட்பதாலேயே அப்பாடலை ஏற்றுக்கொண்டுவிட்டதாக அர்த்தமல்ல. நான் அறிய விரும்புவது.... சினிமாவில் வசனத்தில் பாடல்களில்
சிற்றிலக்கியத்தில் நவீன இலக்கியத்தில் விளம்பரத்தில் .. பெண்ணை எப்படி அவர்கள் பார்த்து வளர்ந்தார்களோ அப்படித்தான் அவர்கள் பெண்ணைப் பற்றியும் அவள் உடல் பற்றியும் உணர்வுகள் பற்றியும் புரிந்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிர்மலா கொற்றவை அவர்கள்
இப்பாடல் குறித்து ஆத்திரத்துடன் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். வாசித்தேன்.
அவருடைய கருத்துகள் அனைத்திலும் உடன்படும் நான்.. இப்படி ஒரு ஆண்மகனை பெற்று வளர்த்தற்காக அவன் தாயை/சகோதரிகளை கேள்வி கேட்பதும் ஏன்? என்றுதான்
புரியவில்லை. எவனும் கெட்டுப்போனால், சமூகம் ஏற்றுக்கொள்ளாத விஷயத்தை
செய்தால் அதற்கு ஏன் அவனைப் பெற்றவளை, ஒரு பெண்ணை குறை சொல்ல வேண்டும்?
அவனுடைய செயலுக்கு அவன் தாய் எப்படி பொறுப்பாவாள்? அதிலும் குறிப்பாக
ஆணின் பாலியல் சார்ந்த உணர்வுகள், கற்பனைகள், கருத்துகள் அனைத்திற்கும் தாய் மட்டும் காரணமல்ல, அவனைச் சுற்றி இருக்கும் சமூகம்தான் காரணம்.
அதைப்பற்றி எதுவும் பேசாமல் சகித்துக் கொண்டிருந்தோமானால், இதைப் பற்றியும்
எதுவும் பேசாமல் இருந்துவிட வேண்டியது தானே? ஏன் முடியவில்லை.
குழந்தைக்குச் சொட்டு மருந்து கொடுப்பதற்கு கூட ஒரு நடிகர்/நடிகையை வைத்து மட்டுமே விளம்பரப்படம் எடுக்கும் பொதுப்புத்தியின் பிரதிபலிப்பு தான் இதுவும்.
ஆமாம்.. எனக்கொரு சந்தேகம்..
வார்த்தைகளில் கெட்டவார்த்தை /நல்லவார்த்தை இருக்கிறதா..?

Wednesday, December 2, 2015

அரசாங்கத்தைக் குறை கூறிம் தருணம் அல்ல இது


அரசாங்கத்தைக் குறை கூறும் தருணம் அல்ல இது.
பேய்மழையில் தாக்கமும் அழிவும் சென்னை மாநகரைப்
புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் நண்பர்களே..

ஆட்சி செய்பவர் ஜெ வா க. வா என்பதல்ல பிரச்சனை
யாராக இருந்தாலும் தமிழ்நாட்டை அரைநூற்றாண்டுகாலம்
மாறி மாறி இவர்கள் தான் ஆட்சி செய்துக் கொண்டிருந்தார்கள்!
அழிவுக்கான காரணத்தையும் கொஞ்சம் பொறுத்து ஆராய்வோம்.
(எல்லாம் நமக்குத் தெரிந்தக் காரணங்கள் தான். ஆனால் கண்டுகொள்ளவில்லை. அவ்வளவுதான்)
இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் இத்தருணத்தில் களத்தில்
நிற்கும் அரசு ஊழியர்களையும் அதிகாரிகளையும் பாராட்டுவோம்.
இளைஞர்களே.. அவர்களுக்கு கரம் கொடுங்கள்.
பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, காவல்துறை, இவர்களுக்கு
இணையாக இத்தருணத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து
வெள்ளத்தில் இறங்கி இராப்பகலாக வேலை செய்யும் மாநகராட்சி
ஊழியர்கள் , அதிலும் குறிப்பாக மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள்.
அனைவரையும் போற்றுவோம், பாராட்டுவோம்.
அவர்களுக்கும் மனைவி மக்கள் என்று குடும்பம் இருக்கிறது.
அக்குடும்பமும் இதே மழையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
அவர்கள் ஒட்டுமொத்த மக்களுக்காகவும் களத்தில் நிற்கிறார்கள்.
அவர்களை வணங்குகிறேன்.
# Following the torrential downpour that has resulted in severe flooding of Chennai and its nearby districts, Tamil Nadu government today issued an advisory to private undertakings to declare holiday for their employees on December 3 and 4.
# Tamil Nadu Chief Minister J Jayalalithaa to make aerial survey of flood-hit Chennai, Kanchipuram and Tiruvallur districts.
# Vodafone is offering pre-approved 'chota credit' of Rs.10 in wake of heavy rains in the Tamil Nadu to all pre-paid customers and a credit of 10 minutes for Vodafone to Vodafone calling.
# Chennai airport to remain shut till December 6: AAI
# Chennai has been declared disaster zone. Army has been deployed. Army Helpline is now open @ 9840295100
# All IndiGo flights operating to and from Chennai have been suspended for tomorrow (December 03).
# More than 150 people evacuated by Indian Coast Guard. 23 personnel and 2 officers in 4 boats engaged in rescue.
# NDRF says the life saving count is at 529.
# The Air Force Station & the Navy airfield too are unusable because of standing water
# I have spoken to Tamil Nadu CM, all details are being worked out and all possible help will be provided: Health Minister JP Nadda
# OP Singh, Director General of NDRF: Already dispatched 15 teams on Tuesday. They are deployed in various parts. Already rescued 400 people in the last 24 hrs. Dispatching more teams from Delhi and Bhubaneswar and Patna on Wednesday. A total of 22 NDRF teams will be there. If the need arises, we can bring more teams from Guwahati. Teams are carrying boats, divers, swimmers, life jackets. These boats are effective in urban flooding. Traffic, power and communication breakdown remain top challenges in the rescue operations.
# Home Minister Rajnath Singh will make a statement in both the houses of the Parliament on Chennai Floods on Thursday.
# Home Minister Rajnath Singh spoke to Chief Minister of Puducherry Sh. Rangasamy regarding the flood situation there. MHA is closely monitoring the flood situation in southern states.
# BSNL will not charge for calls in Chennai due to heavy rains.
# The Home Minister will hold a high level meeting to look into whatever support needs to be sent to Chennai. We need to extend moral support to people in Chennai. Many people are stranded in the airport: Venkaiah Naidu
# 33-34 aircraft grounded at Chennai airport. 66 arrivals and 53 departures cancelled from 8 PM on Tuesday till 12:30 PM.
Water from nearby Adyar river has left the airport inundated. Passengers being evacuated. NOTAM (notice to airmen) has been issued till 6 AM on Thursday to not fly. After that the situation will be reviewed.
Boundary wall has been breached. 20 pumps have been put at the airport but until the water flow doesn't reverse the problem will not be resolved
CNS (Communication Navigation System) instruments have been shut down. Once water recedes we will inspect their workability.
Till Wednesday morning 1,500 passengers were stranded and 2500 others like groundstaff. But most of them have been now evacuated.