Saturday, August 8, 2015

போங்கடா..



பிரதமர் மோடி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை
நேரில் சென்று பார்த்தார். இச்செய்தியை "லைவ்"
ஆக ஒளிபரப்பும் தொலைக்காட்சி தன் நிருபரிடம்
கேட்கிறது..
"எதைப் பற்றி அவர்கள் பேசுவார்கள்?

மதுவிலக்கு, முல்லைபெரியாறு, மீனவர் பிரச்சனை
என்று தமிழ்நாட்டின் பிரச்சனைகள் குறித்து
முதல்வர் பிரதமுருடன் பேசுவாரா?

இப்படியாக கேள்விகள் தொடர்கின்றன.

எனக்குப் புரியவில்லை.. அவர்கள் என்ன பேசுவார்கள்
என்பதை எப்படி ஒரு தொலைக்காட்சி நிருபர் அறிந்திருக்ககூடும்?

சரி, இதெல்லாம் போகட்டும்..
இச்சந்திப்பை தொலைக்காட்சிகள் இன்னும் கேவலப்படுத்திவிட்டன.

மோடி, உடல்நலமில்லாத துக்ளக் ஆசிரியர் சோ அவர்களையும்
நேரில் போய் சந்தித்தார். அதில் எநத உள்நோக்கமும் கற்பிக்கப்படவில்லை.
இதில் மட்டும் ஏன்?

சந்தித்தவர்கள் அரசு அதிகாரத்தின் தலைமைப் பீடத்தில் இருப்பவர்கள்
என்பதால் மட்டுமா?
அப்படியானால் இன்றுவரை மன்மோகன்சிங்க் அவர்கள் பிரதமராக
இருக்கும் போது சோனியாகாந்தி அவர்களை எத்தனை முறை
சந்தித்து இருப்பார்? எவராவது அதைப் பற்றி தவறாகப் பேசி
இருக்கிறோமா? இல்லையே. அப்படி நினைப்பது கூட எவ்வளவு
அருவெருப்பாக இருக்கிறது.
ஆனால் இன்று தமிழக முதல்வர் ஒரு பெண் என்பதால் மட்டுமல்ல,
அவர் அந்தக் காலத்து சினிமா நடிகை என்பதால் மட்டுமே
என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று அதிகபப்டியான
சலுகையை எடுத்துக் கொண்டு, கேவலமாக பேசி வருகிறார்கள்
சிலர்.


அறுபது வயதைக் கடந்துவிட்ட ஒரு பெண்ணை ..
இவ்வளவு கேவலமாக பேசும் எவரையும்
அவனைப் பெற்ற தாய் கூட மன்னிக்க மாட்டாள்..
.

ஜெ வுடன் எனக்கு நிறைய முரண்பாடுகள் உண்டு.
பிஜேபி , மோடி .. கேட்கவே வேண்டாம்.
அடிபப்டை கொள்கை ரீதியாகவே நான் முரண்படுகிறேன்.
ஆனால் அவர்களின் சந்திப்புகளைக் கொச்சைப்படுத்தும்
கேவலத்தை ஒரு போதும் செய்ய மாட்டேன்.

போங்கடா ..