Sunday, August 21, 2016

வாழ்க்கை சக்கரம்




வாழ்க்கையை சுழலும் சக்கரம் என்று சொன்னவன்
எதை நினைத்து சொன்னான்?
செக்குமாடு போல சுழலும் வாழ்க்கையை
அசைப்போட்டுக்கொண்டிருக்கிறது
எங்கள் திண்ணை.
நீள்வட்டப்பாதையில் சுற்றிவரும்
பூமிக்கு பரிசாக கிடைத்த்து
வசந்தமும் தென்றலும்
கார்மழையும் வெயில்நதியும்.
வட்டப்பாதையைவிட்டு விலகி
பிரபஞ்சத்தில் பால்வீதியில்
சுழன்று சுழன்று...
பிரபஞ்சங்கள் கடந்து .
அடடா.. எல்லாமே ..
பிரமாண்டமாக இருக்கிறது.
காலடியில் சின்ன நீல பந்து
பூமி உருண்டியயைப் புரட்டிப்போட
சொல்கிறது அந்த வானம்பாடி
எங்கிருந்தோ
வநத உன் நினைவுகள்
மீண்டும் மீண்டும் சூரியமண்டலத்திற்கே
இழுத்துவருகின்றன.
இதை நீ புவியீர்ப்பு சக்தி என்று சொல்லி

பாடம் நடத்தாதே.

Wednesday, August 17, 2016

தமிழக சட்டசபைக்கு அறிவிப்பது என்னவென்றால்...




தமிழக சட்டசபைக்கு அறிவிப்பது என்னவென்றால்...

அதாகப்பட்டது..
அவைக்குறிப்பில் என்ன இருந்தால் என்ன?
என்ற முடிவுக்கு பொதுஜனங்கள் வந்துவிட்டோம்.

எதிர்காலத்தில் அவைக் குறிப்பை வைத்துக்கொண்டு
இன்னார் இதைப் பேசினார், அன்னார் அதைப் பேசினார்,
இவருக்கு இவர் பதில் சொன்னார்
இவர் இந்தக் கட்சியில் இருந்தார்  இப்படியான
பல்வேறு செயுதிகள் பதிவாகிவிடும்.
பதிவானவை வரலாறாகிவிடும்.


அப்படி எல்லாமா நம்ம தமிழ்ச் சமூகம் உண்மை வரலாற்றைத்
தோண்டி எடுத்து மண்டையைப் பிளக்கப்போகிறார்கள்??
நேற்று நடந்த தேர்தலில் சொன்னதை இன்று மறந்து 
உங்களை எல்லாம் தலைவ்ர்களாக
தங்கள் தொகுதி வேட்பாளர்களாக தேர்ந்தெடுத்து
அனுப்பி இருக்கும் எங்களை எல்லாம் பார்த்தா
இன்னும் அப்படியா தோனுது..?!!!
சரி,... விட்டுத்தள்ளுங்கள்..
இந்தப் பிரச்சனைக்ள் அனைத்துக்கும் ஒரே ஒரு முடிவுதான்
உண்டு.
இதனால் அற்விப்பது என்னவென்றால்...
டும் டும் டும்..

இனிமேல் தமிழக சட்டசபையில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி
உதிரிக்கட்சி, மைனாரிட்டி கட்சி, இப்படியாக யார் என்ன பேசினாலும்
அவர்கள் பேசியது எல்லாமே அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும்.!
டும் டும் டும்.

அப்பாடா...
ஒரு வழியா பிரச்சனைக்கு தீர்வு கண்டாச்சு..

Monday, August 15, 2016

மன்னிக்க வேண்டும் பிரதமர்ஜி

 

SMS from DZ-PMMODI

iNDEPENDENCE DAY GREETINGS TO YOU. WE SALUTE
OUR FREEDOM FIGHTERS. JAI HIND! YOU CAN HEAR MY
RED FORT ADDRESS HERE:


http://pmapp.nic.in/pmapp?300SMQFFEA

இப்படி எல்லாம் நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பியும் கூட நான்
உங்கள் செங்கோட்டை உரையைக் கேட்கவில்லை!,,
எனக்கு அச்சமாக இருக்கிறது... ஓர் இந்தியக்குடிமகனாக (ளாக)
இது தேசத்துரோகமாக ஆகிவிடக்கூடாதோ என்று.

நான் ஏன் உங்கள் உரையைக் கேட்கவில்லை என்பதை
வெளிப்படையாக இவ்விடத்து சொல்லிவிடுவது நல்லது
எனக்கு எதுவும் ஆபத்து வந்தால் என் முகநூல் நண்பர்கள்
என் உண்மை நிலையை எடுத்துக்காட்ட இதுவே ஆதரமாக
இருக்கும் என்பதால் இதை இவ்விடத்து
பதிவு செய்கிறேன்.

>இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி கணம்  T S THAKUR
 அவர்கள் பிரதமரின் உரை ஏமாற்றம் அளிக்கிறது
என்று சொன்னதற்கும் நான் கேட்காமல் இருப்பதற்கும்
எவ்வித தொடர்பும் சத்தியமாக இல்லை..

> POK  பிரச்சனையை பேசிய நீங்கள் அத்துடன் சேர்ந்து
பலுசிஸ்தான் பிரச்சனையையும் பேசினீர்களாமே.
ஏற்கனவே  நம்ப தோஸ்த் பாகிஸ்தான் காரர்கள்
பலுசிஸ்தான் பிரச்சனையை உருவாக்கியது
நம்பள் தான் , இந்தியா தான் என்று சொல்லிக்கொண்டிருக்க
நீங்கள் செங்கோட்டையின் நின்று கொண்டு பலுசீஸ்தான்
பற்றி பேசி இருக்கிறீர்கள்! இது குறித்து முன்னாள் அயலுறவு
அமைச்சர் சல்மான் குருஷித் கருத்துடன் எனக்கு
உடன்பாடு என்றெல்லாம் நீங்கள் என்னை நினைத்துவிடக்கூடாது.!
சல்மான் குருஷித் கருத்துக்கு காங்கிரசே முழு ஆதரவு
தராத நிலையில் எங்களைப் போன்றவர்களின்
கருத்து உருவாக முடியாது. இடியாப்ப சிக்கல் போல
இருக்கும் இந்தியாவின் அயலுறவுக்கொள்கையுடன்
ஒரு சாதாரண இந்திய பிரஜைக்கு என்ன புரிதல்
இருக்க முடியும்? யெஸ் பிரதம்ர்ஜி..
எனக்கு இதெல்லாம் காரணமே அல்ல.

> உங்கள் உரையில் சில சொற்கள் எத்தனை முறை
நீங்கள் ப்யன்படுத்தினீர்கள் என்பதையும் சிலர்
கணக்கு வைத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அதாவது,
COUNTRY - 73,
SISTERS 60,
GOVERNMENT 58,
INDIA 56
என்று. இந்த மாதிரி சிறுபிள்ளைத்தனமான காரணங்களைக்
காட்டி உங்கள் உரையை நான் நிராகரிக்கவில்லை
பிரதமர் ஜி. பாரதமாதா மீது சத்தியமாக இதைச் சொல்கிறேன்
நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

> இந்தப் பாருங்கள் மோடி ஜி...
2014ல் உங்கள் முதல் செங்கோட்டை முழக்கம் 65 நிமிடங்கள்.,
கேட்டேன். அதில் நீங்கள் சொன்னதை எல்லாம் நிறைவேற்றி
விட்டீகளா என்று எதிர்க்கட்சி மாதிரி நான் கேட்கப்போவதில்லை.
2015, ஆக 15ல் 88 நிமிடம் பேசினார்கள்.
சமையல் செய்துக்கொண்டே கேட்டேன். கொஞ்சம் விட்டுவிட்டு
................ விட்டு.-------
இந்த ஆண்டு 2016ல் 94 நிமிடம் பேசி இருக்கிறீர்களாமே
பிரதமர் ஜி... அடேங்க்கப்பா....
இப்போதைக்கு எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது.
சப்பாத்திக்கு மாவு பிசைவதிலிருந்து கழிவறை கழுவதுவது
வரை ... தலைக்கு மேலே வேலை...
டிஜிட்டல் இந்தியாவில் இதற்கெல்லாம் இன்னும்
விடிவு பிறக்கவில்லை.  என்னை மன்னிக்க வேண்டும்
பிரதம்ர் ஜி...
இந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே உங்கள்
உரையை இந்த ஆண்டு கேட்கமுடியாத நிலை...

மற்றபடி உங்கள் டிரெஸ்... உங்கள் போஸ்.. எல்லாம்
சூப்பர்,..
ஜெய் ஹிந்த்!1



Tuesday, August 2, 2016

உண்மையின் இன்னொரு முகம்




உண்மையை எப்போதும் ஓர் ஆயுதமாக
பயன்படுத்துகிறோம். அதுவும் எதிராளியைக் காயப்படுத்தும்
ஆயுதமாக , தாக்குதல் நடத்தும் கருவியாக,
தன்னைத் தற்காத்துக் கொள்ளும் கவசமாக
உண்மையை கையில் எடுக்கிறோம். அத்தருணங்களில்
எல்லாம் பொய்யை விட உண்மை ரொம்பவும்
கொடுமையானதாக மாறிவிடுகிறது.
பொய்யை விற்பனை செய்யும் உலகத்தில்
உண்மை எப்போதும் கசப்பானது என்ற
பொய்யான முடிவுக்கு தள்ளபப்டுகிறோம்.
சிவ சிவா..
நான் இப்போது சொல்ல வருவது
உண்மையா பொய்யா..?
சிவ சிவா..