Thursday, July 28, 2016

கபாலி டா..




தேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள்
வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள்
கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன் இவ்வளவு
அதீத அக்கறையைக் காட்டுகிறார்கள்? என்ற கேள்விக்கு
பல முகங்கள் உண்டு.
கபாலி படம் தலித் அரசியலைப் பேசுவதாக சொல்கிறார்கள்.
திரைப்படம் பார்க்கவில்லை நான். அப்படியே பேசினாலும்
கூட கபாலி திரைப்படம் தலித் அரசியலுக்கு எவ்விதத்திலும்
உதவிடாது. ரஜினிகாந்த் என்ற திரைப்பட நடிகரின் ஸ்டார்
அந்தஸ்த்தை வைத்துக்கொண்டு தலித் பிரச்சனையை
இயக்குநர் ரஞ்சித் பேசிவிட்டதாக சொல்வது திரையலகைப்
பற்றி எவ்வித புரிதலும் இன்றி சொல்லப்படும் கற்பனை.


இடதுசாரி பிரச்சனைகளைப் பற்றி பேசிய திரைப்பட
கதாநாயகர்கள் முதல் விவசாயிகள் பிரச்சனை, மணல் கொள்ளை
வரை பேசிய நாயகர்களுக்கெல்லாம் அப்பிரச்சனைகள்
அக்காலத்திற்கான விற்பனைப்பொருள். எதை எதை எப்போது
விற்றால் விறபனை அமோகமாக நடக்குமோ அதை அதை
அப்போது விற்று பிழைத்துக்கொண்டிருக்கிறது திரையுலகம்.

இவை அனைத்தையும் விட என் போன்றவர்கள் அச்சப்படுவது
ஏற்கனவே  அதீத நாயக வழிபாட்டில் சிக்கித்தவிக்கும்
இளைஞர்கள்... அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின்
இளைஞர்களுக்கு அவர்களின் எந்தப் பிரச்சனையிலும்
சம்பந்தமில்லாத சூப்பர்ஸ்டாரின் பிம்பம் வெறும் கபாலியின்
பிம்பமாக இல்லாமல் ரஜினிகாந்தின் பிம்பமாக மட்டுமே
கட்டமைக்கப்படும். திரைக்கதை நாயக பிம்பங்களுக்கும்
நிஜக்கதை பிம்பங்களுக்கும் இடையிலிருக்கும் வேறுபாடுகளை
பகுத்தறிய முடியாத சினிமா ரசிகர் கூட்டங்களுக்கு
கபாலி வேறு ரஜினிகாந்த வேறு என்ற புரிதல் இருக்குமா?
இதிலும் இலாபம் என்னவோ கபாலியாக நடித்த நடிகருக்குத்தான்.
சம்பந்தமே இல்லாத இன்னொரு கீரிடமும் அவர் தலையில்.!

தலித் அரசியலைப் பற்றி பேசுவதற்கு ரஜினிகாந்த் தேவையில்லை
என்ற புரிதலுடன் தலித் அரசியல் பேச வேண்டிய காலமிது.


No comments:

Post a Comment