Thursday, May 9, 2024

உண்மை கலந்த புனைவு


 அவனைப் பற்றிப் பேசும்போதெல்லாம் கொஞ்சம் பொய் கலந்த உண்மை!

சங்க இலக்கியமும் விதிவிலக்கல்ல. 

அகநானூறு 160

அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக்

குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி,

நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த     

கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை

பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்

கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்:


தோழி சொல்கிறாள், "நிறைச்சூல் ஆமை மறைந்து நின்று புதைத்த முட்டைகளை பகுவாய் கணவன் ஆமை காத்து நின்றதாக"


இது பொய் தானே!😄

அவரு நல்லவரு வல்லவரு

நாலும் தெரிஞ்சவரு.

என்று மணமகனை எப்போதும் புகழ்ந்துப் பேசும் தோழி இவள்!


ஆமைகள் பல நூறு மைல்கள் கடந்து,  தான் பிறந்த அதே கடற்கரையில் வந்து முட்டை இட்டு செல்கின்றன! ஆமைகளின் வலசை இன்றும் ஓர் அதிசயம். ஆனால் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்வது பெண் ஆமை மட்டும்தான். 

மேலும் முட்டைகள் குஞ்சு பொரிக்க 60 முதல் 70 நாள்கள் வரை ஆகும். எந்த ஆமையும் முட்டையிட்ட பிறகு காத்திருப்பதில்லை. முட்டைக்கும் ஆமைக்கும் உள்ள உறவு முட்டையிட்ட பிறகு முடிந்து விடுகிறது.

முட்டை ஓட்டிலிருந்து எட்டிப் பார்க்கும் குஞ்சுகள் தங்களைக் காத்துக் கொள்வதற்கு இரவு நேரத்தில் வெளிவந்து கடல் அலையை நோக்கி பயணிக்கின்றன. ஆயிரம் முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவந்தாலும் அதில் ஒரு ஆமை தான் "ஆமை"யாக வளர்ந்து வாழ்கிறது. அதனால் தான் ஆமைகள் நூற்றுக்கணக்கான முட்டைகளை இட்டு புதைத்து வைக்கின்றன. 

ஆமைகளின் வயது 100 முதல் 150 வரை இருக்கும். 

ஆமை உயிரினத்தில் மிக மிகத் தொன்மையானது. 

ஆமையின் இருத்தல் கடலுக்கு மட்டுமல்ல நிலத்திற்கும் தேவையானதாக இருக்கிறது. 

இச்சங்கப் பாடலில் இடம்பெறும் " பகுவாய்க் கணவன் ஆமை"  ஒரு அற்புதமான புனைவு. 

பகுவாய் ஆமை snapping turtles.. உப்பங்கழி காயல்கள் ஏரி குளம் ஆகிய நன்னீரில் வாழும் ஆமைகள். இவை எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு வகையான "ஸ்ஸ்ஷ்'. குரல் எழுப்புகின்றன! 


இப்பாடலை எழுதிய நப்பசலையார் அந்த இயற்கை காட்சியை இப்படியாக ஒரு புனைவில் கொண்டுப் புகுத்தி அவன் ஊரின் பெருமையை கொஞ்சம் அதிகப்படுத்தி காட்டுகிறார்.

...

நாமும் ரசிக்கிறோம்.

"பொய்மையும் வாய்மை இடத்த" என்று புன்னகையுடன் கடந்து செல்கிறோம்.

Sunday, May 5, 2024

தொலைந்துப்போன "நான்"கள்




Life is a journey between the two terminals of birth and death. There is no map or GPS for the route to be taken. The starting time is  known to us well after the journey has commenced and the end time is unknown in spite of being a certainty. Somewhere along the way, we may lose our perspective and, consequently, our own selves. In thus Tamil poem, my friend and poet Puthiyamaadhavi Sankaran tells us what she would like to do in such a situation. The original poem is shared here alongwith my English translation:


THE LOST "I"S

============


One by one,

the "I"s 

peel away. 

Will it be possible 

to strip me off

like a snake sheds its skin 

and see my original "I"?


After me,

it may happen to

you too.

Beginning from 

the beginning

and unable to finish, 

it will not end either. 


Break the grave

where I am buried,

remove the doors

and start the rest

of the journey 

from there. 

Those who got 

lost on the way

would be wandering 

without address.

Leave the address 

of my ruined hut

with them.


One among them

may rebuild 

or put in new rooftiles.

Could change the direction 

of the doorway.

Could erect a canopy

for the dried up

jasmine creeper 

in the courtyard 

and pluck flowers.


In the fragrance 

of that blossom,

my that "I"

may revive.

That "I"

is the Brahmam 

of the universe.

I don't die.


~Sri 10:10 :: 06052024 :: Noida 


Brahmam: Indestructible matter. The word can also be taken as a reference to Brahma, the Hindu Gid if Creation.


💥💥💥💥


தொலைந்து  போன "நான்"கள்

=====================


நான் ஒவ்வொன்றாக உரிகிறது. 

பாம்பு சட்டையை உரிப்பது போல

என்னை உரித்து எரித்து

அந்த என் அசல் நானைத் 

தரிசிக்க முடியுமா?!

எனக்குப் பின்

உனக்கும் அது

நடக்கலாம்.

ஆரம்பத்திலிருந்து

ஆரம்பித்து

முடிக்க முடியாமல்

முடிந்தும் போகாதே.

என்னைப் புதைத்திருக்கும்

கல்லறைக் கதவுகளை

உடைத்து எடுத்து

அதிலிருந்து

மீதிப் பயணத்தை ஆரம்பி.

வழியில்

தொலைந்து போனவர்கள்

முகவரியின்றி

அலைந்து கொண்டிருப்பார்கள்.

அவர்களிடம்

சிதைந்துபோன

என் குடிசையின் முகவரியை விட்டுச் செல். 

அவர்களில் யாரேனும் ஒருவர்

மீட்டுருவாக்கலாம்

அல்லது

புதிய ஓடுகள் அடுக்கலாம்.

வாசலின் திசைகளை மாற்றலாம்.

முற்றத்தில் பட்டுப்போன

முல்லைக்கொடிக்குப்

பந்தல் போட்டுப்

பூப் பறிக்கலாம்.

அந்தப் பூவின் வாசனையில்

என் அந்த "நான்"

உயிர்த்தெழலாம்.

அந்த "நான்"

பிரபஞ்சத்தின் பிரம்மம்.

சாவதில்லை.

#புதியமாதவி_கவிதை

ஆங்கில மொழியாக்கம்

Sri N Srivastava.🙏

💥💥💥💥

Wednesday, May 1, 2024

இசை விடுதலையின் மொழி


 நேற்று இளையராஜா.

இன்று நீனா சிமோன்"

இது தற்செயலானதுதான்🙏🦋

🙏🙏🙏🙏


" நான் நான் நான்"

நான் என்று தனியாக எதுவுமில்லை! 

இருக்கவும் முடியாது 🦋

நீனா சிமோன்..

இசை என்பது வெறும் ரசனைக்கானது மட்டும்தானா?!

இசையின் பின்னால் ஜாதி இன மொழி நிற வேறுபாடுகளின் அரசியல் இருக்கிறது. 

சிலருடைய இசை தான் சமூகவெளியில் மனித உரிமைக்கான குரலாக எத்தருணத்திலும் ஆதிக்கத்தை எதிர்க்கும் வல்லமையுடன் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 


அமெரிக்க வல்லரசை எதிர்த்து தன் இசை வழியாக தன் கருப்பின மக்களின் விடுதலைக் குரலை எல்லா தருணங்களிலும் இசையாக ஒலித்தவர் நீனா சிமோன்.

" என்னுடைய வரிப்பணத்தில் வியட்நாம் மக்களைக் கொன்று குவிக்கிறாயா?" என்று தன் ஆட்சியாளர்களை எதிர்த்து குரல் கொடுக்கும் ஆற்றல் அவருடைய இசை வெளிக்கு இருந்தது. 


இசை அவரைப் போன்றவர்களுக்கு ஒரு போராட்ட கருவி. இசை வெறும் ரசனைக்குரியதோ வலி நிவாரணியோ மயக்க மருந்து  மட்டும் அல்ல! 

இசை ஆதிமனிதனின் முதல் மொழி. எழுத்து மொழி எப்போதுமே அதிகார வர்க்கத்தின் மொழி தான். இசை அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் மனிதனின் குரல். 

நீனா சிமோன்களும் 

இசைக்கலைஞர்கள் தான்

என்பதை மறந்துவிடுவது எளிதல்ல.


"எல்லாமும் என் சுயம். நான் அடைந்திருக்கும் அனைத்தும் நான் நான் நான் மட்டுமே! என் வெற்றி சுயம்புவாக நான் அடைந்திருக்கும் என் உழைப்பின் வெற்றி" இப்படியாக யார் நினைத்தாலும் யார் சொன்னாலும் இது எல்லாமே பாதி உண்மை மட்டும் தான். மீதி உண்மையில் முகம் தெரியாத பலருடைய உழைப்பு பலருடைய போராட்டங்கள்  இவை அனைத்தும் உருவாக்கிய சமூகவெளி.  சுயம்பு துளிர்ப்பதற்கு கூட ஒரு சமூகவெளி அதற்கு தயாராக இருக்கிறதா என்பது தான் முக்கியம். 

மற்றதெல்லாம் வெறும்

" நான் நான்," பிதற்றல்கள்.

நான் - 

நான் மட்டும் 

என்று எதுவும் இல்லை.