Friday, May 8, 2020

மன் கி பாத் மரண ஓலங்கள்


சிதறிக்கிடக்கும் சப்பாத்தி துண்டுகள் ..
money purse without money..யில் புன்னகைக்கும் முகங்க்கள்..
உழைப்பாளியின் வியர்வையில் படிந்த ரத்ததுளிகளாய் .. 
சிதறிக்கிடக்கிறது இரவும் பகலும்.

டியர் மோதிஜி... 
நிச்சயமாக நீங்கள் இதற்கு காரணமல்ல.
உங்கள் அகண்ட பாரதக் கனவுகளில் இவர்கள்
இல்லை, இல்லவே இல்லை.

செத்தப் பிறகு 5 லட்சம் கொடுப்பதாக அறிவிக்கும்
நீங்கள்..உயிருடனிருக்கும் போது ரூ 500 செலவு
செய்திருந்தால் இந்த மரணங்கள் நடந்திருக்குமா?
இப்படி எல்லாம் லாக்டவுண் காலத்தில் உங்கள் மீது
குற்றம் சுமத்துவது தேசத்துரோகம் தான்!

லாக்டவுண் நேரம்.. 
தண்டவாளத்தில் டிரெயின் ஓடாது என்பதை 
அப்படியே வாசிக்கும் அப்பாவி மக்கள் 
ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்தது 
மன்னிக்க முடியாத குற்றம் என்று 
இப்போதும் உங்கள் அறிவுக்கொழுந்துகள் பேசுவார்கள்..
அவர்களுக்குத் தெரியுமா ..
நடந்தே போய்விடலாம் என்ற நம்பிக்கையும் 
இருத்தலுக்கான போராட்டமும்.
இந்தியா முழூமைக்கும் ஒரே தலைவர் நீங்கள் தான்.
4 மணி நேர அவகாசம் கொடுத்து லாக்டவுண் என்று 
அறிவிக்கும் போது நிச்சயமாக 40 கோடி இந்திய
மக்களின் அன்றாட வாழ்க்கையை உங்களுக்கு நினைக்க
 நேரமிருந்திருக்காது.. 
மும்பையும் சென்னையும் டில்லியும் 
ஏன் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.. 
பன்னாட்டு விமானங்களை
கடைசிவரை பறக்கவிட்டு வேடிக்கைப் பார்த்த உங்களுக்கு
 எங்கள் 
அன்றாட வாழ்க்கையின் வலி தெரியுமா மோதிஜி...??
நிலைமையைச் சமாளிக்க முடியாமல 
மா நில அரசுகளைத் திண்டாட வைத்துவிட்டு..
இனி நீங்களாச்சு.. என்று கையை விரித்துவிட்டு
நீங்கள் பேசும் "மன் கி பாத்"!!!! மனசுடன் ஒட்டவே இல்லை..!
இரவு முழுவ்வதும் அந்தக் காட்சிகள் 
எங்களைத் தூங்க விடாமல் துரத்துகிறது.. ..
 நீங்களும் உங்கள் சகாக்களும் எத்தனைக் காரணங்கள் 
சொன்னாலும் எல்லாமே அர்த்தமிழக்கின்றன...

வெறுமை சூழந்த விடியலில்
தண்டவாளத்திலிருந்து உயிர்த்தெழுகிறது
மீண்டும்மீண்டும் அந்த முகங்கள்...

2 comments:

  1. மக்களை அடக்கி விடலாம் இறைவனுக்கு பதில் சொல்லியே தீரவேண்டும்.

    ReplyDelete
  2. மிகச் சிறப்பான மிகச் சரியான பதிவு

    ReplyDelete