Sunday, May 7, 2023

GOD save the KING

 "GOD save the KING"



1953 எலிசபெத் மகாராணியின் முடிசூட்டுதல் நிகழ்வுக்குப் பின்
70 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே நிகழ்வு
அரங்கேறி இருக்கிறது.
இன்றைய பிரிட்டனின் பொருளாதர சரிவு நிலையில்
முடிசூடல் நிகழ்வுக்கான 3 நாட்கள் செலவு
100 மில்லியன் பவுண்ட்ஸ்.
இச்செலவு என்னவொ வரிகட்டுகிற குடிமக்கள்
தலையில் சுமத்தப்படும்சுமைதான். பாவம்தான் அவர்கள்.
அதெல்லாம் விட்டுத்தள்ளுங்க…
அரசர்கள் முடிசூடுவது எப்படி இருக்கும்னு
பார்க்க பார்க்க...பிரமிப்பில் ..
இப்போ போயி..
குடிமக்கள் அதுஇதுனு.. பேசப்பிடாது.
நெகட்டிவ்வா யோசிக்காதே!
நாமும் “ அரசரை கடவுள் காக்கட்டும்”
என்று சொல்லிட்டு போயிடலாம் சரவணா…
அந்தக் கிரீடம் இருக்கே…
அதிலிருந்த வைரம் வைடூரியம் இப்படியான
விலை உயர்ந்த நவரத்தினங்கள்…
செம வெயிட்டா இருந்திருக்கும்தானே!
சார்லஸ் தலைக்கு கனமானதுதான்.
அப்புறம் நம்ம நாட்டு கோகினூர் வைரத்தை இம்முறை
வெளியில் காட்டவே இல்லையாமே!
நாம வல்லரசு ஆயிட்டோம்டே.
பயம்… நம்மள பார்த்து பயம்.
நாமும் அடிக்கடி “ இது எங்க நாட்டு கோகினூர் வைரம்”
அப்படின்னு கத்திட்டே இருக்கோமா..
நம்ம ஊரு கத்தல் கோஷம் பற்றி எல்லாம்
அவுங்க ஸீரியசா யோசிச்சிட்டாங்கனு நினைக்கிறேன்.
பயந்துப்போயி..
கோகினூர் வைரத்தை வெளியிலே எடுக்கலியாம்..
(ஹய்…சும்மா காலரைத் தூக்கி விட்டுக்கோ சரவணா!)
அப்புறம் இந்தச் செங்கோல் இரண்டு கையிலும்
கொடுத்தாச்சு..
பள பளனு மின்னுது..
ராஜ முத்திரைப் பதித்த கணையாழி போட்டாச்சு.
இரண்டு கையிலும் ராஜ வம்ச கடயம் மாட்டியாச்சு.
தங்கத்தால் நெய்த அங்கியை மாட்டியாச்சு..
வைரங்கள் ரத்தின்ங்கள் பதித்த வாள்கள்
கையில குடுத்தாச்சு..
இப்போ என்ன நம்ம ராஜா வாளெடுத்து
குதிரை மேலேறி சண்டைக்கு போகப்போறாரா என்ன?
இதெல்லாம் கிடையாதுனாலும்
மரபுனு ஒன்னு இருக்குடே..
ராஜா ன்னா வாள் இல்லாமலா..
கிரீடம் இல்லாமலா
செங்கோல் இல்லாமலா..
முத்திரை கணையாழி இல்லாமலா!
இதெல்லாம் புரியுது…
எதுக்கு டே ஒரு தங்க ஸ்பூண்..
கொடுத்திருக்காங்கனு தெரியல.
“ராஜ கரண்டி “
இதெல்லாம்தான் பிரமாண்டங்கள்
அரசப்பரம்பரை அரச வாழ்க்கை!
அதை இப்போதும் காண கொடுத்து வச்சிருக்கு..!
(இதை எல்லாம் பார்த்திட்டு நம்ம ஆட்களும்
ஆரம்பிச்சிடக் கூடாது.. அப்புறம் கடவுளே
நம்மைக் காப்பாற்ற முடியாமா ஓடிப்போயிடுவாரு)
ஆனா..
இங்கிலாந்து அரச முடிசூட்டலில் ஓர் அதிசயம்
ஒரு திருப்புமுனை
நம்ம ஆளு..
இந்திய வம்சாவளி ,( இந்து சமய நம்பிக்கை கொண்ட)
இந்து பிரதமர் ரிஷி சோனாக்
பைபிள் வாசித்தார்..
So let’s celebrate this weekend with pride in who we are
and what we stand for. Let’s look to the future with hope
and optimism. And let’s make new memories,
so we can tell our grandchildren of the day we came together to sing:
‘God Save The King’.

No comments:

Post a Comment