நான் எழுதப் போவதை வாசித்துவிட்டு
தோழியர் சிலர் என் மீது கோபப்படலாம்!
பெண்ணியத்திற்கு எதிரானக் கருத்தாக
இதை எடுத்துக் கொண்டு இன்னும் சிலர்
என்னை ரொம்பவும் பிற்போக்குவாதியாக
முத்திரைக் குத்தலாம்,…
அண்மையில் மத்தியர் முக நூல் குழுவில் பெருகி வரும்
விவாகரத்து குறித்த ஒரு பதிவு வாசித்தேன்.
அப்போதிருந்தே இதைப் பற்றி எழுதியாக
வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு
…..
விவாகரத்துகள் எதிர்க்கப்பட வேண்டியவை அல்ல.
திருமணம் ஆயாச்சு..
இனி கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்
என்று இருக்க வேண்டாம்.
கொடுமைப்படுத்தும் ஆண்கள்,
வன்கொடுகைகள், டவுரி கொலைகள்..
மாமியார் கொடுமை.. நாத்தானர் கொடுமை..
சகிக்க முடியாத ஆணாதிக்க கொடுமைகள்
இருக்கிறது.. அவை இல்லை என்றும் சொல்லவரவில்லை.
இவற்றிலிருந்து பெண்ணுக்கோ ஆணுக்கோ
விடுதலைத் தரும் விவாகரத்துகளை மதிக்கிறேன்.
ஆனால் இன்று குடும்ப நலக்கோர்ட்டுகளில் வரும்
விவாகரத்துகளுக்கான காரணங்கள் என்னவாக இருக்கின்றன?
இந்த விவரங்கள் இன்னும் அச்சத்தை அதிகப்படுத்துகின்றன!
இன்றைய பெண்களைப் பற்றி எனக்கு
மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் உண்டு.
என்னால் தாண்ட முடியாத உயரங்களை
அவர்கள் தாண்டுகிறார்கள்.
என் கற்பனைக்குள் எட்டாத செயல்களை
அவர்கள் செய்துவிட்டு அடுத்த செயலுக்கு
நகர்ந்துவிடுகிறார்கள்.
ஆனால்… அவர்களின் குடும்ப உறவுகள்
குறித்த செயல்பாடுகள் என்னைப் பயமுறுத்துகின்றன.
பெண்கள் என்றாலே திருமணம் கட்டாயம்
செய்து கொள்ள வேண்டும் என்றோ..
திருமணம் செய்து கொண்டால் கட்டாயம்
குழந்தைப் பெற்றுக்கொண்டு தாய்மை கீரிடத்தை
தலையில் சுமந்தாக வேண்டும் என்றோ..
கட்டாயமில்லை.
பெண்களுக்கு தனக்கான லைஃப் பார்டரைத்
தேர்ந்தெடுக்கும் முழு உரிமையும் உண்டு என்ற
புரிதலில் இருந்து இதை எழுத ஆரம்பிக்கிறேன்.
ஆண் என்றால் வெறுமனே சம்பாதித்துக் கொடுக்கும்
ஒருவன் மட்டுமா?
அவன் உன் ஆசைகளை எல்லாம் நிறைவேற்ற
வேண்டும் என்று எதிர்பார்க்கும் பெண்கள்
அவனுடைய ஆசைகள் விருப்பங்களை மதிக்கின்றார்களா?
ஆண் வெறும் கணவன் மட்டுமல்ல,
ஆண் தன் குழந்தைகளின் தகப்பன் மட்டுமல்ல.
ஆண் தன் பெற்றொர்களுக்கு மகன்..
ஆண் தன் தங்கைகளுக்கு அண்ணன்.
ஆன் தன் அக்காக்களுக்கு இனிய தம்பி..
கணவன் என்பவன்.. கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.
ஆனால் அவன் கட்டாயம் அனாதையாக
இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும்
மன நிலை பெண்ணுக்கு எங்கிருந்து வந்தது?
எந்த ஒரு ஆண்மகன் தன் பெற்றோர்களை
மதிக்கிறானோ நேசிக்கிறானோ
அவன் மட்டும் தான்
தன் மனைவி பிள்ளைகளை உண்மையாக
நேசிப்பவனாக இருப்பான்..
இது தான் ஒவ்வொரு பெண்ணும் புரிந்துக் கொள்ள
வேண்டிய வாழ்க்கையின் ரகசியம்…
பெண்ணைப் பெற்றவர்கள்….
பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டால்
அவளுடைய வாழ்க்கையில் எல்லாவற்றிலும்
தலையிடுவது அவளுக்குச் செய்யும் உதவி அல்ல!
இன்று பெருகி வரும் விவாகரத்துகள் ….
அதற்கான காரணங்கள்..
நாம் பேசும் பெண்ணிய தளங்கள்..
ஆண் பெண் உறவு நிலை…
இதில் பாதிக்கப்படும் ஆண் பெண் ..
எல்லா நிலையிலும் இருந்து தான் இதைப் பார்க்கிறேன்.
குறைந்தது… ஆண் பெண் உறவு நிலையில்
புரிதல் இல்லை என்றால் அவசரப்பட்டு
குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளாதீர்கள்!
உங்கள் ஈகோ.. உங்கள் புரிதலின்மை..
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை
எவ்வளவு பெரிய கேள்விக்குரியாக்குகிறது?
பணம் மட்டும் வாழ்க்கையல்ல…
காதலும் வாழ்க்கையும்..
நீங்கள் பயணிக்கும் காரிலோ
உங்கள் விலை உயர்ந்த கைபேசியிலோ
உங்கள் கணினியிலோ
உங்கள் 6 இலக்க மாதச்சம்பளத்திலோ
இல்லை இல்லை இல்லவே இல்லை…
வாழ்க்கை .. கொஞ்சம் விட்டுக்கொடுத்தலில் இருக்கிறது.
யாரிடம் தான் குற்றம் குறைகள் இல்லை.
NO BODY IS PERFECT IN LIFE…
வாழ்க்கை .. கொஞ்சம் கொஞ்சம் ஊடலில் இருக்கிறது.
வாழ்க்கை.. அவனுக்காக நீயும்
உனக்காக அவனும் என்ற
தோழமையில் இருக்கிறது.
என்றாவது
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் சொட்டுதடி…
என்று தோள்களில் சாய்ந்து வாழ்க்கையை
வாழ்ந்துப் பாருங்களேன்..


women's liberation does not mean approaching family courts on a whisker
ReplyDelete