Monday, April 27, 2020

அணில் காதல்

அணில் காதல்


அணில்கள் சண்டை இடுகின்றன.
கலவிக்கான யுத்தம் இது.
மூர்க்கத்துடன் ஆண் இருவர்
மோதிக்கொள்ளும் சப்தம்
தோட்டத்தை தாண்டி
வெளியில் பரவுகிறது.
கதவுகளைத் திறந்து எட்டிப் பார்க்கிறேன்.
கிணற்று ஓரம் பதுங்கி இருக்கும்
அவள் பார்வையில் இருந்து
நடுக்கமும் பயமும் துண்டு துண்டாய் கிணற்றுக்குள் விழுகிறது.
இது நிச்சயமாக அவள்தான்.
வலியவனைப் புணர்வது
அவர்கள் தேசத்தின் நியதி தானே..
பின் ஏன் இந்த அச்சம்?
தோற்றுக் கொண்டு இருப்பவன்
அவள் காதலனாக இருப்பானோ?
அவனை இழக்கப் போகும் சோகமோ
காதலின் மரண வலியோ
கதவுகளைச் சாத்தி பூட்டிக் கொள்கிறேன்.
என்ன நடந்திருக்கும்?
மறுநாள் அணில்கள் ஒன்றே ஒன்று
விரட்டிக்கொண்டு துள்ளி விளையாடுகின்றன.
மாதுளம்பழத்தை துளைத்து எடுத்து துவம்சம் செய்திருக்கும் அணில்களை விரட்டுவதற்காக விரைகிறேன்.
இணைகளின் குதியாட்டத்தில்
முருங்கைப் பூக்கள் உதிர்கின்றன.
ஏக்கத்துடன் அவளை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
அடுத்த பிறவியிலேனும்
அணிலாக பிறக்க வேண்டும்.

2 comments:

  1. அருமை..மிகக் குறிப்பாக முடித்த விதம்...வாழ்த்துகளுடன்..

    ReplyDelete
  2. ரசித்தேன் அருமையாக இருக்கிறது.

    ReplyDelete