Friday, April 17, 2020

பிறவிக்கடல்

கைகளையும் கால்களையும் கட்டியது
யாருமல்ல நானே தான்.
 எதிர்நீச்சலிட விருப்பமில்லை.
திமிரும் உடலை அழுத்தி அழுத்தி மூழ்கிக்கொண்டே இருக்கிறேன்.
ஏழு கடல்களையும் தாண்டுவதற்குள்
காற்றின் சுவாசம் அடங்கிப் போகிறது .

அவன் ஸ்பரிசம் அறியாத உடல்
உப்பு நீரில் வானம் பார்த்து மிதக்கிறது.
மீன்கள்கண்களைக் கொத்துகின்றன தொடைகளுக்கு நடுவில் ஊர்ந்து சென்ற பாம்புகள்
அடிவயிற்றில் இருந்து தவளையைக் கவ்விப்பிடித்து பசியாறுகின்றன.
 திமிங்கலம்விலகிச் செல்கிறது.
குஞ்சுகளுடன் நீந்தி வந்த சுறாக்கள்
 கண்ணீர் விடுகின்றன.
கடல்குதிரை மீதேறி வரப்போவதில்லை ராஜகுமாரன்.
அவன் தின்னாத முத்தங்களை
கடலின் அலைகள் தின்னுமோ ?
 பசியாறுமோ !
அமுதமே விஷமாக நிசப்தம் ஆகிறது
பாற்கடல்

No comments:

Post a Comment