Tuesday, November 27, 2018

அயோத்தியகாண்டம்


 அவதாரங்களின் அதிகாரம் அரசியலானது
அயோத்தி குறுக்குச்சாலை முகவரியுடன்
ஹேராம்..
உன் ஜன னம் ஏன் சாபக்கேடானது?
குரங்குகளின் இதயத்தில்
குடியிருக்கும் நீ
மனிதர்களின் இதயத்தில்
வாடகைக்கு கூட
வரமறுக்கிறாயே.., ஏன்?
கதறல் அழுகை ஒப்பாரி..
கடந்த காலத்தில் அடங்கிப்போனது
மவுனத்தில் உறைந்து கிடக்கிறது..
இன்றைய விடியல்.
வெடிகுண்டுகள் வெடித்த பெரு நகரம்
ஓடிக்கொண்டே இருக்கும் சக்கரங்கள்
பல்லிடுக்குகளில் அடையாளமின்றி
சிதைந்து தொங்கும் வாழ்க்கை.
குண்டுதுளைக்காத நாட்களுக்காக
தவமிருக்கும் தண்டவாளங்கள்…
ஓடிக்கொண்டே..






No comments:

Post a Comment