Saturday, November 10, 2018

சத்தியவாணி முத்து


 நான் சிறுமியாக இருந்தப் போது ரசித்த
ஒரு பெண் ஆளுமையின் நினைவு நாள். (11/11/99)
சத்தியவாணி முத்து குறித்து சில வரிகள்
இன்றைய அரசியலுக்கு நினைவு படுத்த வேண்டியதாக
இருக்கிறது!
அரசியலில் இப்பெண் 1957ல் சுயேட்சையாக பெரம்பூர்
தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் என்பதுடன்
சேர்த்து வாசிக்க வேண்டும். இரு முறை தேர்தல் களத்தில்
தோற்றவரும் இவர் தான். அது வேறு செய்தி.        
ஓரகடம் பகுதியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான
காப்பகம் அமைக்கும் போது அக்காப்பகத்திற்கு
சத்தியவாணிமுத்து வைக்க விரும்பிய பெயர் கனிமொழி
காப்பகம்.  கனிமொழி யார் என்ற வெளிச்சம்
அந்தக் காப்பகத்திலிருந்து மையமிட்டு இன்று மைய அரசியல்
வரை சென்று விட்ட து. 
என்னைப் பொருத்தவரை 
அந்தக் கனிமொழி , அன்றைய கனிமொழி
இன்றைய கனிமொழி இல்லை !
 கனிமொழியின் பெயரை அவர் காப்பகத்திற்கு
வைத்த தற்கு அரசியல் காரணங்கள்
 அல்லது கனிமொழியின்
தந்தையை மகிழ்விக்கும் காரணங்கள் இருந்திருக்கும்.

அறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் 
அரிஜன நலத்துறைஅமைச்சராகவே
 சத்தியவாணிமுத்து அதிகாரத்திற்கு வருகிறார்.
இந்த இடம்… 
இன்னும் கவனமாக கவனிக்க வேண்டிய இடம்.
க க்கனை காமராசர் வைத்திருந்த இடமும்
சத்தியவாணிமுத்துவை திராவிட அரசியல் வைத்திருந்த இடமும்
இன்னும்  பேசப்படவில்லை. 
இனியாவது பேசியாக வேண்டும்.





No comments:

Post a Comment