Wednesday, November 14, 2018

நேருவும் குழந்தைகளும்



Obviously, the highest type of efficiency is that which can utilise existing material to the best advantage.நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக்
கொண்டாடுவது ரொம்பவும் குழந்தைத்தனமாக
இருக்கிறது
நேருவின் பிறந்த நாள் இன்று நவம்பர் 14.
குழந்தைகள் தினமாக க் கொண்டாடுகிறோம்.
ஏன்?
இந்தக் கேள்விக்கு ஒரே பதில் ஒற்றைக்குரலில்
கேட்டு கேட்டு பழகிவிட் ட து.
சாச்சா நேருவை/ நேரு மாமாவை குழந்தைகள்
மிகவும் நேசித்தார்கள் / நேரு குழந்தைகளை 
மிகவும் நேசித்தார்..! 
யார் தான் குழந்தைகளை நேசிக்க மாட்டார்கள்?
எல்லா தலைவர்களும் குழந்தைகளை
எதிர்காலத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாகவே
பார்க்கிறார்கள். அதில் நேருவும் ஒருவர்.
அவ்வளவுதான். 
நடந்துது என்ன?
1964 மே மாதம் நேருவின் மறைவுக்குப் பின்
 அவருடைய பிறந்த நாளை எப்படி கொண்டாடுவது 
என்று நாடாளுமன்றம்தீவிரமாக யோசிக்கிறது. 
நவம்பர் 20 உலக குழந்தைகள் தினம்
என்று ஏற்கனவே ஐ.நா. அறிவித்துவிட்ட து.
நேருவின் பிறந்த தினத்திற்குமிகவும் அருகில்
 இருந்த (உலக) குழந்தைகள் தினத்தை 
அப்படியே ஒரு வாரம் முன்னதாக க் கொண்டாடி விடலாம்
என்று நினைத்தார்களோ என்னவோ..
நேருவின் பிறந்த நாள் இப்படியாக இந்தியாவில்
குழந்தைகள் தினமாக மாறிவிட்ட து.
குழந்தைகளுடன் புன்னகைக்கும் நேரு
பார்க்க அழகாகவே இருக்கிறது. . 
குழந்தைகளும் இன்றுவரை சாச்சா நேரு வேடமணிந்து
 நேருவின் பொன்மொழிகளைஅவரவர் 
மனப்பாட த் திறனுக்கேற்ப முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்..
நேரு என்ற மாமனிதர் குழந்தைகளின் இன்னொரு
விளையாட்டு பொம்மையாகிவிட்டார் என்பதை
இன்றுவரை நேருவின் குழந்தைகளே உணர்ந்துக்
கொள்ளவில்லை!
மும்பையில் என் தோழர் ஒருவர் நேருவின்
 பிறந்த நாள் ஏன் குழந்தைகள் தினமாக க் 
கொண்டாடப்படுகிறது என்ற கேள்விக்கு 
மிகவும் நகைச்சுவையாக சொன்ன பதில் 
நினைவுக்கு வருகிறது.
நேரு தன் குடும்பத்தின் 3 தலைமுறை
 குழந்தைகளுக்கு (அரசியல்) வாழ்வளித்தவர் ஆயிற்றே!”
 என்றார்.
இது வெறும் நகைச்சுவை மட்டுமல்ல.
நேருவை ஆரம்ப பாடசாலைக்கு அப்பால் எடுத்துச்
சென்றிருக்க வேண்டும்.
நேருவின் மாடர்ன் இந்தியா கனவுகள்,
நேரு வழிபட்ட அணைக்கட்டுகள்
நேரு கொண்டுவந்த ஐந்தாண்டு திட்டங்கள்
நேரு பேசிய சோஷலிஷம்
நேருவின் பஞ்ச சீலம்
ஆசிய ஜோதி நேரு…
இவை எல்லாம் குழந்தைகள் பேச வேண்டிய கருத்து
அல்ல. குழந்தைகளுக்கு பாடப்புத்தகத்தில் வரும் 
சாச்சா நேருவே போதும். 
அவரை எடுத்துச் செல்ல வேண்டிய இடங்கள்
அவரைப் பற்றி பேசவேண்டிய கருத்துகள்
அவரைப் புரிந்து கொள்ள வேண்டிய புள்ளிகள்
இத்தனை பிரமாண்டங்களையும்
வெறும் குழந்தைகள் தின வாழ்த்து
வீணடித்துக் கொண்டிருக்கிறது.
இன்னும் சில தகவல்களையும் சேர்த்து 
வாசித்தாக வேண்டும்.
நேரு குழந்தைகளுக்கு என்று சிறப்புத் திட்டங்கள்
 எதுவும் கொண்டுவரவில்லை. 
குழந்தைகளுக்கான கல்வி ஆரோக்கியம் 
என்று இருப்பதெல்லாம் கூட அவர் 
கொண்டுவந்த திட்டங்களின்
பகுப்புக்குள் அடங்கிவிடும் துணைத்திட்டங்கள் மட்டும் தான்.
நேரு ஆரம்பக்கல்விக்கு என்று ஒதுக்கிய 
நிதித்தொகை குறைவு தான்.
நேருவின் காலத்திலேயே இது பற்றிய விவாதங்கள் வந்துவிட்டன.

The establishment of IITs was initiated by Nehru.
The establishment of IIMs was initiated by Nehru.
Nehru also the reason of AIIMS in New Delhi.
இதெல்லாம் நேருவின் சாதனைகளும் கனவுகளும். 
இந்த இடங்களில் எல்லாம் நேருவைப்
பேச வேண்டும். பேசி இருக்க வேண்டும். 
இந்திய அரசியலுக்கும் ஏன் காங்கிரசு 
அரசியலுக்கும் கூட இதெல்லாம் 
உதவியாக இருந்திருக்க முடியும்..
நேருவின் பிறந்த நாளை ஒரு தொலை நோக்குத்
திட்ட த்துடன்கொண்டாட தவறிவிட்டோம்.

குழந்தைகள் தினமாக கொண்டாடுவது 
ரொம்பவும் குழந்தைத்தனமாக இருக்கிறது.
சாச்சா நேருவுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன்
என்பது புரியும்.
.. எதுவும் புரியாமல் நேரு வேடமணிந்து
 உலாவரும் குழந்தைகளை நினைத்தால் தான்
 பாவமாக இருக்கிறது!

1 comment:

  1. நேருவின் பிறந்த நாளை ஒரு தொலை நோக்குத்
    திட்ட த்துடன்கொண்டாட தவறிவிட்டோம்.
    உண்மைதான் சகோதரியாரே

    ReplyDelete