Thursday, April 6, 2017

GST ஜீ பூம்பா ..


ஒரு தேசம் ஒற்றை வரி
காஷ்மீரும் கன்யாகுமரியும் ஒன்றாகிவிட்டது.. ஆஹா..
தமிழ்நாடும் பீஹாருன் ஒன்றாகிவிட்டது..
GST .. ஜீ பூம்பா.. GST .. ஒரு மந்திரச்சொல்.. 
ஜீ பூம்பா. GST .. GST .. GST ..
இதுதான் தற்போது நம் நாடாளுமன்றத்திலும் மேல்சபையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்
GST .. ஜூலை 1 முதல் அமுலுக்கு வரப்போகும் GST ..
பல்வேறு மறைமுக வரிகளை நீக்கிவிடும் என்றும் 
இடைத்தரகர்கள் இருக்கமாட்டார்கள் என்றும் 
ஆகையினால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் 
அன்றாட பொருட்கள் கிடைக்கும் என்றும் மோதி அரசு அலங்காரமான அறிவிப்புகளுடன் தேசம் முழுமைக்குமான ஒற்றை வரி முறையை 
உரக்கப் பேசுகிறது.
ஆனால் இந்தியச் சட்டப்படி இந்தியாவிலிருக்கும் 
அனைத்து மாநிலங்களும் ஒரே வரி விகிதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்
 என்ற கட்டாயமில்லை.
அத்துடன் அரசு வசூலிக்கும் வரிகள் மூன்று வகையாக இருக்கின்றன
நடுவன் அரசு வரி
மாநில அரசு வரி
நடுவண் அரசும் மாநில அரசும் சேர்ந்து வசூலிக்கும் வரி.
இந்த மூன்று முறைகளை எப்படி ஒற்றை வரி முறையில்
 கொண்டுவர இருக்கிறார்கள் என்பதைப் பற்றி இதுவரை 
எந்த ஒரு செயல்திட்டமும் அரசு வெளியிடவில்லை.

பொருட்களின் கொள்முதல் விலையை
வியாபாரிகள் அவர்கள் இலாபத்திற்கு ஏற்ப தீர்மானிக்கும் வசதியை வழங்கி இருப்பதால் பொருட்களுக்கான வரி விகிதம் மட்டுமே 
பொருட்களின் விலையை மலிவாக்கும் என்பதும்
 பொதுமக்கள் பலனடைவார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
இவை எல்லாவற்றையும் விட இன்னொரு முக்கியமான கருத்து... 
பரந்த இந்திய தேசத்தின் பூகோள ரீதியான நிலப்பரப்பை
 நடுவண் அரசு கண்ணை மூடிக்கொண்டு செயல்பட்டிருப்பது தெரிகிறது.
 அதுவும் குஜராத்தில் முதல்வராக இருந்த மோதி.
 குஜராத்தின் வரி விதிப்பு ஏன் மற்ற மாநிலங்களின் வரி விதிப்பிலிருந்து வேறுபட்டிருக்கிறது என்பதை நன்கு அறிந்தவர்.
அதற்கான அனைத்து காரணங்களும் நிர்வாக ரீதியாகவும் 
அறிந்தவர் தான். இப்போது அவரே சொல்கிறார்... 
குஜராத்தும் அசாமும் ஒன்றுதான்.
மகாராஷ்டிராவும் தமிழ்நாடும் ஒன்றுதான் என்று!
அவர் டில்லியிலிருந்து எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும். 
அதை நாம் நம்பியே ஆகவேண்டும்.
(The GST is bound to lead to serious difficulties, and could possibly fail, because it seeks to treat unequal states equally)

இப்படியான ஒற்றை வரிவிதிப்பின் மூலம் மாநில அரசுக்கு ஏற்படும் வரி இழப்பு/ வருவாய் இழப்பை மாநில அரசு எப்படி எதிர்கொள்ளப்போகிறது? மாநில அரசுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்குமா என்ன? அதை யார் தீர்மானிப்பார்கள்? வறட்சி நிவாரணத்திற்கே ஆயிரம் ரூபாய்க் கேட்டால் வெறும் ஐம்பது ரூபாயை எடுத்து வீசுகிற மத்திய அரசு மாநில அரசின் வருவாய் இழப்பை எம்மாதிரி அணுகும்?!!
Image result for gst cartoon

இதற்கெல்லாம் நமக்கு நேரமில்லை.. என்னவோ நடக்குது நடக்கட்டும்.
தற்போது நமக்கும் நம் அரசியல்வாதிகளுக்கும் இருக்கும் மாபெரும் பிரச்சனை
ஆர் கே நகர் தேர்தல் மட்டுமே.. அதுவல்லவா நம் அனைவரின் வாழ்க்கையையும் மாற்றப்போகிறது!

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அரசியல் என்றாலே அலர்ஜி ஆகி விடுதே

    ReplyDelete