Friday, April 21, 2017

எட்டப்பனுக்கெல்லாம் சூடு போட்ட கட்டப்பா..

Image result for பாகுபலி சத்தியராஜ்

அப்படிப்போடு ராசா
நீ வருத்தம் தெரிவிச்சப் பாருய்யா
அது உன் பெருந்தன்மை மட்டுமல்ல.
உன் பொருட்டு உன் சக தொழிலாளி நஷ்டமடையக்கூடாதுனு
நீ உண்மையாகவே கவலைப்பட்டுக் காட்டிய மனித நேயமய்யா..

நீ வருத்தப்பட்டதைக் கூட மன்னிப்பு கேட்டதா சொன்னவர்களுக்கு
சூடு சுரணை வர்ற மாதிரி நீ கடைசியா சொன்னப்பாருய்யா ராசா..
அதுதான் சத்தியமான வார்த்தை
. போதும்ய்யா.. அதுபோதும்.
இன்னும் தமிழ்நாட்டில் கலைஞன் உயிருடனும் உயிர்ப்புடனும்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் என்பதைக் காட்ட.

"இனிவரும் காலங்களிலும் தமிழ் ஈழ மக்களின் பிரச்சனையாக இருந்தாலும் சரி விவசாயிகளின் பிரச்சனையாக இருந்தாலும் சரி தமிழக மக்களின் அனைத்து நியாயம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன் என்பதைத் தெள்ளத் தெளிவாக கூறிக்கொள்கிறேன்."
இப்படி நான் கூறுவதால் இந்த சத்தியராஜை வைத்து படம் எடுத்தால்
எதிர்காலத்தில் தொல்லைகள் வரும் என்று கருதும் தயாரிப்பாளர்கள் தயவு செய்து இந்த சாதாரண சின்ன நடிகனை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் , என்னால் நஷ்டமடைய வேண்டாம்
என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனேன்றால்
இரு நடிகனாக இறப்பதை விட எந்த விதமான மூட நம்பிக்கையும் இல்லாத ஒரு தமிழனாக இருப்பதும் இறப்பதும் தான் எனக்கு பெருமை, மகிழ்ச்சி.."
நன்றி சத்தியராஜ்.
"பாகுபலி என்ற மிகப்பெரிய படத்தின் ஒரு மிகச்சிறிய தொழிலாளி
தான் நான். என் ஒருவனது செயலின் பொருட்டு சொற்களின் பொருட்டு பல ஆயிரம் பேர்களின் உழைப்பும் பணமும் விரயம்
ஆவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது, கர்நாடக மாநிலத்தில் பாகுபலி இரண்டாம் பாகத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்களும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பும் எனக்கு உள்ளது'
உண்மைதான் சத்தியராஜ். கர்நாடக மாநிலத்தில் உங்களுக்கு
சொந்தமான எந்த தொலைக்காட்சியும் இல்லை. வணிக வளாகங்கள்
இல்லை, கட்டிடங்கள் இல்லை, தோட்டம் இல்லை, இந்த
மன்னிப்பு முழுக்க முழுக்க உங்கள் பொருட்டு ஒட்டு மொத்த
திரைப்படக்குழுவுக்கும் நஷ்டமோ பிரச்சனையோ ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அக்கறையின் காரணமாகவே
வந்திருப்பதை உணர்ந்து கொள்கிறோம்.
சூப்பர் சத்தியராஜ். 
நாங்கள் வாழும் காலத்தில் வாழும் தமிழ் நடிகன் நீ என்பதில்
பெருமை அடையும் தருணம் இது.. 
விடை தெரியாத இன்னொரு கேள்வி...
9 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் பேசிய பேச்சுக்கான எதிர்வினை
இது என்றால்... இந்த 9 ஆண்டுகளில் உங்களின் எத்தனையோ
 திரைப்படங்கள் வந்திருக்கின்றன. கன்னட ரசிகர்களும்
பார்த்திருக்கிறார்கள். ஏன் பாகுபலி 1 கூட வந்தபோது
நடக்காத எதிர்வினை ஏன் இப்போது..?
தமிழ் கலை இலக்கிய உலகில் இனி
 எவனும் இனி வாய் திறந்து மொழி இனம்
குறித்துப் பேசிவிடக்கூடாது என்று யாரோ நினைக்கிறார்கள்..!

No comments:

Post a Comment