Monday, April 24, 2017

தமிழ் இலெமுரியா

Image result for தமிழ் இலெமுரியா இதழ்

தமிழ் இலெமுரியா விடைபெறுகிறது..
இனி இதழ் வரப்போவதில்லை
மும்பையிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த மாத இதழ்
 தமிழ் இலெமுரியா. இதழாசிரியர் சு.குமணராசனின் வரிகளை
 வாசிக்கும் போது தொண்டைக்குழி வறண்டு போனது.
 விழிகள் நிறைந்து மனம் கனத்து
அடுத்த வரிகளுக்கு நகர முடியாமல் .. என்னை...
கடந்த பிப்ரவரி திங்களில் குமணராசனைப் பற்றிப் பேசும் 
வாய்ப்பு கிடைத்தப்போது
சொன்ன வரிகள் இப்போது நினைவுக்கு வருகிறது.

நாங்கள் கனவு கண்டோம்
எங்கள் கனவில் ஒரு மும்பை இதழ்
நாங்கள் கனவு கண்டோம்
எங்கள் கனவில் ஒரு பதிப்பகம்
நாங்கள் கனவு கண்டோம்
எங்கள் கனவில் ஒரு நூலகம்
நாங்கள் கனவு கண்டோம்
எங்கள் கனவில் ஒரு அறக்கட்டளை
நாங்கள் கனவு கண்டோம்
நாளையும் நாங்கள் கனவு காணுவோம்
கனவு எங்கள் பிறப்புரிமை
எங்கள் கனவுகள் வாழ
வாழ்த்துகிறோம் உங்களை
தமிழ் இலெமுரியா மாத இதழ், தமிழ் இலெமுரியா பதிப்பகம்,
 தமிழ் இலெமுரியா அறக்கட்டளை, தமிழ் இலெமுரியா சீர்வரிசை சண்முகராசனார் நூலகம்.... என்ற வரிசையில்
மும்பையில் எங்கள் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருந்தவர் 
திரு குமணராசன் அவர்கள்.
அந்தப் பயணத்தில் 9 வருடங்களாக தொடர்ந்து மாத இதழாக வெளிவந்துக்கொண்டிருந்த தமிழ் இலெமுரியா மாத இதழ் 10 வது ஆண்டு சிறப்பிதழுடன் விடை பெறுவதாக
அவர் எழுதி இருக்கிறார். அதிலிருந்து சில  துளிகள் :
*ஒவ்வொரு இதழும் கொண்டு வர ஆகும் செலவு சற்றொப்ப 2 இலட்சம் ரூபாய்.
*12 அயல் நாடுகளுக்கு இதழ் அனுப்பப்பட்டாலும் இன்றுவரை ஒரு டாலர் கூட பணம் வரவில்லை. பாராட்டுரைகள் மட்டுமே வந்தன.
*தமிழக அரசு நூலகங்களுக்கு இதழை வாங்க ஆணையிடப்பட்டது என்றாலும் 2014-15, 16, 17 ஆண்டுகளுக்கான நிலுவை மட்டும் ரூ 850,000/
*கடந்த 9 ஆண்டுகளாக தமிழ் இலெமுரியா இதழ் கொண்டு வர தன் சுய சம்பாத்தியத்திலிருந்து
செலவு செய்த தொகை சற்றொப்ப ஒரு கோடியே பத்து இலட்சம்.
 *அண்மைக் காலத்தில் உறுப்பினர் கட்டணத்தை ஓராண்டுக்கு மேலாக செலுத்திய
வாசகர்கள் எஞ்சியுள்ள பணத்தை திரும்பப் பெற விரும்புவோர் எம் அலுவலகத்தைத்
தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
*தற்போது கொடுப்பதற்கும் இழப்பதற்கும் எதுவுமில்லை என்ற நிலையில் இதழைத் தொடர்ந்து
வெளிக்கொணர முயல்வது அறிவுடைமையாகாது. இயலாது என்பதே இயல்பாகும்.
* சேய்தனை இழந்த ஓர் தாயின் மனநிலையில் யாம் விடை பெறுகிறோம்.....

நாங்களும் தாயை இழந்த சேய் போல... இத்தருணத்தில்.
திரு குமணராசன் அவர்களே எழுதியிருப்பது போல அவருக்குப்
 பரிவு காட்டாவோ கருணை காட்டாவோ நானும் விரும்பவில்லை
தமிழ் இலெமுரியாவுக்கு விடை கொடுக்கும் இத்தருணத்தில்.. சில வரிகள்..
" சினிமா துளிகளோ கவர்ச்சிப் படங்களோ
ஜோசியர் நட்சத்திர பலன்களோ எல்லாவற்றுக்கும் மேலாக
 விளம்பரங்களோ இல்லாமல் இதழ் பணி தொடர்வது
 சாத்தியமில்லை. அதுவும் அப்படியான ஒரு இதழை
 தொடர்ந்து தொய்வின்றி 9 ஆண்டுகள்
மாதச் சம்பளத்திலிருந்து எடுத்து செலவு செய்து
 தனி ஒரு நபராக கொண்டு வந்திருப்பது 
என்பதே இமாலய சாதனை தான். 
. இந்த ஒன்பது ஆண்டுகள் மும்பை வரலாற்றில் 
ஆகச்சிறந்த ஏடாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுதான்
தற்காலிகமாக தமிழ் இலெமுரியா இளைப்பாறுகிறது .
ஒரு கதவை மூடினால் ஓராயிரம் கதவுகள் திறக்கும்.
வானம் நம் வசப்படும்."

#தமிழ்_இலெமுரியா
http://www.tamillemuriya.com/LemArticleFull.php?as=1286

2 comments:

  1. சிற்றிதழ்கள் அனைத்தும் தியாகத்தின் பிம்பமே. தமிழக அரசு தன் பாக்கியை செலுத்த முன் வராதா?
    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete