Thursday, April 13, 2017

அம்பேத்கரின் அவளுக்கு என் நன்றி






அறிவாயுதம் ஏந்திய அண்ணல் அம்பேத்கருக்கு
ஆத்மார்த்த தோழியாய் ஒருத்தி இருந்தாள்.
1920 களில் இலண்டனில் மதிய உணவுக்கு வழியின்றி
 இலண்டன் மியுசியத்தில் தன் பகல் பொழுதை அவர் கழித்த
 அந்த நாட்களில் அவளைச் சந்தித்தார்.
 அவள் பெயர் பிரான்சிஸ் பிட்ஜெரால்ட் (Francis Fritzgerald)
ஹவுஸ் ஆஃப் காமன் அலுவலகத்தில் டைப்பிஸ்டாக
வேலை செய்து கொண்டிருந்தார்.
கணவரை இழந்த அப்பெண்மணிக்கு இரு குழந்தைகள்.
இலண்டன் மியுஸியம் வாசலில் அவர்கள் சந்திப்பு.
அதன் பின் அப்பெண் தன் கடைசி நாட்கள் வரை
அண்ணலை நேசித்தார்.
1923ல் அம்பேத்கர் இந்தியா திரும்பியது முதல் 1943 வரை
 அப்பெண் அம்பேத்கருக்கு எழுதிய 91 கடிதங்கள் .
. அவைப் புத்தகமாக வெளிவருவதில் ஏகப்பட்ட சிக்கல்களும்
குழப்பங்களும். ஆனால் என்னைப் போன்றவர்கள்
குழப்பவாதிகளின் காரணங்களைச் செவிமடுக்க விரும்பவில்லை.

மை டார்லிங் பீம்... என்று ஆரம்பிக்கும் ப்ஃனியின்கடிதங்கள் ..
என் டார்லிங் பீம்...
உன் புகைப்படம் என்னருகில் என் மேசைமீது
ஆனால் எந்தப் பதிலும் சொல்லாமல்
என் முத்தத்தை எனக்குத் திருப்பித் தராமல்..."
அம்பேத்கருக்கு வேண்டிய புத்தகங்களை கப்பலில் அனுப்பி வைத்துக்கொண்டே இருந்த அறிவார்ந்த தோழியாய்..
நட்பின் உன்னதமாய்.. ஆத்மார்த்தமான காதலியாய்
(platonic relationship.) எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இன்றி வாழ்ந்து மறைந்திருக்கிறாள்.

இந்துவாகப் பிறந்த நான் ஓர் இந்துவாக இறந்துப்போக மாட்டேன்
என்று அண்ணல் அறிவித்தப்பின் அம்பேத்கரை தேசவிரோதியாக சித்தரித்தார்கள். ஜனவரி 1937ல் அவர் இங்கிலாந்தில் ஒரு விதவையை இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார் என்ற வதந்தியைப் பரப்பினார்கள்! ஆனால் அம்பேத்கர் அப்பெண்ணைத் திருமணம்
செய்து கொள்ளவில்லை. பிரான்சிஸ் எழுதிய கடிதங்களைப் பற்றி அவருடைய வாழ்க்கை வரலாற்றை மராத்தியில் எழுதிய
 கெர்மோடெவிடம் (C B Khairmode) அம்பேத்கர் சொன்ன
வரிகள் தான்  இப்பதிவை எழுதுவதற்கு எனக்குத் துணிவு தந்தது.
.
"நம் மக்களின் ஒழுக்கவியல் கோட்பாடுகள் ரொம்பவும்
 விசித்திரமானவை" என்று சொன்ன
அம்பேத்கர்
 "பிரான்சிஸ் பற்றிப் பேசினால் .. எனக்கு ஆட்சேபனை இல்லை.
இதனால் மக்கள் என்னைப் பற்றி தவறாக நினைக்க கூடும்
என்ற கவலையும் இல்லை"
என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.

அறிவாயுதம் ஏந்தி எதிர்நீச்சல் போட்ட ஒரு போராளிக்கு
நட்பும் காதலும் அவன் இளைப்பாறும் நிழலாக
அவனை உயிர்ப்புடம் இயக்கும் ஜீவனாக
யுகம் யுகமாக  தொடர்கிறது.
அத்தொடர் பயணத்தில் பிரான்சிஸ் ஜெரால்ட் 
என்னளவில் ஓர் அற்புதமான பெண்.
அம்பேத்கருக்கு வாய்த்த அறிவான ஸ்நேகிதி.
அண்ணலின் பிறந்தநாளில் அந்த நட்புக்கு தலைவணங்கி..
அவள் வாழ்ந்த திசைநோக்கி கண்ணீருடன் கை கூப்பி..
(venkat shyam ஓவியம். event TOI LIT festival 2016 @Bandra)

1 comment:

  1. அண்ணலின் பிறந்த நாளில் அருமையாக ஒரு பகிர்வு.

    ஓவியம் வெகு அழகு.

    ReplyDelete