Saturday, June 19, 2021

கவிதைகளை எரிக்கும் மழைக்காரி

 


பஃறுளி நதிக்கரையில் என் ஆதித்தாய் முணுமுணுத்த

 சொற்களற்ற ஒலிக்குறிப்பிலிருந்து 

ஒவ்வொரு துளியாக எடுத்து

உங்கள் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப் பிரபஞ்சம் தோன்றிய அந்த நாளில் 

எழுத்து பிறப்பதற்கு  முன்னரே

எழுதப்பட்டிருந்த காற்றுவெளியின் குறிப்புகளை 

வாசிக்கத் தெரிந்தவர்கள்..

புதிது புதிதாக எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள்.

புதிதாக எதுவும் பிறக்கவில்லை.

 ஏற்கனவே பிறந்துவிட்ட எதுவும்

இன்னும் தன்னைத் துறக்கவும் இல்லை.

இந்த தொடர்மழையில் குளிரில் நடுங்கும் 

எம் மனிதர்களுக்கு

இன்னும் நீங்கள் வாசிக்காத கவிதைப்பக்கங்களை 

எரித்து எரித்து

சூடாக்கி சூடேற்றி 

குளிர்காய்கிறேன்.

கவிதைகள் எரியும் வாசனையில் 

இப்பெருநகரப்பிசாசு

தண்டவாளத்தில் விழுந்து 

தற்கொலை செய்து கொள்கிறது.

மழைவெள்ளம் வடியும்போது  

பாதி எரிந்தும் எரியாத

கவிதைப் பக்கங்களை 

குப்பையிலிருந்து பொறுக்கி எடுத்து

அடுத்தமழைக்காலத்திற்காக

பத்திரப்படுத்துகிறாள்..

கவிதைகளை எரிக்கும் மழைக்காரி.

 

 

 

 

 

No comments:

Post a Comment