Tuesday, September 12, 2023

முமபையில் ஒரு பனைமரம்

 


மும்பையில்

உங்களோடுதான் இருக்கிறேன்.

ஆனால் உங்களில் ஒருத்தியாக இல்லை.
இது மும்பையின்
புறக்கணிப்பு அல்ல.
என்மீதும் என் எழுத்தின் மீதுமான
உங்கள் தீண்டாமையும் அல்ல.
என்னை என் தனித்துவத்தை
வேறு எப்படித்தான் காட்டுவீர்கள்?!
நன்றி.
எனக்கே என் அடையாளத்தை
நானே மறந்துப்போனாலும்
அடிக்கடி நினைவூட்டும்
உங்கள் அன்பில்
நனைகிறேன்.
மீண்டும் நன்றி.
உங்கள் மாடித்தோட்டத்தில்
ரோஜாக்கள் பூக்கலாம்.
துளசியைக் கூட வளர்க்கலாம்.
ஆனால் பனைமரங்கள்
முளைப்பதில்லை.
நானும்தான்.
மீண்டும் மீண்டும் நன்றி.

No comments:

Post a Comment