Friday, October 23, 2020

இலையுதிர்காலம்

 



இலையுதிர்காலத்தில் என்னிடம் வந்திருக்கும்

இந்தப் பறவைக்கு எதைக் கொடுப்பேன்?

பூக்களின் வாசத்தை வேர்களிலிருந்து

தோண்டி எடுத்து

இந்தப் பறவையின் சிறகுகளில்

தெளிக்கட்டுமா..?

காற்றின் வேகத்தில் இலை உதிர்கிறது.

காத்திருந்தப் பறவை

காற்றைக்கிழித்துக் கொண்டு

தரையில் விழுந்துவிடாமல்

இலையைப் பிடித்துக் கொள்கிறது.

இலையின் நரம்புகள் படபடக்கின்றன.

இருளும் வெளிச்சமும் கடந்துப் போகீறது.

பால்வீதியில் பறவையின் கூட்டில்

சிறகுகளின் கதகதப்பில்

இலையின் இன்னொரு வாசம்..

வானத்திலிருந்து தொங்குகின்றன

இப்போது இந்த வேர்கள்..

No comments:

Post a Comment