Monday, June 21, 2021

- எரியும் நெருப்பில் எரியாத உண்மைகள் (INCENDIES)



சவப்பெட்டி வேண்டாம்.
பிரார்த்தனைகள் வேண்டாம்,
நிர்வாணமாக புதைத்துவிடுங்கள்,
புதைக்கும்போது என் முகம் வானத்தைப் பார்த்து
இருக்க வேண்டாம்.
பூமிக்குள் புதையட்டும்.
புதைத்த இட த்தில் என் பெயரை பொறிக்க வேண்டாம்.”
இப்படி ஒரு தாயின் உயில் எழுதப்பட்டிருக்கிறது.
அந்த உயிலை அவள் பெற்ற பிள்ளைகளிடம்
கொடுக்கும் போது இரண்டு பிரிக்கப்படாத கடித உறைகளும் கொடுக்கப்படுகின்றன.
மகள் ஜென்னிக்கு எழுதியிருக்கும் கடித த்தில்,
“மகளே, நோட்டரி மிஸ்டர் லெபல் உன்னிடம்
பிரிக்கப்படாத கடித த்தைக் கொடுப்பார்.
அது உன் தந்தைக்கு எழுதியது.
உன் தந்தையைக் கண்டுப்பிடித்து
அவரிடம் கொடுத்துவிடு”
மகன் சைமனுக்கும் ஒரு கடிதம்..
“மகனே, நோ ட்டரி மிஸ்டர் லெபல் உன்னிடம்
பிரிக்கப்படாத கடித த்தைக் கொடுப்பார்.
அது உன் சகோதரனுக்கு எழுதியது.
அவனைக் கண்டுப்பிடித்து
அவனிடம் கொடுத்துவிடு”
கதை இப்படி ஆரம்பிக்கிறது. அம்மாவின் கடைசி ஆசையை
நிறைவேற்றுவதும் அம்மாவின் கட ந்த காலத்தைத்
தேடுவதுமாக மகள் முதலில் பயணிக்கிறாள்.
அம்மா ஒரு போர்க்கைதியாக சிறையில் 15 ஆண்டுகள்
இருந்திருக்கிறாள் என்ற
உண்மை தெரியவரும்போது அதிர்ச்சி..
சைமனும் வருகிறான்.
போரின் அழிவுகள், அதில் பாதிக்கப்படும் குழந்தைகள்,
பெண்கள் குழந்தைகளுடன் தீயூட்டப்படும் பேருந்து..
மத்திய கிழக்கு நாடுகளில் போர்க்கால காட்சிகள்
இருவரின் தேடல்கள்..
காதலனை ஏற்றுக்கொள்ளாத குடும்பம்
அவள் பிரசவித்த மகனை பாலருந்துவதற்குள்
அவளிடமிருந்து பிரித்து எடுத்துச் செல்கிறது.
போர்க்காலத்தில் அவள் தன் அந்த மகனைத் தேடி பயணிக்கிறாள்.
அந்தப் பயணத்தில் அவளும் கையில் துப்பாக்கி ஏந்தி..
போர்க்கைதியாக.. சிறைச்சாலையில் அறை எண் 72ல்..
இரவெல்லாம் பெண்களின் அழுகுரலைக் கேட்க முடியாமல்
பாடிக்கொண்டே இருக்கிறாள்.
அவள் பாடலை நிறுத்த சிறைக்கம்பிகள் அவள் உடலை
ஆண் என்ற ஆயுத த்தால் சிதைக்கின்றன.
அந்த வல்லாங்கில் அவள் பெற்ற குழந்தைகள் தான்
அவள் கடைசி ஆசையை நிறைவேற்ற
அலைகிறார்கள்.
மகள் தந்தையைத் தேடி அலைகிறாள்.
மகன் தன் மூத்த சகோதரனைத் தேடி அலைகிறான்.
இருவரும் கடித த்தை ஒருவனிடமே கொடுத்துவிட்டு
தாயின் கல்லறையில் அவள் பெயரை எழுதுகிறார்கள்…

கதையின் க்ளைமாக்ஸ்..
அதிர்ச்சியுடன்...
மகனே... உன்னை .. நேசிக்கிறேன்..
கடிதத்தின் வாசகங்களை நெருப்பும் எரித்து
சாம்பலாக்க முடியாமல் தோற்றுப்போகிறது.
உண்மை ஏன் கொடூரமானதாக
கேவலமானதாக இருக்கிறது..?!!
….
போர்க்கதைகளின் வரிசையில் இது ஒரு கற்பனைக்கதை
என்று சொல்லப்படுகிறது. பிரான்சில் நாடகமாக நடிக்கப்பட்ட கதை. பல்வேறு விமர்சன ங்கள் இருக்கின்றன.
சமகால வரலாற்றை வல்லரசு ஆதிக்கத்தின் போர்த் தீயின் அழிவுகளை மனித உறவுகளின் நெருக்கடிகளை ரணநாம் பேசவோ எதிர்கொள்ளவொ தயராக இல்லை.
எப்போதோ நடந்து முடிந்த இன்று வாழும் தலைமுறைக்கு
முந்திய போர்களைப் பற்றி உரையாடும் நம் சரித்திரங்கள்
சமகாலப் போர்மேகங்களை பேசாமல் கடந்து செல்வது
செளகரியமாக இருக்கிறது.
இதைப் பேசும் இத்திரைப்படம்..
அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

No comments:

Post a Comment