திருமிகு. துர்கா ஸ்டாலின் அவர்களின் பூஜை அறை காணோளி
வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 நேற்று மட்டும் 3பேர் அதை எனக்கு வாட்ஸ் அப்பில் 
அனுப்பி இருந்தார்கள். 3பேரின்  நோக்கமும் வேறுவேறு!
இந்தப் பூஜை அறை ஏன் பொதுவெளியில் வந்திருக்கிறது ?
 என்ற கேள்வியை அரசியல் பார்வை இல்லாமல்
 கடந்து செல்ல முடியவில்லை.
*இதுவரை மறைத்து மறைத்து திரைப்போட்டுக்
கொண்டிருந்த பூஜையறை இப்போது பொதுவெளிக்கு 
வந்த தில் மகிழ்ச்சி. எதையும் மறைத்து செய்யும்போது 
அது குற்றவுணர்வைத் தூண்டும். விமர்சனத்திற்குள்ளாகும். 
வெளிப்படையாக சொல்லும்போது அதை ஒரு 
பிரச்சனையாக பேசப்படுவது குறையும். *
*கலைஞரின் காலத்திலேயே இதெல்லாம் நடந்திருக்கிறது. 
அவர் இல்லத்திற்கு புட்டபர்த்தி சாய்பாபா வருகைத் தந்ததும் 
கலைஞர் தன் குடும்பத்து பெண்களுக்கு கொடுத்திருக்கும் 
வழிபாட்டு உரிமை என்றும் அது பேசப்பட்டது*
* பெரியார் நாத்திகத்தின் இறுக்கமான பிடியிலிருந்து
தளர்த்திக்கொண்ட அரசியல் இயக்கம் தான் திமுக.*
*திமுகவின் இந்துமத எதிர்ப்பு என்பதை 
திமுகவின்  இந்துமத மக்கள் எதிர்ப்பு என்று 
திசைமாற்றப்படுவதை இந்தப்  பூஜை அறை
 எதிர்கொள்வதைக் கவனிக்க வேண்டும். *
கோட்பாடுகள், அரசியல் நிலைப்பாடுகள் இவற்றை
 எல்லாம் தாண்டி மத நம்பிக்கைகளையும்
சடங்கு சம்பிரதாயங்களையும் காலம் காலமாக  
கடத்திக் கொண்டு இருப்பவர்கள் பெண்கள். 
அந்தப் பெண்களின் ஒரு பிரதி நிதி தான்
 சகோதரி துர்கா ஸ்டாலின் அவர்களும். 
பூஜை அறையில் கலைஞரின் புகைப்படம் 
மகிழ்ச்சி தருகிறது. மற்றபடி இந்துமதத்தின் கடவுளர்கள் 
அனைவரும் பிரகாசமாக காட்சி தருகிறார்கள்.
அணையாத விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது.
இவை எல்லாம் தனிமனித விருப்பங்கள். 
ஆனால்... பிரச்சனை என்னவென்றால்....
பெருமதிப்பிற்குரிய திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள்
 முதல்வர் ஆனதே அவர் மனைவி துர்க்காவின்
 கடவுள் பக்தியால் தான் என்று ஒரு கூட்டம் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டதுதான்!!

No comments:
Post a Comment