Tuesday, August 28, 2018

தமிழாற்றுப்படை ..கால்டுவெல் -வைரமுத்து.





தமிழாற்றுப்படை கால்டுவெல்லுக்கு 
செய்த துரோகம்…
கவிஞர் வைரமுத்து உரையில்..
கால்டுவெல் தன் இன ஆராய்ச்சியில் ஆதித்தமிழனாக
கொண்டாடிய தமிழனை நீங்கள் 
வேட்டிக்கட்டிய விலங்குகளாகத் திரிந்த மக்கள் “
என்று சொன்ன போது 
தாமிரபரணி மீண்டும் தலைகுனிந்தது.
தமிழ்ச் சாதீ கால்டுவெல்லுக்கு இழைத்த துரோகம்
தொடர்கிறது.
கால்டுவெல் ஊர் திருத்தியும், சீர் திருத்தியும், பேர் திருத்தியும் 
ஆற்றிய பெருந்தொண்டுகளை மறைத்துவிட்டது மறதியின் புழுதி!”
என்று கால்டுவெல் விழாவில் எங்கள் நெல்லை மண்ணில்
பேசினீர்களே.. 
இது... மறதியின் புழுதி அல்ல…
கால்டுவெல்லின் ஆய்வும் கருத்தும் அரசியல் தளத்தில் 
பேசு பொருளாகி அவரவர் சுயலாபங்களுக்கு
ஏற்ற வகையில் வெட்டியும் ஒட்டியும் கையாளப்பட்டது 
என்பது தான் உண்மை.
கால்டுவெல்,
எங்களை மன்னித்துவிடுங்கள்...
காந்திக்கு துப்பாக்கி குண்டுகளைப்
பரிசாகக் கொடுத்த
மதவாதிகளை விடக் கொடியவர்கள் நாங்கள்.
இன்றுவரை எல்லா மேடைகளிலும்
உங்கள் பக்கங்களை
வாசிக்கமாலேயே உரக்கப் பேசுவதற்காக
எங்களை மன்னித்த மாமனிதரே..
எங்கள் சாதித்தமிழன்
அறிந்தே செய்த இந்த தவறுகளுக்காகவும் சேர்த்தே
அவர்களை மன்னித்தருளும்.
ஆமென்.
(விலங்குகளாகத் திரிந்தவர்கள் என்று சொல்வதற்கும்
சமூகம் விலங்கினும் கீழாக நடத்திய மனிதர்கள் 
என்று சொல்வதற்குமான அர்த்த வேறுபாடுகள் அறியாதவரா
கவிஞர் வைரமுத்து.. ? !!)
#வைரமுத்து_தமிழாற்றுப்படை_கால்டுவெல்


No comments:

Post a Comment