Thursday, July 19, 2018

ஶ்ரீ லீக்ஸ்

ஶ்ரீ லீக்ஸ்
ஶ்ரீ ரெட்டி நல்லவரா கெட்டவரா என்பதல்ல
பிரச்சனை. நம் கலை இலக்கிய உலகத்தில் மலிந்து சீரழிந்து
சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கும் 
சதை வியாபாரிகளைப் பற்றிய ஒரு சமூகப்பிரச்சனை.
ஶ்ரீ ரெட்டி சொன்னது சமூகப்பிரச்சனை அல்ல,
அவர் பெண்களைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தும்
போராட்டங்களைத் திசை திருப்பி மஞ்சள் பத்திரிகை
ரேஞ்சுக்கு கவன ஈர்ப்பு செய்கிறார் என்ற குற்றச்சாட்டை
சிலர் வைக்கிறார்கள். இது ஶ்ரீ லீக்ஸ் காட்டும் ஒரு பக்கம்
மட்டும் தான். ஒரு வேளை அவருக்கு படுக்கையறை
பண்டமாற்றுக்குப் பின் சினிமா வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால்
இப்பிரச்சனையே எழுந்திருக்காது, அவர் ஏமாற்றப்படவில்லை,
அவர் செய்தது வெறும் சதைப் பண்டமாற்று என்று பார்ப்பவர்கள்
அந்தப் பண்டமாற்று சந்தையின் சில முகங்களைப் பார்க்க
மறுக்கிறார்கள், அல்லது விரும்பவில்லை.
ஶ்ரீ ரெட்டி வைக்கும் குற்றச்சாட்டுகளின் இன்னொரு பக்கம்..
அப்படியானால் சினிமா உலகில் சதைப் பண்டமாற்று
நடந்தால் தான் வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றனவா?
இது வரை வாய்ப்புகள் பெற்று முன்னுக்கு வந்திருக்கும்
பிரபலங்கள் இதைக் கடந்து வந்திருக்கிறார்களா
இல்லையா?
மிஷ்கின் போன்ற திரைப்பட இயக்குனர்கள் ரேப் செய்துவிடுவேன்
என்று “பேரன்புடன்” மம்முட்டியைப் புகழ்வதற்கு தேர்ந்தெடுத்த
ஆகச்சிறந்த புகழுரையை மிஷ்கின் என்ற தனி நபரின் பார்வையாக
கடந்து சென்றுவிட முடியுமா..? 

பெண்கள் தெரிந்தே சதைப் பண்டமாற்று செய்துவிட்டு அதன் பிறகு
ஆண்களைக் குற்றம் சொன்னால் , இவளைப் பற்றித் தெரியாதா..
இது நடக்கலைனு இவ இன்னிக்கு குற்றம் சொல்ல வந்துட்டா
என்று சொல்ல ஆரம்பித்தால் இந்த வலையில் விழுந்த
எந்த மீன்களும் தண்ணீருக்காக துடிப்பது சமூகக் குற்றமாகிவிடும்
ஆபத்து உண்டு.
11 வயது ஊடல் ஊனமுற்ற பெண் குழந்தையை இளைஞன்
முதல் கிழவன் வரை பயன்படுத்திக் கொண்டிருக்கும் சமூகத்தில்
வாழ்கிறோம் நாம். ஶ்ரீ ரெட்டி நல்லவரா கெட்டவரா என்பதல்ல
பிரச்சனை. நம் கலை இலக்கிய உலகத்தில் மலிந்து சீரழிந்து
சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கும்
சதை வியாபாரிகளைப் பற்றிய ஒரு சமூகப்பிரச்சனை.
ஶ்ரீ ரெட்டியின் கற்பை உரசிப் பார்த்து சோதிக்கும்
தூய்மைவாதிகள் பத்தினிகள் மட்டுமே பேச வேண்டிய
கற்பு வாத பிரச்சனையாக்கி இதை திசை திருப்புகிறார்கள்
ஶ்ரீ ரெட்டியின் சில வரிகள்:
பெண்களுக்கு சுத்தமாக பாதுகாப்பு இல்லாத இடம் தெலுங்கு
 திரையுலகம். பெரிய நடிகைகள் முதல் வளர்ந்து வரும் 
நடிகைகள் வரை அனைத்து நடிகைகளும் படுக்கைக்கு
 செல்ல வேண்டியதாக உள்ளது. 
தெலுங்கு பெண்கள் கருப்பாக இருப்பதால் 
அவர்களை ஹீரோயினாக்குவது இல்லை.
தெலுங்கு நடிகைகளை நடிக்க வைத்தால் ஷூட்டிங் 
முடிந்ததும் வீட்டிற்கு சென்றுவிடுவார்கள்.
 வெளிமாநில நடிகைகளை நடிக்க வைத்தால் 
அவர்கள் ஷூட்டிங் முடிந்த உடன் ஹோட்டலுக்கு
 செல்வார்கள். அங்கு அவர்களுடன் உல்லாசமாக 
இருக்கலாம் என்பதால் வெளிமாநில நடிகைகளை
 அதிக அளவில் நடிக்க வைக்கிறார்கள் என்றார்  ஶ்ரீ ரெட்டி.
Show More Reactions

3 comments:

  1. ஸ்ரீ ரெட்டி பற்றிய ஸ்ரீ லீக்ஸ் நல்ல சவுக்கடி

    ReplyDelete
  2. //ஒரு வேளை அவருக்கு படுக்கையறை
    பண்டமாற்றுக்குப் பின் சினிமா வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால்
    இப்பிரச்சனையே எழுந்திருக்காது, //

    உண்மை. சீர்கேட்டு நிகழ்வுகள் வெளிவர இது போன்ற ஏமாற்றல்கள்தான் காரணமாகின்றன.

    ReplyDelete
  3. ஸ்ரீ ரெட்டியை மட்டும் கைகாட்டிவிட்டு இந்த சமூகம் தப்பித்துக் கொள்ள முடியாது.

    ReplyDelete