Tuesday, July 10, 2018

ராஷி.. RAAZI .. உண்மைக்கதை..


ராஷி.. RAAZI

இந்தியாவுக்காக ஒற்று வேலைப் பார்த்த இந்தியப் பெண்ணின் 
உண்மைக்கதை.
1971 இந்திய பாகிஸ்தான் போர்க்களத்திற்கான பின்னணி ஆய்வு.
பாகிஸ்தானின் போர் நடவடிக்கைகளைக் கண்காணிக்க
பாகிஸ்தானின் இராணுவ அதிபதி வீட்டுக்கே
 திட்டமிடப்பட்டு மருமகளாக மணமுடித்து
சென்ற இந்தியப் பெண்ணின் கதை. 

ஹரிந்தர் சிக்க 2008ல் எழுதிய நாவல் “CALLING SEHMAT” . 
அந்த நாவலில் உண்மையான
அவளின் அடையாளம் புனைவுகளுக்குள் பொதிந்து 
வைக்கப்பட வேண்டும் என்பதே
பலரின் வேண்டுகோளாக இருந்தது
அப்புத்தகத்திற்கு அணிந்துரை கொடுத்த காஷ்மீரின்
பரூக் அப்துல்லா முதல் அப்பெண்ணின் முதல் காதலாக இருந்த 
அபிநவ் வரை..
(டில்லி பல்கலை கழகத்தில் அவளுடன் படித்தவர்)
அவளை அப்படியே அடையாளம் காட்டுவதை 
விரும்பவில்லை. அவள் கற்பனை அல்ல.
அவள் நிஜமாக வாழ்ந்தப் பெண்

அதுவும் சமீபத்தில் தான் இறந்துவிட்டார்.
இத்துணை பின்பிலத்துடனும் RAAZI 
திரைப்படத்தைப் பார்க்கும் போது 
ஒவ்வொரு காட்சியும் அதன் வசனங்களும்
மிகையில்லாத நடிப்பும்.. 
அதிலும் குறிப்பாக இந்திய உளவுத்துறை/இராணுவத்திற்காக 
வேவு பார்த்த கதாபாத்திரத்தில் நடித்த 
நடித்த அலிய பட், அவள் மணமுடித்த 
பாகிஸ்தானிய இராணுவ வீரன் விக்கி குஷால்..
இதில் விக்கி குஷாலின் நடிப்பும் வசனமும் கத்தி மேல் நடப்பது போல.
கொஞ்சம் பிசகினாலும்தேசத்துரோகிபட்டம் தான்
கதைக்கும் கதையைப் பார்ப்பவர்களுக்கும் கூட கிடைத்துவிடும்
 . ஆனால் கதையை நகர்த்தி சென்றிருக்கும்
விதமும் அளவான மிகவும் கவனமாக கோர்த்திருக்கும் வசனங்களும் .. 
என்னை மிகவும் கவர்ந்தவை.
பாகிஸ்தானியர்கள் என்றாலே வில்லன் வேடம்
எதிர்மறை கதாப்பாத்திரம் என்ற
ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது
அதிலும் இந்தியப்பெண் பாகிஸ்தான்
இராணுவ தளபதியின் வீட்டுக்கு போகிறாள். இராணுவ தளபதியின் மகனை
மணக்கிறாள்.. திட்டமிடப்பட்டே எல்லாம் நடக்கிறது
பாகிஸ்தானின் அவர்கள்
வீட்டில் அவள் வாழ்க்கை
அவளை அவர்கள் எதிர்கொள்ளும் மன நிலை
கணவனின்  கம்பீரம்,
 முதலிரவு என்றவுடனேயே பசித்திருக்கும் புலியைப் போல பாயாமல்
காத்திருக்கும் ஆண்மை… 
கதையின் போக்கில்  காட்டப்படும் அவனுடைய பண்பட்ட நாகரிகம்,
பெண்மையை மதிக்கும் குணம்.. 
கூட்டுக்குடும்பத்தின் பாசமும் நேசமும்..
பிரிவினைக்கு முந்திய உறவைத் தொடர
இந்திய மண்ணிலிருந்து பெண்ணைத் தேடி
மணமுடிக்கும் இராணுவதளபதி
எல்லாம் முடிந்தப் பின் … 
அவள் யார் , அவள் இந்தியாவுக்காக அங்கிருந்து செய்ததெல்லாம்
தெரிய வர அவள் தப்பித்து வரும் காட்சி
அவளை அங்கேயே முடித்துவிட நினைக்கும்
இந்திய உளவுத்துறை.. அதிலும் தப்பித்து வந்து.. 
அவள் கேட்பாள் பாருங்கள்
ஒரு கேள்வி… , 
ஏன்.. ஏன் .. இதெல்லாம் செய்றீங்க!’ 
அவள் உடைந்து அழும்போது அக்கேள்வியின் கனம்
நம்மீது பாறாங்கல்லாக இறங்கும்.
அதே நேரத்தில் அவளைக் குற்றவாளிக்கூண்டில் 
பாகிஸ்தானில் இருக்கும் அவள்
கணவர் குடும்பம்…. பாகிஸ்தானிய இராணுவதளபதி.. 
ஒரு இந்தியப் பெண்.. அதுவும்
ஒரு சின்னப்பொண்ணு.. நம்ம வீட்டுக்கே வந்து இவ்வளவும் 
செய்திருக்கா.. அவளை!”
கர்ஜிக்கும் போது.
.”அப்பா.. நாம் என்ன செய்கிறோமோ அதைத்தானே அவளும்
அவள் நாட்டுக்காக செய்தாள்என்று மெல்ல சொல்லும் அவர் மகன்
அதாவது
இந்தியப் பெண்ணின் கணவன்.
. இந்த இடத்தில் கதையும் கதைப்பாத்திரமும்
கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும். i respect you iqbal.
I love you Sehmat.


வெளியில் தெரியாத பலரின் கதைகளில் இதுவும் ஒன்று.
இப்படி எல்லாம் நடக்கிறது.. நடந்து கொண்டுதான் இருக்கிறது.

எனக்கும் பாகிஸ்தானில் தோழி ஒருவர் உண்டு.
அவரை நான் வங்கதேசத்தில் HOPE FOUNTATION’ ல் நடந்த
CERI conference ல் சந்தித்தேன். அதன் பின் சில காலம் தொடர்பில்
இருந்திருக்கிறேன். வங்க தேசத்தில் ஒரு ஓவியரும் முன்னாள் நீதிபதி
ஒருவரும் நண்பர்களாக இருந்தார்கள். மா நகரக்கவிதா மும்பை 
 நிகழ்வு மூலமாக அறிமுகமானோம்.
இதெல்லாம் கடந்தக் காலமாகிவிட்டது.  வேறு வழி??!


1 comment:

  1. படத்தைப் பார்க்க ஆவல் வருகிறது.

    ReplyDelete