Wednesday, March 27, 2019

TEARS OF THE SUN

TEARS OF THE SUN -
சூரியனின் கண்ணீர்..
tears of the sun க்கான பட முடிவு


ஆஹா .. இந்தத் தலைப்பு தான்
இப்படத்தைப் பார்க்க வைத்தது. அதன் பின்
சூரியனின் கண்ணீர் என்னைச் சூடாக்கி சூடாக்கி
இரும்பை உருக்கியது..
எல்லா ஹாலிவுட் படங்களைப் போலவே
இதுவும் டுமீல் டுமில் படம் தான்.
உலகத்தில் யாரும் செய்ய முடியாத தை
எப்போதுமே அமெரிக்க வீர ர்கள் செய்து
முடிப்பார்கள் என்ற அதே மசாலா தான்.
புருஷ் வில்லிஸ் படங்களின் வரிசையில்
இதுவும் ஒரு படம். இப்படியாக இருந்தாலும்
இந்தப் பட த்தில் வரும் ஒரு வசனம்
என்னைத் தொந்தரவு செய்கிறது!
அந்த வசனம் ரொம்பவும் கனமானதாக
எனக்குள் .. விரிகிறது.
சினிமாவில் கண்ட ஆப்பிரிக வானமும்
மலையும் மண்ணும் ஈழமாக விரிகிறது
அமெரிக்க வீர ர்கள் இந்திய வீர ர்களாக
என் கற்பனைக்குள் மாற்றம் பெறுகிறார்கள்.
நான் இன்னொரு காட்சி திரையை
மனவெளிக்குள் நட த்திக்கொண்டு
என்னை நானே ஏமாற்றிக் கொள்கிறேன்.
சில நேரங்களில் அறிந்தே தன்னைத்
தானே ஏமாற்றிக் கொள்வது கூட
சுகமாகத் தான் இருக்கிறது.
அது என்ன வசனம்……..?
கொஞ்சம் பொறுங்கள் முதலில்
சூரியனின் கண்ணீர் கதையைச் சொல்லி
விடுகிறேன்.
சூரியனின் கண்ணீர் என்ற இத்தலைப்பு தான்
இத்திரைப்படம் பார்க்க வைத்த து.
ஆப்பிரிகாவில் உள் நாட்டுப் போர் அபாயம்
சூழ்ந்தக் காலத்தில் அங்கிருக்கும் அமெரிக்க
பிரஜைகளைக் காப்பாற்றி அமெரிக்க அழைத்து
செல்வது தான் வீர்ர்களுக்கு கொடுக்கப்பட்ட
வேலை. ஆனால் டாக்டர் லினா தான் மட்டும்
அவர்களுடன் வர மறுக்கிறாள். தன் கவனிப்பில்
இருக்கும் 70 நோயாளிகள் காயம் பட்டவர்களையும்
விட்டுவிட்டு வரமாட்டேன் என்று முடிவு செய்கிறாள்.
கதைப் போக்கில் காடுகளுக்குள் காயம்பட்ட
ஆப்பிரிக்க மக்களுடன் பயணிக்கும் போது
அந்த வீர ர்களிடம் இருக்கும் மனிதம்
விழித்துக் கொள்கிறது…
டாக்டரை மட்டும் அழைத்துவரும் வேலையைச்
செய்யாமல் டாக்டரும் சேர்ந்து அனைவரையும்
அழைத்துவரும் திட்ட த்தை அமெரிக்க அதிகாரி
எதிர்க்கிறார். இப்போது அடுத்த என்ன செய்வது
என்று முடிவு எடுக்க வேண்டும்.
தன் சகாக்களுடன் புரூஷ் வில்லிஸ் பேசுகிறார்.
அவர் குழுவில் இருக்கும் இன்னொரு அமெரிக்க
வீர ர் , கறுப்பினத்தைச் சார்ந்தவ ஈமான் வாக்கர்
சொல்லும் வரிகள்..
those Africans are my people too.
For all the years that we were told
to stand down and to stand by...
...you're doing the right thing.
என்பார்.
அதற்கு புரூஷ் சொல்லுவார்...
FOR OUR SINS

வரலாற்றில் அதிகாரம் செய்த துரோகங்கள்
குற்றங்களுக்காக ...
அதே அதிகார வெளியிலிருந்து ஒரு குரல்
ஒலிக்கும் போது..
சூரியனின் கண்ணீர் ... சூடாகவே இருக்கிறது.

No comments:

Post a Comment