Sunday, March 31, 2019

ராகுல்காந்தியின் கதகளி !

rahul gandhi in wayanad க்கான பட முடிவு
.கேரள இட துசாரிகளை எதிர்ப்பது என்ற
ராகுலின் முடிவு மதச்சார்பற்ற, முற்போக்கு
சாயங்களை வெளுக்க வைத்துவிட்ட து.

·         மோதிக்கு எதிராக வாக்களியுங்கள் என்றால் அந்த
வாக்குகள் இந்த ராகுலுக்கு ஆதரவான வாக்குகள்.
எனவே… எந்த முகத்தை வைத்துக் கொண்டு
மோதியுடன் மோதப் போகிறார்கள்? இந்த ராகுலை
வைத்துக் கொண்டா?

·         ராகுல்காந்தி தான் அடுத்தப் பிரதமர், ராகுல்காந்தியைப்
பிரதமராக்கியே தீருவேன் என்று நம்ம ஊரு தளபதியின்
சூளுரை இட துசாரிகளை எதிர்க்கும் ராகுலுக்காக என்பது
தர்மச் சங்கடமான விஷயம்.
தளபதிக்கு வேண்டுமானால் அவர் சூளுரைகள்
ஒலிக்குப்பைகளாக இருக்கலாம். ஆனால் அவருடன்
தமிழகத்தில் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்ளும்
சிவப்புக் கொடி தோழர்களுக்கு இது பெரிய அடி.

நமக்கு மோதி மீது அறிந்தோ அறியாமலோ
விருப்பு வெறுப்புகள் இருக்கலாம். மோதியின்
இந்துத்துவ நம்மை அச்சுறுத்தலாம். ஆனால்
இவை அனைத்தையும் விட நாம் கவனிக்க வேண்டிய
முக்கியமான உண்மை … மோதியை எதிர்க்க
ராகுல்காந்தி சரியான நபரில்லை!
மோதி இளம்வயதிலிருந்தே அவர் விரும்பிய கருத்து
தளத்தில் பயணித்தவர். அதற்கான பயிற்சிகள் எடுத்தவர்.
தன் உடல் உள்ளம் எண்ணம் செயல்பாடு என்று
தன் கருத்து தளத்தை நோக்கி பயணப்படும்
ஆற்றலைக் கொண்டவர்.
ஆனால் ராகுல் காந்திக்கு இதில் எதுவுமே இல்லை.
அதற்கான சூழலில் அவர் வளரவில்லை என்றாலும்
அவர் தன்னை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கவே
இல்லை! இந்த உண்மையை இனியும் கைப்பிடி
சோற்றில் மறைத்துக்கொண்டு மக்களை ஏமாற்ற
முடியாது.
மயிற்கூச்செறியும் விவாதங்களை இத்தருணத்தில்
வைக்க வேண்டாம், அது மோதிக்கு ஆதரவாக
மாறும் என்று என்னை எப்போதும் எச்சரிக்கும்
தோழர்கள் என்னை மன்னிப்பார்களாக.

#Rahulji@Wayanad

No comments:

Post a Comment