Friday, June 2, 2017

நேருவின் மனசாட்சி

 யார் தான் தவறுகள் செய்யவில்லை?!
சிலர்தான் தன் தவறுகளை ஒத்துக் கொள்கிறார்கள்.
அப்படி ஒத்துக்கொள்வதற்கே ஒரு துணிச்சல் வேண்டும்.
நடந்து முடிந்ததை மறைக்கவோ அல்லது வரலாற்றைத்
திரிப்பதோ அவர்கள் செய்வதில்லை. 
 
அவர்களிடம் மனசாட்சி கடைசிவரை உயிர்ப்புடன் ...
  
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்  ஜவஹர்லால் நேருவை
ஒரே ஒரு காரணத்திற்காக பாரட்டத்தான் வேண்டும்.

1962 இந்தியா சீனா யுத்தத்தில் இந்தியா தோற்றுப்போனது.
அதற்கான காரணங்களை 50 ஆண்டுகள் கடந்தும் இன்றும்
பேசிக்கொண்டிருக்கிறோம்.
இந்திய இராணுவத்திடம் கொட்டும் பனியிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் காலணிகள் கூட இல்லை. 
அப்படி ஒரு நிலையில் தான் இந்திய இராணுவம் இருந்திருக்கிறது. போர்க்களத்தின் நிலையைப் புரிந்து கொள்ளாமல் டில்லியிலிருந்து ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்த இராணுவ அதிகாரியின் தவறான வழிநடத்தல்,
“சீனா இப்படி செய்யும்னு எனக்கென்ன தெரியும் ?” என்று கடைசியில்
கையை விரித்த வெளித்துறை அமைச்சகம், இராணுவ உதவிக் கேட்டு
அமெரிக்க நாட்டின் தலைவர் கென்னடிக்கு நேரு எழுதிய கடிதம்..
இப்படியாக சர்ச்சைகளும் விவரங்களும் தொடர்ந்து வெளிவந்துக்
கொண்டிருக்கின்றன.
காலனிய ஆதிக்கத்தின் எல்லைக்கோட்டினை ஏற்றுக்கொள்ள மறுத்த
சீன அரசு யுத்தத்திற்கு காரணம் இந்தியா தான் என்று இன்றும் சொல்கிறது.
இந்தியாவுக்கு ஒரு பாடம் கற்பிப்பது மட்டுமே எங்கள் நோக்கம் என்ற
கருத்தையே போருக்கான முன்னெடுப்பாக சொல்கிறது.
இப்படியாக சொல்லப்படும் அனைத்தையும் தாண்டி
ஒரு புள்ளியில் அனைத்து விமர்சனங்களுக்கும் அப்பால்
நேரு ஒரு தனிமனிதனாக கம்பீரமாக…
ஆம்… போரில் இந்தியாவின் தோல்விக்கு யார் காரணம் என்பதை விடவும்
அத்தோல்வி சிறிது சிறிதாக அவருடைய உடல்நிலையைப் பாதிக்கும்
அளவுக்குப் போனது. அவருடைய மரணத்திற்கு காரணமானது.
தவறுகள் செய்யாத தலைவர்கள் யார் இருக்கிறார்கள்?
தனிமனிதர்கள் எடுக்கும் முடிவுகளை விட தலைவர்கள்  எடுக்கும்
முடிவுகள் எத்துணை முக்கியமானவை. அதன் விளைவுகள் ஒட்டுமொத்த
சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதை உணர்ந்தவர்கள் வெகுசிலர்.
நேருவுக்கு அந்த மனசாட்சி இருந்தது.
அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும்  என்ற எண்ணினேன்.
அவ்வளவுதான்.


8 comments:

  1. ஆம் நீங்கள் சொல்வது போல
    தவறினை ஒப்புக்கொள்வதற்கு
    விசாலம் மனமும் நிச்ச்யம் தைரியமும்
    வேண்டும். அது அன்றைய தலைவர்காளிடம்
    இருந்தது. மிகக் குறிப்பாய் பண்டிட் ஜீ இடம்

    ReplyDelete
  2. In a lettets HE said that i did what i thought was right. May be the next generation May blame me saying that i had taken wrong decisions. But my intension was to do good to the people. Forgive me if my decisions went wrong.one needs great magnanimity to tender such public apology.that time india was in such a confused state and stabilizing it needs lot of efforts.truly HE is great.i feel proud tohave born on 14.111.and Karthik was also born on14.11.1981.sorry to have commented in English.Tamil font not working.karthik amma.kalakarthik

    ReplyDelete
    Replies
    1. Thanks KArthik, yes he is great, i can read his mind in-between his words,

      Delete
  3. Kalakarthik1411@gmail.co.http:vijayanagar.blogspot.com.blogspot.com.is this the url.i do not like anonymous comments.as this mobile is new little confusion.kalakarthik

    ReplyDelete
    Replies
    1. No problem karthik, i understood, i too give my comments In English while using my cell phone, thanks again

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  4. Nehru is a disaster for India. He will be remembered always for creating Kashmir issue and China defeat. It is unfortunate to celebrate Children day on his birthday - it should be Kashmir day or China day.

    ReplyDelete
  5. அன்றைய தலைவர்களிடம் மனிதநேயம் இருந்தது.
    - கில்லர்ஜி

    ReplyDelete